Saturday, September 29, 2007

இன்றும் தொடரும் அவதூறு பிரச்சாரம்

குர்ஆன் விடுத்த சவால் பாகம் 2

இந்த சம்பவம் 1425 வருடத்திற்கு முன்பு மட்டும் எடுத்த முடிவல்ல, அன்று வலீதின் தலைமையில் ஒன்றுகூடி எடுக்கப்பட்ட முடிவை இன்றும் அதன் பின் வாரிசுகளாக வரக்கூடிய மேற்குலகிற்கு டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவர் போன்று, தமிழ் உலகிற்கு நேசகுமாரும் அவருடைய பரிவாரங்களும் செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் வெற்றிதான் அடையமுடியவில்லை. அவர்களால் முடியாது, உலகம் அழியும் நாள்வரை முயற்சித்தாலும் அவர்களால் வெற்றியடைய முடியவே முடியாது.




வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை - ஒரு பார்வை டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவரின் கட்டுரையைத் தழுவி தமிழில் நேசகுமார் என்பவன் மொழிபெயர்த்துள்ளான். அதற்கு பதில் இங்கு உள்ளது


அவன் கூறிய அதன் சுருக்கத்தை இங்கே தருகின்றேன்.

ஆழ்மனது பற்றிய கண்டுபிடிப்புக்களே இது போன்ற விஷயங்களை இன்று நாம் புரிந்து கொள்ள வழிவகை செய்கின்றன மனோதத்துவ பாடப்புத்தகங்களை படித்துப்பார்த்தால், இது போன்று எண்ணற்ற சம்பவங்களைக் காணலாம். தன்னையறியாமல் தன்னுள்ளே உருவாக்கிக் கொண்ட மனோபிம்பங்களில் ஆழ்ந்துவிட்ட பலர் தமக்கு நிஜமாகவே குரல்கள் கேட்கின்றன, தீர்க்க தரிசனங்கள் கிட்டுகின்றன என்றும், இவற்றை இதற்கு முன்னர் கேட்டதில்லை என்றும் உரைப்பதை இந்நூல்களில் காணலாம்.

ஆனால், இவற்றை மனோவியல் நிபுணர்கள் ஆழ்ந்து ஆய்ந்தபோது, எப்போதே கேட்ட, பார்த்த சம்பவங்களே இந்த கற்பனைக்குரல்களில், அக-புற தரிசனங்களில் வெளிப்படுகின்றன என்பதை அறிந்தனர். இவற்றை நமது மேல்மனம் மறந்திருக்கலாம், ஆனால் நாமறியா நமது ஆழ்மனம் இவற்றைப் பதிவு செய்து இதுபோன்ற பிரமைகளின்மூலம் மேலே கொணர்கின்றது." ஒரு கனவினைப் போலவே இது போன்ற 'வெளிப்பாட்டுகளின்' போதும், மனமானது தான் முன்னர் கண்டு, கேட்ட சம்பவங்களின் பதிவுகளை நமது உணர்வின் மேல் மட்டங்களுக்கு கொண்டுவந்து காட்டுகிறது. "

ஆகவே, கிறிஸ்துவர்களிடமிருந்தும் யூதர்களிடமிருந்தும் கண்டு
கேட்டறிந்தவற்றையே இதுபோன்ற இறைவெளிப்பாடுகளின் மூலம் முகம்மது கண்டுணர்ந்தார் என்கிற முடிவுக்கு நம்மால் வர இயலுகிறது. ஆகவே, முகம்மது முன்னர் கண்டுணர்ந்தவை,
கேட்டறிந்தவை, ஆழ்மனதின் பிம்பங்கள் ஆகியவை அவரது எண்ணங்களோடும், யூகங்களோடும், தீர்மானங்களோடும், நியாயங்களோடும் ஒன்றிணைந்து, பின்னிப் பினைந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதைக்கப்பட்டு தீர்க்க தரிசனங்களாகவும், இறைச் சத்தியங்களாகவும், உலக உண்மைகளாகவும் 'வஹி' மூலம் அவரே தீர்மானமாக நம்பும்படி வெளிப்பட்டன.

இதனாலேயே, அவரது மனதின் அடியாழத்தில் இருந்த இவை மற்றவர்களுக்கு வெளிப்படாமல் அவருக்கு மட்டுமே வெளிப்பட்டன." …… அதற்கு சில அறிவிலிகளின் ஆதாரமும்
கூட ராடின்ஸன் கூறுகிறார்: சூனியத்தில் முகம்மதுவின் ஆன்மா ஆழ்ந்தெழுந்தபோது ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்கொள்வதையும், அதற்கு தான் அடிபணிவதையும் தனது உத்வேக நிலையிம் முகம்மது உணர்ந்தார். அப்போது அவரின் தனித்துவம் விடைபெற்றுக் கொண்டு அவ்விடத்தில் இந்த அமானுஷ்ய சக்தி இறங்கி ஆக்கிரமித்துக் கொண்டது இத்தருணங்களில் அவருக்கு மேலே விவரித்த அனுபவங்கள் ஏற்பட்டன - அவருக்கு சில தரிசனங்கள் கிட்டின,
குரல்களைக் கேட்டார், இவை வெளிமுகமாகவோ சில சமயங்களில் மனதிற்குள்ளாகவோ அல்லது கற்பனை வெளிகளிலோ அவருக்கு வெளிப்பட்டன.

இது போன்று ஏற்படும் உணர்ச்சிவயப்பட்ட ஆவேச நிலைகளும், புலணுணர்வுகளும் பொதுவாக அனைவராலும் ஒப்புக் கொள்ளப்ப்பட்ட ஹிஸ்டீரியா, ஸ்கிசோப்ரெனியா, கட்டுப்பாடற்ற குழறல்கள் போன்ற மனப்பிறழ்வுகளின் தன்மைகளுடன் ஒத்திருக்கின்றன."


அட அநியாயக்காரனே நீ இப்படித்தான் சொல்வாய், சொன்னாய் என்பதை இன்று நீ எங்களுக்கு சொல்லவேண்டிய தேவையில்லை இதோ பார் உன்னையும், என்னையும் படைத்த அந்த அல்லாஹ்வே 1427 வருடங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டான். இதோ அந்த பொன்வசனங்கள்

25:3. (எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டார்கள் (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள் தங்களுக்கு நன்மை செய்து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள் மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மறிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.

25:4. இன்னும் இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள் என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களுக்கு ஓர் அநியாயத்தையும் பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.

25:5. இன்னும் அவர்கள் கூறுகிறார்கள் இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் ஆகவே அவை அவருக்கு முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.

25:6. (நபியே!) வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான் நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான் என்று கூறுவீராக!

25:7. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?

25:8. அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்) அன்றியும், இந்த அநியாயக்காரர்கள் (முஃமின்களை நோக்கி) சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்றும் கூறுகிறார்கள்.

25:9. (நபியே!) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழிகெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.

அட மனிதனே இவன் இப்படித்தான் செய்வான் என்று 1427 வருடத்திற்கு முன்னாலே சொல்லி இருந்தும், அதையே அப்படியே நீ இன்றும் சொன்னால் உன்னை பைத்தியக்காரன் என்பதா? மடையன் என்பதா?? என்பதை நீயே யோசித்துப்பார். (அதுசரி!! அதுஎப்படி அன்றிலிருந்து இன்றுவரை அடிபிரலாமல் அப்படியே வெட்கமின்றி சொல்கின்றீர்கள். அதுவும் சொன்னதையே சொல்கின்றீர்கள்.)

உலகிற்கு அவனுடைய அறிவுரை (சிரிப்பதற்கு) தனிப்பட்ட சம்பாஷணைகளில், நாகரிகமான முறையில் இஸ்லாத்தின் இந்த அடிப்படை நம்பிக்கை குறித்த நம் சந்தேகங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். என் மதமே எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று யாராவது அவ்வப்போது சொன்னாலும், இதைத் தெளிவாய் எடுத்துச் சொல்லலாம். இஸ்லாமியராய்ப் பிறந்தவர்களுக்குச் சில எல்லைகள் உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தைக் குறித்து விமர்சனம் செய்வது கிட்டத்தட்ட அவர்களால் இயலாத காரியம்.

சில நாடுகளில் இது தெய்வகுற்றமென்று மரணதண்டனையும் காத்திருக்கும். இருந்தாலும், இஸ்லாத்தை விட்டு வந்த சில தைரியசாலிகள்தான் அவர்களின் சகோதர சகோதரிகளுக்குக் கதவைத் திறந்து விட வேண்டும். நம்மைப் போன்ற இஸ்லாமியர் அல்லாதவர் அவர்களின் அடிப்படை பிரச்னைகளை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அதற்குச் செவி கொடுக்கும் இஸ்லாமியர் குறைவாகவே இருப்பார்கள்.

'இஸ்லாத்தின் அமானுட அடிப்படை'யை நாம் ஒரு பார்வை பார்த்தது போல், அறிவியல் ரீதியான தகவல்களை, குறைந்தபட்சம் அரசாங்கப் பள்ளிகளில், பள்ளிக் குழந்தைகளுக்குப் பொதுப்பாடமாய் வைக்க நாம் முயல வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமியக் குழந்தைகளுக்கு இது ஒரு வகையில் தீர்க்கமாய் யோசிக்க உதவும். ஆனால் அவர்களின் பெற்றோர் இதையெல்லாம் 'நம்பிக்கை அற்றவர்கள்' சொல்வது என்று புறந்தள்ளி விடலாம்.

யோசித்துப் பார்த்தால், ஒரு முஸ்லிமாய்ப் பிறந்து வளர்ந்தவர் ஆழமாய்ச் சிந்தித்து தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள மாயவலையை உடைத்துக் கொண்டு வெளியே வந்து, தன்னைச்
சார்ந்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதே சிறந்தவழி.

அதனால்தான் மனம் திறந்து பேசுவதையே அவர்கள் அபாயமாகக் கருதுகிறார்கள் போலும். இருந்தாலும் எனக்கு ஒரு நம்பிக்கை.

சமீபத்தில் பிரபலமாகி வரும், செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு, இண்டர்நெட் என்ற தடைகளை உடைத்து வரும் ஊடகப் புரட்சி, இவை எங்கோ அரேபியாவின் மூலைமுடுக்கில் இருக்கும் ஒரு கிராமத்தைக் கூட சென்றடையும் வாய்ப்பு இதையெல்லாம் நினைக்கும்போது எனக்கு நம்பிக்கை துளிர்க்கிறது. இஸ்லாமிய மனநிலையில் பரவலாய் ஒரு மாற்றம் வரும். அது இடைக்காலத்திய சிந்தனைகளை விட்டு வெளியே வரும்.

கடவுளுக்கு மகன் உண்டு என்று கருதுவோர் தீயோர் என்பது வஹி மூலம் அல்லாஹ் அறிவித்த ஒன்று. கிறிஸ்துவர்களை துன்புறுத்தும் சவுதி அரசை குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும், சுதந்திரமாக செயல்படக்கூடாது என்பது தாலிபான்களின் தீர்ப்பு அல்ல, வஹி மூலம் அல்லாஹ் மனிதகுலத்துக்கு இட்ட கட்டளை.

