Monday, September 12, 2005

ஒற்றுமைக்கு வழி!



கேள்வி : சத்திய இஸ்லாமை பரப்ப முன்வருபவர்களும் கூட சைத்தானின் 'கர்வ'க்கண்ணியில் சிக்கிக்கொள்வதேன்? நாங்களே சத்தியப்பாதையில் இருக்கிறோம் என்றே ஒவ்வொரு பிரிவும் உரிமைக் கொண்டாடினால் எங்களைப் போன்ற பாமரர்கள் எப்படி விளங்குவது? என் கருத்து ஆர்ப்பாட்டம் - ஆரவாரமின்றி (எந்த லேபிளும் ஒட்டிக்கொள்ளாமல்) - இயன்றவரை - குர்ஆன்-ஹதீஸ் படி நடப்பவர்களே - அந்த சரியான 73 ஆம் கூட்டத்தார்கள். உங்களின் உள்ளார்ந்த பதில்? (நான் இப்படி கேட்கக் காரணம்: அமைப்பிலுள்ளவர்கள் தம் தம் அமைப்புகளின் பெயருக்காக போராடும் அளவுக்குக்கூட - இஸ்லாத்திற்காக களம் காண்பதில்லையே..? பெயர் பெறுவதற்காகவே பெரும்பாலும் செயல்பாடுகள்?)


பொதுவாக அமைப்புகளோ, இயக்கங்களோ ஆரம்பிக்கப்படும் போது 'நிர்வாகத்திற்காக ஒரு லேபிள் தேவைப்படுகிறது. மற்றப்படி எந்த பிரிவினைக்காகவும் நாங்கள் தனிப் பெயரிடுவதில்லை' என்று தான் கூறி ஆரம்பிக்கிறார்கள். அமைப்போ, இயக்கமோ கொஞ்சம் வளர்ச்சி அடைந்த பிறகு நிர்வாகத்திற்காக என்று அவர்கள் சொன்ன லேபிளே அவர்களை தனித்து அடையாளம் காட்டி விடுகிறது. பிற்காலத்தில் அதுவே சமூகத்தை பிரித்து வைக்கவும் காரணமாகி விடுகிறது. ஒவ்வொரு இயக்கத்துடைய, அமைப்புடைய அறிஞர்கள் இதை உணர்ந்தாலும் என்னவோ தெரியவில்லை மீண்டும் அதிலேயே நிலைத்து நிற்க ஆசைப்படுகிறார்கள்.

இயக்க வாதிகள் தங்கள் இயக்கத்தில் நின்றுதான் இஸ்லாத்தை பார்க்கிறார்களே தவிர இஸ்லாத்தில் நின்று இயக்கத்தைப் பார்ப்பதில்லை. இதன் விளைவு தங்கள் இயக்கமல்லாத பிற இயக்கங்கள் செய்யும் இஸ்லாமிய பணியை இவர்களால் அங்கீகரிக்க முடியாமல் போய் விடுகிறது. ஏதோ சில காரியங்களில் ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தை அனுசரித்துப் போகிறதே தவிர ஒருங்கிணையும் முழுமையான மன நிலை அவர்களிடம் இல்லை என்பது உண்மைதான்.

1992 பாபர் மஸ்ஜித் தகர்;ந்த பிறகு தொடர்ந்து முஸ்லிம்கள் கடும் துன்பத்திற்கும் பிறரது அடக்கு முறைக்கும் ஆளாகி உயிரிழந்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக நடந்து முடிந்துள்ளது உயிரை உறைய வைக்கும் குஜராத் கலவரம். ஒவ்வொரு முறை முஸ்லிம்கள் கருவறுக்கப்படும் போதும் இதே அறிஞர்கள் 'முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லாததுதான் இந்த கொடுமைகளுக்குக் காரணம். ஓரணியில் எல்லோரும் ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயம். நாம் ஒற்றுமையாக இருந்தால் எந்த சக்தியாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது' என்றெல்லாம் குரல் உயர்த்தி பேசியுள்ளார்கள். இப்படி பேசிய எவரும் தங்கள் இயக்கத்திலிருந்து இறங்கி இன்னொரு இயக்கத்தை அங்கீகரித்ததை பார்க்கவே முடியவில்லை.

