Tuesday, March 21, 2006

சகோதரர் மகேஸ் அவர்களுக்கு பதில்

சகோதரர் மகேஸ் அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி

நான் பிரமணர்களை திட்டுவதாக சகோதரர் மகேஸ் அவர்கள் புரிந்து கொண்டார்கள் இது அவர்களின் புரிந்தாற்றலின் தவறாகும் நிச்சயமாக ஒரு முஸ்லிம் இன்னொரு தனிநபரை நேருக்கு நேர் அல்லாது சம்பத்த்ப்பட்ட மனிதருக்கு முன்னால் இல்லாது பின்னால் இருந்து திட்டுவதை எங்களின் நபி (தலைவர்) முஹம்மது (ஸல்)அவர்கள் தடுத்து உள்ளார்கள் அதுமட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை மனிதர்களுமே ஒரு தாய் தந்தைக்கு பிறந்த சகோதரர்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது.


அதனால் பிராமணர்களை நான் திட்டவில்லை மாறாக அவர்களின் கொள்கையைத்தான் எதிர்க்கின்றேன் அவர்கள் பிற மனிதர்களை பார்க்கும் பார்வையையும், அவர்கள் நடத்தும் முறையையும் தான் எதிர்க்கின்றேன். மற்றபடி அவர்களும் என் சகோதரர்களே.




மேலும் சகோதரர் மகேஸ் கூறும் பொழுது (இட ஒதுக்கீட்டால் வேலைக்குத் தகுதியில்லாத தலித் மக்கள் கூத்தடிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.( இங்கு தகுதி என குறிப்பிட்டது கல்வித் தகுதியை)

என்று கேட்டிருந்தார் இது அவரின் அறியாமையா? அல்லது நானும் இதை சொல்லவேண்டும் என்ற ஆசைப்பட்டாரா? என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த கேள்விக்கான பதிலை நான் சொல்வதைவிட சான்றோர்களின் பட்டியலையே சான்றாக கொடுக்கின்றேன்

இன்று இந்த நாட்டில் வெளிவரும் நாளிதழ்கள், மாத, வார, இதழ்கள் இவற்றில் யார் முழுமையான ஆதிக்கம், செலுத்துகின்றார்கள்? இவற்றில் 81 சதவீதம் பிராமணர்கள் பிடியில் தான்.இன்று நாட்டில் வெளிவரும் செய்திகளை மக்களுக்குச் சொல்லிடும் பத்திரிக்கைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா இவை அனைத்தும் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.இவற்றில் பணியாற்றுபவர்களும் பிராமணர்கள் தாம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 93 சதவீதம் பிராமணர்கள்.ஹிந்து 97 சதவீதம் பிராமணர்கள்.டைம்ஸ் ஆஃப் இந்தியா 73 சதவீதம் பிராமணர்கள். இவர்கள் (பிராமணர்கள்) வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் தங்கள் ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டிவிட்டார்கள்.பணமும் - வளமும் - பிராமணர்களும்மனுஸ்மிர்தி வித VII 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும்.

சூத்திரர்கள் என்ற கீழ்ஜாதி ஹிந்துக்கள் பற்றி மனுஸ்மிர்தி இப்படிக் கூறுகின்றது. விதி எண்: X - 129-ல், செல்வத்தைச் சேர்த்துக் கொள்வது சூத்திரர்களுக்கு ஆகாது. அவர்களுக்கு அதற்குரிய திறமைகள் இருந்தாலும சரியே! சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொள்வது என்பது பிராமணனுக்கு வேதனையைத் தரும். இன்னும் பிராமணன் பலத்தை பிரயோகித்துச் சூத்திரனுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்ளலாம்.பஞ்சவனிஷ் பிரஹமான் 3-1/11 இப்படிக் கூறுகின்றது.சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொண்டாலும் அவன் எப்போதும் ஓர் அடிமையாகவே இருப்பான்.

அவனுடைய தலையாய பணி உயர்ஜாதியனரின் கால்களை கழுவுவதாகும்.துளசிதாஸ் இவர் ஒரு பிராமணன். இவர் தன்னுடைய நூலில் - அதாவது இராமாயணத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.சூத்திரன் ஒருவன் கற்றவனாகவும், நல்லொழுக்கமுள்ளவனாகவும் இருந்தாலும் அவனுக்கு எந்த மதிப்புமில்லை.ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது எல்லா தொழிற்சாலைகளையும் பிராமணர்களே எடுத்துக் கொண்டார்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் இன்று நாட்டிலுள்ள 60 சதவீதம் தொழில்களின் மேல் ஏகபோக ஆதிக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.60 சதவிகிதம் ஆலைகளை அடக்கியாளும் இவர்கள் நாட்டின் மொத்த குடிமக்களுடன் 5 சதவீதம் தான் என்பதை மறுக்கலாகாது.