நடத்தை தவறியவர்கள் என்று கருதும் பெண்களை கல்லால் அடித்துக் கொள்வது ஈரான் அரசின் கண்டுபிடிப்பு அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் ஒரு சமூகத்தையே தாம் கல்லால் அடித்துக் கொன்றதாக அல்லாஹ் வஹி மூலம் அறிவித்துள்ளார்.

பெஸ்லானில் குழந்தைகளைக் கொன்றதற்காக தீவிரவாதிகளைக் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. குழந்தைகளும் எதிரிகளே என்பது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தவொன்று.

ஜிஹாத் செய்து எதிரிகளை அழிக்கும்போது அவர்களின் பெண்களை கற்பழிக்கலாம் என்பது நபிகள் நாயகமோ, அல்லது 1400 வருடங்களுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சமூகங்களின்
வழக்கமோ அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது. தெளிவாக இப்படிப் பிடித்து அடிமைகளாக்கப் படும் பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதை வஹி மூலம் அல்லாஹ் ஹலாலாக்கியிருக்கின்றார்.

மேலும், இதெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விஷயங்கள், அப்போது இதுதான் அனைத்து சமூகங்களிலும்
வழக்கமாயிருந்தது ஆகவே இப்போது அதெல்லாம் தவறு என்று கருதுவோர்களுக்கும் அல்லாஹ் தெளிவாக அப்போதே வஹி மூலம் அறிவித்திருக்கின்றார், இதெல்லாம் மாற்றமுடியாத
கட்டளைகள் - இறுதித்தீர்ப்பு நாள் வரைக்கும் இவற்றை முஃமீன்கள்(நம்பிக்கையுள்ளோர் - முஸ்லிம்கள்) பின்பற்றப்பட வேண்டியவை,

இவற்றை மறுப்பது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப் பட்ட ஒன்று, அப்படி மாறுபாடு செய்வோர் தலையில் கொதிக்கும் தண்ணீர் ஊற்றப்படும், உருக்கும் செம்பை குடிக்க வைக்கப் படுவார்கள், தீயில் வறுத்து எடுக்கப் படுவார்கள் என்று கூறி மக்களை ஒருவகையான பிரம்மையில் மிதக்கச் செய்துவிட்டார்.

அதனால் இவை எல்லாம் மன பாதிப்பின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களாகும் வஹியல்ல என வாதிடுகின்றான் மன நோயாலியான கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவனும், அவனுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய தமிழக வந்தேரிகளின் கைப்பாகையான நேசகுமாரும். தும்பைவிட்டு வாலைப்பிடிக்கின்றான் என்பார்கள் அதுபோல் குர்ஆனின் சவாலை ஏற்க சக்தியற்றவர்கள் நபியை கேலி செய்தும், குர் ஆனை எரித்தும் தம் இயலாமையை ஏற்றுக் கொள்கின்றனர்.

அல்லாஹ்வின் எதிரிகளே இதோ உங்களின் அழுகிப்போன மூலையில் உதிக்கும் சிந்தனைக்கு சாவுமணி அடிக்கின்றது அல் குர்ஆன்.

61:8 அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர் ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.

இதற்கான சான்றுகள் உலக சரித்திரத்தின் வழி எங்கும் மடிந்து கிடக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Sunday, September 23, 2007

குர்ஆன் விடுத்த சவால்

குர்ஆன் ஓர் அழியாத அற்புதம் பாகம் 1

அன்பார்ந்த சகோதரர்களே புண்ணியமான கண்ணியமிக்க ரமழான் மாதத்தில் அதன் மகத்துவம் பற்றி எழுதுவதில் நான் பெறுமைப்படுகின்றேன். குர்ஆனின் வாக்குகளும், வார்த்தைப்பிரயோகமும் கேட்போரை வசீகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆம் உண்மைதான் இதோ உலகிலே மிக பிரமுகர்கள் என்று எல்லோரும் சொல்லக்கூடிய சிலர் குர்ஆனைப்பற்றி சொன்ன சிலவற்றை கண்போம்.

அறிஞர் கொய்தே (Goethe) கூறுகிறார்:
குர்ஆனை எத்தனை முறை பார்த்தாலும் அது முதலில் அந்நியமாகத் தெரிகிறது. பிறகு புதமையாகத் தெரிகிறது. அடுத்து ஒரு தென்றல் போல் மனதைக் கவர்ந்து செல்கிறது. மதிப்பச்சததை ஏற்படுத்துகிறது. அதனுடைய நடையழகு அதனுடைய கருத்துக்கு ஏற்ப கம்பீராமாகவும, வலுவானதாகவும், அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அதன்மீது மதிப்பு கொள்ளச் செய்வதாகவும் அமைந்துள்ளது. இந்த நூல் இவ்வாறு காலம் காலமாக மக்கள் மீது தன் ஆதிக்கத்தை செலுத்தக் கூடியதாக இருக்கிறது. Quoted in T.P. Hughes Dictionery of Islam, P.526.

மார்கோலத் (G.Margolouth) கூறுகிறார்:
உலகத்திலுள்ள பெரும் மதக்கிரந்தங்களில் குர்ஆன் திண்ணமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகில் புரட்சி சகாப்தத்தைத் தோற்றுவித்த இந்த கிரந்தங்களில் அது இளைய வயது கொண்டதாக இருந்த போதிலும் மக்களின் உள்ளங்களை மாற்றுவதிலும், பெரும் பெரும் மக்கள் கூட்டத்தையே வியக்கத்தக்க முறையில் மாற்றி அமைப்பதிலும் அதற்கு இணையான வேறு கிரந்தம் இல்லை. அது முற்றிலும் புதிய சிந்தனையை மக்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது. நவீன பண்பாட்டை உருவாக்குகிறது. அது முதலில் அரேபிய பாலைவனத்தில் சிதறிக் கிடந்த மக்களை இலட்சியத்தைப் பேணும் குழவாக ஒன்றிணைத்தது. அவர்களை மக்களில் சிறந்தவர்களாய் மாற்றியது. ஐரொப்பிய மக்களும் கிழக்கிந்திய மக்களும் இன்றைக்கும் மதிக்கும் அளவுக்கு சமய, அரசியல் அமைப்புகளை அது தோற்றுவித்துள்ளது. Introduction to J.M.Rodwell’s The Koran, New York : Every Man’s library 1977, p.VII.

மாரீஸ் புகைல் (Maurice Bucaille) கூறுகிறார்:
நாம் மேலே கூறி வந்த விபரங்கள், முஹம்மத் (ஸல்) அவர்கள் குர்ஆனைப் புனைந்தார் என்று சொல்லப்படும் கூற்று அடிப்படையற்றது என்று தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. கல்வி அறிவில்லாத ஒருவர், திடீரென சிறந்த இலக்கியம் நயம் வாய்ந்த ஒரு கிரந்தத்தின் - இன்றைக்கும் அரபி இலக்கியத்pல் இணையற்று விளங்கும் ஒரு கிரந்தத்தின் ஆசிரியராய் ஆக முடியுமா? அதுமட்டுமல்ல, அந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதனின் கற்பனை செய்தும் பார்த்திராத - இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டுபிடிப்புகளின் எதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படித் துல்லியமாகத் தெரிவிக்க முடிந்தது? The Bible, The Quran and Modern Science 1978, p.15

இப்படி பெரியோர்களால் போற்றக்கூடிய குர்ஆன் அதை தூற்றக்கூடியவர்களும் இப்புவியில் இருக்கத்தான் செய்கின்றனர் அதனால் அவர்களின் வாயை அடைக்கவும், நம்பிக்கையாளர்களுக்கு தைரியமூட்டவும் அல்லாஹ் சில வசனங்களை தந்து இதுபோல் உங்களால் முடிந்தால் செய்யுங்கள் என்று சவால் விடுகின்றான் இந்தச் சவாலை எதிர்கொள்ள 1425 வருடமாக இப்பூமியில் யாருக்கும் தைரியமோ, திரானியோ இல்லை என்பதுதான் அதிசயம். அ துதான் முஸ்லிம்களின் தைரியமும் கூட. அதுபோன்ற ஒரு வசனத்தை இதோ தருகின்றேன் பாருங்கள்.

மேலும் நம் அடியார் மீது இறக்கி வைத்த (இவ் வேதத்)தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாள இருந்தால் இது போன்ற அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். நீங்கள் (அவ்வாறு) செய்யவில்லையாயின் - நீங்கள் ஒரு போதும் (அவ்வாறு) செய்ய மாட்டீர்கள்: ஆகவே மனிதர்களும் கல்லும் அதன் எரிபொருளாகுமே அத்தகைய (நரக) நெருப்பைப் பயந்து கொள்ளுங்கள் (இந்த நெருப்பு) நிராகரித்துக் கொண்டிருப்போருக்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (அல் குர்ஆன், 2:23-24)

குர் ஆனில் தவறு உள்ளது!, தவறு உள்ளது என்று தூக்கத்தில் புழம்புவதைபோல் கூச்சலிடுகின்றனரே தவிர மாற்றுவழி செய்துள்ளனரா? இந்த சவாலை முறியடிக்க முயற்சித்தனரா என்றால் இல்லை.

குர்ஆனைப் பற்றி
பொதுவாக எந்த ஒரு நபிக்கும் அல்லாஹுத்தஆலா அற்புதங்களை வழங்கும் போது எவை அந்த காலத்து மக்களிடத்தில் பிரபலமானதாகவும் உள்ளதோ அவற்றையே நபிமார்களுக்கு அற்புதமாகத் தேர்ந்தெடுப்பான். இது அல்லாஹுதஆலாவின் பொதுவான நியதியாகும்.

உதாரணமாக மூஸா (அலை) அவர்கள் காலத்தில் சூனியமே மக்களின் சிந்தனையை கவரக் கூடியதாக இருந்தது. சூனியத்தில் கைதேர்ந்தவர்களாக வலம் வந்து கொண்டிருந்தார்கள். எனவே சூனியத்தை வென்று விடக் கூடிய அது போன்ற சில அற்புதங்கள் மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதே போல ஈஸா (அலை) அவர்கள் காலத்தில் மக்களின் சிந்தனை மருத்துவத்துறையில் மூழ்கிக் கிடந்தது. எனவே மருத்துவத்தால் கூட குணப்படுத்த முடியாத மிகச் சிறந்த அற்புதம் ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதேபோல நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் மொழிப் பாண்டித்துவம் பெறுவதில் தங்கள் கவனம் முழுவதையும் ஈடுபடுத்தினார்கள். அரபி மொழியில் கை தேர்ந்த கவிஞர்களும் மொழிப் பண்டிதர்களுமே சமுதாயத்தில் கண்ணியமானவர்களாகக் கருதப்பட்டார்கள். எனவே அது சம்பந்தமாகவே சொல் நயமும், கருத்து நயமும் நிறைந்த எந்த மொழி பண்டிதர்களாலும் ஈடுகொடுக்க முடியாதளவு மிகப் பெரிய அற்புதமாக அல்குர்ஆன் அருளப்பட்டது.

