Sunday, August 06, 2017

நான் புரிந்து கொண்ட இஸ்லாம்

எதார்த்த இறைவனை புரிவோம்
இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனைப்பற்றி எவ்வளவு அழகாக சொல்லப்படுகின்றது அவனுடைய வல்லமையையும் அவனுடைய சிறப்பையும் எவ்வளவு தத்துரூபமாக வர்ணிக்கின்றான் வல்ல ரஹ்மான்.
நாம் வாழக்கூடிய இந்த பூமியில் எத்தனையோ மனித இனம் மதம் இஸம் உள்ளது அத்தனையும் தன்னால் இயன்ற ஒரு அடிப்படையைக் கொண்டுதான் இப்பூமியில் வளம் வருகின்றது வக்காலத்தும் பேசுகின்றது ஆனால் அவை அனைத்தும் அனைத்திற்கும் தனித்தனியான பூமியில் தான் வாழ்கின்றோம் என்று என்றாவது கூறியுள்ளதா? இல்லை!
உன் தெய்வம் வேறு என் தெய்வம் வேறு என்றெல்லாம் குடுமி சண்டை பிடிக்கும் இசங்களும் மதங்களும் உன் மதத்துக்கு என்று தனி பூமி என் மதத்திற்கு என்று தனி பூமி என்றாவது கூறுகின்றதா அதுவும் இல்லை. ஆனால் அவை எல்லாம் இந்த ஒரே பூமியின் மீது நின்று கொண்டுதான் இவ்வளவு கும்மாலமும் போடுகின்றது. இந்த பூமியைப்படைத்த எல்லாவற்றிற்கும் அதிபதியான அல்லாஹ் தன்னால் படைக்கப்பட்ட அற்பமான அறிவு மட்டுமே கொடுக்கப்பட்ட மனிதனை நோக்கி இவ்வாறு கேட்கின்றான். 
உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?'' என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ''அல்லாஹ்'' என பதிலளிப்பார்கள் அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?'' என்று நீர் கேட்பீராக.

உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்  இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
இந்த பேரண்டத்தைப் படைத்த வல்ல ரஹ்மான் கேட்கும் கேள்விதான் இது  இந்தக்கேள்விக்கு முஸ்லிம் சமுதாயத்தைத் தவிர வேறு எந்த  சமுதாயத்திலும் பதில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ம னிதர்கள் தங்களின் பலஹீனத்தை உணர்ந்து கொள்ள அல்லாஹ் கொடுக்கும் சந்தர்ப்பமாகும். ஏனென்றால் மனிதன் எல்லா விதத்திலும் பலஹீனமாவனாகவே இருக்கின்றான்.
    
மரணத்தை ஏற்காத எந்த மனிதனும் கிடையாது அதுபோலவே அதை மறுக்கின்ற மனிதனும் கிடையாது அதிலிருந்து விதிவிலக்கானவர்களும் கிடையாது அந்த அளவுக்கு உண்மையான மரணத்தைப் பற்றி என்றாவது நாம் சிந்தித்து இருக்கின்றோமா?  மரணிப்பது மட்டுமல்ல மரணித்த பிறகு மீண்டும் எழுப்பப்படுவீர்கள் என்றும் மனிதனின் சிந்தனையை வேறொரு பக்கமும் இஸ்லாம் திருப்பிகின்றது
எங்கிருந்து வந்தோம் எங்கே போகவிருக்கின்றோம்  என்றே தெரியாமல் வாழ்வதைவிட இது பற்றிய சிந்தனையை எந்த மதம் போதிக்கின்றது என்றும் ஆராய்வது காலத்தின் கட்டாய கடமையாகும். மனிதன் படைத்தவனைவிட்டு படைப்புக்களை வணங்குவது எந்தவகையில் ஞாயம் என்பதை இறைவன் நிரூபிக்க சொல்கின்றான். 
உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா?, என்று (நபியே!) நீர் கேட்பீராக  அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை(மரணித்த பிறகு) மீண்டும் படைக்கிறான்;(இந்த உண்மையை விட்டு) நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.

மேலும் அல்லாஹ் ஒரு அடிப்படையான சத்தியத்தின் மீதும் விரல் சுண்டிக் காட்டுகின்றான்

உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக  அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.

ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை ; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
உண்மையை உணராமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினால் பொய்யான சேற்றைவாரி இரைப்பதை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். மேலும் அல்லாஹ் இவ்வாறு சவால் விடுகின்றான்
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து (அருளப்பட்டது) என்பதில் சந்தேகமேயில்லை.
"இந்தக் குர் ஆனை அவர்கள் ஆழ்ந்து நோக்கக் கூடாதா? இஃது அல்லாஹ்வையன்றி யாரிடமிருந்தாவது அருளப்பட்டிருந்தால் இதில் அநேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்களே!" (4:82)

இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும் நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!' என்று.
நான் கோடிட்டுக் காட்டியுள்ள இந்த வசனம் இந்த மனித சமுதாயத்தின் மீதும் குறிப்பாக இந்தக் குர்ஆனையும் அண்டசராசரங்களையும் படைத்த இறைவனையும் மறுக்கும் படைப்பினங்களின் மீதும் அவ்வப்போது முஸ்லிம்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் தங்களின் பேச்சாளும் எழுத்தாளும் மீடியாக்களின் மூலமும் விஷத்தைக் கக்குகின்ற அறிவு? ஜீவி(ஜந்துக்)களின் மீதும் இறைவன் பதினான்கு நூற்றாண்டாக முன்வைத்த முறியடிக்கப்படாத சவால் ஆகும்.
இதுவரை பூமியில் தோன்றி மறைந்த தோன்றவிருக்கின்ற யாராலும் முறியடிக்க முடியாத நடக்காத  காரியம் என்பதை இந்த முஸ்லிம் சமுதாயம் உறுதியாக நம்புகின்றது
நான் நினைக்கின்றேன் ஒருவேலை அவர்களின் முஸ்லிம்களின் மீதான காலவரையரையற்ற வெறுப்புக்கு இதுகூட காரணமாக இருக்கலாம்
நாத்தீக நண்பர்களின் சிந்தனையோட்டத்தை அவர்களின் சிந்தனை சென்றடையும் கடைசி இடத்தின் எல்லைக்கோட்டை அல்லாஹ் அதாவது படைத்தவன் அப்படியே தத்தரூபமாக படம்பிடித்துக் காட்டுகின்றான்
அப்படியல்ல  அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.
இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டையும் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வல்லமையின் அளவுகோலை மனிதன் உணர்ந்தானேயானால் இது அதாவது மேலே கூறப்பட்டது போன்ற தடுமாற்றத்திற்கு மனிதன் வரமாட்டான்.  மனிதனைப் போலவே சக்தியும் வல்லமையும் கொண்டவன் தான் இறைவனும் என்று மனிதன் நம்புகின்றான் அதனால்தான் மனிதனைப்போன்று இறைவனுக்கும் மனைவி மக்கள் சொந்தம் பந்தம் என்றெல்லாம் மனிதன் கற்பனை செய்கின்றான். இது அபத்தமாகும் இறைவனின் மீது இட்டுக்கட்டும் இழிசெயலாகும்.
வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை. நீ வேண்டுமானால் அவருக்கு உருவம் இருப்பதாக நினைத்துக் கொள். ஆனாலும் நீ நினைப்பதால் நினைத்து வடிப்பதால் கடவுள் உருவத்துக்குள் அடங்கமாட்டார் - என்றது வேதம்.
ஆனாலும்... உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தோன்றிய வழிபாட்டு முறைகள்படி (Humanistic Worship) அதாவது மனித உருகொண்டு தெய்வத்தை வணங்கும் கலாச்சாரம் உருவானது.
அதிலும் ஆண் உருவங்கள்தான் முதலில் வழிபடப்பட்டன. பிறகு... இந்த ஆணுக்கு ஒரு பெண் துணை வேண்டாமா? என யோசிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் பெண் தெய்வங்கள்! இது ஒரு பக்கம் என்றால்... சிறுசிறு குழுக்கள் தத்தமது பகுதிகளில் அம்மன் என அழைக்கப்படும் பெண் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.
இதுபற்றி பிறகு பார்ப்போம்.
ஆண் தெய்வம், பெண் தெய்வத்தை வைத்து பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர் ஆகமக்காரர்கள்.
அவர்களே... விஷ்ணுவின் மனைவியான லட்சுமி அவருடைய மார்பில் இருக்கிறார் என்றார்கள். இதன் பிறகு...
உற்சவம், திருவிழா என்றெல்லாம் தெய்வத்துக்கும் கொண்டாட்டங்களை குறித்து வைத்தார்கள். 
நன்றி: இந்துமதம் எங்கே போகிறது
இப்படி மனிதனின் கற்பனையில் உருவான கட்டுக் கதைகளை வைத்துத்தான் இறைவன் என்ற மகத்தான சக்தியோடு தொடர்பு படுத்தி அந்த சக்தியின் வல்லமையை கேவலப்படுத்துகின்றனர். 
 அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர்  இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும். உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான். (அல்குர்ஆன் 10:31 to 10:40.)