ஆனால் புதிய இயக்கங்கள் துவங்கப்படுவதை மட்டும் பார்க்க முடிகிறது.

ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்காமல் ஒருங்கிணைவது காலத்தின் கட்டாயம் என்பதை நமக்கு நாமே முதலில் சொல்லிக் கொள்ளத் துவங்க வேண்டும். அப்போது தான் கொஞ்சக் காலத்திற்கு பிறகாவது இயக்க சிந்தனை மாறி ஓரணி என்ற லட்சியம் உயிரோட்டம் பெற துவங்கும்.

அடுத்து எங்களைப் போன்ற பாமரர்கள் என்ன செய்வது?.. என்று கேட்டு உங்களை நீங்களே பாமரராக அறிவித்துக் கொள்கிறீர்கள். ஒரு முஃமின் தன்னை தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது என்பது நபிமொழி (முஸ்லிம்) "பாமர மக்கள்" என்று ஒரு இனத்தை இறைவன் படைக்கவில்லை. இறைவனின் வழியில் முயற்சிக்காமல் போனால்தான் மனிதன் பாமரனாகிறான். அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன் என்று ஒரு முஸ்லிம் சொல்லிக் கொள்ள வெட்கப்பட் வேண்டும்.

இறைவனுடைய இஸ்லாமிய மார்க்கத்தை கற்பது இதர எல்லா கல்வியையும் கற்பதைவிட மிக சுலபமானதாகும். ஏனெனில் இறைவன்,
'அவன் இந்த மார்க்கத்தில் உங்களுக்கு எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை' என்கிறான். (அல் குர்ஆன் 22:78) சிரமமில்லை என்று கூறிவிட்ட பிறகு அதை சிரமமாக்கிக் கொள்வது யாருடைய தவறு..? இஸ்லாத்தை கற்க தனி கல்விமுறை எதுவுமில்லை. கற்க வேண்டும் என்ற ஆர்வமும் அதற்கான விடாமுயற்சியும் இருந்து இயங்கினால் மிக இலகுவாக மார்க்கத்தை கற்கலாம்.

எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கிறார்களோ நிச்சயமாக நாம் அவர்களை நம்முடைய நேரான வழியில் செலுத்துவோம். (அல் குர்ஆன் 29:69) இறைவனின் இந்த வசனம் நீங்களும் அறிஞராகலாம் என்று தூண்டவில்லையா..!

அடுத்து இன்னார்தான் 73வது கூட்டத்தார் என்று எந்தக் கூட்டத்தையும் கூறவே முடியாது. ஏனெனில் 'இறைவா.. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக..' என்று இறைவன் பிரார்த்திக்க சொல்கிறான். (அல் குர்ஆன் 1:6 நாம் நேர்வழியில்தான் இருக்கிறோம் என்று ஒருவனுக்கு உறுதியாகி விட்டால் இந்த பிரார்த்தனை அழுத்தமில்லாமல் போய்விடும். ஏன், அர்த்தமில்லாமல் கூட போய்விடும். இந்த பிரார்த்தனையை செய்யும் காலமெல்லாம் எவரும் நான் நேர்வழியை அடைந்து விட்டேன். 73வது கூட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. சொல்லிக் கொள்ளவே கூடாது.

குர்ஆனையும் குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் பின்பற்றிக் கொண்டு செல்லும் அதே வேளையில் நேர்வழிக்கான பிரார்த்தனையை இறைவனிடம் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். 73வது கூட்டம் எதுவென்று மறுமையில்தான் தெரியும்.


பிரிவினை பற்றி இஸ்லாம் கற்றுத் தரும் பாடம்.

இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவெனில் பிரிவு என்பது இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்று. இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிவுகளின்றி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதுதான் இஸ்லாம் கற்றுத் தரும் பாடம்.

'நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்: நீ;ங்கள் பிரிந்தும் விடாதீர்கள்' என்று அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல இம்ரானின் 103 வது வசனம் கூறுகிறது.