இதுவே அல்லாஹ் ஒவ்வொரு நபியின் அற்புதங்கள் விஷயத்தில் கையாளும் நடைமுறையாகும். ஆனால் இங்கு மற்ற நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களை விட நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அல்குர்ஆன் தனிச்சிறப்புப் பெற்றுள்ளது. எவ்வாறெனில் மற்ற நபிமார்களின் அற்புதங்கள் அவர்கள் கரங்களாலேயே நிகழ்த்தப்பட்டு அவர்களோடு அந்த அற்புதங்களும் மறைந்து விட்டன. ஆனால் அல்குர்ஆன் என்ற இந்த அற்புதம் மட்டும் தான் அல்லாஹ்வினால் நிகழ்த்தப்பட்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகும் நிலைத்திருக்கிறது. எனவே தான் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை மெய்ப்பிக்கும் ஆதாரமாகவும் இஸ்லாமிய எதிரிகளின் வாயை அடைக்கும் அறைகூவலாகவும் அல்லாஹ் இதனையே தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

சவாலை கையாளும் விதம்
முதலில் முழுக்குர்ஆனையும் சவாலாக வைத்து இது போன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் என்று பின்வரும் வசனத்தில் சவால் விடுத்தான்:

இந்தக் குர்ஆன் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று) அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும் இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வர முடியாது என்று (நபியே!) நீர் கூறும் (17:18)

இரண்டாவதாக இது போன்றதொரு குர்ஆனை முழுமையாகக் கொண்டு வராவிட்டாலும் இதில் இருப்பது போன்று பத்து சூறாக்களையாவது கொண்டு வாருங்கள் எனக் கூறினான்.

இவ்வேதத்தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என்று அவர்கள் கூறுகிறார்களா? (அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களைக் கொண்டு வாருங்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்குச் சாத்தியமான எல்லோரையும் இதற்குத் துணையாக அழைத்துக் கொள்ளுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக. (11:13).

மூன்றாவதாக மேற்கூறிய எதுவும் முடியாமல் போக கடைசியில் ஒரு சிறிய சூராவையாவது கொண்டு வாருங்கள் என்று இந்த வசனத்தில் தொடர் சவால் விடுத்தான். ஏனெனில் மக்கத்து குறைஷிகள் 'இது இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டதல்ல' என்றும் 'முஹம்மத் (ஸல்) அவர்கள் தாமகவே இட்டுக் கட்டிய செய்திகள் தான் இவை' என்றும் கூறி வந்தனர். எனவே தான் இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பது உண்மை எனில் நீங்களும் மனிதர்கள் தானே இது போன்ற முழு சூராவாக இல்லாவிட்டாலும் பத்து சூராவையாவது உருவாக்கிக் காட்டுங்கள் என்ற நோக்கில் அல்லாஹ் மீண்டும் மீண்டும் சவால் விடுத்தான். இல்லையென்றால் சிறிய சூரா என்ன அதிலுள்ள ஒரு வார்த்தையைக் கூட அவர்களால் உருவாக்க முடியாது என்பது அவனுக்கு நன்கு தெரியும். அதனால்தான் உங்களால் ஒருபோதும் முடியாது என்றும் கூறுகின்றான்.

1) இதை போன்றே உருவாக்க முயற்சிக்கப்பட்டது
ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஆயிரக்கணக்கானோர் மோதி தோல்வி கண்ட அறைகூவல் தான் இது. நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே யமாமா பிரதேசத்தைச் சேர்ந்த பொய்யனான 'முஸைலமா' என்பவன் தன்னை நபி என்றும் தனக்கு வஹி வருவதாகவும் வாதிட்டான். அவன் குர்ஆனிலுள்ள அல் கவ்ஸர் என்ற அத்தியாயத்தைப் போன்று இட்டுக் கட்டினான். ஆனால் அது அவனுடைய காலத்திலேயே பொய் என்று நிரூபிக்கப்பட்டது.

2) ஆசை வார்த்தை காட்டப்பட்டது
இதைப்போன்று உருவாக்கவும் முடியவில்லை, அதன் வளர்ச்சியை தடுக்கவும் முடியவில்லை இதைப்போன்று உருவாக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அவர்கள் கடைசியில் முஹமதோடு சமாதானமாக போய்விட்டால் அதன் வேகத்தைத் தடுக்கமுடியும் என்று மனப்பால் குடித்து நபியிடம் வந்து சமாதானம் பேசப்பட்டது, உத்பா பின் ராபிஆ என்பவர் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்து தங்களது முழு அரசாங்கத்தையும், அனைத்து செல்வங்களையும் அழகிய பெண் மக்களையும் கிரயமாகக் கொடுக்கின்றோம் ஆனால் இஸ்லாத்தை இஸ்லாத்தின் பிரச்சாரத்தை மட்டும் விட்டு விட வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் பதிலாக குர்ஆனின் சில வசனங்களை மட்டுமே அவருக்கு ஓதிக் காட்டினார்கள். இத்தகைய நிலைக்கும் இறங்கி வர தயாரான அந்த மக்கள், இரண்டு வரி அரபு வார்த்தைகளை அமைத்து அல்லாஹ்வின் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக முடியவில்லை. அந்த முயற்சியிலும் முகத்தில் கரிபூசப்பட்ட மக்கா தலைவர்கள் மூன்றாவதாகவும் முடிவாகவும் ஒரு முயற்சியில் இறங்கினர்.

3) ஒழித்துக்கட்ட சதி

நபித்துவத்தின் பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கிய போது நபித்தோழர்கள் பலர் ஹிஜ்ரத் செய்து மதீனா நகரை அடைந்தனர். முஸ்லிம்கள் மதீனா சென்று தமது வலிமையைப் பெருக்கி கொண்டே செல்வதையும், அங்கு இஸ்லாம் பரவிக் கொண்டே செல்வதையும் பார்த்த குறைஷிகளுக்கு பெரும் கலக்கம் ஏற்பட்டது. எனவே அவர்கள் இஸ்லாத்தை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிட பல திட்டங்களைத் தீட்டத் தொடங்கினர்.

பொதுவான சமுதாயப் பிரச்னைகள் எதைக் குறித்து சிந்திப்பதற்காக, 'தாருத் நத்வா' என்ற ஆலோசனை மண்டபம் ஒன்று இருந்தது அங்குதான் ஒன்று கூடுவர். அங்கு ஒவ்வொரு குலத்தையும் சேர்ந்த பெரும் தலைவர்கள் ஒன்று கூடி இனி இந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டிட என்ன செய்வது? என்று யோசித்தனர்.

1) சிலர் முஹம்மத் (ஸல்) அவர்களை விலங்குகளால் பினைத்து ஏதேனுமோர் இடத்தில் அடைத்து வைத்துவிடலாம் என்று ஆலோசனை கூறினார்கள். ஆனால் அவர்களில் சிலர் 'முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்கள் அவர்களை விடுவித்துக் கொண்டு சென்று விடுவார்கள். நாம் அவர்களிடம் தோல்வியடைய நேரிடலாம்' என்று கூறியதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

2)அண்ணலாரை நாடு கடத்திட வேண்டும் என்று மற்றோர் ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் அண்ணலார் (ஸல்) எங்கு சென்றாலும் அங்கும். அவர்களை பின்பற்றுவோர் உருவாகி விடுவார்கள் அவர்களுடைய இயக்கம் தொடர்ந்து பரவிக் கொண்டே சென்றுவிடும் எனபதால் இந்தத் திட்டமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இறுதியில் அபூஜஹ்ல் ஓர் ஆலோசனை கூறினான். ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஓர் இளைஞனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி எல்லாக் குலங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞ்கர்கள் அனைவரும் சேர்ந்து அண்ணலாரின் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றுவிட வேண்டும்.

இவ்விதம் அவர்களைக் கொன்ற பழியில் எல்லாக் குலங்களும் சமமாக பங்குபெற வேண்டும். இதனால் பனீஹாஷிம்(அண்ணலாரின்) குலத்தாரால், இங்குள்ள எல்லாக் குலங்களுக்கும் எதிராக தனியாகப் போரிட முடியாது. என்றான் இந்த ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பல்வேறு குலங்களிலிருந்தும் விடுபட்டு இஸ்லாமியக் குழுவில் இணைந்து விட்டிருந்த இந்தச் சிறு தொகையினரான முஸ்லிம்களைக் கொலை செய்வதின் பொருள். அரபுலகத்தின் பல்வேறு குலங்களுடன் போர் தொடங்குவதாகிவிடும். ஏனெனில் அப்போது ஒரு தனி மனிதனைக் கொல்வது என்பது உண்மையில் அவன் சார்ந்துள்ள அந்தக் குலத்திற்கெதிரான போர்ப் பிரகடனம் செய்வதாகக் கருதப்பட்டு வந்தது அதனால்தான் ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒரு இளைஞனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அபூஜஹ்ல் சொன்னான்.

இறுதியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட ஓர் இரவையும் நிர்ணயித்துக் கொண்டார்கள். இந்த வேலைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்த இரவின்போது அண்ணலாரின் இல்லத்தைச் சூழ்ந்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாலையில் அண்ணலார் (ஸல்) வெளியே வரும்போது தமது திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

அரபுகள் யாரும் இரவு நேரத்தில் யாரும் அறியாவண்ணம் ஒருவரது விட்டில் புகுந்து தாக்குவதை வெறுத்து வந்ததால் மேற்காணும் வழிமுறையை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். (காட்டு அரபிகள் என்று சரித்திரம் சொல்லக்கூடிய அவர்களிடம் இருந்த நல்ல பண்புகள் கூட இப்போதுள்ள தலைவர்களிடம் இல்லை)

அல்லாஹ்வின் அருளால் அண்ணலாருக்கும் எதிரிகளின் இந்த இரகசியத் திட்டங்கள் தெரிந்துகொண்டு தானிருந்தன. இச்சூழ்நிலையில்தான் மக்கா நகரைத் துறந்து மதீனா நகரம் செல்லும்படி அண்ணலாருக்கு இறைக்கட்டளை வந்தது நபிகளார் எந்தத்தடையுமில்லாமல் மதீனா சென்றுவிட்டனர். ஆக இந்த முயற்சியிலும் தோல்வியடைந்ததால் அவர்களுக்கு கோபமும் வெறியும் இன்னும் அதிகமானது. எல்லாவற்றிலும் தோற்று நிர்கதியற்று நின்ற அவர்கள் கடைசியாக தனது கையாளாகாத தனத்தை வெளிப்படுத்த திட்டமிட்டனர். இருப்பினும் அவர்களால் குர் ஆன் கொடுத்த சவாலை எதிர்கொள்ள தைரியம் வரவில்லை.

4) அவதூறு செய்ய சதி
அல்லாஹ்வுடைய குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் விவாதப் பொருளாகிய செய்தி அரபுப் பகுதியை தாண்டிப் பரவிய போது ஹஜ்ஜுடைய நேரம் வந்தது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் ஒன்று கூடும் தருணத்தில் சொல்லப்படும் செய்தி உலகம் முழுவதும் போய்ச் சேரும் என்பதல் நபி (ஸல்) அவர்கள் அங்கு இஸ்லாத்தை எடுத்துச் செல்ல ஆயத்தமானார்கள். இதற்கு எதிராக அரபு மக்களும் திட்டம் தீட்டினார்கள். இதற்காக தங்களது மூத்த தலைவரும், சிறந்த அறிவாளியுமான வலீத் இப்னு முகீராவிடம் ஆலோசனை செய்யக் குழுமினர்.

