Monday, September 11, 2006

பதிலுக்கு பதில் 3 I am OK

(1) இங்கே இருப்பது I am OK you are not OK என்ற நிலை தான். அதை விட்டு I am OK you are OK என்றால் இந்த பதிவே தேவையில்லை

உண்மைதான் இந்த வார்த்தையின் மீது எனக்கும் பரிபூரணமான நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த வார்த்தை எப்பொழுது வரை தெரியுமா? நீங்கள் மற்ற மதத்தவரை கண்மூடித்தனமாக சாடாதவரை ஆனால் நீங்கள் செய்வதோ பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது என்று தமிழில் ஒரு பழஞ்சொல் உள்ளது அதற்கு ஒப்பானது உங்களின் இந்த வாதம்.

(2) //சார், மனிதனை மனிதனாகதான் பார்க்கிறேன் மதவாதியாக அல்ல. நான் எப்போதுமே "I am OK you are OK " டைப் தான். உங்கள் நம்பிக்கையும் என் நம்பிக்கையும் மரியாதைக் குறியதே// - இவை இரண்டுமே சகோதரர் கால்கரி அவர்களின் கருத்தாகும்

மதத்துவத்தையும் மனித்துவத்தையும் சகோதரர் குழப்பிக் கொள்கின்றார். மனிதத்துவம் என்பது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கால்கரி சிவாவிடம் சொன்னால் ஒத்துக்கொள்வார் ஆனால் நான் ஒன்றும் ஒன்றும் ஐந்து என்று சொன்னால் கால்கரி ஒத்துக்கொள்வாரா? சரி. இவர் இப்படித்தான் என்று போய்விடுவார் இது மனிதத்துவம்.

மதத்துவம் என்பது உதாரணமாக நான் சகோதரர் கால்கரியிடம் அமெரிக்காவிற்கு விமான டிக்கெட் கொடுத்து போகச்சொன்னால் சென்று வருவார். ஏன் போகவேண்டும்? என்று கேட்டுவிட்டு போவார் ஆனால் அமெரிக்காவிற்கு சென்று வாருங்கள் என்று துபாயின் விமான டிக்கெட்டை கொடுத்தால் சகோதரர் ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிடுவாரா? நிச்சயமாக போகமாட்டார். அதுவும் ஏன் என்ற கேள்வியை எழுப்பாமல்!. இதுதான் மதத்துவம். அந்த ஏன் என்ற கேள்விதான் ஒவ்வொரு மதமும் சுட்டிக் காண்பிக்கும் கலாச்சார ரீதியான செயல்பாட்டின் எதிர்பார்ப்பின் திசையாகும். ஆக மதம் என்பது வேறு;மனிதத்துவம் என்பது வேறு. மனிதத்துவம் என்பது பொறுமையும், சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் உள்ளது.(கொள்கையை அல்ல)

மதம் என்பது சொல்லுறுதியும், செயல் உறுதியும் உடையது. அது கலாச்சார சீர்கேட்டிற்கும் காலச்சூழலின் மாற்றத்திற்கும் அப்பாற்பட்டதாகும். இவை இரண்டையும் சேர்த்துப்பார்க்கும் பொழுதுதான் I am OK you are not OK என்ற நிலைக்கு மனிதன் சிந்திக்கத் தூண்டுகின்றான் உதாரணம் 1 + 1 = 2 // 1 + 1 = 5 இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது சகோதரரே! கீழே நான் சுட்டிக்காட்டிய சான்றுகள் ஆதாரமாகும்.

பெண்களைப் பற்றிய பைபிள்-திருக்குர்ஆன் ஆகியவற்றிற்கிடையே உள்ள கொள்கை வித்தியாசங்கள் புதிதாக பிறந்த பெண் சிசு பற்றியதோடு மாத்திரம் நின்று விடவில்லை அதையும் தாண்டி அது ஆழமாகச் செல்கிறது. தன் மதத்தைப் பற்றி கற்க முயற்சிக்கும் ஒரு பெண்ணின் நிலைமை பற்றி ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

யூத மதத்தின் இதயமே தவ்ராத் -கட்டளைகள் (Commandments) ஆகும்.
ஆனாலும் ' பெண்கள் தவ்ராத்தை வாசிப்பதிலிருந்து விலக்கப்படுகிறார்கள்' என்று தல்மூது கூறுகிறது. சில யூத மத குருமார்கள் உறுதியாக அறிவித்துள்ளதாவது 'பெண்களுக்கு தவ்ராத்தின் வார்த்தைகளை கற்றுக் கொடுப்பதை விட அதை நெருப்பில் போட்டு அழிப்பது நல்லது. ' 'யார் யார் தன் மகளுக்கு தவ்ராத்தை கற்றுக் கொடுக்கிறானோ அவன் அவளுக்கு அசிங்கத்தையே கற்றுக் கொடுக்கிறான். ' Denise L. Carmody, "Judaism", in Arvind Sharma, ed., op. cit., p. 197.

