Monday, April 10, 2006

அன்பிற்கும் உண்டோ...

நமக்கு ஒருவர் மீது ஏற்படக் கூடிய அன்பு என்பது, நம்முடன் அவர் பழகும் முறையை வைத்துத் தோன்றுவதாகும். அவருடைய கொள்கையையும் நடத்தையையும் கண்டு, நண்பர் என்றால் இவரைப் போலல்லவா இருக்க வேண்டும் என்று நாமே தீர்மானிக்க வேண்டிய விஷயமாகும் நட்பு.

இந்தக் காலத்தில் நல்ல பொருள் வளம் இருந்தால் மட்டுமே நண்பன் என்பது எழுதாத சட்டமாகவே மாறிவிட்டது. "உற்ற நண்பனை ஓட்டலில் பில் கொடுக்கும்போது கண்டு கொள்ளலாம்" என்று எப்பொழுதோ படித்த ஞாபகம் உள்ளது.

நல்ல நண்பன் முகம் பார்க்கும் கண்ணாடிக்குச் சமம் என்பார்கள். " ஒரு மனிதனை நல்லவனாகவோ அல்லது தீயவனாகவோ மாற்றுவது அவனது நண்பர்களும் சூழ்நிலையும்" என்பார்கள் இது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது. நல்ல நண்பனைப் பெற்றவன் நிச்சயமாக வழிகெடுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது மட்டும் உண்மை.

நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்: " மனிதன், தன் உற்ற நண்பனின் வழி எதுவோ அதன் படி நடக்கிறான்" நூல் : திர்மிதி, அபூதாவூத்

நண்பன் என்பவன் எந்த நேரத்திலும் துணையாக நிற்பவன். சந்தோஷம் வரும்பொழுது கும்மாளம் அடிப்பவனும் கஷ்டம் வந்துவிட்டால் விட்டு ஓடிவிடுபவனும் நிச்சயமாக நண்பனல்லன்; அவன் சந்தர்ப்பவாதி. சந்தர்ப்பவாதி என்பதை விட ஒட்டுண்ணி என்பதே பொருத்தமான பெயர் என நினைக்கின்றேன்.

இஸ்லாம் எனக்குக் கிடைத்த பாக்கியமாக நான் கருதுவதற்குக் காரணமான சில சம்பவங்களையும் இங்கே குறிப்பிடுகின்றேன். ஒரு மனிதன் தன் தாய் மதத்தை விட்டு வேறொரு மதத்தைத் தேர்ந்தெடுக்கின்றான் என்றால் அதைச் சிறிய விஷயமாக யாரும் எடைபோடக்கூடாது. ஏனெனில் அவன் இதுவரை பழகிவந்த பழக்கவழக்கங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், கலாச்சாரம் ஏன் அன்றாடம் இன்றியமையாத் தேவைகளைக் கூட மாற்றிக் கொள்வதற்கு அவன் தன்னைத் தயார் செய்து கொள்கின்றான். ஏனெனில் அவன் புதிதாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட வழி, அவனை அவ்வாறு மாற்றி அமைக்கிறது.

இதில் இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்: ஒரு சமுதாயத்திலிருந்து இன்னொரு சமுதாயத்திற்கு ஒரு மனிதன் மாற்றுகின்றான் என்றால் அந்த வரவை இன்முகத்தோடு வரவேற்கக்கூடிய சமுதாயமாக அல்லது அவனையும் அவனுடைய முடிவையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மக்களாக அவர்கள் இருக்கவேண்டும். இஸ்லாத்தின் வெற்றியும் இதுவே என்றே நான் நினைக்கின்றேன்.

