Tuesday, August 08, 2006

பெண் என்றால் பேயும் இறங்கும்

பெண்கள் சிறந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்றெல்லாம் கூக்குறல் எழுப்பும் இந்த நவீன பெண்ணியக்கவாதிகள் யார் இவர்களின் பூர்வீகம் என்ன இவர்களின் நோக்கம் என்ன என்பதை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம் இந்து யூத-கிறிஸ்தவ மதத்தில் பெண்களைப்பற்றியான பார்வை என்ன?

தீமை புரியத்தூண்டுபவள் என்று பைபிளில் ஏவாளைப்பற்றி கூறப்பட்டிருப்பது யூத-கிறிஸ்தவ மதத்திலுள்ள பெண்களுக்கு எதிராக தொடர்ந்து மிகவும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளது. எல்லா பெண்களும் அவர்களின் தாயாரான ஏவாளிடமிடமிருந்து அவளுடைய குற்றத்தையும் கபடத்தனத்தையும் பரம்பரையாகப் பெற்றுள்ளனர் என்று நம்பப்படுகின்றனர். அதனால் அவர்கள் அனைவரும் நம்பத்தகாதவர்களாக ஒழுக்க ரீதியாக தாழ்ந்தவர்களாக தீயவர்களாக கருதப்படுகின்றனர்.

மாதவிடாய் கர்ப்பம் குழந்தைப்பேறு ஆகியவைகள் சபிக்கப்பட்ட பெண்ணினத்தின் என்றென்றும் நிலைத்திருக்கும் குற்றத்தின் தண்டனையாகவே கருதப்படுகின்றது. பைபிளிலுள்ள ஏவாள் அவளின் பெண் வாரிசுகளின் மீது எந்த வகையான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ள நாம் கடந்த காலத்திலுள்ள சில மிகவும் முக்கியமான யூத-கிறிஸ்தவர்களின் எழுத்துக்களை நோட்டமிட வேண்டும். பழைய ஏற்பாட்டிலிருந்து நாம் தொடங்குவோம்.

யூத மதத்தில் பெண்களின் பங்கு

ஞான இலக்கியம் என்று கூறப்படுவதில் காணப்படுவதாவது :
மரணத்தை விட கசப்பானவள் பெண். அவள் சிக்கவைக்கும் வலையாவாள் அவளின் இதயமோ கண்ணியாகும் மேலும் அவளின் கைகள் விலங்குகளாகும். இறைவனை மகிழ்விப்பவனோ அவளை விட்டு தப்புவான் ஆனால் பாவியையோ அவள் தன் வலைக்குள் சிக்கவைத்துவிடுவாள்... நான் தேடி தேடி காணமுடியாமலிருக்கும்போது ஆயிரம் பேரில் ஒரு நீதிமிக்கவனை கண்டுகொண்டேன். ஆனால் பெண்களிலோ அவர்களெல்லாரிலும் கூட ஒரு நீதிமிக்க பெண்ணை கூட காண முடியவில்லை. (நுஊஊடுநுளுஐயுளுவுநுளு 7:26-28)

கத்தோலிக்க பைபிளில் காணப்படும் ஹீப்ரு இலக்கியத்தின் மற்றொரு பாகத்தில் உள்ளதாவது:

பெண்ணின் தீமைக்கருகில் கூட வேறு எந்த தீமையும் வர முடியாது.... பாவம் பெண்ணிலேயே ஆரம்பித்தது. அவளாலேயே நாமெல்லோரும் இறப்பதால் அவளுக்கு நன்றிகள். (நுஊஊடுநுளுஐயுளுவுநுளு 7:26-28)

ஏவாளின் பாவத்தின் காரணமாக பெண்கள் மேல் சுமத்தப்பட்ட ஒன்பது வகையான சாபங்களை யூத அறிஞர்கள் பட்டியலிட்டுள்ளனர் :
பெண்ணிற்கு இறைவன் ஒன்பது சாபங்களையும் மரணத்தையும் விதித்தான்.