புதிய ஏற்பாட்டில் பவுல் அவர்களின் இது பற்றிய கண்ணோட்டம் கூட பிரகாசனமானதாக இல்லை:

சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்;வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக் கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக் கடவர்கள்: ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. (1 கொரிந்தியர் 14:34-35)

பெண் பேச அனுமதிக்கப்படவில்லையென்றால் எவ்வாறு கற்க முடியும்? அவள் முழு அடிமைத் தனத்திலேயே இருந்தால் அவள் வளர்ச்சி எவ்வாறு அறிவுப்பூர்வமாக அமையும்? அவள் தகவல் பெறுவதற்குரிய ஒரே வழி அவளின் கணவனாக மாத்திரம் இருந்தால் அவளின் சிந்தனையை வானம் வரை எவ்வாறு அவள் விரிவடையச் செய்ய முடியும்?

ஹிந்து பெண்களுக்கு தங்கள் கணவனை விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை இல்லை.

அவளுக்கு சொத்துரிமையோ வாரிசுரிமையோ கிடையாது. அவள் தன் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

அவளுடைய ஜாதகம் யாருடைய ஜாதகத்தோடு பொருந்தி வருகின்றதோ அவனையே மணம் முடிக்க வேண்டும்.

அவள் வரதட்சணை என்றும் சீர் என்றும் பெரும் பணத்தைக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.அவளுடைய கணவன் இறந்து போனால் அவளும் உடன்கட்டை ஏறி தன்னை அழித்துக் கொள்ள வேண்டும்.

அவள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது.

விதவைகள் சமுதாயத்தின் சாபங்கள் எனக் கருதப்படுகின்றார்கள்.

அவர்கள் சமுதாயத்தில் புழங்கக் கூடாது.

அவள் வண்ணப் புடவைகளைக் கட்டக் கூடாது.

அவள் அணிமணிகள் அணியக்கூடாது.

செவ்வாய் தோசம் போன்ற கொடூரமான மூடநம்பிக்கைகளால், அத்தோசமுள்ள பெண்ணின் மறுவாழ்வே கேள்விக் குறியாகி விடுகிறது )

மனுஸ்மிர்தி கூறுகின்றது:
பெண்களை ஒரு போதும் நம்பாதே! ஒரு பெண்ணோடு தனித்து அமாராதே! அது உன் தாயாக இருந்தாலும் சரியே. அவள் உன்னை தகாத செயலுக்குத் தூண்டுவாள்.உன்னுடைய மகளோடு தனித்து அமராதே.

அவள் உன்னைத் தூண்டுவாள்.உன்னுடைய சகோதரியோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள்.

இன்னும் மனுஸ்மிர்தி கூறுகின்றது. நாஸ்த்ரீ சுவாதந்திரிய மார்காதி!

சமுதாயத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் கிடையாது.

" ஹாரியா"வின்படி கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறும் பெண் மூன்று குடும்பங்களைத் தூய்மைப்படுத்துகின்றாள். அவளுடைய தந்தையின் குடும்பம், தாயாரின் குடும்பம், தன் கணவனின் குடும்பம். பிராமண வேதாந்திகள் கூறுகின்றார்கள்:

வேதத்தின் வாக்காக நின்று அவர்கள் பேசுகின்றார்கள். கணவணோடு தன்னை எரித்துக் கொள்ளாத பெண்கள் மீண்டும் பெண்ணாகப் பிறக்கும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள். ஒரு பெண்ணின் கணவன் பிராமணன் ஒருவனைக் கொலை செய்துவிட்டான். இவன் இறந்துவிட்டான். இந்தக் கொலையாளியின் மனைவி அவனோடு கொள்ளிக்கட்டையில் வெந்து விடுவாளேயானால் அவனுடைய இந்தப் பாவம் கழுவப்பட்டுவிடும்.

