Friday, December 08, 2006

இறைவனைப் புரிந்து கொள்வோம்!

இஸ்லாத்தில் இறைவனைப்பற்றியும் அவனுடைய வல்லமையையும் அவனுடைய சிறப்பையும் எவ்வளவு தத்ரூபமாக வர்ணிக்கின்றான் வல்ல ரஹ்மான்.

நாம் வாழக்கூடிய இந்த பூமியில் எத்தனையோ மனித இனங்கள், மதங்கள், இஸங்கள் உள்ளன. அத்தனையும் தன்னால் இயன்ற ஒரு அடிப்படையைக் கொண்டுதான் இப்பூமியில் வளம் வருகின்றது பரிந்தும் பேசுகின்றது. ஆனால் அவை அனைத்தும் அனைத்திற்கும் தனித்தனியான பூமியில் தான் வாழ்கின்றோம் என்று என்றாவது கூறியுள்ளதா? இல்லை!

உன் தெய்வம் வேறு! என் தெய்வம் வேறு! என்றெல்லாம் குடுமி சண்டை பிடிக்கும் இஸங்களும் மதங்களும் உன் மதத்துக்கு என்று தனி பூமி என் மதத்திற்கு என்று தனி பூமி என்றாவது கூறுகின்றதா என்றால் அதுவும் இல்லை. ஆனால் அவை எல்லாம் இந்த ஒரே பூமியின் மீது நின்று கொண்டுதான் இவ்வளவு ஆர்ப்பாட்டங்களையும் செய்கிறது. இந்த பூமியைப் படைத்த எல்லாவற்றிற்கும் அதிபதியான அல்லாஹ் தன்னால் படைக்கப்பட்ட அற்பமான அறிவு மட்டுமே கொடுக்கப்பட்ட மனிதனை நோக்கி சற்று வித்தியாசமாக இவ்வாறு கேட்கின்றான்.

உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும் , (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார் ? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார் ?'' என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் '' அல்லாஹ்'' என பதிலளிப்பார்கள். அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?'' என்று நீர் கேட்பீராக.

உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ் இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை ; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள் ?

இந்த பேரண்டத்தைப் படைத்த வல்ல ரஹ்மான் கேட்கும் கேள்வி இதுதான்.

இந்தக்கேள்விக்கு இறைவன் காட்டித்தந்த இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர வேறு சமுதாயத்திலும் பதில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. மனிதர்கள் தங்களின் பலஹீனத்தை உணர்ந்து கொள்ள அல்லாஹ் கொடுக்கும் சந்தர்ப்பமாகும். ஏனென்றால் மனிதன் எல்லா விதத்திலும் பலஹீனமாவனாகவே இருக்கின்றான்.

மரணத்தைச் சுவைக்காத எந்த மனிதனும் கிடையாது. அதுபோலவே அதை மரணம் என்பது இல்லை என மறுக்கின்ற மனிதனும் கிடையாது. அந்த அளவுக்கு யதார்த்தமான மரணத்தைப் பற்றி என்றாவது நாம் சிந்தித்து இருக்கின்றோமா? மரணிப்பது மட்டுமல்ல மரணித்த பிறகு மீண்டும் எழுப்பப்படுவீர்கள் என்றும் மனிதனின் சிந்தனையை வேறொரு பக்கமும் இஸ்லாம் திருப்பிகின்றது.

எங்கிருந்து வந்தோம்? எங்கே போகவிருக்கின்றோம்? என்றே தெரியாமல் வாழ்வதைவிட இது பற்றிய சிந்தனையை எந்த வாழ்வியல் நெறி போதிக்கின்றது என்றும் ஆராய்வது காலத்தின் கட்டாய கடமையாகும். மனிதன் என்பவன் படைத்த இறைவனை விட்டு படைப்புக்களை வணங்குவது எவ்வகையில் நியாயம் என்பதை இறைவன் கேட்கிறான்:

உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா? , என்று (நபியே!) நீர் கேட்பீராக அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை(மரணித்த பிறகு) மீண்டும் படைக்கிறான்;(இந்த உண்மையை விட்டு ) நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.

மேலும் அல்லாஹ் ஒரு அடிப்படையான சத்தியத்தை சுட்டிக்காட்டுகின்றான்:

உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக. அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா ? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா ? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது ? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.

ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது . நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

உண்மையை உணராமல், அல்லது அதைப் பற்றிய சிந்தனை செய்ய மனமில்லாமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினால் பொய்யான சேற்றைவாரி இறைப்பதை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்களை நோக்கி அல்லாஹ் இவ்வாறு சவால் விடுகின்றான்.

இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து (அருளப்பட்டது) என்பதில் சந்தேகமேயில்லை.
" இந்தக் குர் ஆனை அவர்கள் ஆழ்ந்து நோக்கக் கூடாதா ? இஃது அல்லாஹ்வையன்றி யாரிடமிருந்தாவது அருளப்பட்டிருந்தால் இதில் அநேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்களே!" (4:82)

இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா ? (நபியே!) நீர் கூறும் நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்! ' என்று.

நான் கோடிட்டுக் காட்டியுள்ள இந்த வசனம் இந்த மனித சமுதாயத்தின் மீதும் குறிப்பாக இந்தக் குர்ஆனையும் பால்வெளியையும் படைத்த இறைவனையும் மறுக்கும் படைப்பினங்களின் மீதும் அவ்வப்போது முஸ்லிம்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் தங்களின் பேச்சாளும் எழுத்தாளும் மீடியாக்களின் மூலமும் விஷத்தைக் கக்குகின்ற அறிவு ஜீவி (?)களின் மீதும் இறைவன் பதினான்கு நூற்றாண்டாக முன்வைத்த முறியடிக்கப்படாத சவால் ஆகும்.

இதுவரை பூமியில் தோன்றி மறைந்த, இனித் தோன்றவிருக்கின்ற எவராலும் முறியடிக்க முடியாத நடக்காத காரியம் என்பதை இந்த முஸ்லிம் சமுதாயம் உறுதியாக நம்புகின்றது .

நான் நினைக்கின்றேன். ஒருவேலை அவர்களின் முஸ்லிம்களின் மீதான காலவரையரையற்ற வெறுப்புக்கு இதுகூட காரணமாக இருக்கலாம் .

நாத்தீக நண்பர்களின் சிந்தனையோட்டத்தை அவர்களின் சிந்தனை சென்றடையும் கடைசி இடத்தின் எல்லைக்கோட்டை அல்லாஹ் அதாவது படைத்தவன் அப்படியே தத்தரூபமாக படம்பிடித்துக் காட்டுகின்றான்.

அப்படியல்ல அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.

இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டையும் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வல்லமையின் அளவுகோலை மனிதன் உணர்ந்தானேயானால் மேற்கூறப்பட்டது போன்ற தடுமாற்றத்திற்கு மனிதன் வரமாட்டான். மனிதனைப் போலவே சக்தியும் வல்லமையும் கொண்டவன் தான் இறைவனும் என்று மனிதன் நம்புகின்றான். அதனால்தான் மனிதனைப்போன்று இறைவனுக்கும் மனைவி மக்கள் சொந்தம் பந்தம் என்றெல்லாம் மனிதன் கற்பனை செய்கின்றான். இது அபத்தமாகும் இறைவனின் மீது இட்டுக்கட்டும் இழிசெயலாகும்.

வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை. நீ வேண்டுமானால் அவருக்கு உருவம் இருப்பதாக நினைத்துக் கொள். ஆனாலும் நீ நினைப்பதால் நினைத்து வடிப்பதால் கடவுள் உருவத்துக்குள் அடங்கமாட்டார் - என்றது வேதம். ஆனாலும்... உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தோன்றிய வழிபாட்டு முறைகள்படி (Humanistic Worship) அதாவது மனித உருகொண்டு தெய்வத்தை வணங்கும் கலாச்சாரம் உருவானது. அதிலும் ஆண் உருவங்கள்தான் முதலில் வழிபடப்பட்டன. பிறகு... இந்த ஆணுக்கு ஒரு பெண் துணை வேண்டாமா ? என யோசிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் பெண் தெய்வங்கள்! இது ஒரு பக்கம் என்றால்... சிறுசிறு குழுக்கள் தத்தமது பகுதிகளில் ' அம்மன் ' என அழைக்கப்படும் பெண் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.இதுபற்றி பிறகு பார்ப்போம். ஆண் தெய்வம் , பெண் தெய்வத்தை வைத்து பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர் ஆகமக்காரர்கள். அவர்களே... விஷ்ணுவின் மனைவியான லட்சுமி அவருடைய மார்பில் இருக்கிறார் என்றார்கள். இதன் பிறகு...உற்சவம், திருவிழா என்றெல்லாம் தெய்வத்துக்கும் கொண்டாட்டங்களை குறித்து வைத்தார்கள்.

நன்றி: இந்துமதம் எங்கே போகிறது

இப்படி மனிதனின் கற்பனையில் உருவான கட்டுக் கதைகளை வைத்துத்தான் இறைவன் என்ற மகத்தான சக்தியோடு தொடர்பு படுத்தி அந்த சக்தியின் வல்லமையை கேவலப்படுத்துகின்றனர்.

அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர் இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும். உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான். (அல்குர்ஆன் 10:31 to 10:40.)

ஆக மனிதனுக்கும் இறைவனுக்கும் மகத்தான மலையளவுக்கும் அதிகமான வித்தியாசம் உள்ளது அதையெல்லாம் சாதாரணமாக மறந்துவிட்டு மனிதனும் இறைவனும் சமமே என்பதும், இறைவனுக்கும் இணை துணை உண்டு என்பதும் எங்கோ யாருக்கோ வந்த சிந்தனைக்கோளாறு. அல்லது யாரோ வயிறு பிழைக்க எடுத்த வடிகட்டிய முட்டாள்தனம்.

எனவே

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்¢ தூய்மையும்) உடையோராகலாம். 2:21

Monday, December 04, 2006

விதவையும் துன்பங்(பெண்)களே

விதவைகள் என்றாலே சமுதாயத்தில் தள்ளிவைக்கக்கூடியவர்கள் அவர்களுக்கு சமூகத்தில் எந்த ஒட்டும் உறவும் கிடையாது கூடாது என்று நம்பிக்கை வைத்துள்ள ஒரு சமுதாயத்தில் இருந்து வந்தவன் நான். கிணற்றுத்தவளையாக இருந்தபொழுது புரியாத பல விஷயங்கள் அதிலிருந்து வெளிவந்த பொழுது தெரிய வந்துள்ளது ஆம் உண்மைதான் இஸ்லாம் என்றாலே வெறுக்கப்படக்கூடிய மதம் என்று பொன் ,பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்து நேசகுமார், வஜ்ரா சங்கர் , கால்கரிசிவா , டோண்டு போன்றவர்கள் வாய்கிழிய கத்துவதற்கு காரணம் கூட இஸ்லாம் எடுத்துவைக்கக்கூடிய வாதங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம்

ஒவ்வொரு மதமும் தங்களின் கொள்கையாக நம்பிக்கையாக பல கோட்பாடுகளை முன் வைக்கின்றது ஆனால் அவைகளின் எது சிறந்தது என்று சிந்தித்து நடைமுறை சாத்தியத்தையும் உணர்ந்து ஏற்றுக்கொள்வது அவரவர்களின் கட்டாயக்கடமையாகும். இங்கே நான் படித்த ஒருசில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் அடைகின்றேன்

விதவைகளின் துன்பநிலைகள்

பழைய ஏற்பாடு விதவைகளுக்கு கணவனின் சொத்திலிருந்து எந்த பங்கையும் அங்கீகரிக்காததனால், அவர்கள் யூத ஜனங்களிலேயே மிகவும் பாதிப்பிற்குள்ளானவர்களாக இருந்தனர். அவளுடைய இறந்த கணவனின் சொத்தில் பங்கு பெற்ற கணவனின் ஆண் உறவினர்கள் அச்சொத்திலிருந்து அவளுக்கு சாப்பாட்டிற்கு கொடுக்கவேண்டும். ஆயினும், அதை பெற்றுத்தருவதற்கு எந்த அமைப்பும் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை மற்றவர்களின் கருணையையே சார்ந்திருக்கவேண்டியதாயிருந்தது. ஆகவே விதவைகள் மிகவும் தாழ்ந்த வர்க்கமாகயிருந்தனர் விதவைத்துவமே மிகப்பெரும் இழிவின் அடையாளமாக கருதப்பட்டது. (ஏசாயா 54:4).

ஆனால் சொத்திலிருந்து அவளை விலக்கி வைத்திருப்பதனால் விதவைக்கு துன்பநிலை தருவதோடு மாத்திரம் நின்றுவிடாமல், இறந்த சகோதரனுக்கு சந்ததியை உருவாக்கி அவன் பெயர் மங்காமலிருக்கச் செய்வதற்காக, குழந்தையற்ற விதவை இறந்த கணவனின் சகோதரனை, அவன் ஏற்கனவே மணமானவனாக இருந்தால் கூட திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.
(ஆதியாகமம் 38).

அப்பொழுது யூதா ஓனானை நோக்கி நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சதந்தரமாய்ப் படைத்து உன் தமையனுக்கு சந்ததி உண்டாக்கு என்றான். (ஆதியாகமம் 38:8)

இந்த திருமணத்திற்கு விதவையின் சம்மதம் அவசியமில்லை. விதவை இறந்த கணவனின், அவனின் சந்ததியை உறுதிசெய்யக்கூடிய, சொத்தாகவே கருதப்பட்டாள். பைபிளின் இந்தச்சட்டம் இன்னமும் இஸ்ரவேலில் பின்பற்றப்பட்டு வருகின்றது.48 குழந்தையற்ற விதவை அவன் சகோதரனுக்கு சொத்தாக கொடுக்கப்பட்டாள். அச்சகோதரன் திருமணம் செய்யும் வயதையடையாத சிறுவனாக இருந்தால் அவன் திருமண வயதையடையும் வரை அவள் காத்திருக்க வேண்டும். இறந்த கணவனின் சகோதரன் அவளை மணக்க மறுத்தால் மாத்திரம் அவள் விடுவிக்கப்படுவாள். அப்போது தான் விரும்பியவனை அவள் மணந்து கொள்ளலாம். இதிலிருந்து விடுதலை பெற விரும்பும் விதவைகளை அவர்களின் கணவனின் உடன் பிறந்தவர்கள் பிளாக்மெயில் செய்வது இன்றைய இஸ்ராயிலில் சாதாரணமாக நடக்கும் விசயமாகும்.