உலகின் பல பாகங்களிலிருந்தும் வரக் கூடிய மக்கள் முஹம்மதைப் பற்றி எம்மிடத்தில் விசாரிக்கும் போது நாங்கள் அவரைப் பற்றி என்ன சொல்வது? எல்லோரும் ஒருமித்து கூறுமாறு எமக்கு ஒரு வழியைக் கற்றுத் தாரும் என்று அரபுகள் முகீராவிடம் கேட்டனர். அதற்கவர், நீங்கள் அவரைப் பற்றி முதலில் அபிப்ராயம் சொல்லுங்கள். நான் இறுதி முடிவு செய்கிறேன் என்று கூறினார்.
சிலர் கூறினர் : அவர் பைத்தியக்காரர் என்று சொல்லாமே' என்றனர்.
வலீது பதிலளித்தார் : அது தவறு, மக்கள் அவரைப் போய் சந்திக்கும் போது உங்கள் குட்டு வெளிப்பட்டு நீங்கள் சொன்னது பொய் என்று தெரிந்து விடும் என்றார்
மக்கள் கூறினர் : அவர் ஒரு கவிஞர் என்றோ ஜோசியக்காரர் என்றோ, ஷைத்தானுக்கு வழிப்பட்டு சில மறைவான விஷயங்களைக் கூறுகிறார் என்றோ கூறலாம் என்றனர்
வலீது பதிலளித்தார். இதுவும் தவறு. அவரோடு பழகும் போது நீங்கள் கூறியது அவதூறு என்று அறிந்து உங்கள் மீது வெறுப்புத்தான் மிஞ்சும். ஏனென்றால், உங்களிலேயே அரபுக் கவிதை இயற்றுவதில் என்னை விடத் திறமைசாலி வேறு யாருமில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கூறுகிறேன். அவர் சொல்வது போன்ற சொல் நயமும், கருத்து நயமும் செறிந்த வார்த்தைகளை எந்தக் கவிதையிலும் நான் பார்க்கவில்லை. (இந்த வார்த்தை குர் ஆனுக்கு எதிராக சதிதிட்டம் தீட்ட கூடியவர் சொன்னது)
பிறகு மக்கள் கேட்டனர்: வேறு என்ன தான் அவரைப் பற்றிக் கூறுவது?'
வலீது பதிலளித்தார்: அவர் ஒரு சூனியக்காரர். அவரது சூனியத்தால் கணவன் மனைவிக்கு இடையிலும், பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலும் பிரிவினை ஏற்படுத்துகிறார் என்று கூறுங்கள் மக்கள் அனைவரும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
இந்தப்பிரச்சாரம் நபியையும், சஹாப்பக்களையும் மிகவும் பாதித்தது அதற்காக அல்லாஹ் 68:1,16 வரையுள்ள வசனங்களை அருளினான்

68:1. நூன், எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
68:2. உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
68:3. இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.
68:4. மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
68:5. எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.
68:6. உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.
68:7. உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.
68:8. எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
68:9. (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
68:10. அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
68:11. (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
68:12. (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன், வரம்பு மீறிய பெரும் பாவி.
68:13. கடின சித்தமுடையவன், அப்பால் இழி பிறப்புமுடையவன்.
68:14. பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால்
68:15. நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், ''இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்'' என்று அவன் கூறுகின்றான்.
68:16. விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.

நபிகளுக்கு அறிவுரையும் ஆறுதலும் தரக்கூடிய ஆயத்துகளாக அது இருந்தன.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Saturday, July 28, 2007

சிலை வழிபாடு யாருடைய சூழ்ச்சி

என்னடா இது உலகத்தில் எவ்வளவோ பிரச்னைகள், ஒருபுறம் சுற்றுப்புற சுகாதாரம் சேதமடைகின்றது, மறுபுறம் குத்தகைக் கம்பெனிகளின் பொருளாதாரச் சுரண்டல் இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும் பொழுது இவன் இன்னும் கல்லைக் கும்பிடுகின்றான், மண்ணைக் கும்பிடுகின்றான் என்று எழுதிக்கொண்டு இருக்கின்றானே என்று எனதருமை சகோதரர்கள் எண்ணத்தோன்றும்.

உங்களின் எண்ணமும், சிந்தனையும் சரிதான் ஆனால் நான் அறிந்தவரை, இல்லாத, நடந்திராத ஒரு காரியத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்த ஒரு மடத்தனமான காரியம் ஒரு சின்னஞ்சிறிய ஒட்டுண்ணி கூட்டத்திற்காக அவர்களின் மூட நம்பிக்கைக்காக இவ்வளவு செலவு செய்யப்படுகின்றது என்றால் இந்தியாவில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளது அதற்கெல்லாம் செலவு செய்யாமல் நாட்டின் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காக செலவு செய்யாமல் இப்படி பாழடித்துவிட்டனரே என்று நினைத்தபோதுதான் அது ஏன் என்று சிந்திக்கத் தூண்டியது.

இறை நம்பிக்கைதான்

இதற்கான மூல காரணமே நாம் வைத்திருக்கும் இறை நம்பிக்கைதான் இறை நம்பிக்கை இல்லாத எந்த மனிதனும் இல்லை ஏதோ ஒரு வகையில் எதையோ ஒன்றை நம்பத்தான் செய்கின்றோம். அந்த நம்பிக்கை தெளிவாகிவிட்டால் நம்முடைய சிந்தனையும் தெளிவாகிவிடும். அந்த நம்பிக்கைத் தெளிவின்மைதான் இப்படிபட்ட மூடநம்பிக்கைக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யவைத்தது அது மட்டுமல்ல புத்தியுள்ளவர்களை எல்லாம் கைகொட்டி சிரிக்கவும் வைத்தது. விஞ்ஞானத்தில் எவ்வளவோ உச்சிக்கு சென்றுவிட்டோம் என்று உலக நாடுகளுக்கு முன்னால் மார்தட்டக்கூடிய நாம் நம்மைப்பற்றி உலக நாடுகள் எப்படி நினைக்கும் என்று கூட நினைக்கவில்லை?
என்னவென்று சகோதரர்களுக்கு புரிகின்றதா? ராமர் கட்டிய பாலத்தை கடலுக்கு அடியில் தேடியதைத்தான் சொல்லிவருகின்றேன். ஒரு காலத்தில் அப்படித்தான் பிள்ளையார் பால் குடிக்கின்றது என்றார்கள் இப்பொழுது கடலுக்கு அடியில் பாலம் என்கின்றார்கள். சரி விஷயத்திற்கு வருவோம்.

பைபிள், பகவத்கீதை, திருக்குர்ஆன் போன்ற வேத புத்தகங்கள் எல்லாம் சிலை வழிபாட்டை முற்றாக தடுக்கும் போது இது யாரோ எதுக்கோ செய்த சூழ்ச்சி அல்லது யாரோ வந்தேறிகள் தங்களின் வயிறு பிழைப்பதற்காக ஏழை மக்களை சுரண்டி சாப்பிட எடுத்த தந்திரம் என்பது புத்தியுள்ளவர்களுக்கு தெரிகின்றது.

ஒரு காரியத்தை ஆச்சாரம் என்று செய்யும்பொழுது அதற்கு அந்த மதத்தில், மதத்தின் வேத புத்தகத்தில் ஆதாரம் வேண்டும், இல்லையேல் அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் இப்படிப்பட்ட அநியாயம், சுரண்டல் பேர்வழிகளால் நடக்கும் போது அதை தட்டிக்கேட்கவாவது
தைரியம் வேண்டும், அதுவும் முடியவில்லை என்றால் அந்த இடத்தைவிட்டு வெளியேருவது தான் உத்தமம். சுய மரியாதையும் கூட. ஏழையாக வாழலாம் ஆனால் கோழையாக வாழக்கூடாது. கொஞ்சம் இதை நிதானமாக படித்துப்பாருங்களேன் எனக்கு புரிந்து விட்டது உங்களுக்கு புரியுதா என்று பார்ப்போம்.

பைபிளின் சுய மரியாதை

நாம் தேவனுடைய சந்ததியினராயிருக்க மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது . (அப்போஸ்தலர் :- 17,29)

ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். (கொரிந்தியர் 1:-10,14)

பிள்ளைகளே நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி உங்களைக் கார்த்துக் கொள்வீர்களாக ஆமென்.(யோவான் 1:-5,21)

பயப்படுகிறவர்களும்,அவிசுவாசிகளும்,அருவருப்பானவர்களும்,கொலை பாதகரகரும், விபச்சாரக்காரரும்,சூனியக்காரரும், விக்கிரகாராதானைக்காரரும், பொய்யர் அனைவரும், இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி:- 21,8)

இது பைபிளின் சாட்சியம் அது சிலை வணக்கத்தை முற்றிலும் தடை செய்கின்றது யஹோவா' பிரிவினர்களைத்தவிர மற்ற எல்லா கிறிஸ்தவர்களும் அவர்களின் ஆலயத்துக்குள்ளும், வெளியேயும் சிலை வணக்கம் செய்வது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்பதனை சிறிதளவேனும் சிந்திக்க வேண்டாமா?

இன்னும் இது போன்ற மேலதிக விபரங்களுக்கு எபேசியர்:-5,5 பேதுரு:-4,3 போன்ற பல இடங்களை பார்வையிடுக.

பகவத்கீதையின் சுய மரியாதை

என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற பரசொரூபத்தை அறியாத அறிவிலிகள், புலன்களுக்கு எட்டாத என்னை, புலன்களுக்கு தென்படும் இயல்பை அடைந்தவனாக எண்ணுகின்றனர். (பகவத்கீதை:- 7.24)

பகவத் கீதையை வைத்து வயிறு பிழைக்கும் அந்தக்கூட்டமும் அதற்குப் பின்னால் ஓடும் வானரக் கூட்டங்களும் இதை சிந்தித்தால் போதும் இந்தக் கூட்டத்தை அறிவிலிகள் என்கிறது பகவத்கீதை.
மடத்தலைவர்களுக்குப் பின்னால் ஓடும் மூடர்களே கொஞ்சம் நில்லுங்கள் உங்களின் வேத புத்தகம் என்ன சொல்கின்றது என்று கொஞ்சம் நிதானமாக இருந்து படித்துப்பாருங்கள்.
(அடே ஒப்புரானே சத்தியமா அதே நான் சொல்லலே பகவத் கீதைதான் சொல்லுது)

என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற பரசொரூபத்தையும் நாம் உயிர்களுக்கெல்லாம் ஈசாயாயிருப்பதையும் அறியாத மூடர்கள், ஒரு 'மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர்.
(பகவத்கீதை : 9,11)

கேப்பையில் (கேல்வரகில்) நெய் வடியிதுன்னு சொன்னா கேப்பானுக்கு புத்தி எங்கே போச்சி என்று தமிழில் ஒரு பழமொழிகூட இருக்குதண்ணே. இங்கு பாப்பானுக்கு புத்தி தெளிவா இருக்கு நமக்குத்தான் புத்தி புளியங்காய் புடுங்கப்போயிடுச்சி

எனக்குத் தெரிந்தவரை சுயமரியாதையை பேச தகுதியுள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே சந்தேகமே வேண்டாம் இதோ அத்தியாயம் ஆயத் நம்பர் உட்பட சகல சகிதமும் உள்ளது துருவித் துருவி தேடலாம் ஆனால் நிச்சயமா பொய்யோ தவறோ உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது.