இஸ்லாம் மறுமை நம்பிக்கையை மையமாக வைத்து மாந்தர்கள் தமது வாழ்வை அமைத்துக்கொள்ளச் சொல்கின்றது. மறுமை நம்பிக்கை என்பது 'நாளை மரணத்திற்கு பிறகு மீண்டும் நான் எழுப்பப்படுவேன்; பூவுலகில் என்னுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டிருந்தேன் என்பதைப் பற்றி விசாரிக்கப்படுவேன்' என்பதாகும். இந்த நம்பிக்கை ஒரு மனிதனுடைய மனதில் ஆழமாக இல்லையெனில் அவன் தன்னை முஸ்லிமென்று சொல்லிக் கொள்வதில் எந்த பலனுமில்லை என்கின்றது இஸ்லாம்.

'நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அது உனக்கு நல்லது நீ அதை புறக்கணித்து வாழ்ந்தால் அது உனக்குத்தான் கேடு' என்ற கருத்தில் இஸ்லாம் உறுதியாக உள்ளது. உலகாதாயத்தை எதிர்பார்த்துத் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு இஸ்லாம் சொல்லவுமில்லை. அதை ஏற்றுக்கொண்டவர்கள் யாரும் அப்படி எதிர்பார்ப்பதுமில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதும் இவ்வடிப்படையில் அமைதல் நலம் பயக்கும் .

நபித்தோழர் குபைப் இப்னு அதிஃ(ரலி ) அவர்களைக் கைதியாகச் சிறை பிடித்து, அவரைச் சிலுவையில் அறைந்து, அம்புகளாலும் கத்தியாலும் வெட்டிச் சித்ரவதை செய்து அவரைக் கொல்லத் தீர்மானித்த பின்னர், " உன்னுடைய இந்த இடத்தில் உனது தோழர் முஹம்மதை வைத்து விட்டு , அதற்குப் பதிலாக நீ விடுதலை அடைந்து உனது குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருக்க விரும்புகின்றாயா"? என்று அபுசுப்யான் கேட்டார்.

அதற்கு "இறைவன் மீது சத்தியமாக! எங்களது ஆருயிர்த் தோழர் முஹம்மது (ஸல்) அவர்களை இந்த இடத்தில் விட்டு விட்டு நான் என்னுடைய குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருப்பதா? அவரது காலில் ஒரு சிறு முள் குத்தக்கூட நான் அனுமதிக்க மாட்டேன்" என்று குபைப் இப்னு அதிஃ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த பதிலால் கொதிப்பேறிய அபுசுப்யான், தன் கையில் இருந்த ஆயுதத்தை வானத்தை நோக்கித் தூக்கி எறிந்தவராக, "முஹம்மதை, முஹம்மதின் தோழர்கள் நேசிப்பது போன்றதொரு நேசத்தை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை", என்று கூவினார் .

இதுதான் நேசத்தையும் நேசத்தை நேசிப்பவர்களின் உள்மனதையும் ஒருங்கிணைப்பதற்கு இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் அறிவுரையாகும்.

இங்கு நான் என் மனதை பாதித்த ஒரு நட்பை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஜாதி என்ற அந்த வெறி, மமதை ஒரு மனிதனை எப்படியெல்லாம் சிந்திக்கத் தூண்டுகின்றது. "ஜாதி என்பது மனிதனோடு ஒட்டிப்பிறந்தது அதை பூமியில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் நாம் எந்தக்குலத்தில் பிறக்கவேண்டுமென தீர்மானித்துக்கொண்டே பிறக்கின்றது" என நம்புகின்றான் இந்த படித்த மடையன்.

முதலில் நட்பைப்பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை பார்ப்போம்.

தனது சகோதரர்களையும் நண்பர்களையும் சுயநலமற்று நேசித்து, எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு கொள்வது உண்மை முஸ்லிமின் தனித்தன்மையான பண்புகளில் ஒன்றாகும். இஸ்லாம் உண்மையான சகோதரத்துவ அமைப்பாகும். இது அல்லாஹ், அவனது தூதரால் மனித உறவில் ஏற்படுத்திய சங்கிலிப் பிணைப்பாகும். மனித வரலாற்றில் சகோதரத்துவத்தைப் பேணுவதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது.