இஸ்லாத்திற்கு முந்திய அரபிகளும் இது போன்ற நடைமுறையையே பின்பற்றி வந்தனர். விதவை தகப்பனின் சொத்தாக கருதப்பட்டு மகனால் வாரிசுச்சொத்தாகப் பெறப்பட்டாள். சாதாரணமாக, இறந்த தந்தையின் மற்ற மனைவியின் மூலம் பிறந்த மூத்த மகனுக்கு அவள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள். இந்த பழக்கத்தை திருக்குர்ஆன் கடுமையான முறையில் கண்டித்து அழித்தது:

மேலும் உங்கள் தந்தையர் மணமுடித்திருந்த பெண்களை நீங்கள் ஒருபோதும் மணமுடித்துக்கொள்ளாதீர்கள். முன்னால் நடந்தது நடந்துவிட்டது. உண்மையில் இது ஒரு மானக்கேடான, வெறுக்கத்தக் செயலாகும். கீழ்த்தரமான நடத்தையுமாகும். (4:22)

மத குருவானவன்; விதவைகளையோ விவாகரத்து செய்யப்பட்ட பெண்களையோ அல்லது விபச்சாரிகளையோ திருமணம் செய்யக் கூடாது என தடுக்கப்படும் அளவிற்கு விதவைகளும் விவாகரத்து செய்யப்பட்டவர்களும் பைபிளினால் கீழ்த்தரமானவர்களாக கணிக்கப்பட்டார்கள்:

கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் (ஆசாரியன்) விவாகம் பண்ண வேண்டும். விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புகுலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல் தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன். அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பனாக. (லேவியராகமம் 21: 13-15)

இன்றைய இஸ்ராயிலில் கோஹன் இனத்தைச் சேர்ந்தவர்கள் (ஆலயத்தின் பிரதான ஆச்சாரிய குலத்தை சேர்ந்தவர்கள்) விதவையையோ விவாஹரத்து செய்யப்பட்ட பெண்ணையோ அல்லது விபச்சாரியையோ திருமணம் செய்ய முடியாது.49 Inid., p. 47. கணவர்கள் இயற்கை காரணங்களால் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து மூன்று முறை ஒரு பெண் விதவையாக்கப்பட்டுவிட்டால் அவள் 'மிகவும் அபாயகரமானவள்' திருமணம் செய்ய தடுக்கப்பட்டவள் என யூதச்சட்டம் கூறுகிறது.50 Inid., p. 49. ஆனால் திருக்குர்ஆனோ சாதிகளையோ அல்லது 'அபாயகரமானவர்கள்' எனப்படுவர்களையோ (அப்படியானவர்கள் இருப்பதாக) அங்கீகரிகப்பதில்லை. விதவைகளும் விவாகரத்து செய்யப்பட்டவர்களும் தாங்கள் விரும்பியவர்களை மணப்பதற்கு சுதந்திரம் உண்டு. விதவையின் மேலோ அல்லது விவாகரத்து செய்யப்பட்வளின் மீதோ எந்தவித கறையும் படிவதில்லை. திருக்குர்ஆன் அருள்கின்றது:

நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்களின் (இத்தா) தவணை முடியும் தருவாயை அடைந்து விட்டால், நல்லமுறையில் அவர்களை உங்களுடன் வாழச்செய்யுங்கள் அல்லது நல்ல முறையில் அவர்களை அனுப்பி விடுங்கள். ஆனால் வரம்பு மீறும் எண்ணத்துடனும் தொல்லை கொடுக்கும் எண்ணத்துடனும் அவர்களை நீங்கள் தடுத்து நிறுத்தாதீர்கள். அப்படி எவரேனம் செய்தால், உண்மையில் அவர் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டவராவார். அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (2:231)

உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு மரணமடைந்து விட்டால், அந்த அவருடைய மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தாமாகக் காத்திருக்க வேண்டும். தங்கள் தனிப்பட்ட விஷயத்தில் (தம் விருப்பத்துக்கொப்ப) ஒழுங்கான முறையில் செயல்பட அவர்களுக்கு உரிமையுண்டு. அதில் உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான். (2:234)

உங்களின் மனைவியரை விட்டு மரணமடைவோர், தம் மனைவியரின் நலன் கருதி, (வீட்டை விட்டு) அவர்கள் வெளியேற்றப்படாமல் ஓராண்டு வரை அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதி அளிக்கப்பட வேண்டுமென மரண சாஸனம் செய்ய வேண்டும். ஆனால் அவர்களாகவே வெளியேறிய பிறகு அவர்கள் தங்களின் தனிப்பட்ட விசயத்தில் ஒழுங்கான முறையில் செயல்பட்டால் உங்கள் மீது எந்தப்பொறுப்புமில்லை. மேலும் அல்லாஹ் யாவற்றின் மீதும் வல்லமை மிக்கோனும், பேரறிவாளனுமாயிருக்கின்றான். (2:240



இந்த வசனங்களே போதுமானது பெண்களுக்கு இஸ்லாம் எவ்வளவு உன்னதமான அந்தஸ்தையும் மரியாதையையும் கண்ணியத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது என்பதை புரிந்து கொள்ள. பெண் என்பவள் பல படித்தரங்களை கட்டங்களை கொண்டவள் ஆனால் பெண் என்ற பார்வையில் அவளும் மதிக்கப்பட வேண்டியவளே என்பதில் இஸ்லாம் காட்டும் முக்கியத்துவத்தை உணர்தல் அவசியம்.

Monday, September 11, 2006

பதிலுக்கு பதில் 3 I am OK

(1) இங்கே இருப்பது I am OK you are not OK என்ற நிலை தான். அதை விட்டு I am OK you are OK என்றால் இந்த பதிவே தேவையில்லை

உண்மைதான் இந்த வார்த்தையின் மீது எனக்கும் பரிபூரணமான நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த வார்த்தை எப்பொழுது வரை தெரியுமா? நீங்கள் மற்ற மதத்தவரை கண்மூடித்தனமாக சாடாதவரை ஆனால் நீங்கள் செய்வதோ பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது என்று தமிழில் ஒரு பழஞ்சொல் உள்ளது அதற்கு ஒப்பானது உங்களின் இந்த வாதம்.

(2) //சார், மனிதனை மனிதனாகதான் பார்க்கிறேன் மதவாதியாக அல்ல. நான் எப்போதுமே "I am OK you are OK " டைப் தான். உங்கள் நம்பிக்கையும் என் நம்பிக்கையும் மரியாதைக் குறியதே// - இவை இரண்டுமே சகோதரர் கால்கரி அவர்களின் கருத்தாகும்

மதத்துவத்தையும் மனித்துவத்தையும் சகோதரர் குழப்பிக் கொள்கின்றார். மனிதத்துவம் என்பது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கால்கரி சிவாவிடம் சொன்னால் ஒத்துக்கொள்வார் ஆனால் நான் ஒன்றும் ஒன்றும் ஐந்து என்று சொன்னால் கால்கரி ஒத்துக்கொள்வாரா? சரி. இவர் இப்படித்தான் என்று போய்விடுவார் இது மனிதத்துவம்.