இஸ்லாத்தில் மனித உரிமைகள்


இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  இந்த நாள் புனிதமானது போல் ஒவ்வொரு மனிதனின் உயிரும் உடமையும் புனிதமானது
குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது :
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது. (5:8)
மனித இரத்தம் புனிதமானது. எந்நிலையிலும் அதனை அநியாயமாக சிந்தக் கூடாது. இந்தச் சட்டத்தை மீறி ஒரு மனித உயிரை அநியாயமாக கொலை செய்பவர் மனிதகுலம் முழுவதையும் கொலை செய்தவரைப் போன்றவராவார்.
குர்ஆன் கூறுகிறது :
பூமியில் குழப்பம் ஏதுமற்ற நிலையில் அநியாயமாக ஒருவரை கொலை செய்பவர் (இறந்தவர் மீது கொலைப் பழி இல்லாத நிலையில்) மனித குலம் முழுவதையுமே கொன்றவர் போன்றவராவார். (5:32)
பெண்கள், மழலைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள், காயமடைந்தோர் ஆகியோரைக் கொடுமைப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எல்லா சூழலிலும் பெண்களின் கற்பும், கண்ணியமும் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் வறியவர்கள், காயமடைந்தோர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பரிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
எவர்கள் அல்லாஹ் அருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள் தாம் நிராகரிப்பாளர்கள். (5:44)
இஸ்லாமிய அரசில் மனித உரிமைகள்
உயிர் மற்றும் உடமைப் பாதுகாப்பு :
இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (இறைவனை நீங்கள் சந்திக்கும் இறுதித் தீர்ப்பு நாள் வரை) ஒருவர் மற்றவரின் உடைமையை, உயிரைப் பறிக்கக் கூடாது.
முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகளைக் குறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு திம்மியை (முஸ்லிமல்லாத குடிமகனை) கொலை செய்பவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது.
மனித மாண்பின் பாதுகாப்பு :
குர்ஆன் கூறுகிறது :
ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்யாதீர்கள்
அவதூறு கற்பிக்காதீர்
பட்டப் பெயர் சூட்டி இழிவு படுத்தாதீர்
புறங்கூறாதீர், தரக் குறைவாகப் பேசாதீர்
தனிநபர் வாழ்வும் புனிதமும் :
உளவு பார்க்காதீர்
உரியவரின் அனுமதியின்றி ஒருவரின் வீட்டுக்குள் நுழையாதீர்
தவறான தண்டனையிலிருந்து பாதுகாப்பு :
வேரொருவர் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.
குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது :
ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள். (6:164)
வாழ்வாதார அடிப்படைக்காக உரிமை :
தேவையள்ளோருக்கும் வறியோருக்கும், உரிய உரிமைகளை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. அவர்களுக்கு உரிய நியாயமான தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
இறைவன் கட்டளையிடுகிறான் :
அவர்களின் சொத்தில் வறியவர்களுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் உரிமையுண்டு. (70:15)
சட்டத்தின் முன் அனைவரும் சமம் :
சட்டத்தின் பார்வையில் அனைத்து குடிமக்களுக்கும் பரிபூரண முழுமையான உரிமையை இஸ்லாம் வழங்குகிறது.
ஆட்சியாளர் விதிவிலக்கல்ல :
ஓர் உயர்ந்த வம்சத்துப் பெண் திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டாள். அந்த வழக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் முன் கொண்டு வரப்பட்டது. திருட்டுக் குற்றத்திலிருந்து அவளை விடுவிக்க வேண்டும். தண்டிக்கக் கூடாது என்று சிலர் பரிந்துரை செய்தனர். அப்பொழுது முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இதற்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர், சாமானியர்கள் தவறு செய்தால் தண்டிப்பார்கள். மேட்டுக் குடி மக்கள் அதே தவறைச் செய்தால் தப்பிக்க விடுவார்கள். என் ஆத்மா யார் கைவசம் இருக்கிறதோ, அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக முஹம்மதின் மகள் ஃபாத்திமா இதே தவறைச் செய்தாலும் நான் அவர் கையைத் துண்டிக்காமல் விட மாட்டேன்.