திருக்குர்ஆனின் சுய மரியாதை

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அல்பகறா 2:21)

எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள்(அல்லாஹுவுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும்,அவர்களோ அல்லாஹுவினாலேயே படைக்கப்பட்டவர்களாயிற்றே!

(அல் அஃராஃப் :-7,191)

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது, இன்னும் அவர்களிடமிருந்து அது ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக்காப்பாற்றவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல் ஹஜ் :- 22,73)

அது ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் காப்பாற்றவும் முடியாது. என்ற
இந்த தைரியம் சிலைகளை திருடும் திருடனுக்கும், சிலைகளை வைத்து வயிறு பிழைக்கும் பாப்பானுக்கும் மிக மிக அதிகமாகவே இருக்கின்றது. (அதனாலேதானையா தைரியமா ஏமாற்றி, மற்றவன் தலையிலே தண்ணியை தெளிச்சிட்டு வந்தர்ரான்)

அவர் கூறினார்! நீங்களே செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்? உங்களையும் நீங்கள் செய்த (இ)வற்றையும் அல்லாஹ்வே படைத்திருக்கின்றான். (அஸ் ஸாஃப்ஃபாத் :- 37,95.96)

அறிவு என்பது சிந்திப்பதற்கு! சிந்தனை என்பது சமுதாயத்தையும், வரும் தலைமுறையையும் நல்வழி நடத்துவதற்கு.
சிந்திப்போம்..!! செயல்படுத்த…..!!!

Thursday, April 26, 2007

துடைத்தெறிந்தால் துன்பம் தீரும்

இந்தத் தலைப்பும் வழக்கம் போல் இஸ்லாம் மதம், இந்து மதம், இவைகளுக்கு விளக்கம் போன்ற விஷயங்களை உள்ளடக்கியதுதான் ஆனால் நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தில் வாழும் சாதாரண இந்திய குடிமகன் எப்படியெல்லாம் அவஸ்தப்படுகின்றான் என்பதையும் அதற்கு சம்பந்தப்பட்ட மடத் தலைவர்கள் என்ன உருப்படியான நடவடிக்கைகள் எடுத்தனர் என்று பார்த்தால் வேதனையாக இருக்கின்றது.


ஒரு கதை ஒன்று சொல்வார்கள். அதாவது


ஒரு விவசாயி தன் மகளை ஒரு கசாப்புக் கடைக்காரருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு மகளை பார்க்க போனார்களாம் அங்கு மகள் வீட்டில் பயங்கரமான மாமிச வாடை இருந்ததாம் இதை பார்த்த தாய் என்னம்மா இதுலே எப்படி இருக்கிறே ஒரே நாத்தமா இருக்கே என்று கேட்டாராம் அதற்கு அந்த மகள் நான் இந்த வீட்டிற்கு வரும்பொழுது சரியான நாத்தமாக இருந்தது ஆனால் இப்பொழுது சுத்தமாக வைத்திருகின்றேன் அவ்வளவாக வாசனை இல்லை என்று மகள் பதிலளித்தாலாம்.


இந்தக் கதையின் கருத்து என்னவெனில் தான் வாழக்கூடிய சுற்றுப்புறத்திற்கு ஏற்றார்போல் மனிதன் தன்னை தயார் செய்து கொள்கின்றான் அதுபோலத்தான் “தாழ்த்தப்பட்ட” என்று ஒரு சிறுபான்மையால் சொல்லக்கூடிய ஒரு பெரும்பான்மையான சமுதாயம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய சமூக அவலங்களை அவர்கள் சகித்துக்கொண்டே பழகிவிட்டனர். அதனால் அவர்கள் படக்கூடிய அவஸ்தை நம் கண்களுக்கு தெரியவரவில்லை, அல்லது அதை நாம் கண்டுகொள்ளவில்லை.


மேலும் அரசாங்கம் எவ்வளவுதான் உதவிகள் செய்தாலும் அவர்களோடு வாழக்கூடிய சமுதாயம் அவர்களை இழிவாகத்தான் பார்க்கின்றது அதனால் அவர்கள் எவ்வளவுதான் பெரிய பதவிகளுக்கு போனாலும் அவர்களோடு ஒட்டியிருக்கக்கூடிய அடையாளத்தை அவர்களால் களைந்தெரிய முடியவில்லை. இதற்கு இந்திய வரலாற்றில் நிரைய சான்றுகள் உள்ளது, மற்ற சமூகத்தார் அவர்களை பார்க்கக்கூடிய பார்வையின் அர்த்தம் மாற்றப்படாதவரை இந்தியாவில் இது சாத்தியமாகாது.



ஆனால் இந்த விஷயத்தில் உலகிலேயே வெற்றியடைந்த ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே, இஸ்லாம் மட்டுமே என்று ஆயிரம் முறைகூட சொல்லலாம்.




ஆகிய இரண்டு கட்டுரைகளையும் கீழே நான் வைத்துள்ள கட்டிரையோடு சேர்த்து வாசித்தால் அதில் ஒழிந்திருக்கும் உண்மை புரியும்.

இந்தியாவிலேயே கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரள மாநிலத்தில் தீண்டாமைக் கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதுவும் தீண்டாமைக்குத் தீர்வை கற்றுத்தரும் பள்ளி வகுப்பறையிலேயே என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியில் ஹிந்து மேல்வர்க்கத்தினரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட எ.யு.பி என்ற பள்ளியில் தலித், பிராமண, முஸ்லிம் மாணவர்களுக்குத் தனித்தனி வகுப்பறைகள் ஏற்படுத்திய பள்ளி நிர்வாகிகளின் நடவடிக்கைக்கு எதிராக பெற்றோர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இக்கொடுமைக்கு துணை நின்றவர்கள் இப் பள்ளியின் தலைமை நிர்வாகி தாமோதரன் நம்பீசன், தலைமை ஆசிரியை பத்மஜா ஆவர்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் மனதில் இனவெறியைத் தூண்டும் விதமாக நிர்வாகம் நடந்துள்ளது. இங்கு ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து B பிரிவிற்கு மாற்றியது தான் பிரச்னையை கிளப்பியிருக்கிறது. இதற்கு எதிராக களமிறங்கிய பெற்றோர்களின் முறையீட்டில், ஐந்தாம் வகுப்பின் A பிரிவில் மேல்வர்க்கத்து மாணவர்கள் மட்டும் தான் உள்ளனர் என்று கூறியிருக்கின்றனர். மேலும் உருது பாடப் பிரிவின் காரணத்தைக் கூறி முஸ்லிம் குழந்தைகளுக்கு தனி வகுப்பறை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சில பெற்றோர்கள் ஒன்று கூடி நிர்வாகத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து ஒரு சில தலித் மாணவர்களை இரு வாரங்களுக்கு முன் A பிரிவில் மாறியிருந்தனர். ஆனால், தாழ்ந்த ஜாதியில் பிறந்த பிள்ளைகளோடு தங்கள் பிள்ளைகளைக் கலந்து அமர வைத்து வகுப்பு எடுக்கக் கூடாது என மேல்ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தலித் மாணவர்கள் அனைவரும் மீண்டும் B பிரிவிற்கு மாற்றப்பட்டனர்.

கடந்த சில வருடங்களாக சாத்தமங்கலம் யு.பி பள்ளியில் ஜாதிப் பிரிவினை தலை தூக்கியிருப்பதாகவும் இதனை கடந்த வருடங்களில் உள்ள பள்ளி பதிவுப் புத்தகத்தை பரிசோதித்தால் புரியும் எனவும் பெற்றோர்கள் கூறினர்.

சாத்தமங்கலம் யு.பி பாடசாலையின் நிர்வாகத்தினர் மாணவர்களிடம் தீண்டாமையைத் திணிப்பதை எதிர்த்து பெற்றோர்கள் நேற்று(01/08/2006) மாவட்ட ஆட்சியாளரிடமும், கல்வி அதிகாரிகளிடமும் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து மேலிட உந்துதலின் பெயரில் குந்தமங்கலம் காவல்துறை அதிகாரிகள் பள்ளியில் சோதனை நடத்தினர். இப்பிரச்னையைக் குறித்து கலந்தாலோசனை செய்ய பெற்றோர்-ஆசிரியர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.


இச்சம்பவத்தை அறிந்து யு.ஸி.ராமன் எம்.எல்.ஏ, தாமரச்சேரி எ.இ.ஓ போன்றவர்கள் நேற்று இந்த பள்ளியைப் பார்வையிட்டனர். கல்வியறிவு அதிகமாகப் பெற்றிருந்தும், இன்னும் இன வெறியினை மனதில் கொண்டு இந்திய அரசியலமைப்புக்கு எதிராக தீண்டாமையைக் கடைபிடிக்கும் ஹிந்து மேல்வர்க்கத்தினரின் இச்செயல் இம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கின்றது.


நன்றி: தினமலர் 02/08/06

இச்சம்பவம் நடந்தது அன்னிய நாடுகளில் இல்லை நாம் வாழக்கூடிய இந்திய, பாரதத் திருநாட்டில்தான் என்பதை மறந்து விட வேண்டாம்.

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"

Sunday, January 21, 2007

சமூகத்தின் பலனே பலதாரமணம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரர்களே மன்னிக்கவும் நீண்ட நாட்களாக தொடர்ந்து எழுத முடியாமல் போய்விட்டது.

இஸ்லாத்தைப்பற்றி எந்த ஆதாரமும் இல்லாமல் விமர்சிப்பது மட்டுமே கொள்கையாகக் கொண்ட ஆரோக்கியம் , டோண்டு ராகவன் , Calgary சிவா , நேச குமார் , வஜ்ரா ஷங்கர் போன்றோர் அடுத்து வைக்கக்கூடிய இஸ்லாம் சம்பந்தமான வெறுப்பு வாதம்தான் பலதாரமணம்.

இவர்களுக்கு ஒரு செயலின் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றியெல்லாம் கவலையில்லை பெண்கள் அரைகுறை ஆடையுடன் வெளியில் உலாவ வேண்டும் இது மட்டும் தான் இவர்களின் பிரதான நோக்கம். இதை டொண்டு ராகவனின் சில பதிவுகளில் நான் கவனித்தது.(நன்மையை கருதி லிங் கொடுக்கவில்லை) அதுமட்டுமல்ல எத்தனை முறை பதில் கொடுத்தாலும் அதையும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஆனால் எங்காவது ஒரு மூலையில் ஓட்டை சங்கை வைத்துக்கொண்டு ஊளையிடுவது இவர்களின் தலையாய கடமைகளில் ஒன்று. நான் பலமுறை கேட்ட விஷயம்தான் என்னவெனில் இவர்கள் அவன் சரியில்லை, இவன் சரியில்லை என்றெல்லாம் கூக்குரல் இடுவதைவிட தங்களின் மதத்தையும் அதன் கொள்கையையும் சொன்னாலே போதும் அவர்களின் நம்பிக்கைபடி எங்களைப் போன்றவர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறுவதையாவது தடுத்திருக்க முடியும்.

பலதாரமணம் என்பது மனித சமூகங்களில் பலவற்றில் காணப்பட்ட மிகத்தொன்மையான பழக்கமாகும். பைபிள் பலதாரமணத்தை தடைசெய்யவில்லை. அதற்கு மாறாக, பழைய ஏற்பாடும் அறிஞர்களின் எழுத்துக்களும் பலதாரமணத்தை மீண்டும் மீண்டும் அங்கீகரிப்பதையே நாம் காண்கிறோம்.