ஆமாம். கணவனோடு மனைவியும் இறந்துவிட்டால் அவர்களின் குழந்தைகளின் கதி என்ன?

இந்தக் கேள்வியைப் பூரிசங்கராச்சாரியார் அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதோ:

அது விதி! அந்தக் குழந்தைகள் தாயில்லாமல் கஷ்டப்படட்டும். சாகட்டும். அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் உடன்கட்டை ஏறும் விதியைச் செயல்படுத்தியேயாக வேண்டும். 14-9-87 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில இதழ் இந்தச் செய்தியைத் தருகின்றது.

இருபக்கமும் சமநீதியோடு இருக்கும் வகையில் இது பற்றி திருக்குர்ஆனின் நிலை வேறுபட்டுள்ளதா என்றும் நாம் கேட்க வேண்டும். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஒரு சிறிய சம்பவமே இது பற்றி அதனுடைய நிலையை சுருக்கமாக விளக்க போதுமானது.

கவுலா என்ற முஸ்லிம் பெண்மணியின் கணவர் கோபத்தில் அவரிடம் ' நீ என் தாயின் முதுகைப் போன்றவள்' என்று கூறி விடுகிறார். இது திருமணக் கடமைகளிலிருந்து ஒரு கணவனை விடுவிக்கக் கூடிய ஆனால் மனைவியை கணவனின் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்லவோ அல்லது வேறு ஒருவனை மணக்கவோ அனுமதிக்காத ஒரு வகையான விவாஹரத்து சொல்லாக அன்றைய அரபிகளால் கருதப்பட்டது.

தன் கணவன் இவ்வாறு சொல்லக்கேட்ட கவுலா அவர்கள் மிகவும் துக்ககரமாகி விட்டார். தன் நிலைமையைக் கூறி வாதாட நபி (ஸல்) அவர்களிடமே அவர் நேராக போய் விட்டார். இதற்கு வேறு வழி தெரியாததால் நீங்கள் பொறுமையைக் கையாள வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிறுத்தி வைக்கப்பட்ட தன் திருமண பந்தத்தை காப்பதற்காக கவுலா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தொடர்ந்து வாதாடிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்தான் திருக்குர்ஆன் இதில் தலையிட்டது:

கவுலாஅவர்களின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த கெட்ட பழக்கத்தை தெய்வீக தீர்ப்பு அழித்தொழித்து விட்டது. இந்தச் சம்பவம் தொடர்ந்து ஒரு முழு அத்தியாயமே 'அல் முஜாதிலா' அல்லது 'வாதாடும் பெண்' என்று பெயரிடப்பட்டுள்ளது:

தன்னுடைய கணவர் விஷயத்தில் உம்மிடம் விவாதித்துக் கொண்டும் , அல்லாஹ்விடத்தில் முறையிட்டுக் கொண்டும் இருக்கின்ற பெண்ணின் சொல்லைத் திண்ணமாக அல்லாஹ் கேட்டுக்கொண்டான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கேட்பவனும் பார்ப்பவனும் ஆவான் ( 58:1)

திருக்குர்ஆனின் கொள்கையைப் பொறுத்தவரை ஒரு பெண் இஸ்லாத்தின் நபி (ஸல்) அவர்களிடமே நேரடியாக வாதாடும் உரிமை பெற்றிருக்கிறார். மௌனமாயிருக்கும்படி அவர்களைச் சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது. சட்டம், மதம் ஆகியவற்றைக் கற்பதற்கு அவரின் கணவனை மாத்திரம் சார்ந்திருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது.

பெண்களுக்கு இஸ்லாத்தில் உரிமையில்லை இஸ்லாம் பெண்களை கொடுமைப்படுத்துகின்றது எனக் கூக்குரலிடுகின்றவர்கள் சற்று நிதானமாக சிந்திக்கும் சமயம் வந்துவிட்டது.

இவை பெண்களுக்கு முல்லாக்கள் கொடுக்கும் மரியாதையாகும்.

இதெல்லாம் பெண்களை தானம் செய்து வயிறு பிழைக்கும் வந்தேறிகளுக்கு எப்படித் தெரியும்

I am OK; You are NOT OK" என்பதில் குற்றம் காண்பவர்கள் சிந்திக்கட்டும்! ஏனெனில், "சிந்திப்பவர்களுக்கு இதில் நல்லுபதேசம் உள்ளது" என்பது குர்ஆனின் அழைப்பல்லவா?