1.மாத விடாய் இரத்தத்தின் மூலமான துயரம்

2.பருவமடையும் போது இரத்தம் வருவதனால் ஏற்படும் துயரம்

3. கர்ப்பத்தால் ஏற்படும் துன்பம்

4. குழந்தை பெறும் போது ஏற்படும் துன்பம்

5.குழந்தைகளை வளர்ப்பதில் ஏற்படும் துன்பம்

6. துக்கித்தவள் போல அவள் தலையை மூடியிருத்தல்

7. தன் எஜமானனிற்கு நிலையாக பணி புரியும் அடிமையைப் போல அவள் தன் காதை துளைத்துக் கொள்ளுதல் (அடியாத்தி... இப்பத்தான் புரியுது பெம்பளைக்கி ஏன் காதுகுத்துராங்கன்னு) பார்ப்பணர்கள் இந்தியாவிற்குள் திணித்த கலாச்சாரத்திலும் இஸ்ரேலிய கலாச்சார வரலாற்றுப் பிண்ணனி உள்ளது

8.அவளின் சாட்சி நம்பப்படாதிருத்தில்

9.எல்லாவற்றிற்கும் பிறகு ..... மரணம்.

இப்போதும் கூட மதப்பிடிப்புள்ள யூத ஆண்கள் தங்களுடைய பிரார்த்தனையின் போது 'என்னை பெண்ணாக ஆக்காதிருந்த அகிலத்தின் அரசனான இறைவனே தூயவன்' என்று கூறுகின்றனர். பெண்கள் தங்களின் பிரார்த்தனையின் போது 'என்னை உன் விருப்பத்திற்கேற்ப படைத்த'என்று கூறி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர். பல யூத புத்தகங்களில் காணப்படும் மற்றொரு பிரார்த்தனை என்னவெனில் 'அந்நிய மதத்தவனாக என்னைப் படைக்காத இறைவன் புகழப்படுவாராக் பெண்ணாக என்னைப் படைக்காத இறைவன் புகழப்படுவாராக் என்னை அறிவீனனாக படைக்காத இறைவன் புகழப்படுவாராக.' என்பதாகும்.

கிறிஸ்துவ மதத்தில் பெண்களின் பங்கு

பைபிளினுடைய ஏவாளின் பங்கு யூத மதத்தை விட கிறிஸ்துவ மதத்தில் மிகவும் அதிகம். அவளுடைய பாவம் முழு கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கே மையமானதாகும் ஏனெனில் இவ்வுலகில் இயேசுவின் பணியைப் பற்றிய கிறிஸ்தவ கொள்கைக்கான காரணமே ஏவாள் இறைவனிற்கு கீழ்படியாதது என்பதினாலேயாகும். அவள் பாவம் செய்தாள் மேலும் அவளை பின்பற்றும்படி ஆதமையும் தூண்டினாள்.

அதன் விளைவாக இறைவன் அவர்களிருவரையும் சுவனத்திலிருந்து அவர்களின் காரணமாக சபிக்கப்பட்ட பூமிக்கு வெளியேற்றினான். இறைவனால் மன்னிக்கப்படாத அவர்களின் பாவத்தை அவர்கள் தங்களின் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றனர் அதன் காரணமாக எல்லா மனிதர்களுமே பாவத்தில் பிறக்கின்றனர். மனிதர்களை இந்த ஆதி பாவத்திலிருந்து நீக்கி பரிசுத்தப்படுத்துவதற்காக இறைவன் தேவ குமாரன் எனக் கருதப்படும் இயேசுவை சிலுவையில் பலி கொடுக்க வேண்டியதிருந்தது.