மன்னன் சாலோமோனிற்கு எழுநூறு மனைவிகளும் முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தாக சொல்லப்படுகிறது. ( 1 இராஜாக்கள் 11:3)

மேலும், மன்னன் தாவீதிற்கும் பல மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்ததாக சொல்லப்படுகின்றது. (2 சாமுவேல் 5:13).

பல்வேறு மனைவிகளுக்கு பிறந்த மகன்களுக்கிடையே எவ்வாறு சொத்துக்களை விநியோகிப்பது என்பது பற்றிய கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. (உபாகமம் 22:7)

மனைவியின் சகோதரியை போட்டி மனைவியாக்கிக் கொள்வதற்குத்தான் இதில் தடையுள்ளது. (லேவியராகமம் 18:8)

அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் இருக்கலாம் என தல்மூது பரிந்துரைக்கிறது. Swidler, op. cit., pp. 144-148.

பதினாறாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூதர்கள் பலதாரமணப் பழக்கத்தை பின்பற்றியே வந்தனர். கிழக்கத்திய யூதர்கள், அவர்கள் இஸ்ராயீலிற்கு வந்து குடியேறும் வரை , தொடர்ந்து பலதாரமணத்தை அனுசரித்து வந்தனர். இஸ்ராயிலில் சிவில் சட்டத்தின் கீழ் அங்கே அது தடைசெய்யப்பட்டது. இருப்பினும் , சிவில் சட்டத்தை மிஞ்சும் மதச்சட்டத்தின் கீழ் பலதாரமணத்திற்கு அனுமதி இருக்கவே செய்கிறது. oazleton, op. cit., pp 44-45.

புதியஏற்பாடு இதுபற்றி என்ன கூறுகிறது ? பாதர் ஊஜீன் ஹில்மேன் என்பவரின் பலதாரமணம் பற்றி மறுஆய்வு என்ற ஆழ்ந்த ஆராய்ச்சி புத்தகத்தில் கூறுவதாவது: ஒருவர் ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டுமென்ற வெளிப்படையான கட்டளையோ அல்லது பலதாரமணம் செய்யக்கூடாது என்ற தடையோ புதிய ஏற்பாட்டில் எங்குமே இல்லை. Euge,e oillman, Polygamy Reconsidered: African Plural Marriage and the Christian Churches (New York: Ornis Nooks, 1975) p.140.

மேலும் , யூத சமூகத்தில் பலதாரமணம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தபோதிலும் இயேசுகிறிஸ்து அதற்கு எதிராக எதையும் சொல்லவில்லை. கிரேக்க-ரோம கலாச்சாரத்தை (ஒரே ஒரு சட்டபூர்வ மனைவியை மாத்திரம் மணக்க வேண்டுமென்ற , ஆனால் வைப்பாட்டிகளையும் விபச்சாரத்தையும் அனுமதித்த) அனுசரித்தே சர்ச் பலதாரமணத்தை தடை செய்தது என்ற உண் மையை பாதர் ஊஜீன் ஹில்மேன் கவனத்திற்கு கொண்டு வருகிறார்.

நம்முடைய இக்காலத்தில், ரோம பழக்கவழக்கத்திற்கு ஏற்ப மற்றொரு திருமணம் செய்வது தடைசெய்யப்படுகின்றது. Inid., p. 17.

என்ற புனித அகஸ்டினின் அவர்களின் கட்டளையை எடுத்துக்காட்டுகிறார். பலதார மணத்தை சர்ச் தடைசெய்தது மற்ற கலாச்சாரத்தை பின்பற்றி செய்ததேயல்லாது அது கிறிஸ்தவ மதத்தின் கட்டளையல்ல என ஆப்பிரிக்க சர்ச்சுகளும் ஆப்பிரிக்கக் கிறிஸ்தவர்களும் அவர்களின் ஐரோப்பிய சகோதரர்களுக்கு அடிக்கடி நினைவூட்டுகின்றனர்.

திருக்குர்ஆனும் பலதாரமணத்தை அனுமதித்துள்ளது , ஆனால் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமலன்று:

அநாதை(ப்பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக , மும்மூன்றாக , நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள் ; அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்.(4:3)

பைபிளிற்கு எதிராக திருக்குர்ஆன் அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் வரை மணந்து கொள்ள , அதுவும் அவர்களை சமமாகவும் நீதமாகவும் நடத்தவேண்டும் என்ற கடும் நிபந்தனையின் கீழ் , அனுமதித்துள்ளது. திருக்குர்ஆன் பலதாரமணத்தை கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது என்றோ அல்லது அது மிகவும் முன்மாதிரியான எல்லோரும் பின்பற்றியாகவேண்டிய பழக்கம் என்று கருதுவதாகவோ எவரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.

திருக்குர்ஆன் பலதாரமணத்தை ' சகித்துக்கொண்டுள்ளது' அல்லது 'அனுமதித்துள்ளது ' அவ்வளவுதான். அதுவும் ஏன்? ஏன் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டது ? பதில் மிகவும் எளிது: பலதார மணத்தை நிர்ப்பந்திக்கும் சமூக மற்றும் ஒழுக்க காரணங்கள் கொண்ட சில நேரங்கள் , சில சந்தர்ப்பங்கள் இருக்கவே செய்கின்றன என்பதுதான் அதற்குரிய பதிலாகும். மேற்காணும் திருமறைவசனம் குறிப்பிடுவது போல் அநாதைகள் , விதவைகள் ஆகியோருக்கு சமூகம் செய்ய வேண்டிய கடமைகளில் பலதாரமணம் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை கவனிக்காமல் அதை தனியாக புரிந்துகொள்வதென்பது இயலாத ஒன்றாகும்.

எல்லா இடங்களுக்கும் காலங்களுக்கும் பொருத்தமான மார்க்கமான இஸ்லாம் இவைகள் போன்ற நிர்ப்பந்திக்கும் சூழ்நிலைகளை அலட்சியப்படுத்தவே முடியாது. இந்தக் கட்டுரையின் மூலம் ஆரோக்கியம் , டோண்டு ராகவன், Calgary சிவா, நேச குமார் , வஜ்ரா ஷங்கர் போன்றோருக்கு நான் சொல்லவிரும்பும் விஷயமும் இதுதான்

மனித சமூகங்களில் பலவற்றில் பெண்கள் ஆண்களை விட அதிகமாக இருக்கின்றனர். அமெரிக்காவில் ஆண்களை விட குறைந்த பட்சம் எட்டு மில்லியன் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர். குயினா போன்ற நாடுகளில் 100 ஆண்களுக்கு 122 பெண்கள் வீதம் இருக்கின்றனர். தான்ஸானியாவில் 100 பெண்களுக்கு 95.1 ஆண்களே இருக்கின்றனர். இப்படி சமமற்ற பால் விகிதம் இருக்கும் போது ஒரு சமூகம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

அதற்கு பல தீர்வுகள், சிலர் சன்னியாசத்தையும் சிலர் பெண் சிசுக்கொலையையும் சிபாரிசு செய்கின்றனர். (இன்றைய உலகில் இது நடந்து கொண்டுதான் வருகின்றது) விபச்சாரம் , திருமணமின்றி உடலுறவு கொள்ளுதல் , ஓரினப்புணர்ச்சி போன்றவைகள் அனைத்தையும் சமூகம் , சகித்துக்கொள்வதுதான் ஒரே வழி என மற்றும் சிலர் நினைக்கின்றனர்.

பல ஆப்பிரிக்க சமூகத்தைப் போன்றவைகளுக்கோ மிகவும் கண்ணியத்திற்குரிய வழி என்பது எதுவெனில் பலதாரமணத்தை கலாச்சாரரீதியில் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாகவும் சமூக ரீதியில் மதிப்பிற்குரிய முறையாகவும் ஏற்றுக்கொள்வதுமேயாகும். மற்ற கலாச்சாரத்தை சேர்ந்த பெண்கள் பலதாரமணத்தை தங்களின் இழிவின் அடையாளமாக கருதுவதில்லை என்பதை மேற்கத்திய உலகம் அடிக்கடி தவறாகபுரிந்து கொள்கின்றது என்பதே பிரச்னையாகும்.

உதாரணமாக, பல ஆப்பிரிக்க பெண்கள் அவர்கள் கிறிஸ்தவர்களோ அல்லது முஸ்லிம்களோ அல்லது மற்ற மதங்களைச் சார்ந்தவர்களோ ஏற்கனவே திருமணமாகி தான் பொருப்புள்ள கணவன் என செயல்பட்டுக்காட்டிய ஆணையே திருமணம் செய்ய அதிகம் விரும்புகின்றனர். தாங்கள் தனிமையை உணராதிருப்பதற்காக இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளும்படி பல ஆப்பிரிக்க மனைவிகள் தங்கள் கணவனை தூண்டுகின்றனர். John E'Emilio and Estelle N. Freedman, Intimate Matters: A history of Sexuality in America (New Youk: oarper ~ Row Punlishers, 1988) p. 87.

நைஜீரியாவின் இரண்டாம் பெரிய நகரத்தில் 15 முதல் 59 வயது வரையுள்ள சுமார் 6000 பெண்களிடம் நடத்தப்பட்ட புள்ளிவிவரத்தின்படி அவர்களில் 60 சதவிகிதம் பேர் தங்கள் கணவன்மார்கள் இரண்டாம் திருமணம் செய்வதை பெரிதும் விரும்புகின்றனர். 23 சதவிகிதம் பெண்களே தங்கள் கணவன்மார்கள் இரண்டாம் மணம் செய்வதை விரும்பாமல் கோபிப்பவர்களாவார்கள். கென்யாவில் நடத்தப்பட்ட புள்ளிவிவரத்தின்படி 67 சதவிகிதம் பெண்கள் பலதாரமணத்தை சரியானதெனவே கருதுகின்றனர். கென்யாவின் கிராமப்புறங்களில் நடத்தப்பட்ட புள்ளிவிவரத்தின்படி 27 பெண்களில் 25 பேர் ஒருதாரமணத்தை விட பலதாரமணம் மிகச் சிறந்தது எனக் கருதினர். கூட இருக்கும் சக்களத்திகள் ஒத்துழைத்தால் பலதாரமணம் மகிழ்ச்சிகரமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்குமெனவும் இந்தப்பெண்கள் உணர்ந்துள்ளனர்.

சில புரட்டாஸ்டாண்டு சர்ச்சுகளும் கூட அதை சகித்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு பெரும்பாலான ஆப்பிரிக்க சமூகத்தில் பலதாரமணம் மிகவும் மரியாதைக்குரிய ஒரு முறையாக ஆகியுள்ளது. கணவன் மனைவிக்கிடையேயுள்ள அன்பின் வெளிப்பாட்டிற்கு ஒரு முன்மாதிரியாக ஏகதாரமணம் இருக்கலாமென்றாலும் , சில சமூகங்களில் பலதாரமணம் சமூகரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்பதையும் பலதாரமணம் கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்ற நம்பிக்கை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற கருதப்படுவதையும் சர்ச் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கென்யாவிலுள்ள ஆங்கிலிக்கன் சர்ச்சைச் சேர்ந்த ஒரு பிஷப் கூறினார். The Weekly Review, Aug. 1, 1987.