மதத்துவம் என்பது உதாரணமாக நான் சகோதரர் கால்கரியிடம் அமெரிக்காவிற்கு விமான டிக்கெட் கொடுத்து போகச்சொன்னால் சென்று வருவார். ஏன் போகவேண்டும்? என்று கேட்டுவிட்டு போவார் ஆனால் அமெரிக்காவிற்கு சென்று வாருங்கள் என்று துபாயின் விமான டிக்கெட்டை கொடுத்தால் சகோதரர் ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிடுவாரா? நிச்சயமாக போகமாட்டார். அதுவும் ஏன் என்ற கேள்வியை எழுப்பாமல்!. இதுதான் மதத்துவம். அந்த ஏன் என்ற கேள்விதான் ஒவ்வொரு மதமும் சுட்டிக் காண்பிக்கும் கலாச்சார ரீதியான செயல்பாட்டின் எதிர்பார்ப்பின் திசையாகும். ஆக மதம் என்பது வேறு;மனிதத்துவம் என்பது வேறு. மனிதத்துவம் என்பது பொறுமையும், சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் உள்ளது.(கொள்கையை அல்ல)

மதம் என்பது சொல்லுறுதியும், செயல் உறுதியும் உடையது. அது கலாச்சார சீர்கேட்டிற்கும் காலச்சூழலின் மாற்றத்திற்கும் அப்பாற்பட்டதாகும். இவை இரண்டையும் சேர்த்துப்பார்க்கும் பொழுதுதான் I am OK you are not OK என்ற நிலைக்கு மனிதன் சிந்திக்கத் தூண்டுகின்றான் உதாரணம் 1 + 1 = 2 // 1 + 1 = 5 இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது சகோதரரே! கீழே நான் சுட்டிக்காட்டிய சான்றுகள் ஆதாரமாகும்.

பெண்களைப் பற்றிய பைபிள்-திருக்குர்ஆன் ஆகியவற்றிற்கிடையே உள்ள கொள்கை வித்தியாசங்கள் புதிதாக பிறந்த பெண் சிசு பற்றியதோடு மாத்திரம் நின்று விடவில்லை அதையும் தாண்டி அது ஆழமாகச் செல்கிறது. தன் மதத்தைப் பற்றி கற்க முயற்சிக்கும் ஒரு பெண்ணின் நிலைமை பற்றி ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

யூத மதத்தின் இதயமே தவ்ராத் -கட்டளைகள் (Commandments) ஆகும்.
ஆனாலும் ' பெண்கள் தவ்ராத்தை வாசிப்பதிலிருந்து விலக்கப்படுகிறார்கள்' என்று தல்மூது கூறுகிறது. சில யூத மத குருமார்கள் உறுதியாக அறிவித்துள்ளதாவது 'பெண்களுக்கு தவ்ராத்தின் வார்த்தைகளை கற்றுக் கொடுப்பதை விட அதை நெருப்பில் போட்டு அழிப்பது நல்லது. ' 'யார் யார் தன் மகளுக்கு தவ்ராத்தை கற்றுக் கொடுக்கிறானோ அவன் அவளுக்கு அசிங்கத்தையே கற்றுக் கொடுக்கிறான். ' Denise L. Carmody, "Judaism", in Arvind Sharma, ed., op. cit., p. 197.

புதிய ஏற்பாட்டில் பவுல் அவர்களின் இது பற்றிய கண்ணோட்டம் கூட பிரகாசனமானதாக இல்லை:

சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்;வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக் கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக் கடவர்கள்: ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. (1 கொரிந்தியர் 14:34-35)

பெண் பேச அனுமதிக்கப்படவில்லையென்றால் எவ்வாறு கற்க முடியும்? அவள் முழு அடிமைத் தனத்திலேயே இருந்தால் அவள் வளர்ச்சி எவ்வாறு அறிவுப்பூர்வமாக அமையும்? அவள் தகவல் பெறுவதற்குரிய ஒரே வழி அவளின் கணவனாக மாத்திரம் இருந்தால் அவளின் சிந்தனையை வானம் வரை எவ்வாறு அவள் விரிவடையச் செய்ய முடியும்?

ஹிந்து பெண்களுக்கு தங்கள் கணவனை விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை இல்லை.

அவளுக்கு சொத்துரிமையோ வாரிசுரிமையோ கிடையாது. அவள் தன் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

அவளுடைய ஜாதகம் யாருடைய ஜாதகத்தோடு பொருந்தி வருகின்றதோ அவனையே மணம் முடிக்க வேண்டும்.

அவள் வரதட்சணை என்றும் சீர் என்றும் பெரும் பணத்தைக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.அவளுடைய கணவன் இறந்து போனால் அவளும் உடன்கட்டை ஏறி தன்னை அழித்துக் கொள்ள வேண்டும்.

அவள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது.

விதவைகள் சமுதாயத்தின் சாபங்கள் எனக் கருதப்படுகின்றார்கள்.

அவர்கள் சமுதாயத்தில் புழங்கக் கூடாது.

அவள் வண்ணப் புடவைகளைக் கட்டக் கூடாது.

அவள் அணிமணிகள் அணியக்கூடாது.

செவ்வாய் தோசம் போன்ற கொடூரமான மூடநம்பிக்கைகளால், அத்தோசமுள்ள பெண்ணின் மறுவாழ்வே கேள்விக் குறியாகி விடுகிறது )

மனுஸ்மிர்தி கூறுகின்றது:
பெண்களை ஒரு போதும் நம்பாதே! ஒரு பெண்ணோடு தனித்து அமாராதே! அது உன் தாயாக இருந்தாலும் சரியே. அவள் உன்னை தகாத செயலுக்குத் தூண்டுவாள்.உன்னுடைய மகளோடு தனித்து அமராதே.

அவள் உன்னைத் தூண்டுவாள்.உன்னுடைய சகோதரியோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள்.

இன்னும் மனுஸ்மிர்தி கூறுகின்றது. நாஸ்த்ரீ சுவாதந்திரிய மார்காதி!

சமுதாயத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் கிடையாது.

" ஹாரியா"வின்படி கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறும் பெண் மூன்று குடும்பங்களைத் தூய்மைப்படுத்துகின்றாள். அவளுடைய தந்தையின் குடும்பம், தாயாரின் குடும்பம், தன் கணவனின் குடும்பம். பிராமண வேதாந்திகள் கூறுகின்றார்கள்:

வேதத்தின் வாக்காக நின்று அவர்கள் பேசுகின்றார்கள். கணவணோடு தன்னை எரித்துக் கொள்ளாத பெண்கள் மீண்டும் பெண்ணாகப் பிறக்கும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள். ஒரு பெண்ணின் கணவன் பிராமணன் ஒருவனைக் கொலை செய்துவிட்டான். இவன் இறந்துவிட்டான். இந்தக் கொலையாளியின் மனைவி அவனோடு கொள்ளிக்கட்டையில் வெந்து விடுவாளேயானால் அவனுடைய இந்தப் பாவம் கழுவப்பட்டுவிடும்.

ஆமாம். கணவனோடு மனைவியும் இறந்துவிட்டால் அவர்களின் குழந்தைகளின் கதி என்ன?

இந்தக் கேள்வியைப் பூரிசங்கராச்சாரியார் அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதோ:

அது விதி! அந்தக் குழந்தைகள் தாயில்லாமல் கஷ்டப்படட்டும். சாகட்டும். அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் உடன்கட்டை ஏறும் விதியைச் செயல்படுத்தியேயாக வேண்டும். 14-9-87 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில இதழ் இந்தச் செய்தியைத் தருகின்றது.

இருபக்கமும் சமநீதியோடு இருக்கும் வகையில் இது பற்றி திருக்குர்ஆனின் நிலை வேறுபட்டுள்ளதா என்றும் நாம் கேட்க வேண்டும். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஒரு சிறிய சம்பவமே இது பற்றி அதனுடைய நிலையை சுருக்கமாக விளக்க போதுமானது.