ஆகவே ஏவாள் தன்னுடைய சொந்த பாவத்திற்கும் அவளுடைய கணவனின் பாவத்திற்கும் முழு மனித இனத்தின் ஆதி பாவத்திற்கும் மற்றும் தேவ குமாரனின் மரணத்திற்கும் காரணமாவாள். வேறு வார்த்தைகளில் சொல்வதனால் ஒரு பெண் தன்னிச்சையாக செய்த செயலின் விளைவாக முழு மனித இனத்தையுமே பாவமுள்ளதாக்கி விட்டாள். அவளின் பெண் மக்களில் நிலை என்ன? அவர்கள் அவைளைப் போலவே அவர்களும் பாவிகளாவார்கள் அவர்களை பாவிகளாகவே நடத்தப்படவேண்டும். புனித

பவுலடியாரின் கடும் கண்டனத்தை கேளுங்கள்

ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம் பண்ணவும் புருஷன்மேல் அதிகாரம் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை அவள் அமைதியாயிருக்க வேண்டும். என்னத்தினாலெனில் முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான் பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். (1 திமோத்தி 2:11-14)

புனித தர்த்தலியன் தன்னுடைய 'மிகச் சிறந்த நேசத்திற்குரிய சகோதரிகளிடம்' பேசும் போது அவர்களை பவுலடியாரை விட கடுமையாக சாடுகிறார் :

நீங்கள் ஒவ்வொருவரும் ஏவாள் என்பது உங்களுக்கு தெரியாதா? இறைவனின் தண்டனை உங்களின் பெண் இனத்தின் மீது இந்தக் காலத்திலும் இருந்து வருகிறது. ஆகவே அதற்கான குற்றமும் (இப்பொழுதும்) இருந்தே தீர வேண்டும். நீங்கள் சாத்தான் நுழையக்கூடிய நுழைவாயில்;: தடுக்கப்பட்ட மரத்தை திறந்தவர்கள் நீங்கள்; தெய்வீக கட்டளையை முதன் முதலில் மீறியவர்கள் நீங்கள்; எவரைத் தாக்குவதற்கு சாத்தான் போதுமான வலிமையற்றவனாக இருந்தானோ அவரையே மயக்கிய பெண் நீங்கள்தான்; கடவுளின் சாயலான மனிதனையே நீங்கள் அழித்தீர்கள். நீங்கள் வரம்பு மீறியதாலேயே இறைமகன் கூட சாக நேர்ந்தது.
தன் முன்னோர்கள் விட்டுச் சென்ற (இத்தகைய கருத்து) சொத்திற்கு விசுவாசமானவராக புனித ஆகஸ்டின் விளங்கினார். தன்னுடைய ஒரு நண்பருக்கு அவர் இவ்வாறு எழுதுகிறார்:

'பெண் அவள் மனைவியாயிருந்தால் என்ன தாயாக இருந்தால் என்ன அதில் எந்த வித்தியாசமுமில்லை. பாவத்திற்கு தூண்டக் கூடிய ஏவாளாகவே எந்தப் பெண்ணும் இருக்கிறாள் என நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.... பெண்ணிற்கு பிள்ளை பெறும் வேலை இல்லாவிட்டால் அவளால் ஆணுக்கு வேறு எந்தப் பயனும் இருப்பதாக என்னால் காண முடியவில்லை.
இதற்கு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூட புனித தாமல் அக்யுனாஸ் பெண்களை குறைபாடுள்ளவர்களாகவே கருதினார்:

'பெண்ணின் தனிப்பட்ட குணத்தைப் பொறுத்த வரை அவள் தேவடியாளாகவே இருக்கிறாள். ஏனெனில் ஆணுடைய விந்திலுள்ள வீரியமுள்ள சக்தி அவனைப் போன்ற முழுமையான ஆணை உருவாக்குகிறது. ஆனால் அந்த வீரிய சக்தியில் ஏற்ப்பட்ட ஏதோ குறைவினாலோ அல்லது பலவீனத்தாலோ அல்லது சில வெளிப்புற செல்வாக்கின் விளைவினாலோதான் பெண் பிறக்கிறாள்.'

