Friday, December 08, 2006

இறைவனைப் புரிந்து கொள்வோம்!

இஸ்லாத்தில் இறைவனைப்பற்றியும் அவனுடைய வல்லமையையும் அவனுடைய சிறப்பையும் எவ்வளவு தத்ரூபமாக வர்ணிக்கின்றான் வல்ல ரஹ்மான்.

நாம் வாழக்கூடிய இந்த பூமியில் எத்தனையோ மனித இனங்கள், மதங்கள், இஸங்கள் உள்ளன. அத்தனையும் தன்னால் இயன்ற ஒரு அடிப்படையைக் கொண்டுதான் இப்பூமியில் வளம் வருகின்றது பரிந்தும் பேசுகின்றது. ஆனால் அவை அனைத்தும் அனைத்திற்கும் தனித்தனியான பூமியில் தான் வாழ்கின்றோம் என்று என்றாவது கூறியுள்ளதா? இல்லை!

உன் தெய்வம் வேறு! என் தெய்வம் வேறு! என்றெல்லாம் குடுமி சண்டை பிடிக்கும் இஸங்களும் மதங்களும் உன் மதத்துக்கு என்று தனி பூமி என் மதத்திற்கு என்று தனி பூமி என்றாவது கூறுகின்றதா என்றால் அதுவும் இல்லை. ஆனால் அவை எல்லாம் இந்த ஒரே பூமியின் மீது நின்று கொண்டுதான் இவ்வளவு ஆர்ப்பாட்டங்களையும் செய்கிறது. இந்த பூமியைப் படைத்த எல்லாவற்றிற்கும் அதிபதியான அல்லாஹ் தன்னால் படைக்கப்பட்ட அற்பமான அறிவு மட்டுமே கொடுக்கப்பட்ட மனிதனை நோக்கி சற்று வித்தியாசமாக இவ்வாறு கேட்கின்றான்.

உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும் , (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார் ? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார் ?'' என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் '' அல்லாஹ்'' என பதிலளிப்பார்கள். அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?'' என்று நீர் கேட்பீராக.

உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ் இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை ; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள் ?

இந்த பேரண்டத்தைப் படைத்த வல்ல ரஹ்மான் கேட்கும் கேள்வி இதுதான்.

இந்தக்கேள்விக்கு இறைவன் காட்டித்தந்த இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர வேறு சமுதாயத்திலும் பதில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. மனிதர்கள் தங்களின் பலஹீனத்தை உணர்ந்து கொள்ள அல்லாஹ் கொடுக்கும் சந்தர்ப்பமாகும். ஏனென்றால் மனிதன் எல்லா விதத்திலும் பலஹீனமாவனாகவே இருக்கின்றான்.

மரணத்தைச் சுவைக்காத எந்த மனிதனும் கிடையாது. அதுபோலவே அதை மரணம் என்பது இல்லை என மறுக்கின்ற மனிதனும் கிடையாது. அந்த அளவுக்கு யதார்த்தமான மரணத்தைப் பற்றி என்றாவது நாம் சிந்தித்து இருக்கின்றோமா? மரணிப்பது மட்டுமல்ல மரணித்த பிறகு மீண்டும் எழுப்பப்படுவீர்கள் என்றும் மனிதனின் சிந்தனையை வேறொரு பக்கமும் இஸ்லாம் திருப்பிகின்றது.

எங்கிருந்து வந்தோம்? எங்கே போகவிருக்கின்றோம்? என்றே தெரியாமல் வாழ்வதைவிட இது பற்றிய சிந்தனையை எந்த வாழ்வியல் நெறி போதிக்கின்றது என்றும் ஆராய்வது காலத்தின் கட்டாய கடமையாகும். மனிதன் என்பவன் படைத்த இறைவனை விட்டு படைப்புக்களை வணங்குவது எவ்வகையில் நியாயம் என்பதை இறைவன் கேட்கிறான்:

உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா? , என்று (நபியே!) நீர் கேட்பீராக அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை(மரணித்த பிறகு) மீண்டும் படைக்கிறான்;(இந்த உண்மையை விட்டு ) நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.