கவுலா என்ற முஸ்லிம் பெண்மணியின் கணவர் கோபத்தில் அவரிடம் ' நீ என் தாயின் முதுகைப் போன்றவள்' என்று கூறி விடுகிறார். இது திருமணக் கடமைகளிலிருந்து ஒரு கணவனை விடுவிக்கக் கூடிய ஆனால் மனைவியை கணவனின் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்லவோ அல்லது வேறு ஒருவனை மணக்கவோ அனுமதிக்காத ஒரு வகையான விவாஹரத்து சொல்லாக அன்றைய அரபிகளால் கருதப்பட்டது.

தன் கணவன் இவ்வாறு சொல்லக்கேட்ட கவுலா அவர்கள் மிகவும் துக்ககரமாகி விட்டார். தன் நிலைமையைக் கூறி வாதாட நபி (ஸல்) அவர்களிடமே அவர் நேராக போய் விட்டார். இதற்கு வேறு வழி தெரியாததால் நீங்கள் பொறுமையைக் கையாள வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிறுத்தி வைக்கப்பட்ட தன் திருமண பந்தத்தை காப்பதற்காக கவுலா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தொடர்ந்து வாதாடிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்தான் திருக்குர்ஆன் இதில் தலையிட்டது:

கவுலாஅவர்களின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த கெட்ட பழக்கத்தை தெய்வீக தீர்ப்பு அழித்தொழித்து விட்டது. இந்தச் சம்பவம் தொடர்ந்து ஒரு முழு அத்தியாயமே 'அல் முஜாதிலா' அல்லது 'வாதாடும் பெண்' என்று பெயரிடப்பட்டுள்ளது:

தன்னுடைய கணவர் விஷயத்தில் உம்மிடம் விவாதித்துக் கொண்டும் , அல்லாஹ்விடத்தில் முறையிட்டுக் கொண்டும் இருக்கின்ற பெண்ணின் சொல்லைத் திண்ணமாக அல்லாஹ் கேட்டுக்கொண்டான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கேட்பவனும் பார்ப்பவனும் ஆவான் ( 58:1)

திருக்குர்ஆனின் கொள்கையைப் பொறுத்தவரை ஒரு பெண் இஸ்லாத்தின் நபி (ஸல்) அவர்களிடமே நேரடியாக வாதாடும் உரிமை பெற்றிருக்கிறார். மௌனமாயிருக்கும்படி அவர்களைச் சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது. சட்டம், மதம் ஆகியவற்றைக் கற்பதற்கு அவரின் கணவனை மாத்திரம் சார்ந்திருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது.

பெண்களுக்கு இஸ்லாத்தில் உரிமையில்லை இஸ்லாம் பெண்களை கொடுமைப்படுத்துகின்றது எனக் கூக்குரலிடுகின்றவர்கள் சற்று நிதானமாக சிந்திக்கும் சமயம் வந்துவிட்டது.

இவை பெண்களுக்கு முல்லாக்கள் கொடுக்கும் மரியாதையாகும்.

இதெல்லாம் பெண்களை தானம் செய்து வயிறு பிழைக்கும் வந்தேறிகளுக்கு எப்படித் தெரியும்

I am OK; You are NOT OK" என்பதில் குற்றம் காண்பவர்கள் சிந்திக்கட்டும்! ஏனெனில், "சிந்திப்பவர்களுக்கு இதில் நல்லுபதேசம் உள்ளது" என்பது குர்ஆனின் அழைப்பல்லவா?

Wednesday, September 06, 2006

பதிலுக்கு பதில் 2 (பர்தா)

ஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்?

இந்த வார்த்தை முஸ்லிம்கள் மீது மட்டும் வழுக்கட்டாயமாக திணிக்கப்படும் வார்த்தையாகும். எல்லா மனிதருமே ஏதோ ஒரு மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களாகவே இருக்கின்றோம். அவர்களின் செயல்பாடுகளுமே அதை ஒத்துத்தான் அமையும். சில விசயங்கள் இந்தக் காலத்திற்கு ஒத்துவராது என்று வேண்டுமானால் மாற்றிவைக்கக்கூடும்.

உதாரணமாக வரதட்சணையை இந்துமதம் (பார்க்க: பொட்டு வைத்தல்
http://iniyaislam.blogspot.com/2005/09/blog-post_14.html ) ஆமோதிக்கின்றது ஆனால் நடைமுறை சாத்தியமில்லை என்றும் வரதட்சணை வாங்காதே என்றும் அதே இந்துக்களே பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இஸ்லாம் இதுபோன்ற மாற்றத்துக்கு இதுவரை ஆளாகவில்லை இன்ஷா அல்லாஹ் இனியும் ஆகாது.

ஆனால் பர்தாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய மதம் மட்டும்தான் இதை வழியுறுத்துகின்றதா? அல்லது தங்கள் மதத்தின் மீது இருக்கக்கூடிய ஏவுகணைகளை எதிர்கொள்ளமுடியாமல் மற்றமதத்தின் மீது சேற்றை அள்ளி கண்ணை மூடிக்கொண்டு வீசுகின்றனரா? நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருட்டிவிடாது சகோதரர்களே இதோ படியுங்கள் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் உங்களுக்கு நேர்வழி கிடைக்கட்டும்.

2 எனக்கு எழும் ஸந்தேகமெல்லாம் ஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்?

பெண்களின் அங்க அமைப்பைக் கருத்தில் கொண்டு இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாப் அணிந்து வலியுறுத்துவதுபோல், ஆண்களை வேறுவகையில் கட்டுப்பாடாக இருக்க வலியுறுத்துகிறது.

(நபியே) முஃமினான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக! ஆண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன் (குர்ஆன் 24:30)

இதேபோன்ற கட்டளையை அதற்கு அடுத்த வசனத்திலேயே (குர்ஆன் 24:31) பெண்களுக்கும் வலியுறுத்துகிறது. இஸ்லாம் இயற்கைக்கு உகந்த மார்க்கம். ஆண்களின் உடலமைப்பிற்கும் பெண்களின் உடலமைப்பிற்குமுள்ள இயற்கையான வித்தியாசத்தை இஸ்லாம் உணர்ந்துள்ளது. அதனால்தான் பெண்களின் உடலமைப்பைக் கருத்தில் கொண்டு அறிவுப்பூர்வமான கட்டளையை வகுத்துள்ளது. மேலும், இவ்வசனத்தில் ஆண்களுக்குச் சொல்லப்பட்டதை பெண்களுக்கும், பெண்களுக்குச் சொல்லப்பட்டதை ஆண்களுக்கும் மாற்றிச் சொல்லி இருந்தாலும் கூட விமர்சிக்கப்படுவதோடு, நடைமுறைக்கு ஒவ்வாததும் கூட என்பதை எதார்த்தமாக சிந்திக்கும் எவருக்கும் 'ஸந்தேகம்' வராது.

மேற்கண்ட ஸந்தேகத்தை இந்தும்த திருமணங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள தாலி, மெட்டி விசயத்திலும் கேட்கலாம். (இதுதான் நியாயமும் கூட!) மேலும் கோவிற்சிற்பங்களில் ஆபாசங்கள் இருந்தாலும், பெண் கடவுள்களான லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, சீதை போன்றோர் சேலையுடனும், சிவன், முருகன், இராமன் போன்றோர் சட்டை இல்லாமலும் இருப்பதிலிருந்து, இந்து மதமும் பெண்களை உடல் ரீதியாக அவர்கள் கடவுளாகவே இருந்தாலும் வேறுபடுத்தியே பார்க்கிறது என்பது விளங்கும்.
மிகவும் எதார்த்தமாகச் சொல்வதென்றால், சகோதரி முன் ஒரு சகோதரன் அரைகுறை ஆடையுடன் அல்லது அரைக்கால் டவுசர் மட்டும் அணிந்து நிற்பதை தவறாகக் கருதாத சமூகம், அதே ஒரு சகோதரி அவ்வாறு நின்றால் ஏற்குமா? என்று சிந்திந்தால், இஸ்லாம் எதார்த்தமாகவே மதக்கட்டளை இட்டுள்ளது என்பது விளங்கும்.