மேற்கண்ட குர்ஆனின் வசனத்தில் சொல்லப்படும் அல்லாஹ்வின் கயிறு எது தெரியுமா?. அருள்மறை குர்ஆன்தான். அருள்மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பற்றிப் பிடிக்க வேண்டும். இந்த வசனத்தில் இரண்டு கருத்துக்கள் தொணிக்கின்றன. அருள் மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் பற்றிப்பிடிப்பதுடன் - இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிந்துத் போகக் கூடாது என்கிற இரண்டு கருத்துக்களை மேற்படி வசனம் வலியுறுத்துகிறது.

'அல்லாஹ்வுக்கு கீழ் படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.' என்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஸாவின் 59வது வசனம் கூறுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாமியர்கள் பெறும் தெளிவு என்னவெனில் - அருள்மறை குர்ஆனையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் பின்பற்ற வேண்டும் என்பதேயாகும்.

இஸ்லாமிய மார்க்கம் பிரிவினைகள் உண்டாக்குவதை தடை செய்துள்ளது:

'நிச்சயமாக எவர்கள் தங்களளுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன்(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.' என அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் - ன் 159வது வசனம் கூறுகிறது. மேற்படி இறை வசனத்திலிருந்து நமக்கு தெரிவிக்கப்படும் செயதி என்னவெனில் எவர் இஸ்லாமிய மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து பல வகுப்பினராக பிரிந்து விட்டனரோ - அவர்களைவிட்டு உண்மையான இஸ்லாமியர்கள் விலகிவிட வேண்டும் என்பதுதான்.

ஆனால், ஒரு இஸ்லாமியனைப் பார்த்து, 'நீ யார்?. என்று கேள்வி எழுப்பப்பட்டால் அவரிடமிருந்து வரக்கூடிய பொதுவான பதில் 'நான் ஒரு ஸுன்னி' என்பதாகவோ அல்லது 'நான் ஒரு ஷியா' என்பதாகவோத்தான் இருக்கிறது. இன்னும் சிலர் தங்களை, 'ஷாஃபிஈ' என்றும், 'ஹனஃபி' என்றும் 'ஹம்பலி' என்றும் 'மாலிக்கி' என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'நான் ஒரு தேவ்பந்தி' என்றும் 'நான் ஒரு பெரல்வி' என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு உண்மையான இஸ்லாமியராக இருந்தார்கள்:

மேற்கண்டவாறு தங்களை அழைத்துக் கொள்ளும் இஸ்லாமியர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த பிரிவைச் சார்ந்தவர்கள் - அதாவது அவர்கள் 'ஷாஃபியா' அல்லது 'ஹனஃபியா' அல்லது 'ஹம்பலியா' அல்லது 'மாலிக்கியா?' என்று கேட்டுப் பாருங்கள். இல்லை. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு முன்புள்ள அல்லாஹ்வின் தூதர்களைப் போன்று ஒரு உண்மையான முஸ்லிம் என்பது மட்டுமே அவர்களது பதிலாக இருக்கும்.

அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்து ஆல - இம்ரானின் 54வது வசனம் நபி ஈஸா (அலை) அவர்கள் ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல - இம்ரானின் 67வது வசனம் நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் ஓர் யூதரோ அல்லது கிறிஸ்துவரோ அல்ல. அவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

உங்களை நீ;ங்கள் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டுங்கள் என அருள்மறை குர்ஆன் வலியுறுத்துகிறது:

எவராவது இஸ்லாமியர்களை நீங்கள் யார் என்று கேட்டால் - இஸ்லாமியர்கள் தாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர் என்று சொல்ல வேண்டுமேத் தவிர தாங்கள் ஓர் ஷாஃபிஈ என்றோ அல்லது தாங்கள் ஓர் ஹனஃபி என்றோ தவ்ஹீது ஜமாஅத் என்றோ ஜாக் என்றோ நஜாத் என்றோ சொல்லக் கூடாது.
அருள்மறை குர்ஆனின் நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம் ஸுரத்து ஹாமீம் ஸஜ்தாவின் 33வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.

'எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்து, 'நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?.(இருக்கின்றா

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் - நான் ஒரு முஸ்லிம் - என்று சொல்லுங்கள் என்பதாகும்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ( ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தபால் மூலமாக இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள். அவ்வாறு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் 64 வது வசனத்தின் கடைசி வரிகளாக அமைந்திருக்கும் 'நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்கிற வசனத்தை குறிப்பிட்டு தபால்களை அனுப்பி வைப்பார்கள்.

இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களுக்கு கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும்.

மரியாதைக்குரிய மார்க்க அறிஞர்களான இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்), இமாம் அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்) ஆகியோர் உட்பட இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் நாம் கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும். இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்து இஸ்லாத்திற்கு தந்த பல நல்ல செய்திகளுக்காக அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்கூலியை வழங்கட்டும். இஸ்லாமியர்கள் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ அல்லது இமாம் ஹனஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ - வெளியிடப்பட்ட கருத்துக்கள் குர்ஆன் - ஹதீஸுக்கு மாற்றமில்லாத பட்சத்தில் - எடுத்து செயல் படுத்துவதை எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் 'நீ யார்?' என்று இஸ்லாமியரை நோக்கி கேட்கப்படும் கேள்விக்கு 'நான் ஒரு முஸ்லிம்' என்பதுதான் பதிலாக இருக்க வேண்டும்.


நன்றி: இதுதான்இஸ்லாம்.காம்

Sunday, September 04, 2005

மதத்தின் காவலர்கள் பதில் சொல்லட்டும்!

புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே..!

உலகில் எந்த ஒரு மதமாக இருந்தாலும், கொள்கையாக இருந்தாலும், தத்துவங்களாக அல்லது இயக்கங்களாக இருந்தாலும் அதற்கென்று ஒரு வழிகாட்டுதல் உண்டு. அதற்கென்று ஒரு சட்ட ஒழுக்க நெறிமுறைகள் உள்ளது. அதனடிப்படையில் தான் அவைகள் இயங்கும் அந்த அடிப்படையில் தான் அதன் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் அமையும் அதனை பயன்படுத்தியே அதே இயக்கத்தை அல்லது ஏதோ ஒன்றை சேர்ந்த யாராவது தவறு செய்தால் தண்டிக்கவும் செய்வார்கள். இது உலக நியதியாகும். இப்படிப்பட்ட உலக நியதிக்கும் மனிதாபிமானத்திற்கும் யாராவது கட்டுப்படவில்லையெனில் அல்லது பங்கம் ஏற்படுத்துவார்கள் எனில் அவர்களை ஜாஹலியாக்கள் (அறியாமை காலத்து மக்கள்) அல்லது அறிவீனர்கள் என்று இஸ்லாம் வர்ணிக்கின்றது.

இங்கு நாம் விளக்க விரும்புகின்ற விஷயம், முஸ்லிம்கள் நடத்தக்கூடிய இஸ்லாமிய வார இதழ் அல்லது மாத இதழ்களில் அவ்வப்பொழுது யாராவது ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் பெயர்தாங்கி முஸ்லிம் அல்லது இஸ்லாமிய வரம்பை தாண்டியவர் என்று பிரசுரிக்கப்படுவதுண்டு. இதை அனேகம் பேர் படித்திருக்கக் கூடும்.

ஏனென்றால் அந்த அளவிற்கு அந்த மக்களுக்கு மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் மற்றவர்களின் கஷ்டத்தை தன் கஷ்டமாக உணரக்கூடிய தன்மையையும் இஸ்லாம் அடிப்படையிலேயே ஊட்டியுள்ளது. மனிதனை மனிதனாக வாழ அவனையும் மனிதனாக மதிக்க உலகிற்கு கற்றுக்கொடுத்த மதம் இஸ்லாம். "கருப்பச்சியின் மகனே!" என்று ஒருவர் மற்ற ஒரு நபரைக் கூப்பிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் இஸ்லாத்திற்கு மட்டுமே உரியதாகும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடைசி ஹஜ்ஜின் பொழுது நவின்றார்கள்:
'அறிந்து கொள்ளுங்கள் அஞ்ஞானக் கால வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன.