மேலும் அல்லாஹ் ஒரு அடிப்படையான சத்தியத்தை சுட்டிக்காட்டுகின்றான்:

உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக. அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா ? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா ? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது ? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.

ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது . நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

உண்மையை உணராமல், அல்லது அதைப் பற்றிய சிந்தனை செய்ய மனமில்லாமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினால் பொய்யான சேற்றைவாரி இறைப்பதை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்களை நோக்கி அல்லாஹ் இவ்வாறு சவால் விடுகின்றான்.

இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து (அருளப்பட்டது) என்பதில் சந்தேகமேயில்லை.
" இந்தக் குர் ஆனை அவர்கள் ஆழ்ந்து நோக்கக் கூடாதா ? இஃது அல்லாஹ்வையன்றி யாரிடமிருந்தாவது அருளப்பட்டிருந்தால் இதில் அநேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்களே!" (4:82)

இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா ? (நபியே!) நீர் கூறும் நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்! ' என்று.

நான் கோடிட்டுக் காட்டியுள்ள இந்த வசனம் இந்த மனித சமுதாயத்தின் மீதும் குறிப்பாக இந்தக் குர்ஆனையும் பால்வெளியையும் படைத்த இறைவனையும் மறுக்கும் படைப்பினங்களின் மீதும் அவ்வப்போது முஸ்லிம்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் தங்களின் பேச்சாளும் எழுத்தாளும் மீடியாக்களின் மூலமும் விஷத்தைக் கக்குகின்ற அறிவு ஜீவி (?)களின் மீதும் இறைவன் பதினான்கு நூற்றாண்டாக முன்வைத்த முறியடிக்கப்படாத சவால் ஆகும்.

இதுவரை பூமியில் தோன்றி மறைந்த, இனித் தோன்றவிருக்கின்ற எவராலும் முறியடிக்க முடியாத நடக்காத காரியம் என்பதை இந்த முஸ்லிம் சமுதாயம் உறுதியாக நம்புகின்றது .

நான் நினைக்கின்றேன். ஒருவேலை அவர்களின் முஸ்லிம்களின் மீதான காலவரையரையற்ற வெறுப்புக்கு இதுகூட காரணமாக இருக்கலாம் .

நாத்தீக நண்பர்களின் சிந்தனையோட்டத்தை அவர்களின் சிந்தனை சென்றடையும் கடைசி இடத்தின் எல்லைக்கோட்டை அல்லாஹ் அதாவது படைத்தவன் அப்படியே தத்தரூபமாக படம்பிடித்துக் காட்டுகின்றான்.

அப்படியல்ல அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.

இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டையும் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வல்லமையின் அளவுகோலை மனிதன் உணர்ந்தானேயானால் மேற்கூறப்பட்டது போன்ற தடுமாற்றத்திற்கு மனிதன் வரமாட்டான். மனிதனைப் போலவே சக்தியும் வல்லமையும் கொண்டவன் தான் இறைவனும் என்று மனிதன் நம்புகின்றான். அதனால்தான் மனிதனைப்போன்று இறைவனுக்கும் மனைவி மக்கள் சொந்தம் பந்தம் என்றெல்லாம் மனிதன் கற்பனை செய்கின்றான். இது அபத்தமாகும் இறைவனின் மீது இட்டுக்கட்டும் இழிசெயலாகும்.

வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை. நீ வேண்டுமானால் அவருக்கு உருவம் இருப்பதாக நினைத்துக் கொள். ஆனாலும் நீ நினைப்பதால் நினைத்து வடிப்பதால் கடவுள் உருவத்துக்குள் அடங்கமாட்டார் - என்றது வேதம். ஆனாலும்... உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தோன்றிய வழிபாட்டு முறைகள்படி (Humanistic Worship) அதாவது மனித உருகொண்டு தெய்வத்தை வணங்கும் கலாச்சாரம் உருவானது. அதிலும் ஆண் உருவங்கள்தான் முதலில் வழிபடப்பட்டன. பிறகு... இந்த ஆணுக்கு ஒரு பெண் துணை வேண்டாமா ? என யோசிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் பெண் தெய்வங்கள்! இது ஒரு பக்கம் என்றால்... சிறுசிறு குழுக்கள் தத்தமது பகுதிகளில் ' அம்மன் ' என அழைக்கப்படும் பெண் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.இதுபற்றி பிறகு பார்ப்போம். ஆண் தெய்வம் , பெண் தெய்வத்தை வைத்து பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர் ஆகமக்காரர்கள். அவர்களே... விஷ்ணுவின் மனைவியான லட்சுமி அவருடைய மார்பில் இருக்கிறார் என்றார்கள். இதன் பிறகு...உற்சவம், திருவிழா என்றெல்லாம் தெய்வத்துக்கும் கொண்டாட்டங்களை குறித்து வைத்தார்கள்.

நன்றி: இந்துமதம் எங்கே போகிறது

இப்படி மனிதனின் கற்பனையில் உருவான கட்டுக் கதைகளை வைத்துத்தான் இறைவன் என்ற மகத்தான சக்தியோடு தொடர்பு படுத்தி அந்த சக்தியின் வல்லமையை கேவலப்படுத்துகின்றனர்.

அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர் இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும். உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான். (அல்குர்ஆன் 10:31 to 10:40.)

ஆக மனிதனுக்கும் இறைவனுக்கும் மகத்தான மலையளவுக்கும் அதிகமான வித்தியாசம் உள்ளது அதையெல்லாம் சாதாரணமாக மறந்துவிட்டு மனிதனும் இறைவனும் சமமே என்பதும், இறைவனுக்கும் இணை துணை உண்டு என்பதும் எங்கோ யாருக்கோ வந்த சிந்தனைக்கோளாறு. அல்லது யாரோ வயிறு பிழைக்க எடுத்த வடிகட்டிய முட்டாள்தனம்.

எனவே

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்¢ தூய்மையும்) உடையோராகலாம். 2:21

Monday, December 04, 2006

விதவையும் துன்பங்(பெண்)களே

விதவைகள் என்றாலே சமுதாயத்தில் தள்ளிவைக்கக்கூடியவர்கள் அவர்களுக்கு சமூகத்தில் எந்த ஒட்டும் உறவும் கிடையாது கூடாது என்று நம்பிக்கை வைத்துள்ள ஒரு சமுதாயத்தில் இருந்து வந்தவன் நான். கிணற்றுத்தவளையாக இருந்தபொழுது புரியாத பல விஷயங்கள் அதிலிருந்து வெளிவந்த பொழுது தெரிய வந்துள்ளது ஆம் உண்மைதான் இஸ்லாம் என்றாலே வெறுக்கப்படக்கூடிய மதம் என்று பொன் ,பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்து நேசகுமார், வஜ்ரா சங்கர் , கால்கரிசிவா , டோண்டு போன்றவர்கள் வாய்கிழிய கத்துவதற்கு காரணம் கூட இஸ்லாம் எடுத்துவைக்கக்கூடிய வாதங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம்

ஒவ்வொரு மதமும் தங்களின் கொள்கையாக நம்பிக்கையாக பல கோட்பாடுகளை முன் வைக்கின்றது ஆனால் அவைகளின் எது சிறந்தது என்று சிந்தித்து நடைமுறை சாத்தியத்தையும் உணர்ந்து ஏற்றுக்கொள்வது அவரவர்களின் கட்டாயக்கடமையாகும். இங்கே நான் படித்த ஒருசில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் அடைகின்றேன்

விதவைகளின் துன்பநிலைகள்

பழைய ஏற்பாடு விதவைகளுக்கு கணவனின் சொத்திலிருந்து எந்த பங்கையும் அங்கீகரிக்காததனால், அவர்கள் யூத ஜனங்களிலேயே மிகவும் பாதிப்பிற்குள்ளானவர்களாக இருந்தனர். அவளுடைய இறந்த கணவனின் சொத்தில் பங்கு பெற்ற கணவனின் ஆண் உறவினர்கள் அச்சொத்திலிருந்து அவளுக்கு சாப்பாட்டிற்கு கொடுக்கவேண்டும். ஆயினும், அதை பெற்றுத்தருவதற்கு எந்த அமைப்பும் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை மற்றவர்களின் கருணையையே சார்ந்திருக்கவேண்டியதாயிருந்தது. ஆகவே விதவைகள் மிகவும் தாழ்ந்த வர்க்கமாகயிருந்தனர் விதவைத்துவமே மிகப்பெரும் இழிவின் அடையாளமாக கருதப்பட்டது. (ஏசாயா 54:4).