இதேபோல் இந்த 5 சதவிகிதத்தினர் தான் நாட்டின் உயர்பதவிகளில் 60 சதவிகிதம் பதவிகளை வகிக்கின்றனர்.இதோ இந்தப் புள்ளி விபரத்தைப் பாருங்கள். இந்த இந்தியா இன்றும் யார் கைகளில் சிச்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மை புலப்படும்.1 நாடாளுமன்றத்தின் மக்கள் சபையில் 45%2 நாடாளுமன்றத்தின் மேல் சiபியல் 36%3 கவர்னர்கள் - L.G. 50%4 கவர்னர்களின் செயலாளர்கள். 54%5 மத்திய அமைச்சரவையின் செயலாளர்கள் 53%6 மத்திய அமைச்சரவையின் தலைமை செயலாளர்கள் 54%7 அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் 70%8 நீதிபதிகளின் தனி செயலாளர்கள் 62%9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 51%10 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 56%11 உயர்நீதிமன்ற நீதிபதிகள் - கூடுதல் நீதிபதிகள் 50%12 இந்தியாவின் பிரதிநிதிகளாக வெளிநாட்டுத் தூதுவர்கள் 41%13 பொது நிறுவனங்களில் தலைமை பொறுப்பாளர்கள் (மத்திய அரசின் கீழ் இயங்குபவை) 57%14 மாநிலை அரசுகளின் கீழ் இயங்கும் அரசின் பொது நிறுவனங்களின் முதன்மைப் பொறுப்பாளர்கள் 82%ஆதாரம் : Voice of the Weak, Oct, 1989)

ஏனைய நிறுவனங்களில்வங்கிகள் 57%விமானத் துறை 61%IAS அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள்) 72%IPS காவல்துறையின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் 61%வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் 83%CBI மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், சுங்கவரி அதிகாரிகள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் 72%இது தான் இந்த நாட்டில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளின் நிலை.

இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினாலும், இன்று வரை உயர்கல்விகள், விஞ்ஞான பொறியியல், மருத்துவக் கல்விகள் ஒரு சாராருக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிறது.இந்தியாவில் மட்டுந்தான் கடவுளின் பெயரால் வேதத்தின் பெயரால் ஒரு இனத்திற்கு கல்வி மறுக்கப்படுகின்றது.

இந்தியாவின் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 30 பேர் தான்.ஆனால் பிராமணர்கள் மட்டும் 100க்கு 100 பேரும் கல்வி கற்று விடுகின்றனர்.அரசின் உதவியின் கீழ் அமெரிக்காவிலிருக்கும் அல்லது அமெரிக்காவில் கல்வி கற்கும் டாக்டர்களில் 67 சதம் பேர் பிராமணர்கள்.இந்தியாவின் செலவில் கல்வி கற்றுத்தேறிய இவர்கள் இந்தியாவில் மருத்துவ உதவி கிடைக்காமல் கதறும் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை விடுத்து அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் சென்று சம்பாதித்துக் குவிக்கின்றனர்.

சட்டத்தைக் கற்று வழக்கறிஞராக இருப்பவர்கள் 53 சதம் பிராமணர்கள்.பள்ளி, கல்லூரி ஆசிரியர்களில் 51 சதம் பிராமணர்கள்.இதெல்லாம் எப்படி அவர்களில் சாதிக்க முடிகின்றது. அவர்களிடத்தில் நாம் தான் ஏனைய இனங்களுக்கெல்லாம் எஜமானர்கள் என்ற அகங்காரம் குடி கொண்டிருக்கிறது. எதையும் ஏனைய இனங்கிடமிருந்து அபகரித்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என்பன போன்ற ஆனவங்களின் செயல் வடிவம் தான் மேலே சொன்ன சாதனைகள்.
நன்றி www. எனது கிறுக்கல்ஸ் April 2005.htm

இதற்கெல்லாம் முதற் காரணம் மனுஸ்மிர்தி வித VII 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும். இவைதான் அதனால் நான் எதிர்ப்பது இந்த வசனத்தைத்தான் பிராமணர்களை அல்ல என்பதை சகோதரர் மகேஸ் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்



Sunday, March 12, 2006

தேவை மனமாற்றமா? மதமாற்றமா?