'ஓர் அரபிக்கு, அரபியல்லாதவரை விடவோ, ஓர் அரபியல்லாதவருக்கு ஓர் அரபியை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை, நீங்கள் அனைவரும் ஆதமின் வழித் தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்'

'முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள்'

'உங்கள் அடிமைகள் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். (அதாவது உங்கள் அடிமைகளுக்குரிய உரிமைகளைப் பேணிக்காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருங்கள்). நீங்கள் உண்பதையே அவர்களுக்கு ஊட்டுங்கள், நீங்கள் அணிவதையே அவர்களுக்கும் அணிவியுங்கள்.'

'அறியாமைக் காலத்தின் இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இனி பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தாரின் ரபூஆ பின் ஹர்ஸ் உடைய மகனுக்கான ரத்தப் பழியை ரத்து செய்கின்றேன். செல்லாதென அறிவிக்கின்றேன்'.

'அறியாமைக்கால வட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. (இனி எவரும் எவரிடமும் வட்டி தரும்படி கோர உரிமை இல்லை) அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தாரின் வட்டியை அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபிற்கு உரிய வட்டியை செல்லாதது ஆக்குகின்றேன்.'

'பெண்கள் விஷயத்தில் இறைவனை அஞ்சுங்கள். பெண்கள் மீது உங்களுக்கும் உங்கள் மீது பெண்களுக்கும் உரிமையுள்ளது.'

'இந்த நாளும் இந்த மாதமும் இந்த இடமும் கண்ணியத்திற்குரியனவாய் விளங்குவது போன்றே உங்கள் இரத்தமும் உங்கள் செல்வமும் இறுதித் தீர்ப்புநாள் வரை கண்ணியத்திற்குரியவை. ஒருவருக்கொருவர் அதனை மதித்து கண்ணியப்படுத்த வேண்டும்'


இவை சாதாரண வார்தைகளில்லை! உலகத்தின் தலைவிதியையே மாற்றியமைத்த வார்த்தையாகும். இஸ்லாமிய சரித்திரத்தில் பொன்னேடுகளில் பொறித்த வைரவரிகள். அந்த வரிகளை பின்பற்றி நடக்க விரும்புகின்றவர்கள் தான் முஸ்லிம்கள்.

இந்த அளவிற்கு மனித சமூகத்திற்கு எது நன்மை பயக்கும் எது கேடு விளைவிக்கும் என்பதை தெளிவு படுத்தியதால்தான் அந்த எல்லைக் கோட்டை தாண்டியவர்களை பெயர்தாங்கி முஸ்லிம்கள் என்று தைரியமாக சொல்லமுடிகின்றது.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்...

( 6:108). அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.

(5:32) அநியாயமாக ஒரு மனிதரை கொலை செய்தவன் மனித சமுதாயத்தையே கொலை செய்தவன் போலாவான்.

(2:191 ) ஃபித்னா(குழப்பம்) செய்வது கொலை செய்வதைவிட கொடூரமானது.

இந்த அளவிற்கு மென்மையையும், மனிதநேயத்தை மதிக்கும் தன்மையையும், இவ்வுலக வாழ்க்கையின் லட்சியத்தையும், பூமியில் அவன் வாழவேண்டிய முறையையும் இஸ்லாம் முறையாக கற்று கொடுக்கின்றது. இதை பின்பற்றுபவர்கள் தான் முஸ்லிம்கள். அதை மீறுபவர்களை பெயர்தாங்கி முஸ்லிம்கள் என்கிறது இஸ்லாம்.

இந்த கண்ணியம் உலகிலேயே இஸ்லாத்தில் மட்டுமே காணமுடியும். அதைப்போல் இந்து மதத்தையும் இந்திய பாரம்பரியத்தையும் கட்டிக்காக்க புறப்பட்டு உள்ளவர்கள், அவர்களில் வரம்பு மீறுபவர்களை பெயர்தாங்கி இந்துக்கள் என்று சொல்லவாவது தைரியம் உள்ளதா?