ஆனால் சொத்திலிருந்து அவளை விலக்கி வைத்திருப்பதனால் விதவைக்கு துன்பநிலை தருவதோடு மாத்திரம் நின்றுவிடாமல், இறந்த சகோதரனுக்கு சந்ததியை உருவாக்கி அவன் பெயர் மங்காமலிருக்கச் செய்வதற்காக, குழந்தையற்ற விதவை இறந்த கணவனின் சகோதரனை, அவன் ஏற்கனவே மணமானவனாக இருந்தால் கூட திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.
(ஆதியாகமம் 38).

அப்பொழுது யூதா ஓனானை நோக்கி நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சதந்தரமாய்ப் படைத்து உன் தமையனுக்கு சந்ததி உண்டாக்கு என்றான். (ஆதியாகமம் 38:8)

இந்த திருமணத்திற்கு விதவையின் சம்மதம் அவசியமில்லை. விதவை இறந்த கணவனின், அவனின் சந்ததியை உறுதிசெய்யக்கூடிய, சொத்தாகவே கருதப்பட்டாள். பைபிளின் இந்தச்சட்டம் இன்னமும் இஸ்ரவேலில் பின்பற்றப்பட்டு வருகின்றது.48 குழந்தையற்ற விதவை அவன் சகோதரனுக்கு சொத்தாக கொடுக்கப்பட்டாள். அச்சகோதரன் திருமணம் செய்யும் வயதையடையாத சிறுவனாக இருந்தால் அவன் திருமண வயதையடையும் வரை அவள் காத்திருக்க வேண்டும். இறந்த கணவனின் சகோதரன் அவளை மணக்க மறுத்தால் மாத்திரம் அவள் விடுவிக்கப்படுவாள். அப்போது தான் விரும்பியவனை அவள் மணந்து கொள்ளலாம். இதிலிருந்து விடுதலை பெற விரும்பும் விதவைகளை அவர்களின் கணவனின் உடன் பிறந்தவர்கள் பிளாக்மெயில் செய்வது இன்றைய இஸ்ராயிலில் சாதாரணமாக நடக்கும் விசயமாகும்.

இஸ்லாத்திற்கு முந்திய அரபிகளும் இது போன்ற நடைமுறையையே பின்பற்றி வந்தனர். விதவை தகப்பனின் சொத்தாக கருதப்பட்டு மகனால் வாரிசுச்சொத்தாகப் பெறப்பட்டாள். சாதாரணமாக, இறந்த தந்தையின் மற்ற மனைவியின் மூலம் பிறந்த மூத்த மகனுக்கு அவள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள். இந்த பழக்கத்தை திருக்குர்ஆன் கடுமையான முறையில் கண்டித்து அழித்தது:

மேலும் உங்கள் தந்தையர் மணமுடித்திருந்த பெண்களை நீங்கள் ஒருபோதும் மணமுடித்துக்கொள்ளாதீர்கள். முன்னால் நடந்தது நடந்துவிட்டது. உண்மையில் இது ஒரு மானக்கேடான, வெறுக்கத்தக் செயலாகும். கீழ்த்தரமான நடத்தையுமாகும். (4:22)

மத குருவானவன்; விதவைகளையோ விவாகரத்து செய்யப்பட்ட பெண்களையோ அல்லது விபச்சாரிகளையோ திருமணம் செய்யக் கூடாது என தடுக்கப்படும் அளவிற்கு விதவைகளும் விவாகரத்து செய்யப்பட்டவர்களும் பைபிளினால் கீழ்த்தரமானவர்களாக கணிக்கப்பட்டார்கள்:

கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் (ஆசாரியன்) விவாகம் பண்ண வேண்டும். விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புகுலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல் தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன். அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பனாக. (லேவியராகமம் 21: 13-15)

இன்றைய இஸ்ராயிலில் கோஹன் இனத்தைச் சேர்ந்தவர்கள் (ஆலயத்தின் பிரதான ஆச்சாரிய குலத்தை சேர்ந்தவர்கள்) விதவையையோ விவாஹரத்து செய்யப்பட்ட பெண்ணையோ அல்லது விபச்சாரியையோ திருமணம் செய்ய முடியாது.49 Inid., p. 47. கணவர்கள் இயற்கை காரணங்களால் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து மூன்று முறை ஒரு பெண் விதவையாக்கப்பட்டுவிட்டால் அவள் 'மிகவும் அபாயகரமானவள்' திருமணம் செய்ய தடுக்கப்பட்டவள் என யூதச்சட்டம் கூறுகிறது.50 Inid., p. 49. ஆனால் திருக்குர்ஆனோ சாதிகளையோ அல்லது 'அபாயகரமானவர்கள்' எனப்படுவர்களையோ (அப்படியானவர்கள் இருப்பதாக) அங்கீகரிகப்பதில்லை. விதவைகளும் விவாகரத்து செய்யப்பட்டவர்களும் தாங்கள் விரும்பியவர்களை மணப்பதற்கு சுதந்திரம் உண்டு. விதவையின் மேலோ அல்லது விவாகரத்து செய்யப்பட்வளின் மீதோ எந்தவித கறையும் படிவதில்லை. திருக்குர்ஆன் அருள்கின்றது:

நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்களின் (இத்தா) தவணை முடியும் தருவாயை அடைந்து விட்டால், நல்லமுறையில் அவர்களை உங்களுடன் வாழச்செய்யுங்கள் அல்லது நல்ல முறையில் அவர்களை அனுப்பி விடுங்கள். ஆனால் வரம்பு மீறும் எண்ணத்துடனும் தொல்லை கொடுக்கும் எண்ணத்துடனும் அவர்களை நீங்கள் தடுத்து நிறுத்தாதீர்கள். அப்படி எவரேனம் செய்தால், உண்மையில் அவர் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டவராவார். அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (2:231)

உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு மரணமடைந்து விட்டால், அந்த அவருடைய மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தாமாகக் காத்திருக்க வேண்டும். தங்கள் தனிப்பட்ட விஷயத்தில் (தம் விருப்பத்துக்கொப்ப) ஒழுங்கான முறையில் செயல்பட அவர்களுக்கு உரிமையுண்டு. அதில் உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான். (2:234)

உங்களின் மனைவியரை விட்டு மரணமடைவோர், தம் மனைவியரின் நலன் கருதி, (வீட்டை விட்டு) அவர்கள் வெளியேற்றப்படாமல் ஓராண்டு வரை அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதி அளிக்கப்பட வேண்டுமென மரண சாஸனம் செய்ய வேண்டும். ஆனால் அவர்களாகவே வெளியேறிய பிறகு அவர்கள் தங்களின் தனிப்பட்ட விசயத்தில் ஒழுங்கான முறையில் செயல்பட்டால் உங்கள் மீது எந்தப்பொறுப்புமில்லை. மேலும் அல்லாஹ் யாவற்றின் மீதும் வல்லமை மிக்கோனும், பேரறிவாளனுமாயிருக்கின்றான். (2:240



இந்த வசனங்களே போதுமானது பெண்களுக்கு இஸ்லாம் எவ்வளவு உன்னதமான அந்தஸ்தையும் மரியாதையையும் கண்ணியத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது என்பதை புரிந்து கொள்ள. பெண் என்பவள் பல படித்தரங்களை கட்டங்களை கொண்டவள் ஆனால் பெண் என்ற பார்வையில் அவளும் மதிக்கப்பட வேண்டியவளே என்பதில் இஸ்லாம் காட்டும் முக்கியத்துவத்தை உணர்தல் அவசியம்.