ஆப்பிரிக்காவின் பலதார மணத்தை பற்றி கவனமாக ஆராய்ந்த ஆங்கிலிக்கன் சர்ச்சை சேர்ந்த புனித டேவிட் கிட்டாரி அவர்கள் 'விவாகரத்து செய்து மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் முறையை விட , இதனால் கைவிடப்பட்ட மனைவி குழந்தைகள் ஆகியோரை கவனத்தில் கொள்ளும் போது பலதார மணமென்பது கிறிஸ்தவ கொள்கைகளுக்கு மிகவும் உகந்தது என தீர்மானித்துள்ளார். Kilnride, op. cit., p. 126.

மேற்கத்திய நாடுகளில் பல வருடங்கள் வாழ்ந்த பிறகும் பலதாரமணத்திற்கெதிராக எந்தவித ஆட்சேபமும் இல்லாத பல உயர் கல்வி கற்ற ஆப்பிரிக்க மனைவிகளை நான் தனிப்பட்ட முறையில் நன்கறிவேன். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அவர்களில் ஒருத்தி, குழந்தைகளை வளர்ப்பதில் அவளுக்கு துணையாயிருக்கும் வகையில் , இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும்படி கணவனை வற்புறுத்துகின்றாள்.

சமமற்ற பால் விகித பிரச்னை போர்க்காலங்களில் மிகவும் சிக்கலாகின்றது. அமெரிக்க பூர்விக செவ்விந்தியர்கள் யுத்த காலத்தில் மிக அதிக ஏற்றத்தாழ்வு மிக்க பால் விகிதத்தினால் மிகவும் துன்பத்திற்குள்ளாகினர். மிகவும் உயர்ந்த அந்தஸ்திலிருந்த இந்த குலப் பெண்கள் , இதன் விளைவாக, கெட்ட ஆபாசமான காரியங்களில் ஈடுபடுவதற்கு மாறாக பலதாரமணத்தை தங்களுக்கு சிறந்த பாதுகாப்பளிக்கும் ஒன்றாக ஏற்றுக்கொண்டனர். அங்கு வந்தேறிய அமெரிக்கர்களோ , இத்தகைய ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தின் போது வேறு என்ன முறையை கடைப்பிடிப்பது என்பதை கூறாமல் , பலதாரமண நடைமுறையை மாத்திரம் ' காட்டுமிராண்டித்தனம்' என்று கண்டனம் செய்தனர்.

ஒருவேளை அப்பெண்களை தங்களின் தவறான ஈனப்புத்திக்கு விருந்தாக்க நினைத்திருக்கக்கூடும் இரண்டாம் உலகப்போருக்குப்பின் , ஜெர்மனியில் மாத்திரம் ஆண்களை விட பெண்கள் 7,300,000 அதிகமாகயிருந்தனர் (அவர்களில் 3.3 மில்லியன் பேர் விதவைகள்.) 20 வயதிலிருந்து 30 வயதிற்குட்டவர்களில் 100 ஆண்களுக்கு 167 பெண்கள் இருந்தனர். இத்தகைய பல பெண்களுக்கு ஒரு ஆண் தோழனாக மாத்திரமல்லாமல் முன்னெப்போதும் ஏற்பட்டிராத துன்பம் கஷ்டம் ஆகியவை ஏற்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் குடும்பத்திற்கு தேவையானதை அளித்து பாதுகாக்கக்கூடியவர்கள் தேவைப்பட்டனர். ஐக்கிய இராணுவ வீரர்கள் இந்தப் பெண்களின் இத்தகைய பலவீனத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். பல இளம் பெண்களும் விதவைகளும் இந்த ஆக்ரமிப்புப் படையுடன் (குடும்பத் தேவைகளுக்காக) கட்டுப்பாடற்ற உடலுறவு கொண்டனர். (இன்றும் யுத்தங்களின் முடிவு இதுவாகத்தான் இருக்கின்றது)

பல அமெரிக்க, பிரிட்டன் வீரர்கள் தாங்கள் பெறும் இந்த சுகத்திற்கு பதிலாக சிகெரட்டுக்கள், மிட்டாய்கள் , ரொட்டிகள் ஆகியவற்றை கொடுத்தனர். இந்த அன்னியர்கள் கொடுத்த பொருட்களால் குழந்தைகள் மிகவும் மகிழ்ந்தனர். மற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் இந்தப் பொருட்களை கண்ட ஒரு பத்து வயதுப்பையன் தன் தாய் இனிமேல் பசிக்கொடுமைக்கு ஆளாகாமல் இருப்பதற்காக அவளுக்கும் ஒரு 'ஆங்கிலேயன் ' இருந்தால் நன்றாகயிருக்கும் என மனப்பூர்வமாக ஆசைப்பட்டான். 62 Inid., pp. 257-258.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் நம் மனச்சாட்சியை தொட்டு கேட்க வேண்டும். (இது மனசாட்சி உள்ள மனித சமூகத்தின் நன்மையை மதிக்கக் கூடியவர்களின் நிலைபாடு)

இதை விட பெண்களுக்கு கண்ணியமளிப்பது எது ? சிவப்பிந்தியர்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரியாதைக்குரிய இரண்டாம் மனைவியாக இருப்பது பெண்ணுக்கு கண்ணியமளிப்பதா அல்லது அநாகரிக 'ஐக்கிய இராணுவத்தினரிடம் இருந்தது போல் விபச்சாரியாக இருப்பது நல்லதா? வேறு வார்த்தைகளில் சொல்வதனால் , திருக்குர்ஆன் முன்வைக்கும் தீர்வு பெண்ணுக்கு கண்ணியமளிப்பதா அல்லது ரோம சாம்ராஜ்யத்தின் கலாச்சார அடிப்படையிலமைந்த இறையியல் பெண்ணுக்கு கண்ணியமளிப்பதா ?

1948 ஆம் ஆண்டில் மியூனிச்சில் நடந்த அகிலஉலக இளைஞர்கள் மாநாட்டில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தால் ஏற்படும் பிரச்னை பற்றி விவாதிக்கப்பட்டது. எந்த தீர்விற்கும் வர முடியவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தவுடன், மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் பலதாரமணத்தை சிறந்த தீர்வாக முன்வைத்தனர். இதைக்கேட்டதும் ஆரம்பத்தில் மாநாட்டிற்கு வந்தோர் அதிர்ச்சிக்கும் வெறுப்பிற்குமுள்ளாயினர். ஆயினும் , இதை கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர் இது ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்கொண்டனர். இறுதியாக , மாநாட்டின் இறுதித்தீர்மானங்களில் ஒன்றாக பலதாரமணமும் சேர்க்கப்பட்டது. Saniq, op. cit., p. 191.

பெரும் அழிவுகளை உண்டாக்கக்கூடிய ஆயுதங்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலக நாடுகள் தன்னகத்தே கொண்டுள்ளன. ஐரோப்பிய சர்ச்சுகள் இப்பொழுதோ பிறகோ பலதாரமணத்தை ஒரே தீர்வாக ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியிருக்காது. பாதர் ஹில்மேன் இந்த உண்மையை மிகவும் ஆழ்ந்து சிந்தனைக்குப்பிறகு அங்கீகரித்தேயுள்ளார் , மனித கூட்டுக்கொலை தொழிற் நுட்பங்கள் (நியூக்லியர் , பயாலாஜிகல், கெமிகல்...) பால் விகிதத்தில் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திவிடும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே.

அப்பொழுது பலதாரமண முறைதான் மனித சமூகம் உயிர்பிழைத்திருக்க அவசியமான முறையாக ஆகிவிடும்... முன்னைய பழக்கம் சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக பலதாரமணம்தான் இயல்பிற்கும் ஒழுக்கமாண்புகளுக்கும் ஒத்தது என்ற மனவிருப்பம் அத்தகைய சூழ்நிலைகளில் அதிகப்பட்டுவிடும். அது போன்ற சூழ்நிலைகளில் இறையியல் வல்லுநர்களும் சர்ச் தலைவர்களும் இந்த புதிய பலதாரமண கொள்கையை நியாயப்படுத்தும் விதத்தில் வலுவான காரணங்களையும் பைபிள் ஆதாரங்களையும் முன்வைப்பர். oillman, op. cit., p. 12.

இன்று வரை, நவீன சமூகங்களில் நிலவிவரும் ஒரு சில சமூகக்கேடுகளுக்கான சிறந்த தீர்வாக பலதாரமணம் இருந்து வருகின்றது. பலதாரமணத்திற்கு தரும் அனுமதியின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய திருமறைகுர்ஆன் குறிப்பிடும் சமூகக்கடமைகள் (நிறைவேற்றப்படாமல்) ஆப்பிரிக்காவை விட மேற்கத்திய சமூகங்களில் அதிகமாக காணப்படுகின்றன. உதாரணமாக, கருப்பர் சமுதாயத்தில் மிக அதிக பால்விகிதம் காணப்படுகின்றது.

ஆண்களில் இருபது பேர்களில் ஒருவர் 21 வயதையடையும் முன்பே இறந்து விடுகின்றனர். 20 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களில், ஒருவருக்கொருவர் கொலைசெய்து கொள்வதே சாவிற்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. மேலும் , பல கருப்பு ஆண்கள் வேலை கிடைக்காதவர்களாகவும் , ஜெயிலிலும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுமுள்ளனர். Inid., p. 26.

இதன் விளைவாக நான்கில் ஒரு கருப்புப் பெண் 40 வயதிலும் கூட திருமணமாகாமல் இருக்கின்றனர். வெள்ளையரிடத்தில் இந்த விகிதம் பத்தில் ஒன்று. Kilnride, op. cit., p. 94.

மேலும் பல கருப்பு பெண்கள் இருபது வயதிற்கு முன்னரேயே (திருமண பந்தமின்றி கர்ப்பமாகி) ஒற்றை தாயாக (-முறையான தகப்பனில்லாமல்) ஆகி விடுகின்றார்கள். அவர்கள் தங்களின் தேவைகைளை பூர்த்தி செய்வதற்காக வேறு ஆட்களை சார்ந்து நிற்க வேண்டியதிருக்கிறது. இத்தகைய துன்ப சூழ்நிலைகளின் விளைவாக பல கருத்த பெண்கள் 'ஆளை பகிர்ந்து கொள்ளுதல் ' என்பதில் ஈடுபட்டு விடுகின்றனர். அதாவது, ஆதரவற்ற இந்த கருத்த பெண்கள் திருமணமானவர்களுடன் கள்ள உறவு வைத்துக்கொள்கின்றனர். தங்களின் கணவனை வேறு பெண்களும் ' பங்கு' போட்டுக்கொள்கிறார்கள் என்ற இந்த விசயம் பெரும்பாலும் அவர்களின் மனைவிகளுக்கு தெரியாமல் போகின்றது.

ஆப்பிரிக்க வழியிலான அமெரிக்க சமூகத்தினரின் ஆளை பங்குபோடுதல் ' எனும் இந்த பிரச்னையை உற்று நோக்கி வரும் சிலர், அமெரிக்க சமூகத்தில் பரந்த சீர்திருத்தங்கள் செய்யப்படும் வரையிலாவது, இந்த கருத்த ஆண்கள் குறைவு பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக 'சம்மதப்பட்ட பலதாரமணத்தை ' தீவிரமாக பரிந்துரைக்கின்றனர். Inid.