உள்ளவர்கள்-இல்லாதவர்களையும், மெஜாரட்டி-மைனாரட்டியையும் அரவணைத்து செல்வதும் மனிதர்களின் உரிமையை மதிப்பதும் அவர்களின் மான மரியாதைக்கு பங்கமில்லாமல் நடப்பதும்தான் உலகநீதி. அதனால் தான் ஆங்கிலேயர்கள் இருநூறு ஆண்டுகாலம் முழுதாகஆட்சி செய்யமுடியாத இந்தியாவில் முஸ்லிம்கள் எட்டுநூறு ஆண்டுகள் ஆட்சி செய்யமுடிந்தது. அதனால் தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டம் போல முஸ்லிம்களுக்கு எதிராக நடத்த பாரத மக்கள் முன்வரவில்லை இதை சிந்தித்தால் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று கொக்கரிக்கின்றவர்களின் பொய் முகம் தெரியவரும்.

பிறரின் உயிரையும் உடமையையும் சூறையாடித்தான் தான் சார்ந்த மதத்தை காப்பாற்ற வேண்டும் அல்லது பரப்ப வேண்டும் என்று எந்த மதமும் கூறவில்லை. மாறாக தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்று தான் இந்து மதம் கூட சொல்கின்றது.

ஆனால் தர்மத்தின் கண்களை கட்டி இந்தியாவின் 85 கோடி மக்களின் உரிமையை பறித்து மும்பையிலும், குஜராத்திலும், கோவையிலும் லட்சக்கணக்கான அப்பாவிகளின் உயிரையும் உடைமையையும் மண்ணில் போட்டு புதைத்த மனித இன துரோகிகளையும் அவர்களை சார்ந்தவர்களையும் நோக்கி கேட்கின்றோம். இதுதான் உங்கள் மதம் போதிக்கும் தர்மமா? இப்படித்தான் இந்துமதம் நீதியையும் நேர்மையையும் போதிக்கின்றதா? மதத்தின் காவலர்கள் பதில் சொல்லட்டும். அல்லது இந்து மதத்தின் காவலர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் இப்படிப்பட்ட மனித இனத் துரோகிகளை பெயர்தாங்கி இந்துக்கள் என்று சுட்டிக்காட்டவாவது தைரியம் உள்ளதா?

முஸ்லிம்களை இனம் காண அவர்களை சீர்படுத்த அவர்களிடம் நேர்வழி காட்டும் வேதநூல் உள்ளது. இந்துக்களை இனம் காண அவர்களின் வாழ்க்கை முறையை சீர்படுத்த உங்களின் வேதநூலை மக்களுக்கு போதியுங்கள். கற்றுக் கொடுங்கள் (இங்கே நாம் இந்துக்கள் என்று கூறுவது இந்து மதத்தின் காவலர்கள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்பவர்களை)

அதை மக்களுக்கு கற்றுத்தர மாட்டார்கள் ஆனால் இதோ நாம் இஸ்லாமிய மார்க்கத்தை மட்டுமல்ல. இந்து மதத்தைப் பற்றியும் கற்றுத் தருகின்றோம்.
மனுஸ்மிர்தி - மனுதர்மம் - அதாவது ஹிந்து மதத்தின் வேதநூல் பிராமணர்களைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.

அ). பிராமணன் தர்மத்தை நிறைவு செய்வதற்காகப் பிறந்தவன். இந்த உலகில் என்னென்னவெல்லாம் இருக்கின்றனவோ இவை அனைத்தும் ஒரு பிராமணனுக்குச் சொந்தம். அவன் பிறப்பால் அடைந்த உயர்வால் அவன் அத்தனைக்கும் சொந்தக்காரனாகின்றான். இந்த உலகில் இருப்பவை அனைத்தும் பிராமணனின தயவால் ஜீவித்துக் கொண்டிருக்கின்றன.

ஆ). அறிவற்றவனோ அறிவாளியோ எந்த நிலையிலும் ஓர் பிராமணன் உயர்ந்தவனே! மூன்று உலகங்களும் அவற்றிலிருக்கும் கடவுள்களும் பிராமணனால் இருந்து கொண்டிருக்கின்றன.