இறுதியாக புகழ் பெற்ற சீர்திருத்தவாதியான மார்டின் லூதரும் பெண்கள் குழந்தை பெறுவதைத்தவிர அவர்களால் வேறு எந்த நன்மையும் இருப்பதாக கருதவில்லை. பெண்கள் எத்தனை அதிகமான குழந்தைகள் பெற முடியுமோ அவ்வளவு குழந்தைகள் பெற வேண்டும். அதனால் அவர்களுக்கு எவ்வளவு பாரதூரமான விளைவு ஏற்பட்டாலும் சரியே.

'அவர்கள் (குழந்தை பெறுவதில்) வெறுப்புற்றாலும் ஏன் அதனால் இறந்து போக நேரிட்டாலும் ஒன்றும் பெரிதல்ல. அவர்கள் அதனால் (சாக நேரிடின்) சாகட்டும். ஏனெனில் அதற்காகத்தான் (குழந்தை பெறுவதற்காகத்தான்) அவர்கள் இருக்கிறார்கள்.'

பாவம் செய்யத் தூண்டிய ஏவாள்தான் இவர்கள் என நினைத்துக் கொண்டும் பெண்கள் மீண்டும் மீண்டும் இழிவுக்குள்ளாக்கப்படுகின்றனர். (ஏவாளைப் பற்றிய) ஆதியாகமத்தின் கதைக்கு நன்றிகள். மொத்தத்தில் யூத-கிறிஸ்தவ மதத்தில் பெண்களைப் பற்றிய கருத்தோட்டம் ஏவாளும் அவளின் பெண் சந்ததிகளும் பாவம் செய்யும் இயல்புள்ளவர்கள் என்ற நம்பிக்கையால் விஷமாக்கப்பட்டுள்ளது.

பெண்களைப் பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என நாம் இப்போது கவனித்தால் பெண்களைப் பற்றிய இஸ்லாத்தின் கருத்தோட்டம் யூத-கிறிஸ்தவ மதத்திலுள்ளதை விட மிகவும் அடிப்படையான வேறுபாட்டைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
நம் இந்து மதத்தில் பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருந்தது என்று சொல்லித் தெரிய வேண்டிய விஷயமல்ல அறிந்த உண்மைகள்தான்.

பெண்கள் பற்றி திருக்குர்ஆனே பேசட்டும்:

ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும் நம்பிக்கையாளர்களாகவும் கீழ்ப்படிபவர்களாகவும் வாய்மையாளர்களாகவும் பொறுமையுடையோராகவும் தானதர்மம் செய்பவர்களாகவும் நோன்பு நோற்பவர்களாகவும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ திண்ணமாக அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். (33:35)

இறை நம்பிக்கை கொண்ட ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள்: தீமையிலிருந்து தடுக்கிறார்கள். மேலும் தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்: ஜகாத்தும் கொடுக்கிறார்கள். மேலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டிருக்கும். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான். (9:71)

அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி கூறினான் : உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் - அவர் ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி - நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே. (3:195)

தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி - இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் - அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும். (40:40)

ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை (இவ்வுலகில்) தூய வாழ்வு வாழச் செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோர்க்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்க ஏற்ப நாம் கூலி வழங்குவோம். (16:97)

பெண்களைப் பற்றிய திருக்குர்ஆனின் கண்ணோட்டம் ஆண்களிலிருந்து மாறுபட்டதல்ல என்பது தெளிவு. அவர்கள் இருவரும் இறைவனின் படைப்புக்களே. அவர்களின் ரப்பை வணங்குவதும் நற்செயல்கள் புரிவதும் தீய செயல்களை தவிர்ப்பதுவுமே பூமியில் அவர்களின் உன்னத இலட்சியமாகும்.