எந்த ஒரு இஸமானாலும் மதமானாலும் அதனுடைய கொள்கையும் கோட்பாடும் குறைந்த பட்சம்

1. பிறரின் தன்மானத்தைப் பாதிப்பதாக இருக்கக் கூடாது.
2. மனித சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.

இவை இரண்டும் இல்லாத எந்த ஒரு இஸமும் மதமும் காலச் சுழல் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். அல்லது அதன் கூடாரம் சிறுகச் சிறுக காலியாகிவிடும்.

என் அருமை நண்பனின் தன்மானம் பறிக்கப்பட்ட நிகழ்வுகள், பல ஆண்டுகளாய் என் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி, மறக்க முயன்றும் முடியாததாகவே பதிந்து விட்டது.
அதை இங்குப் பதிவதற்கு முன்னர் ஓர் உதாரணத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.

இரண்டு நண்பர்கள் ஒரே இடத்திற்குப் போவதற்குப் பேருந்திற்காக காத்து நின்றனர். பேருந்தும் வந்தது. நண்பருள் ஒருவர் ஏறிவிட்டார். மற்றொருவர் ஏறுமுன்னரே பேருந்து நகர்ந்து விட்டது. பேருந்தில் ஏறிய நண்பரால் அந்த பயணத்தை நிம்மதியாகத் தொடர முடியுமா? மனிதனையும் மனித நேயத்தையும் நட்பின் ஆழத்தையும் உணர்ந்து நேசிக்கின்ற எந்த ஒரு மனிதனாலும் நிச்சயமாக முடியாது. அப்படிப்பட்டவன் ஒன்று அந்த பேருந்திலிருந்து இறங்கிவிடுவார். அல்லது பேருந்தை நிறுத்தி விடுவார். இதுதான் உண்மையான நேசத்தை வெளிப்படுத்தும் நல்ல மனதின், உறுதியான நட்பின் நிலைபாடாகும்.

ஆனால், பேருத்தில் ஏறிக்கொண்ட நண்பன் பயணத்தைத் தொடர்ந்தானேயானால் பேருந்தைத் தவற விட்ட நண்பனின் உள்ளம் எவ்வளவு பரிதவிக்கும்? அந்தப் பரிதவிப்பை வெறும் ஏட்டில் எழுதி உணர வைக்க முடியுமா?

சுனாமியின் பாதிப்பை கேஸட்டிலும் டெலிவிஷனிலும் பார்ப்பவர்களுக்கு , அதனுடைய பாதிப்பின் ஆழத்தை உணரமுடியாது. அதில் நேரடியாக அகப்பட்டவனுக்குத்தான் அந்த பாதிப்பின் சுயரூபத்தையும், தாக்கத்தையும், வீச்சையும் உணரமுடியும்.

அதுபோலவே, ஜாதி என்னும் கொடுங்கோலனின் ஆட்சியில் அகப்பட்டுத் தன் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டவனுக்குத்தான் அதன் கொடுமையின் கடுமை தெரியும்.

இனி, விஷயத்துக்கு வருகிறேன்.

என் மனது சொல்லமுடியாத அளவுக்கு வேதனைப்பட்டதும் இன்னும் வேதனைப்படுவதும் என்னுடைய சிறுவயது பள்ளி வாழ்க்கையில், அந்தப் பிஞ்சு மனதில் ஏற்பட்ட கலக்கங்களினால். அப்போது அதை எதிர்த்து நிற்கவும் முடியாது; அதற்கான மாற்று வழி தேடவும் தெரியாது. அந்நிகழ்வு பசுமரத்தாணி போல் என் மனதில் பதிந்து விட்ட வடு. நான் நட்பைப் பெரிதாக மதிப்பதால்தான் என்னால் அந்த வேதனையை உள்ளது உள்ளபடி உணர முடிகிறதோ என்னவோ?

பள்ளிகளில் நிச்சயமாக ஜாதியம் போதிக்கப்படுவதில்லை. ஆனால் பள்ளிக்கு வெளியில் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் அது குடிகொண்டு ஆட்சி செலுத்துகிறது. என்னுடைய பள்ளி நண்பர்கள் அனைவரும் ஆதி திராவிடர்கள்தாம். அவர்களோடு மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தாருடனும் நான் மிக நெருக்கமாகவே பழகினேன். நட்பை, உலகில் உயர்ந்த ஒன்றாகக் கண்டேன். அதனால்தான் நட்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்த ஒரு சம்பவத்தையும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இது எழுத்துக்காக கற்பனையில் சொல்வதன்று; என்னுடைய வாழ்க்கையில் பிஞ்சு மனதில் பதிந்த, கருத்த நிழற்படங்கள்.