ஒருவரது இனம், மொழி, நிறம் போன்ற பேதமைகளுக்கு அப்பாற்பட்டு 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று சான்று பகர்தலின் மூலம் இஸ்லாம் மனிதர்களைச் சகோதரத்துவத்தால் பிணைக்கிறது.

விசுவாசிகள் (யாவரும்) நிச்சயமாகச் சகோதரர்களே! (அல்குர்ஆன் 49:10)

இறை நம்பிக்கை கொண்ட சகோதரத்துவம் இதயங்களை இணைப்பதில் மிக உறுதியானதாகும். அது ஆன்மாவையும் அறிவையும் இணைக்கிறது. இந்தச் சகோதரத்துவம் உன்னதமான ஏற்பாடாகும். இதற்கு இஸ்லாம் 'அல்லாஹ்வுக்காக நேசித்தல்' என்று பெயரிடுகிறது. இதில்தான் உண்மை முஸ்லிம் ஈமானின் இன்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துள்ளதோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். அவை:

1. அல்லாஹ்வும் அவனது தூதரும் அவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவர்களாக இருப்பது,

2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,

3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதுபோல் இறைநிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பதுமாகும். '' (ஸஹீஹுல் புகாரி , ஸஹீஹ்முஸ்லிம்)

அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களின் அந்தஸ்து

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நேசித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் தயார் செய்து வைத்திருக்கும் அருட்கொடைகள் மற்றும் மறுமை நாளில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் உன்னத அந்தஸ்து பற்றியும் விவரித்துக் கூறும் அநேக நபிமொழிகள் உள்ளன.

இது விஷயத்தில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் நிழல் தரும் ஏழு நபர்களைப் பற்றிநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1. நீதமான அரசன்

2. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபட்ட வாலிபர்

3. இதயத்தால் இறையில்லத்துடன் இணைந்திருக்கும் மனிதர்

4. அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இரு மனிதர்கள், அல்லாஹ்வுக்காகவே இணைந்தனர்; பின் அல்லாஹ்வுக்காகவே பிரிந்தனர்.

5. ஒரு மனிதர், அவரை அழகும் வனப்புமுடைய பெண் அழைத்தாள் அவர் ''நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் '' என்று கூறி (மறுத்து) விட்டார்.

6. வலது கரம் செய்த தர்மத்தை இடது கரம் அறியாத வகையில் தர்மம் செய்தவர்

7. தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து, கண்ணீர் வடிக்கும் மனிதர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்வின் நிழல் மட்டுமே உள்ள மறுமை நாளில் அந்த நிழலுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களுக்கும் இடமுண்டு என்பதிலிருந்து அவர்களுக்கு எவ்வளவு பெரிய கௌரவம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வுக்காகவே நேசிப்பவர்களை சிறப்பித்துக் கூறும் முகமாக மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ் கூறுவான்: ''என்னுடைய மகத்துவத்துக்காக தங்களிடையே நேசித்துக் கொண்டவர்கள் எங்கே ? என்னுடைய நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இன்றைய நாளில் என்னுடைய நிழலில் அவர்களுக்கு இடமளிக்கிறேன். '' (ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு முஸ்லிம், தன் நண்பனை இந்த அடிப்படையில்தான் உருவாக்கவேண்டும். அதை விட்டு உலக ஆதாயத்துக்காக நண்பர்களைத் தேடினால் அந்நட்பு நிலைக்காதது மட்டுமின்றி அந்த நட்பு நண்பன் என்ற உறவுக்கு செய்யும் துரோகமாக இஸ்லாம் கருதுகின்றது. நான் சொன்ன இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டு கீழே உள்ள இந்த சம்பவத்தை உங்களின் அடிமனதில் நிறுத்தி அசைபோட்டுப் பாருங்கள். இஸ்லாத்தின் வெற்றி உங்களுக்கும் புரியும்.