பர்தா என்பது யூத-கிறிஸ்தவ மதத்தில் இல்லை என்பது உண்மையா? அது பற்றி ஆதாரங்களை முதலில் பார்க்கலாம். டாக்டர் மெனாகெம் பிரேயர் (பைபிள் இலக்கியப் பேராசிரியர், யேஷவா பல்கலைக்கழகம்) தன்னுடைய 'ரப்பானிய நூல்களில் பெண்கள்' என்ற புத்தகத்தில் 'யூதப்பெண்கள் வெளியே செல்லும் போது தலையை மூடிக்கொண்டு செல்வார்கள்; சில சமயங்களில் முகத்தையும் மூடிக்கொண்டு ஒரு கண்ணை மாத்திரம் திறந்திருப்பார்கள் என கூறுகிறார்.76 சில புராதான அறிஞர்களின் வாக்குகளை அவர் கோடிட்டு காட்டுகிறார், 'இஸ்ராயீலியப் பெண்கள் தலையை திறந்த வண்ணம் நடக்கக்கூடாது' 'தன் மனைவியின் தலைமுடியை மற்றவர்களை பார்க்க விடுபவன் சபிக்கப்படுவானாக.... அலங்காரத்திற்காக தலைமுடியை தொங்கவிடுபவள் வறுமையை வரவழவைப்பவளாவாள்'

பிரார்த்தனைகளையோ அல்லது அருள்மொழிகளையோ தலையைத் திறந்திருக்கும் பெண்ணின் முன்னால் ஓதுவதை ரப்பானிய சட்டம் தடுக்கிறது. ஏனெனில் தலையை திறந்திருப்பது 'நிர்வாணமாக' இருப்பது போல் கணிக்கப்படுகின்றது.77 தன்னயத்தியன் என்ற காலத்தின் போது தலையை மூடாத பெண் கற்பையே கேவலப்படுத்தியவளாக கருதப்பட்டாள் என டாக்டர் ப்ரேயர் மேலும் குறிப்பிடுகிறார்.

அவள் தலை திறந்திருந்தால் இக்குற்றத்திற்காக அவளுக்கு நானுஸறு ஸஹஸிம் அபராதம் போடப்படலாம்.' ஆனால் இந்த யூதப் பெண்களின் இந்த திரை எப்பொழுதும் கற்பின் அடையாளமாக கருதப்படவில்லை என டாக்டர் ப்ரேயர் விளக்குகிறார். சில நேரங்களில் அது கற்பை குறிப்பதை விட உயர்ந்த நிலையையும் வசதியையுமே குறித்தது. கண்ணியமிக்க பெண்களின் கண்ணியத்திற்கும் உயர்வுக்கும் அடையாளமாக திரை திகழ்ந்தது. அவள் மற்றவர்கள் புக முடியாத தன் கணவனின் புனிதசொத்து என்பதிற்கு அடையாளமாகவும் அது திகழ்ந்தது.

திரை பெண்ணின் சுயமரியாதை மற்றும் சமூக அந்தஸ்தை குறித்தது. கீழ்சாதிப்பெண்கள் தங்களை மேல்சாதிப்பெண்களாக காட்டிக்கொள்வதற்காக அடிக்கடி திரையை அணிந்து வந்தனர். திரை என்பது கண்ணியத்தின் அடையாளம் என்பதால்தான் யூத சமுகத்தில் உள்ள விபச்சாரிகள் அதை அணிய அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், விபச்சாரிகள் மரியாதைக்குரியவர்களாக தோற்றமளிக்கும் பொருட்டு வேறு விஷமான தலைமறைவை அணிந்து வந்தனர்.79 ஐரோப்பாவிலுள்ள யூதப்பெண்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, அவர்களின் வாழ்க்கை அவர்களைச் சுற்றியுள்ள உலக கலாச்சாரத்துடன் கலந்து போகும் காலம் வரை, திரையை அணிந்தே வந்தனர். ஐரோப்பிய வாழ்க்கையின் வெளிப்புற அழுத்தம் அவர்கள் தலையை திறந்து நடமாட நிர்ப்பந்தித்தது.

தங்களின் வழமையான தலைமறைவை அணிவதற்குப் பதிலாக விக் அணிவது மிகவும் சௌகரியமானது எனக்கண்டனர். இன்று, மிகவும் பக்தியுள்ள யூதப்பெண்கள் கூட ஆலயத்திலல்லாது வேறு எங்கும் தலையை மறைப்பதில்லை.80 அவர்களில் ஹாஸிதிக் பிரிவைச் போன்ற சிலர் இன்னமும் விக்கை உபயோகித்து வருகின்றனர்.81

இது சம்பந்தமாக கிறிஸ்தவ நடைமுறை என்ன? கத்தோலிக்க பெண் துறவிகள் பல நூற்றாண்டுகளாக தலையை மறைத்து வருகின்றனர் என்பது நன்கு அறியப்பட்டதே. புனித பவுல் திரையைப்பற்றி மிகவும் சுவையான செய்தியை கூறுகிறார்:

ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாறென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும் நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான்.

ஜெபம் பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்: அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே. ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்: தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக் கடவுள். புருஷனானவன் தேவனுடைய சாயலும் கிமையுமாயிருக்கிற படியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை:

ஸ்திரியானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள். புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். புருஷன் ஸதிரீக்காகச் சிருஷடிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ;டிக்கப்பட்டவள். ஆகையால் (தென் காரணமாகவும்) மேலும் தூதர்களினிமித்தமும் ஸ்திரீயானவள் தலையின் மேல் (அதிகாரத்தின் அடையாளமாக). முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். (1 கொரிந்தியர் 11:3-10)

அது தேவனுடைய சாயலாயிருக்கும் ஆணிற்கு, அவனிலிருந்து, அவனுக்காக படைக்கப்பட்ட பெண்ணின் மேலிருக்கும் அதிகாரத்திற்கு அடையாளம்தான் திரை என்பதுதான் திரைக்கு புனித பவுலின் விளக்கம். புனித தர்த்தலியன் தன்னுடைய புகழ்பெற்ற 'கன்னிகள் திரையிடுதல்' பற்றிய கட்டுரையில் 'வீதிகளில் செல்லும் போது திரையணியும் இளம் பெண்களே, நீங்கள் ஆலயத்திலும் அணியுங்கள், அன்னியர் முன் திரையணியும் நீங்கள் உங்கள் சகோதரருக்கிடையே இருக்கும் போதும் திரையணியுங்கள்....' என்று கூறுகிறார். கத்தோலிக்க சர்ச்சின் கானானிய சட்டங்களில் பெண்கள் சர்ச்சிலிருக்கும் போது திரை அணிய வேண்டும் என்ற சட்டமும் ஒன்றாகும்.82 இன்றளவு வரை ஆமிஷ;, மென்னோமித் போன்ற சில கிறிஸ்தவ பிரிவுகள் தங்களின் பெண்களை திரையிட்டவர்களாக வைத்திருக்கின்றனர்.