சம்மதப்பட்ட பலதாரமணம்' என்பது என்னவெனில் மனைவிக்கும் மொத்தத்தில் சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய தற்போது நடந்து வரும் ' ஆளை பங்கிடும் ' இரகசிய முறைக்கு எதிராக பலதாரமணமென்பது சமூகத்தில் அங்கீகரிக்கப்பட ஒன்றாக இருக்க வேண்டும் .

மேலும் அதில் சம்மந்தப்பட்ட அனைவரின் சம்மதமும் வேண்டும் என்பதாகும். ஆப்பிரிக்க வழி அமெரிக்க கருப்பர்களின் 'ஆணைப் பங்கிடுதல் ' பிரச்னைதான் பிலாதெல்பியாவிலுள்ள டெம்பிள் பல்கலைக்கலைக்கழகத்தில் 27 ஜனவரி 1993 அன்று நடந்த கருத்தரங்கின் முக்கிய , சிறப்பிற்குரிய பேச்சாளர்கள் அழைக்கப்படிருந்த , தலைப்பாக இருந்தது. Inid. pp. 95-99.

இந்தப் பிரச்னைக்குரிய சரியான தீர்வாக பலதாரமணத்தை சில பேச்சாளர்கள் முன்வைத்தனர். பலதாரமணம் சமூகத்தில் , குறிப்பாக விபச்சாரத்தையும் வைப்பாட்டிகளையும் அனுமதிக்கும் சமூகத்தில் , தடைசெய்யப்படக்கூடாது என கூறினர். ஆப்பிரிக்காவில் மிகவும் பொறுப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு ஆரவாரமான வரவேற்ப்பை பெற்றுவரும் பலதாரமணத்தை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு பெண் கருத்து தெரிவித்தார்.

ரோமன் கத்தோலிக்கத்தை சார்ந்த பிலிப் கில்ப்ரைட் எனும் அமெரிக்க மனிதவியல் ஆராய்ச்சியாளர் தன்னுடைய சிந்தனையைத் தூண்டும் 'நம் காலத்திற்கு பலதாரமணம் ' என்ற புத்தகத்தில் அமெரிக்க சமுகத்தில் மொத்தத்தில் நிகழும் சில சமூகத்தீமைகளுக்கு சரியான தீர்வாக பலதாரமணத்தை முன்வைத்துள்ளார். பெரும்பாலான சமயங்களில் விவாகரத்துக்களுக்கு , அதன் விளைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் மிகச்சிறந்த தீர்வாக பலதாரமணம் விளங்கும் என அவர் வாதிக்கின்றார்.

திருமணத்திற்கு பிறகு நடக்கும் கள்ள உறவுகளே அமெரிக்க சமூகத்தில் பெரும்பாலான விவாகரத்திற்கு காரணமாக உள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த கள்ள உறவு (முந்திய துணையை) விவாகரத்து செய்வதில் முடிவதை விட இன்னுமொரு திருமணத்தில் முடியுமானில், அது (முந்திய துணையின்) குழந்தைகளுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். இத்தகைய சூழ்நிலைகளில் குடும்பம் பிரிந்து இல்லாமலாகி போவதுதான் வழி என்றிருப்பதை விட குடும்பம் ஒன்றிணைந்து இருந்தால் அக்குடும்பத்தின் மூலம் குழந்தைகளை நல்ல முறையில் கவனித்திட முடியும் என கில்ப்ரைட் கூறுகிறார். மேலும் , வயதாகியும் திருமணமாகா முடியாமல் இருக்கும் பெண்கள் போன்றவர்களுக்கும் 'ஆணைப் பங்கிடுதல் ' முறையில் ஈடுபட்டிருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் போன்றவர்களுக்கும் அது மிகவும் பயனளிக்கக்கூடியதாக இருக்கும் என கில்ப்ரைட் ஆலோசனை தெரிவிக்கிறார்.

பேக்கரியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களிடையே 1987 ஆம் ஆண்டு ஒரு செய்திப்பத்திரிக்கை ' திருமணம் செய்ய தகுதியுள்ள ஆண்கள் குறைவாக இருக்கும் நிலையில் பலதார மணத்தை சட்டம் அனுமதிக்கலாமா? என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த பலதாரமண கருத்தை பெரும்பாலும் அனைத்து மாணவ மாணவிகளுமே ஏற்றுக்கொண்டனர். பலதாரமணம் தன்னுடைய உணர்வு மற்றும் பௌதீக தேவைகளை நிறைவேற்றி , ஒரே மனைவியாயிருப்பதினால் கிடைக்கும் சுதந்திரத்தை விட அதிக சுதந்திரத்தை அளிக்கும் என ஒரு மாணவி கூறினார். Lang, op. cit., p. 172.

அமெரிக்காவில் இன்னும் பலதாரமணத்தை அனுசரித்து வரும் அடிப்படைவாத சில மோர்மேன் பெண்களும் இதே வாதத்தையே முன்வைக்கின்றனர். தங்களின் சக தோழி மனைவிகளும் தாங்களும் ஒருவரின் குழந்தைகளை மற்றவர்கள் கவனித்துக்கொள்ள முடிவதால் பலதாரமணமென்பது பெண்கள் தங்களின் வேலையை விட வேண்டிய அவசியமில்லாமல் தொடர்ந்து செய்து வரவும் குழந்தைகளை கவனிப்பதற்கும் மிகச்சிறந்த முன்மாதிரியான முறையென அவர்கள் நம்புகிறார்கள்.

பலதாரமணமென்பது இஸ்லாத்தில் ஒருவருக்கொருவர் சம்மதப்பட்டு செய்வதேயாகும். கல்யாணமான ஒருவரை கல்யாணம் செய்யும்படி எந்தப்பெண்ணையும் யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. மேலும், தான் மணக்கும் கணவன் வேறொரு பெண்ணை மணக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கவும் மனைவியாகப்போகின்றவளுக்கு உரிமையுண்டு. Saniq, op. cit., pp. 187-188.

இதற்கு எதிராக, பைபிள் சில நேரங்களில் நிர்ப்பந்த பலதாரமணத்திற்கு அனுமதிக்கிறது. குழந்தையற்ற விதவை மரணித்த கணவனின் சகோதரனை, அவன் திருமணமானவனாகி இருந்தால் கூட, அவளின் சம்மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் , மணக்க வேண்டுமென அது கூறுகிறது. (ஆதியாகமம் 38: 8-10)

இன்றைய முஸ்லிம் சமூகங்கள் பலவற்றில் , அங்கே பால் விகித ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகமாக இல்லாமலிருப்பதால், பலதாரமணம் மிகவும் குறைவு என்பதையும் இங்கே நாம் கவனிக்கவேண்டும். மேற்கத்திய உலகில் திருமணத்திற்கப்பாலும் கள்ள உறவு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை விட முஸ்லிம் உலகில் பலதாரமணம் செய்திருப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவென அறுதியிட்டு கூறிட முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதனால், முஸ்லிம் உலகிலுள்ள ஆண்கள் மேற்கத்திய ஆண்களை விட மிக அதிகம் கடுமையான ஒருதாரமணவாதிகளாக இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

புகழ்பெற்ற கிறிஸ்தவ அறிஞர் பில்லி கிரஹாம் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார்: 'கிறிஸ்தவமதம் பலதாரமணத்தை பொறுத்துப் போகவேண்டும் தற்கால கிறிஸ்தவமதம் அதை பொறுத்துப் போகவில்லையெனில் அது அதற்கு அழிவையே கொண்டு வரும். சமூகத்தீமைகளுக்கு பரிகாரமாக இஸ்லாம் பலதாரமணத்தை அனுமதித்துள்ளது இது சம்பந்தமாக மனித இயல்பு அவசியப்படும் சில சுதந்திரங்களை , ஆனால் மிகவும் கடுமையாக வரையறுக்கப்பட்ட சட்டத்தின் கீழேயே , அனுமதித்துள்ளது. தாங்கள் ஒருதாரமணவாதிகள் என கிறிஸ்தவ நாடுகள் மிகவும் வெறுமனே காட்டிக்கொள்கின்றன.

ஆனால் அவைகள் பலதாரமணத்தையே பின்பற்றுகின்றனர். மேற்கத்திய சமூகத்தில் நடைபெறும் வைப்புக்களை பற்றி அறியாதவர் யாருமில்லை. இது விசயத்தில் இஸ்லாம் அடிப்படையில் நியாயமான மார்க்கம். அது முஸ்லிமை , தேவைப்பட்டால் , இரண்டாம் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் , ஒழுக்கம் சிதைந்திடாமல் பாதுகாப்பாக இருக்கும் வகையில் எல்லாவித கள்ள உறவுகளையும் கடுமையாக தடை செய்துள்ளது. Andul Rahman Doi, Woman in Shari'ah (London: Ta=oa Punlishers, 1994) p. 76.

நன்றி: தமிழ்இஸ்லாம்.காம்

ஆக சகோதரர்களே சிந்தனையாளர்களே இஸ்லாம் மீது காரணம் இல்லாமல் காலவரையறையற்ற வெறுப்பு கொண்டவர்களே உங்களுக்கு நேரம் கிடைக்குமெனில் சற்று நிதானமாக சிந்தித்துப்
பார்த்தால் இஸ்லாத்தின் இது போன்ற சட்டங்களின் மூலம் சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மையை உணரலாம்.

ஆக கண்ணியமிக்க இஸ்லாம் அதை ஏற்றுக்கொண்ட மனிதனையும் கண்ணியப்படுத்துகின்றது. அவனை கண்ணியத்தோடு வாழவைக்கின்றது. உனக்கு உள்ள மதிப்பை நீ இழந்துவிடாதே, என்று அறிவுருத்துகின்றது, குறிப்பாக மனிதனை இந்த சமூகத்திற்கு முன்னால் மனிதத்துவம் உள்ள, தன்மானமிக்க தனித்துவம் மிகுந்த மனிதனாக்குகின்றது இஸ்லாம்.

இந்த இடத்தில் சில பேரை சுட்டிக்காண்பித்து இவர்களுக்கு என் மனிதத்துவம் இல்லை என்றுகூட அவர்கள் பாஷையில் சொல்லலாம்

அதற்கு ஒரேபதில் : நான் அதாவது என் போன்றவர்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேரக் காரணம் என்ன என்பதை கேட்கக்கூடியவர்கள் ஆராய்ந்தால் மிக எளிதில் பதில் கிடைத்துவிடும்.

ஒரு இடத்தில் அநியாயம் நடக்கும் பொழுது சக்தி உள்ளவன் தட்டிக்கேட்பான் அரசாங்கமே சேர்ந்து என்னதான் உதவிகள் செய்ய வந்தாலும் இல்லாதவன் அல்லது முடியாஅதவன் இது போன்ற முடிவுதான் எடுப்பான்.

ஆகவே இதை விரும்பாதவர்களின் கூப்பாடுதான் இஸ்லாம் பற்றிய புரியாத வெற்றுப் புலம்பல்கள் தான். அதனால் இவர்களையும் இவர்களின் நோக்கத்தையும் நிச்சயமாக நாம் புரிந்து வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.