பொதுவாக தினமலர் வாங்கினால் "இது உங்கள் இடம்" மற்றும் அந்துமணியின் "பார்த்தது-கேட்டது-படித்தது" ஆகிய இரண்டு தான் நான் மிகவும் விரும்பி படிக்கும் பகுதிகளாகும். எனக்கு கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன் 02/11/97 ல் பிரசுரமான தினமலர் கிடைத்தது. இது உங்கள் இடத்தில் பதிவாகியிருந்த இந்த சம்பவத்தை படித்து வெறுப்பதா? வேதனைப்படுவதா? என அறியாமல் திகைத்துவிட்டேன். அதை அப்படியே கீழே தருகின்றேன்.

எனக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் ஏராளமான பேனா நண்பர்கள் உண்டு. அவர்களில் ஒரு
நண்பர் என்னைப் பார்க்க எங்கள் ஊருக்கு வருவதாக கடிதம் எழுதியிருந்தார். நானும்
அவர் வருவதாகக் கூறியிருந்த நாளில் வெளியில் எங்கும் செல்லாமல் வழி மேல் விழி
வைத்துப் பார்த்திருந்தேன். நேரம் போனதுதான் மிச்சம் அவர் வரவே இல்லை.என் நண்பர்
அவர் குறிப்பிட்டிருந்த நாளில் வந்திருக்கின்றார். என் வீட்டிற்கு வழி கேட்கும்
போது என்னுடைய ஜாதி பற்றியும் அறிந்திருக்கிறார்.

நான் ஒரு தாழ்த்தப்பட்ட
இனத்தை சேர்ந்தவன் என்பதை அறிந்ததும் அப்படியே திரும்பி சென்று விட்டிருக்கிறார்.
இந்த விஷயம் எனக்குபிறகுதான் தெரிந்தது. உண்மையான நட்புக்கு கூடவா ஜாதி வேறுபாடு
பார்ப்பது என்று நொந்து கொண்டேன். இப்போதெல்லாம் பேனா நண்பர்களிடம் முன்கூட்டியே
என்னுடைய ஜாதி பற்றியும் எழுதி விடுகிறேன். பல நண்பர்கள் இதை கண்டிக்கின்றனர்.
எனினும் கசப்பான அந்தப் பழைய அனுபவத்தை இன்னும் மறக்கமுடியவில்லை.

வே.கார்த்திகேயன் களையகாவிளை. தினமலர் 02/11/97 (இது உங்கள் இடம்)
பகுதி.

நண்பர்களாக பழகுவதில் கூடவா ஜாதிவெறி!!

எனதருமை வாசகர்களே! நான் தாழ்ந்த ஜாதிக்கார(னாக சித்தரிக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவ) னல்லன். இருப்பினும் அந்த ஜாதீய சிந்தனைக்கு எதிரானவன் என்பதை இதுவரை என்னுடைய எழுத்துக்களிலிருந்து புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன். நானும் என்னுடைய சந்ததியும் இதுபோன்ற கொடுமையிலிருந்து காலாகாலத்திற்கும் விடுதலை அடைய வேண்டுமென்றால் நான் எடுத்த முடிவு சரியானது தான் என என்னால் ஆணித்தரமாகக் கூற இயலும்.

Tuesday, March 21, 2006

சகோதரர் மகேஸ் அவர்களுக்கு பதில்

சகோதரர் மகேஸ் அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி

நான் பிரமணர்களை திட்டுவதாக சகோதரர் மகேஸ் அவர்கள் புரிந்து கொண்டார்கள் இது அவர்களின் புரிந்தாற்றலின் தவறாகும் நிச்சயமாக ஒரு முஸ்லிம் இன்னொரு தனிநபரை நேருக்கு நேர் அல்லாது சம்பத்த்ப்பட்ட மனிதருக்கு முன்னால் இல்லாது பின்னால் இருந்து திட்டுவதை எங்களின் நபி (தலைவர்) முஹம்மது (ஸல்)அவர்கள் தடுத்து உள்ளார்கள் அதுமட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை மனிதர்களுமே ஒரு தாய் தந்தைக்கு பிறந்த சகோதரர்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது.