அதனால்தான் அந்தச் சம்பவங்களை என் மனதிலிருந்து மாற்றவோ மறைக்கவோ முடியாமல் போனது. அதற்கான மாற்று என்ன எனத் தேடவும் தூண்டியது.

நானும் என் நண்பர்களும் பள்ளியறையில் ஒரே பெஞ்சில்தான் அமர்ந்திருப்போம். காலையில் இடைவேளயின் போது ஐந்து பைசாவிற்கு மிட்டாய் வாங்கி, சட்டைக்குள் வைத்து (காக்கை கடி) கடித்து எல்லா நண்பர்களும் பகிர்ந்து கொள்வோம். மதிய உணவும் மரத்தடியின் கீழமர்ந்து பகிர்ந்தே உண்போம். காலையிலிருந்து மாலைவரை கிட்டத்தட்ட ஒன்பதரை மணிநேரம் ஒன்றாகவே பள்ளியில் இருப்போம். எல்லோரும் ஒன்றாகவே வீட்டிற்கும் திரும்புவோம் . ஆனால் பள்ளியை விட்டு வெளியில் வந்தவுடன் இவன் மேல்ஜாதிகாரன்; அவன் கீழ்ஜாதிக்காரன் எனப் பிரிக்கப்படுவோம்.
நானும் என் ஆதி திராவிட நண்பனும் அருகிலுள்ள கோவிலுக்கு சாமி கும்பிடப் போவோம். எனக்கு மட்டும் உள்ளே நுழைய அனுமதி தரப்படும். எனதருமை நண்பன் வெளியே நிறுத்தப்படுவான்.

கடைக்குப் போவோம். எனக்கென்று தனி ஒரு உபசரிப்பு; அவனுக்கென்று வேறு மாதிரி உபசரிப்பு.

என் வீட்டிற்கு இரவு நேரங்களில் புத்தகங்கள் வாங்குவதற்கு என் நண்பன் வருவான். விடிந்தால் பள்ளியில் என்னுடன் ஒட்டி உறவாடி ஓடியாடி விளையாடக்கூடிய என்னுயிர் நண்பன், எங்கள் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்படுவான். என் வீட்டிற்கு உள்ளே வருவதும் என்னுடன் வெளிப்படையாகப் பழகுவதும் அவனுக்குத் தடை செய்யப் பட்டதாகும்.

காரணம் என்ன? அவன் கீழ்ஜாதிக்காரன்; என் வீட்டிற்குள்ளே அவன் வந்தால் சாமி தீட்டாகிவிடும். இப்படி சக மனிதனோடு அவனின் சுயமரியாதையோடு விளையாடக்கூடிய சாமியும் மனிதர்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கின்ற தீய சம்பிரதாயமும் நமக்கு தேவையா?

"சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
தன்னிற் செழித்திடும் வையம்;
ஆதரவுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்


என்றெல்லாம் ஆயிரம் சொல்லிப் பார்த்தார் பாரதியார். ம்ஹூம் ... ஒன்றும் பிரயோஜனமில்லை.

இப்போது நான் கேட்கின்றேன் இங்கு நமக்குத் தேவை மனமாற்றமா? அல்லது மதமாற்றமா?


மனமாற்றம் என்றால் என்ன?
இந்து சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காக நம் அரசாங்கம் பொறி கடலையெல்லாம் கொடுக்கத்தான் செய்கின்றது. ஆனால் சமூகத்தின் மனதை மாற்றமுடிகின்றதா ? அவ்வளவு ஏன்? பள்ளிக்கூடத்தில் குழந்தைகளைச் சேர்க்கும் போதுகூட ஜாதியைக் குறிப்பிட்டே தான் சேர்க்கப்படுகின்றனர்.


ஒருவேளை பிறந்த ஊரை விட்டு வேறொரு ஊரில் போய் வாழ்ந்தால் பிறப்பினால் ஒட்டிக் கொண்ட ஜாதியைக் கொஞ்ச காலமாவது மறைக்க முடியும். ஆனால் அதுவும் எவ்வளவு காலம் நடக்கும்? மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற இழிநிலை எப்பொழுது தீர்க்கப்படும்? எப்படி தீர்க்கப்படும்?


மதம் மாறினால் மட்டுமே இந்த இழிநிலை உறுதியாகத் தீர்க்கப்படும். !!!