Thursday, February 02, 2006

தைரியமாக சொல் நான் முஸ்லிம்

இந்து மக்களுக்கு (குறிப்பிட்ட இனத்தவருக்கு) சமுதாய பிரச்சனையை எதிர்கொள்ளும் தைரியமில்லை ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான் என்பார்கள் கடையில் சென்று யாரும் கடைக்காரன் தரும் பொருளை அப்படியே வாங்கிக்கொண்டு வந்துவிடுவதில்லை. தன் குழந்தைக்கு உடம்புக்கு சரியில்லையென்றால் உடனே பூசரியையும் கோடங்கிக்காரனையும் தான் நம்பியோடுகிறார்களேயல்லாது டாக்டரிடம் செல்பவர்கள் மிகவும் அரிதிலும் அரிது எனலாம்.
யானை தன் பலம் அறிந்தால் பாகனுக்கு அடிபணியாது என்பார்கள். அதுபோல் மனிதன் தன் பலத்தை முதலில் அறியவேண்டும். ஒரு மனிதனால் எங்கும் எப்படியும் வாழமுடியும் சுற்றுப்புற சூழலை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள மனிதன் முயற்சித்துக்கொண்டே இருக்கின்றான். தான் யாருக்கும் அடிமைப்பட்டு வாழவேண்டிய அவசியமில்லை என்று ஒரு மனிதன் தீர்மானித்தால் அதைத் தடுக்க எந்த அரசாங்கத்தாலும் முடியாது என்பதை உணரவேண்டும் இதற்கெல்லாம் தேவை தைரியம் மட்டும்தான்.
ஒரு குடிகாரன் தைரியமாக இந்த சமுதாயத்தில் வாழ முடிகின்றது ஒரு விபச்சாரி தைரியமாக இந்த சமுதாயத்தில் வாழ முடிகின்றது நீங்கள் இல்லையென்றல் என்னால் வாழவே முடியாது என்று சொன்னவள் கூட தன் கணவன் இறந்த பிறகும் இந்த பூமியில் உயிரோடு தைரியமாக வாழ்ந்துகொண்டிருப்பதை கண்கூடாக நாம் அன்றாடம் நம் வாழ்வில் காண்கின்றோம் என் தலை பணியுமென்றால் அது என்னைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே தான் என்று ஏன் ஒரு நல்ல முஸ்லிமாக வாழ முடியாது ?
தன் மனைவி தனக்காக உள்ள படுக்கையை வேறொருவனுக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டாள் எனத் தெரிந்தும் அவளுடன் ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் தைரியமாக வாழுகின்றான் கேட்டால் குழந்தைக்காக என்கின்றான் அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் நீ கொள்கைக்காக வாழ முடியாதா? கொள்கைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த புண்ணியவான்கள் வாழ்ந்த பூமியையா இந்த தமிழகம்.
அதனால் சகோதரனே உன் பரம்பரைக்கே சாதி இழிவு நீங்க வேண்டுமென்று உன் அடி மனதிலிருந்து நீ உண்மையிலேயே நினைக்கின்றாயென்றால் அது உன் மனதை வேதனைப் படுத்துகின்றதென்றால் உடனே புறப்படு நீ இஸ்லாத்தை நோக்கி அரசாங்கம் கொடுக்கும் உதவியும் சமூகம் உன்னை கேலிசெய்வதும் கொஞ்சகாலமே
உன் சந்ததிகள் உன்னை புகழ்வார்கள் இன்ஷா அல்லாஹ்
அதனால் தைரியமாக சொல் நான் முஸ்லிம்