அதனால் பிராமணர்களை நான் திட்டவில்லை மாறாக அவர்களின் கொள்கையைத்தான் எதிர்க்கின்றேன் அவர்கள் பிற மனிதர்களை பார்க்கும் பார்வையையும், அவர்கள் நடத்தும் முறையையும் தான் எதிர்க்கின்றேன். மற்றபடி அவர்களும் என் சகோதரர்களே.




மேலும் சகோதரர் மகேஸ் கூறும் பொழுது (இட ஒதுக்கீட்டால் வேலைக்குத் தகுதியில்லாத தலித் மக்கள் கூத்தடிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.( இங்கு தகுதி என குறிப்பிட்டது கல்வித் தகுதியை)

என்று கேட்டிருந்தார் இது அவரின் அறியாமையா? அல்லது நானும் இதை சொல்லவேண்டும் என்ற ஆசைப்பட்டாரா? என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த கேள்விக்கான பதிலை நான் சொல்வதைவிட சான்றோர்களின் பட்டியலையே சான்றாக கொடுக்கின்றேன்

இன்று இந்த நாட்டில் வெளிவரும் நாளிதழ்கள், மாத, வார, இதழ்கள் இவற்றில் யார் முழுமையான ஆதிக்கம், செலுத்துகின்றார்கள்? இவற்றில் 81 சதவீதம் பிராமணர்கள் பிடியில் தான்.இன்று நாட்டில் வெளிவரும் செய்திகளை மக்களுக்குச் சொல்லிடும் பத்திரிக்கைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா இவை அனைத்தும் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.இவற்றில் பணியாற்றுபவர்களும் பிராமணர்கள் தாம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 93 சதவீதம் பிராமணர்கள்.ஹிந்து 97 சதவீதம் பிராமணர்கள்.டைம்ஸ் ஆஃப் இந்தியா 73 சதவீதம் பிராமணர்கள். இவர்கள் (பிராமணர்கள்) வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் தங்கள் ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டிவிட்டார்கள்.பணமும் - வளமும் - பிராமணர்களும்மனுஸ்மிர்தி வித VII 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும்.

சூத்திரர்கள் என்ற கீழ்ஜாதி ஹிந்துக்கள் பற்றி மனுஸ்மிர்தி இப்படிக் கூறுகின்றது. விதி எண்: X - 129-ல், செல்வத்தைச் சேர்த்துக் கொள்வது சூத்திரர்களுக்கு ஆகாது. அவர்களுக்கு அதற்குரிய திறமைகள் இருந்தாலும சரியே! சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொள்வது என்பது பிராமணனுக்கு வேதனையைத் தரும். இன்னும் பிராமணன் பலத்தை பிரயோகித்துச் சூத்திரனுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்ளலாம்.பஞ்சவனிஷ் பிரஹமான் 3-1/11 இப்படிக் கூறுகின்றது.சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொண்டாலும் அவன் எப்போதும் ஓர் அடிமையாகவே இருப்பான்.

அவனுடைய தலையாய பணி உயர்ஜாதியனரின் கால்களை கழுவுவதாகும்.துளசிதாஸ் இவர் ஒரு பிராமணன். இவர் தன்னுடைய நூலில் - அதாவது இராமாயணத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.சூத்திரன் ஒருவன் கற்றவனாகவும், நல்லொழுக்கமுள்ளவனாகவும் இருந்தாலும் அவனுக்கு எந்த மதிப்புமில்லை.ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது எல்லா தொழிற்சாலைகளையும் பிராமணர்களே எடுத்துக் கொண்டார்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் இன்று நாட்டிலுள்ள 60 சதவீதம் தொழில்களின் மேல் ஏகபோக ஆதிக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.60 சதவிகிதம் ஆலைகளை அடக்கியாளும் இவர்கள் நாட்டின் மொத்த குடிமக்களுடன் 5 சதவீதம் தான் என்பதை மறுக்கலாகாது.