Friday, August 04, 2017

இழிவிற்குரிய பெண்மக்கள்

                   

 உண்மையில், பெண் குழந்தையைப் பற்றிய பைபிள், திருக்குர்ஆன் ஆகியவற்றின் கண்ணோட்டங்களுக்கிடையேயுள்ள வித்தியாசங்கள் பெண் குழந்தை பிறந்திதிலிருந்தே தொடங்கி விடுகிறது. உதாரணமாக, பெண் குழந்தை பிறந்து விட்டால் தாய் தூய்மையடையும் காலம் ஆண் குழந்தைக்கு அனுசரிக்கும் காலத்தைப் போல் இரு மடங்காகும் என பைபிள் கூறுகிறது. 
(லேவியராகமம் 12: 2-5). கத்தோலிக்க பைபிள் வெளிப்படையாகவே கூறுகிறது:

'பெண் குழந்தையின் பிறப்பு நஷ்டமேயாகும்.' (Ecclesiasticus 22:3)

இந்த அதிர்ச்சியூட்டும் கருத்திற்கு எதிராக ஆண் குழந்தை புகழப்படுகின்றான்.

'தன் மகனிற்கு கல்வி புகட்டுபவன் எதிரியையே பொறாமைப்பட வைத்த காரியத்தை செய்தவனாவான்.' (Ecclesiasticus 30:3)

இனத்தை விருத்தியடையச் செய்யும் பொருட்டு சந்ததிகளை பெருக்கும் செயலை ஆண்களுக்கு யூத அறிஞர்கள் கட்டாயமாக்கினார்கள்;. ஆனால் அதே நேரத்தில் ஆண் குழந்தைகள்தான் உயர்ந்தவர்கள் என்பதை அவர்கள் மறைக்கவில்லை.'  'எவர்களுக்கு ஆண் குழந்தைகள் இருக்கின்றனவோ அது அவர்களுக்கு நல்லதாகும். ஆனால் எவர்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கின்றவோ அது அவர்களுக்கு கெட்டதாகும்.' 'ஆண் குழந்தை பிறப்பின் போது எல்லோரும் மகிழ்கிறார்கள்... பெண் குழந்தை பிறக்கும் போது எல்லோரும் துக்கமாக இருக்கிறார்கள் 'ஒரு ஆண் குழந்தை இவ்வுலகிற்கு வரும் போது சமாதானம் இவ்வுலகிற்கு வருகிறது .... பெண் குழந்தை இவ்வுலகிற்கு வரும்போது ஒன்றும் வருவதில்லை.'7

உன் மகள் தான்தோன்றித்தனமாக இருக்கிறாளாஉன் எதிரிகள் உன்னைப் பார்த்து இகழ்ந்து சிரிக்கும்படி, நகரத்தின் பிராதான பேச்சாக அவள் ஆகி, எல்லோரும் அவளைப்பற்றி குசுகுசுத்து பேசும் வகையில் அவள் நடந்து உன்னை அவமானப்படுத்திடாமலிருக்கும் வகையில் நீ அவளை எப்பொழுதும் கண்காணித்திரு. (Ecclesiasticus 42: 11)

தான்தோன்றித்தனமாக இருக்கும் மகளை கடும் கட்டுப்பாட்டில் வைத்திரு இல்லையேல் அவளுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்தி விடுவாள்.  அவளின் வெட்கமற்ற கண்களின் மேல் ஒரு கவனம் வைத்திரு.  அவள் உன்னை அவமானப்படுத்தியும் விடுவாளா என்று வியந்து (இதை செய்யாமல்) இருக்காதே.  (Ecclesiasticus 26:10-11)

பெண்களை இழிவின் ஊற்றாக கருதும் இது போன்ற எண்ணம்தான் இஸ்லாத்திற்கு முந்திய அரேபியர்களை பெண் கொலை புரியத் தூண்டியது.  திருக்குர்ஆன் இந்த மோசமான செயலை அய்யாமுல் ஜாகலிய்யா அதாவது அறியாமைகாலம் எளிமையாக சொன்னால் காட்டுமிராண்டிக்காலம் எனக் கடுமையாக கண்டிக்கிறது :

இவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை (பிறந்திருப்பது) பற்றி நற்செய்தி சொல்லப்பட்டால் அவரது முகத்தில் கருமை கவ்விக் கொள்கின்றது.  துக்கத்தால் அவர் தொண்டை அடைத்துக் கொள்கின்றது. இந்தக் கேலவமான செய்தி கிடைத்து விட்டதே என்பதற்காக இனி யார் முகத்திலும் விழிக்கக்கூடாது என்று மக்களை விட்டு ஒதுங்கிச் செல்கின்றார்.  அவமானப்பட்டுக்கொண்டு அப்பெண் குழந்தையை வைத்திருப்பதா அல்லது அதனை மண்ணில் புதைத்து விடுவதா என்று சிந்திக்கின்றார் - பாருங்கள்! இறைவனைப் பற்றி இவர்கள் எடுத்த முடிவு எத்தனை கெட்டது. (16:59)

இந்தச் செயலை கண்டிப்பதற்காக திருக்குர்ஆனில் உபயோகிக்கப்பட்டுள்ள (16:59, 43:17, 81:8-9) சுடும் வார்த்தைப் பிரயோகங்களின் சக்தி இல்லையென்றால் இந்தக் கொடிய குற்றம் அரபு மண்ணில் ஒரு போதும் நிறுத்தியிருக்கப்படமாட்டாது என்பதை இஸ்லாத்தின் மீது கண்ணை மூடிக்கொண்டு மண்ணை தூற்றுபவர்கள் நினைவில் வைக்க வேண்டும். மேலும், ஆணுக்கும் பெண்ணிற்குமிடையே எந்த வித்தியாசத்தையும் திருக்குர்ஆன் கற்பித்திடவில்லை. பைபிளில் கூறப்பட்டிருப்பதற்கு எதிராக, திருக்குர்ஆன் ஆணுடைய பிறப்பைப் போலவே பெண்ணின் பிறப்பும் இறைவனின் கொடை, அருள் என்றுதான் கருதுகிறது. பெண் குழந்தை கொடையை திருக்குர்ஆன் முதலில் குறிப்பிடுகின்றது

அல்லாஹ் பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின் உரிமையாளனாவான்: தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான்: தான் நாடுவோருக்குப் பெண் மக்களை வழங்குகின்றான்: தான் நாடுவோருக்கு ஆண் மக்களை வழங்குகின்றான். (42:49)

ஆரம்ப கட்டத்திலிருந்த முஸ்லிம் சமுதாயத்தில் நிலவியிருந்த பெண் சிசுக்கொலையை முற்றாக, ஏன் அது பற்றிய தடயங்களைக் கூட அழித்தொழிக்கும் நோக்குடன் நபி (ஸல்) அவர்கள் பெண் குழந்தை கொடுக்கப்பட்டு அருள்புரியப்பட்டவர்களுக்கு அப்பெண் குழந்தைகளை அன்பான முறையில் வளர்த்தால் இறைவனிடத்தில் மிகப் பெரும் நற்கூலி பெறுவார்கள் என்று வாக்குறுதியளித்தார்கள்:

'எவர் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் ஈடுபட்டு, அவர்களை இரக்கத்துடன் நடத்தினால் அப் பெண் குழந்தைகள் நரக நெருப்பிலிந்து அவரை காப்பவர்களாக ஆகி விடுவார்கள்.' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

'எவர்கள் இரு பெண்களை பருவமடையும் வரை நல்ல முறையில் வளர்க்கின்றார்களோ அவரும் நானும் மறுமை நாளில் இது போன்று வருவோம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் தங்களின் இரு விரல்களை சேர்த்துக் காட்டினார்கள்.' (முஸ்லிம்)

இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியது போல் பூமியிலுள்ள எந்த மதமும் கண்ணியப்படுத்தவில்லை என்பது உண்மைதான்  இதில் வருத்தத்திற்குறிய விஷயம் என்னவெனில் உலகில் இன்று எதார்த்தமாக கண்கூடாக பார்க்கமுடியும் விளையாட்டில் ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான உடை வித்தியாசம் சினிமாவில் ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான உடை வித்தியாசம் ஆனால் வெட்கமே இல்லாமல் இது நாகரீகம் என்பார்கள் என்ன செய்ய கலியுக காலம்