அவர்கள் இதை எந்த அளவிற்கு சரியாக நிறைவேற்றுகிறார்கள் என்பதை வைத்தே மதிப்பிடப்படுவார்கள். பெண் சாத்தானின் நுழைவாயில் என்றோ அல்லது அவள் இயல்பிலேயே ஏமாற்றுக்காரி என்றோ திருக்குர்ஆன் ஒரு போதும் குறிப்பிடவில்லை. மேலும் ஆண் இறைவனின் சாயல் என்று திருக்குர்ஆன் ஒரு போதும் குறிப்பிடவில்லை: ஆண்கள் பெண்கள் அனைவரும் இறைவனின் படைப்புக்களே. அவ்வளவுதான். திருக்குர்ஆனைப் பொறுத்தவரை இவ்வுலகில் பெண்களின் பங்களிப்பு குழந்தை பெறுவதோடு நின்று விடுவதல்ல. மற்ற ஆண்கள் எந்த அளவிற்கு நற்காரியங்கள் செய்ய வேண்டுமோ அது போலவே அவர்களும் செய்ய வேண்டும். நேர்மையான பெண்களே இருந்ததில்லை என்று திருக்குர்ஆன் ஒருபோதும் சொன்னதில்லை.

அதற்கு மாறாக கன்னி மரியாள் பிர்அவுனின் மனைவி போன்றவர்களின் உயர்ந்த முன் மாதிரிகளை எல்லா நம்பிக்கையாளர்களும் பெண்களும் ஆண்களும் பின்பற்ற வேண்டும் என திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது:

பிர்அவ்னுடைய மனைவியை அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். ஒரு போது அவர் இறைஞ்சினார்: 'என் அதிபதியே எனக்காக உன்னிடத்தில் - சுவனத்தில் ஓர் இல்லத்தை அமைத்துத் தருவாயாக! மேலும் பிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக மேலும் கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக

மேலும் இம்ரானின் மகள் மர்யத்தை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக்காட்டுகிறான்: அவர் தம்முடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்தார். பிறகு நாம் நம்மிடமிருந்து ரூஹை அவருள் ஊதினோம். மேலும் அவர் தம்முடைய அதிபதியின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் மெய்ப்படுத்தினார். மேலும் அவர் கீழ்ப்படிந்து வாழ்வோரில் ஒருவராயும் இருந்தார். (66 11-12)

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியாவில் இருக்கக்கூடிய பார்ப்பணர்களின் நம்பிக்கையும் இஸ்ரேல் யூதர்களின் நம்பிக்கையும் ஒன்றுதான் என்பதாகும். (யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா… என்ற பாடல் தான் ஞாபகம் வருது போங்க)

இந்த அளவுக்கு பெண்களை கேவலமாக நினைக்கக்கூடிய கீழ் புத்திகொண்ட இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய சகோதரர்கள் டோண்டு, வஜ்ரா, நேசகுமார் வகையாராக்கள் பெண்களின் கற்பைப்பற்றி பெண்கள் கர்ப்பம் ஆகாமல் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றி அட்வைஸ் செய்ததில் ஒரு ஆச்சரியமும் இல்லை.

அதுதான் பெண்களுக்கு முழு சுதந்திரம் என்ற பெயரில் அவர்கள் எப்படி பெண்களை கேவலமாக நினைக்கின்றார்களோ முழு சுதந்,,,,,,,,,,,,,,,,,,திர அழகி போட்டிகள் என்ற பெயரில் அப்படியே செயல்படுத்தவும் துணிந்துவிட்டனர் பெண்களை பெண்களாக நினைப்பவர்களிடம் பபர்த்தீர்களா நாங்கள் தான் ஜெயித்தோம் என்று மார்தட்டி இருமாப்பு கொள்கின்றனர் பாவம் இதை பெண்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை

பெண்களுக்கே உரிய நீ அழகா? நான் அழகா? என்ற போட்டி மனப்பான்மையைவ(ஜ்)க்கிர புத்திகொண்டவர்கள் மிக அழகாக சூசகம் செய்து கொண்டனர்.

இதில் பெண்கள் பலிகடாக்கள். நாசமாவது சமூகம் & கலாச்சாரம்.
நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டுவர்ரேன் ரெண்டு பேரும் ஊதி ஊதி திம்போம்