பிராமணர்களைப் பற்றித் தீதாகப் பேசிய சூத்திரனின் நாக்கை அறுத்திட வேண்டும். முதல் மூன்று உயர்ஜாதியனரோடும் தன்னை சமமாக எண்ணும் அளவுக்கு எந்தக் கீழ் ஜாதிக்காரனும் நெஞ்சுரம் கொண்டால் அவனை சவுக்கால் அடிக்க வேண்டும். (அப்பஸ்தம்பா தர்மல் சூத்திரம் : 111-10-26)

வேதம் ஓதுவதை காதால் கேட்டுவிட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவன் காதுகளில் ஊற்றிடவேண்டும். அவன் வேதத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுத்துத் துண்டாக்கிட வேண்டும். வேத நாதங்களை அவன் உள்ளத்தில் தேக்கி வைத்தால் அவனது உடலைக் கண்ட துண்டங்களாகத் துண்டாடிட வேண்டும். (மனுவின் விதி 167-272)

பிராமண தர்மத்தை சூத்திரன் ஒருவன் கற்றுக் கொள்ளவோ கற்றுக் கொடுக்கவோ துணிவானேயானால் அரசன் நன்றாக சூடான எண்ணையை அவனுடைய காதுகளிலும்இ வாயிலும் ஊற்றிட வேண்டும். மனுவின்விதி இன்னும் சொல்கின்றது.

பிராமணன் என்னதான் குரூரமான குற்றத்தைச் செய்தாலும் அவனைத் தண்டிக்க இயலாது.

டாக்டர் அம்பேத்கார் அவர்கள் பிராமணர்களின் கொள்கைகள் பற்றி இப்படிக் கூறுகின்றார்கள்:

1. பல்வேறு வகுப்பாருக்கும் இடையே தராதரம் அது நிரந்தரம்.
2. சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் நிராயுதபாணிகளாக ஆக்கிவிடுவது.
3. சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவர்களுக்கும் கல்வியை முற்றாக மறுத்துவிடுவது.
4. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் அதிகாரங்களை முற்றாகத் தடை செய்துவிடுவது. அல்லது மறுத்துவிடுவது.
5. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் சொத்து உரிமையை மறுத்துவிடுவது.
6. பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுத்துவிடுவது. அவர்களை நசுக்கப்பட்டவர்களாகவே வைத்துக் கொண்டிருப்பது.


ஆக ஏற்றத்தாழ்வுகள் பிராமணர்களின் அதிகார பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைக் கோட்பாடு மனுஸ்மிர்தி 204 அபபி J.A. Duboils (டுபாயில்ஸ்) என்பவர் Hindu Manners Customs and Cermonies என்ற நூலில் (Oxford Third Edition 1906, Page 139) ஹிந்து மந்திரம் ஒன்றை இப்படி மொழிபெயர்த்துள்ளார்.
இந்த பிரபஞ்சம் கடவுள்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றது.
கடவுள்கள் மந்திரங்களின் சக்தியின் கீழ் இருக்கின்றார்கள்.
மந்திரங்கள் பிராமணர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றன.
எனவே பிராமணர்கள் நமது கடவுள்கள் அல்லது கடவுள்களை கைகளில் வைத்துக் கொண்டிருக்பவர்கள் (என்று கூறி ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அந்த கூட்டத்தை நாம் இனம் காண வேண்டும்)

இதுதான் இந்துமதம் போதிக்கும் நாகரீகமாகும். இதை அவர்கள் போதிப்பதற்கு மனமில்லை. அதனால்தான் முஸ்லிம்கள் தீவிரவாதிகள், மதமற்ற தடை சட்டம், பசுவதை தடைசட்டம், இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானின் ஏஜண்டுகள் என்றெல்லாம் கூறி இள ரத்தத்தில் சூடேற்றி குளிர்காய நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு நாங்கள் இன்னும் மடையர்கள் இல்லை என்பதை மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் மடத்தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

- குலசை ஸாலிஹ்