திரைக்கு சர்ச் தலைவர்கள் கொடுக்கும் காரணம் பவுலடியார் புதிய ஏற்பாட்டில் கொடுக்கும் அதே காரணம்தான்: 'தலைமறைவு என்பது பெண் ஆணுக்கும் கடவுளுக்கும் அடிமைப்பட்டிருப்பதன் அடையாளமாகும்'83

தலைமறைவு என்பது இஸ்லாத்தால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை மேலுள்ள ஆதாரங்கள் தெளிவாக்கும். இருப்பினும், இஸ்லாமும் அதை அங்கீகரித்தது. விசுவாசம் கொண்ட ஆண்களும் பெண்களும் பார்வையை தாழ்த்துமாறும் கற்பை காத்து வருமாறும் பெண்கள் தங்களின் தலைமறைவை தங்கள் கழுத்து மார்பு ஆகியன வரை இழுத்து விடவும் இஸ்லாம் கட்டளையிடுக்கின்றது

(நபியே) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். .... மேலும் (நபியே) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளை பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத்தலங்களை பாதுகாக்கட்டும்: அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிரஸ மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். (24:30-31)

எதற்காக திரை அணிய வேண்டும்? இதை திருக்குர்ஆன் தெளிவாக விளக்குகிறது.

'நபியே, உம்முடைய மனைவிகளிடமும் பெண்களிடமும் மற்றும் மூமினான பெண்களிடமும் கூறுவீராக: அவர்கள் (வெளியே அவசியத்தின் காரணமாக) செல்லும் போது தங்களி;ன் முந்தானைகளை தங்களின் மேல் தொங்க விட்டுக்கொள்ளட்டும். அதனால் அவர்கள் (கண்ணியமானவர்களென) அறியப்பட்டு துன்பத்திற்கு உள்ளாகாமல் இருப்பதற்காக. (33:59)

இதுதான் முழு விசயமுமே. பிறரால் துன்பத்திற்குள்ளாவதிலிருந்து பெண்களை திரை பாதுகாக்கிறது. திரையின் முழு நோக்கமே பாதுகாப்பு என்பதற்காகத்தான். இஸ்லாமிய திரை, கிறிஸ்தவ திரையைப் போலல்லாமல் பெண்ணின் மேல் ஆணுக்குரிய அதிகாரத்தின் அடையாளமோ அல்லது பெண் ஆணுக்கு அடிமை என்பதற்கான அடையாளமும் அல்ல. இஸ்லாமிய திரை யூதப்பெண்களின் திரையைப் போலல்லாமல் செல்வச் செழுப்பின் அடையாளமோ அல்லது சில திருமணமான உயர்ந்த பெண்களின் தனிப்பட்ட தன்மையையோ காண்பிப்பதுமல்ல.

இஸ்லாமிய திரையென்பது பெண்கள் தங்களை பாதுகாக்கும் நோக்கத்திற்காக அணியப்படும் ஒழுக்கத்தின் அடையாளமே. நஷ்டப்பட்ட பிறகு வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை விட எப்பொழுதும் பாதுகாப்பான முறையில் இருந்து கொள்வது சிறந்தது என்பதுதான் இஸ்லாமிய தத்துவமாகும். உண்மையில் திருக்குர்ஆன் பெண்ணின் உடலையும் அவள் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் எந்த அளவிற்கு அக்கறை எடுத்துள்ளதெனில், அவள் மீது எவறேனும் பொய்யாக களங்கம் சுமத்த முயலுவாரேயானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறுகிறது:

எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் எற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். (24:4)

இந்த தண்டனையை கற்பழிப்பு குற்றத்திற்கு பைபிள் தந்திருக்கும் மிகச்சிறிய தண்டனையோடு ஒப்பிட்டுப்பாருங்கள்:

நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோட சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவளோட சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்: அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்: அவன் உpரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது. (உபாகமம் 22: 28:29)

இங்கு யார் உண்மையிலேயே தண்டிக்கப்படுகிறார் என்பதை ஒருவர் சிந்திக்கவேண்டும். கற்பழித்ததற்காக அபராதம் விதிக்கப்படுவது ஆணா அல்லது தன்னைக்கற்பழித்தவனை மணக்குமாறும் அவன் சாகும் வரை அவனோடு வாழ நிர்ப்பந்திக்கப்படும் பெண்ணா? இங்கு கேட்கப்பட வேண்டிய மற்றொரு கேள்வி: பெண்ணுக்கு அதிக பாதுகாப்பளிப்பது எது? திருக்குர்ஆனின் கடுமையான போக்கா அல்லது பைபிளின் தளர்ந்த போக்கா?

சிலர், குறிப்பாக மேற்கத்தியர், பர்தா (பெண்ணை) பாதுகாக்கிறது என்பதை ஏளனம் செய்வர். கல்விiயையும், நல்ல பண்பாடு நிறைந்த நடைமுறைகளையும், கட்டுப்பாடாக இ ருப்பதன் அவசியத்தையும் பரப்புவதுதான் மிகச்சிறந்த பாதுகாப்பு என அவர்கள் கூறுவர். அது மிகச் சிறந்ததுதான். ஆனால் போதுமானதல்ல என நாம் கூறுவோம். பண்பாடு மாத்திரம் பாதுகாப்பு தருவதற்கு போதுமானதென்றால், ஏன் வட அமெரிக்காவிலுள்ள பெண்கள் இருட்டாக இருக்கும் தெருவில் தனியாக நடப்பதற்கோ ஏன் ஆட்கள் காலியாக இருக்கும் கார் நிறுத்துமிடங்களில் கூட நடப்பதற்கோ பயப்படுகின்றனர்?

கல்வி மாத்திரம் தெற்கு தீர்வெனில், மிகவும் மதிக்கப்படும் குயீன்ஸ் பல்கலைக்கழகத்தில் கூட பெண்களுக்கென தனியாக கல்லூரி வளாகத்திற்குள்ளேயே 'வீட்டிற்கு நடந்து செல்லும் வழி' ஏன் இருக்கிறது? மனக்கட்டுப்பாடு மாத்திரம் தீர்வெனில் ஏன் வேலை செய்யுமிடங்களில் பெண்கள் காமக்களியாட்டங்களுக்கு உட்படுத்தப்படுவதாக தினமும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன?

கப்பற்படை அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசியர்கள், சட்ட வல்லுனர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மேலும் அமெரிக்க ஜனாபதியும் கூட காமக்களியாட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ழுன் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட சிற்றேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த கீழ்காணும் புள்ளிவிவரத்தை நான் வாசித்த போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை:

கனடாவில் ஒவ்வொரு 6 நிமிடத்திலும் பெண்கள் பலாத்காரப் படுத்தப்படுகின்றனர்.
கனடாவிலுள்ள மூன்று பெண்களில் ஒருவர் தங்களின் வாழ்நாளில் ஓரு முறையிலாவது கற்பழிக்க முயற்ச்சிக்கப்படுவர்.

நான்கு பெண்களில் ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறையில் கற்பழிக்கப்படும் அபாயத்தில் அல்லது திட்டமிட்டு கற்பழிப்பக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

எட்டில் ஒரு பெண் கல்லுஸரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ படித்துக்கொண்டிருக்கும் போது பலாத்காரப்படுத்தப்படுவார்.

மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற அபாயம் இல்லையானால் தாங்கள் பலாத்காரத்தில் ஈடுபட்டுவிடுவோம் என கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 60 ஆண்கள் தெரிவித்தனர்.

நாம் வாழும் சமூகத்தில் அடிப்படையில் ஏதோ தவறு இருக்கிறது. சமூகத்தின் வாழ்க்கை முறையிலும் கலாச்சாரத்திலும் ஒரு அடிப்படையான மாற்றிலும் முற்றிலும் அவசியமானது. ஒழுக்கரீதியான வாழ்க்கை மிகவும் அவசியப்படுகின்றது. உடையில், பேச்சில் ஆண் பெண் இருபாலருடைய பழக்கவழக்கங்களிலும் ஒழுக்கம் வேண்டும்.

இல்லையெனில் மிகவும் மோசமான புள்ளி விபரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான் வரும் மேலும் துரதிர்ஷடவசமாக தென் விலையை பெண்கள்தான் கொடுத்து வருவார்கள். இதனால் உண்மையில், நாம் அனைவரும் துன்பத்திற்குள்ளாகிறோம் என்றாலும், நம் நிலை ,க. கிப்ரன் அவர்கள் கூறியது போல் '... அடியை வாங்கிக்கொண்டிருப்பவன் அதை எண்ணிக்கொண்டிருப்பவனைப் போலல்ல.'84

பெண்கள் வாங்கும் அடியை எண்ணிக் கொண்டிருப்பவர்கள் போன்றவர்களாவர்கள் ஆண்கள். ஆகவே, ஓழுக்கமாக உடையணிந்து வந்த காரணத்தால் பள்ளிக்கூடங்களிலிருந்த மாணவிகளை வெளியேற்றிய பிரஞ்சு சமுதாயத்தைப் போன்ற சமுதாயங்களெல்லாம் இறுதியில் தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறது.

ஆண்களுக்கு பெண்கள் மேலுள்ள அதிகாரத்தை காண்பிக்கும் வகையில் கத்தோலிக்க சந்நியாசிப்பெண்களால் அணியப்படும் தலைமறைவை 'புனித' அடையாளம் என மதிக்கப்படும் அதே வேளையில் பாதுகப்பிற்காக முஸ்லிம் பெண்கள் அணியும் அதே தலைமறைவை 'அடக்குமுறை'யின் அடையாளம் என கருதப்படுவது இன்றைய உலகில் உள்ள மிகப்பெரும் ஆச்சரியங்களில் ஒன்றானதேயாகும்.

Sunday, September 03, 2006

பதிலுக்கு பதில் 1

என்னுடைய பதிவைப் பற்றி தங்களுடைய பதிவில் சர்ச்சை செய்பவர்களுக்கு பதிலுக்கு பதில்

சரியாப்போச்சி.. "முஸ்லீம் நண்பர்" சாலிஹ் குலசை என்பவர்தான் "ஆரோக்கியம் கெட்டவன் , ஆரோக்கியம் உள்ளவன் என்ற பெயர்களில் எழுதுபவர். உங்கள் மீது நடக்கப்போகும் அர்ச்சனைக்கு இப்போதே வருத்தம் தெரிவிக்கிறேன்.

இந்த விஞ்ஞான காலத்திலும் இப்படியொரு பதிலை வைப்பது அபத்தம் தான். மேலும் நான் இன்டர் நெட் உலகிற்கு புதியவன் தான் ஆனால் என்னை இந்த அளவிற்கு சிந்திக்க வைத்ததே, ஆரோக்கியம், டோண்டு ராகவன்,
Calgary சிவா, நேச குமார், வஜ்ரா ஷங்கர் போன்றோர் எழுத்தும் சிந்தனையும் பிறரின் மனதையும் மானத்தையும் குலைக்கக்கூடியதாக இருந்ததால்தான் நாமும் எழுதினால் என்ன என்ற சிந்தனையே வந்தது அவர்கள் இந்து மதத்தைப்பற்றி எழுதிக்கொண்டு இருந்தால் நாம் ஒன்றும் சொல்லப்போவதில்லை ஏனெனில் நானும் அங்கிருந்து வந்தவன் தான் ஆனால் சம்பந்தமில்லாமல் பிற மதங்களின் அடிப்படை தத்துவங்களின் மீது அதன் பூரண ரூபம் தெரியாமல் விமர்சித்தால் அதன்மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்களுக்கு வெறுப்பும் வேதனையும் ஏற்படுவது சகசமே பிறகு அவர்கள் தீவிரவாதிகள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்று கூக்குறலிடுவது எந்த விதத்தில் ஞாயம் என்பதை சகோதரர்களே புரிந்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியம் சாரோ, டோண்டு ராகவன் சாரோ, Calgary சிவா சாரோ, நேச குமார் சாரோ, வஜ்ரா ஷங்கர் சாரோ அவர்களை கெட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை அவர்களும் என் சகோதரர்களே இது எனக்கு இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் பாடமாகும் அறியாமையால் செய்யும் அவர்கள் நல்லவர்களாகக் கூட இருக்கலாம்

சிவா அவர்களுடன் உண்டான வலைப்பதிவு கருத்துப் பரிமாற்றங்களில் என்னை மதித்து வீட்டிற்கு அழைத்தால் யாருடன் என்னைக் கூட்டாக அழைப்பேன் என எழுதியிருந்தார். அன்று முதல் அவரது பதிவுக்கு வருவது வழக்கமாகிப்போனது ஏனய்யா மத்திய கிழக்கில் வேலை செய்யும் என்போன்றோரை அடிமை என்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டபோது, பண்பாக மன்னிப்புக் கேட்டு ' இனி தவிர்த்துக்கொள்வேன் ' என்றார். அவர் மீது கொண்டிருந்த மதிப்பு உயர்ந்தது.

டோண்டு ராகவன் சாரை நேரில் சந்தித்த அனுபவமும் இருப்பதால் அவர் சொல்லிய கருத்தின் விளக்கம் கேட்கிறேன் , அவ்வளவே.
அன்புடன் ஆசாத்

இது சகோதரர் ஆசாத் அவர்களின் அபிப்ராயம்

ஆனால் அவர்களின் எழுத்தும் சிந்தனையும் பிறரின் மனதையும் மானத்தையும் குலைக்கக்கூடியதாக இருப்பதால் தான் எதிர்க்கின்றேன். மற்றவர்களை விமர்சிப்பதை மட்டுமே கொள்கையாக கொள்ளாமல் அவர்களும் என்ன சொல்கின்றார்கள் என செவிகொடுத்து கேட்க ஆரம்பித்தாலே போதும் மனக்கசப்புகள் நீங்க.

இவர்களின் இப்படிப்பட்ட கூத்தைப் பார்த்துத்தான் மதத்தின் காவலர்கள் பதில் சொல்லட்டும் http://iniyaislam.blogspot.com/2005/09/blog-post.html என்ற கட்டுரையே எழுதினேன். ஆக என்னை இந்த உலகிற்கு இழுத்து வந்தவர்களே மேலே குறிப்பிட்ட இந்த சகோதரர்கள் தான்.

அதனால் சகோதரர் ஆரோக்கியம் சொல்வதுபோல்

//சரியாப்போச்சி.. "முஸ்லீம் நண்பர்" சாலிஹ் குலசை என்பவர்தான் "ஆரோக்கியம் கெட்டவன் , ஆரோக்கியம் உள்ளவன் என்ற பெயர்களில் எழுதுபவர்//

அவர் நான் இல்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இன்ஷா அல்லாஹ் பதில் தொடரும்