இதேபோல் இந்த 5 சதவிகிதத்தினர் தான் நாட்டின் உயர்பதவிகளில் 60 சதவிகிதம் பதவிகளை வகிக்கின்றனர்.இதோ இந்தப் புள்ளி விபரத்தைப் பாருங்கள். இந்த இந்தியா இன்றும் யார் கைகளில் சிச்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மை புலப்படும்.1 நாடாளுமன்றத்தின் மக்கள் சபையில் 45%2 நாடாளுமன்றத்தின் மேல் சiபியல் 36%3 கவர்னர்கள் - L.G. 50%4 கவர்னர்களின் செயலாளர்கள். 54%5 மத்திய அமைச்சரவையின் செயலாளர்கள் 53%6 மத்திய அமைச்சரவையின் தலைமை செயலாளர்கள் 54%7 அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் 70%8 நீதிபதிகளின் தனி செயலாளர்கள் 62%9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 51%10 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 56%11 உயர்நீதிமன்ற நீதிபதிகள் - கூடுதல் நீதிபதிகள் 50%12 இந்தியாவின் பிரதிநிதிகளாக வெளிநாட்டுத் தூதுவர்கள் 41%13 பொது நிறுவனங்களில் தலைமை பொறுப்பாளர்கள் (மத்திய அரசின் கீழ் இயங்குபவை) 57%14 மாநிலை அரசுகளின் கீழ் இயங்கும் அரசின் பொது நிறுவனங்களின் முதன்மைப் பொறுப்பாளர்கள் 82%ஆதாரம் : Voice of the Weak, Oct, 1989)

ஏனைய நிறுவனங்களில்வங்கிகள் 57%விமானத் துறை 61%IAS அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள்) 72%IPS காவல்துறையின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் 61%வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் 83%CBI மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், சுங்கவரி அதிகாரிகள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் 72%இது தான் இந்த நாட்டில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளின் நிலை.

இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினாலும், இன்று வரை உயர்கல்விகள், விஞ்ஞான பொறியியல், மருத்துவக் கல்விகள் ஒரு சாராருக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிறது.இந்தியாவில் மட்டுந்தான் கடவுளின் பெயரால் வேதத்தின் பெயரால் ஒரு இனத்திற்கு கல்வி மறுக்கப்படுகின்றது.

இந்தியாவின் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 30 பேர் தான்.ஆனால் பிராமணர்கள் மட்டும் 100க்கு 100 பேரும் கல்வி கற்று விடுகின்றனர்.அரசின் உதவியின் கீழ் அமெரிக்காவிலிருக்கும் அல்லது அமெரிக்காவில் கல்வி கற்கும் டாக்டர்களில் 67 சதம் பேர் பிராமணர்கள்.இந்தியாவின் செலவில் கல்வி கற்றுத்தேறிய இவர்கள் இந்தியாவில் மருத்துவ உதவி கிடைக்காமல் கதறும் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை விடுத்து அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் சென்று சம்பாதித்துக் குவிக்கின்றனர்.

சட்டத்தைக் கற்று வழக்கறிஞராக இருப்பவர்கள் 53 சதம் பிராமணர்கள்.பள்ளி, கல்லூரி ஆசிரியர்களில் 51 சதம் பிராமணர்கள்.இதெல்லாம் எப்படி அவர்களில் சாதிக்க முடிகின்றது. அவர்களிடத்தில் நாம் தான் ஏனைய இனங்களுக்கெல்லாம் எஜமானர்கள் என்ற அகங்காரம் குடி கொண்டிருக்கிறது. எதையும் ஏனைய இனங்கிடமிருந்து அபகரித்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என்பன போன்ற ஆனவங்களின் செயல் வடிவம் தான் மேலே சொன்ன சாதனைகள்.
நன்றி www. எனது கிறுக்கல்ஸ் April 2005.htm

இதற்கெல்லாம் முதற் காரணம் மனுஸ்மிர்தி வித VII 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும். இவைதான் அதனால் நான் எதிர்ப்பது இந்த வசனத்தைத்தான் பிராமணர்களை அல்ல என்பதை சகோதரர் மகேஸ் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்