Tuesday, November 29, 2005

அபிஸ்டு புத்தி வந்துடுத்தா ?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
மீண்டும் நம்மை சந்திக்கவைத்த அந்த அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.
இன்றும் தீண்டாமை என்ற பெயரில் எப்படியெல்லாம் மடத்தனமான காரியங்களை செய்கின்றனர் என்பதை பார்ப்போம்.
எங்கள் வீடு என்பது மிகவும் ஆச்சாரங்கள் நிறைந்த வீடு. சைவ சாப்பாட்டிற்கு ஒரு பாத்திரம். அசைவ சாப்பாட்டிற்கு ஒரு பாத்திரம் எனவும் தினமும் அதிகாலையிலேயே குளித்து பூஜை நடத்தும் வீடு. நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுது சாயங்காலம் தினமும் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் எங்கள் ஊர் கண்மாயில் (ஏரியில்) கபடி விளையாடி விட்டு வீடு திரும்புவது வழக்கம்.
என்னுடைய நண்பர்கள் அனைவருமே அரிஜன நண்பர்கள் தான். அவர்களோடு விளையாடிவிட்டு வீட்டிற்கு திரும்பியவுடன் என்னை என் தந்தை குளித்துவிட்டு வந்தால்தான் வீட்டிற்குள்ளேயே அனுமதிப்பார் இது தினமும் நடக்கும் விஷயமாகும். ஒரு முறை வழக்கம் போல் கபடி விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்தேன் வாசலில் நின்று கொண்டு என் தந்தை குளித்துவிட்டு வா என்றார்கள். நான் புத்தக பையையும் சாப்பாட்டு சட்டியையும் வாசலிலேயே வைத்துவிட்டு குளிக்க சென்றவன் குளிக்காமல் திரும்பி வந்துவிட்டேன்.
என் தந்தை குளித்துவிட்டாயா என்று கேட்டார்கள். நான் இல்லையென்றேன். ஏன் குளிக்கவில்லை என கேட்டார்கள் அந்த கண்மாயில்(ஏரியில்) அரிஜன பையன் ஒருவன் குளிக்கின்றான் அதனால் நான் குளிக்கமாட்டேன் என்று சொன்னேன். புள்ளே தோளுக்கு மேலே வளந்துட்டாருல்ல அதனாலே அப்படித்தான் பேசுவாரு. பெரிய புத்தி சாலின்னு நெனப்பு. என்று கூறிக்கொண்டே சென்றுவிட்டார்கள். அன்று முதல் என்னிடம் எதுவுமே சொல்வதில்லை.

வேறொரு சம்பவம்


நான் படித்த பள்ளிக் கூடத்திற்கு பக்கத்தில் ஒரு பிராமண வீடு உள்ளது. என்னுடைய நண்பன் வீட்டார் தான் அந்த பிராமணர் வீட்டாரின் துணிகளையெல்லாம் துவைத்து கொடுப்பார்கள். அவ்வாரு துவைத்து கொண்டு வரும் துணிகளை வீட்டின் வாசலிலேயே வைத்துவிடவேண்டும். அந்த துணிகளை தண்ணீர் தெளித்து தான் வீட்டிற்குள் எடுத்து செல்லப்படும். இதுபோன்ற சம்பவங்களையெல்லாம் வெறுத்து ஒதுங்கியிருந்தது ஒரு கூட்டம் இப்படி செய்வதை புண்ணியமாக கருதியது ஒரு கூட்டம். நான் வெளி நாட்டிற்கு வந்த பிறகு ஒரு தி.க காரருடைய ஆடியோ கேஸட் ஒன்று கேட்க கிடைத்தது அதில் அவர் கூறுகின்றார் பிராமணர்கள் ஏன் மாட்டு மூத்திரத்தை குடிக்க கொடுக்கின்றார்கள் தெரியுமா? உனக்கு புத்தி வந்துவிட்டதா இல்லையா என்று மாட்டு மூத்திரத்தை குடிக்க கொடுத்து உன்னை பரிசோதிக்கின்றான். என்று கூறியது இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.

இதோ சத்தியம் வந்தது

இஸ்லாத்தில் ஒருவரை கேலி செய்வதும் கண்ணியக் குறைவாக நடத்துவதும் அனுமதிக்கப்பட்டவையல்ல. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களது இரத்தமும், உங்களது உடமைகளும் மற்றும் உங்களது கண்ணியமும் வரம்பு மீறமுடியாதவைகளாகும். (நூல்கள் : முஸ்னத் அஹ்மத் ஹதீஸ் எண் : 2037 மற்றும் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண் : 1739).

இனப்பாகுபாடும் இஸ்லாத்தினால் அங்கீகரிக்கப்பட்டது இல்லை. இதைப் பற்றி இறைவன் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்: இன்னும், ஒருவருக்கொருவர் நீங்கள் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்: நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடையவர்கள்; தான்: நிச்சயமாக அல்லாஹ், (யாவற்றையும்) நன்கறிந்தவன்: நன்குணர்பவன். (அல் குர்ஆன் 49-13).

இங்கே பயபக்தியுடையவர்கள் என்பவர்கள் யார் என்றால், எல்லாவித பாவச்செயல்களை விட்டும் ஒதுங்கியவராகவும், மேலும் தன் வாழ்வில் நல்லவற்றையே செய்து வருபவராகவும், இறைவன் தடுத்தவற்றிலிருந்து ஒதுங்கி இறைவனது பிரியத்திற்கு உரியவராக மாறுவதற்கு தன்னை அற்பணித்துக் கொண்டவர்கள் தான் இங்கே பயபக்தியுடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவரை அவர் பிறந்த இனத்தைக் காரணம் காட்டி அவரை ஒதுக்குவதும், புறக்கணிப்பதும், அவரை அவமானச் சின்னமாகக் கருதுவதும், பொது இடங்களில் அத்தகையவர்களைக் கண்ணியக் குறைவாக நடத்துவதும், இனப் பாகுபாடு காட்டுவதும் இஸ்லாத்தினால் தடை செய்யப்பட்டவை அத்தகைய தடைக்காரணத்தைப் பற்றித் தான் மேலே நாம் கண்ட இறைவசனம் இவ்வாறு கூறுகின்றது, நீங்கள் அனைவரும் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவர்களே! உங்களிடையே நீங்கள் காணும் வேறுபாடுகள் யாவும் உங்களுக்குள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டே அன்றி வேற்றுமை பாராட்டுவதற்கல்ல என்று கூறி இனப்பாகுபாடு, சாதியைக் காரணம் காட்டி இழிபிறப்பாக நினைத்தல் ஆகிய மனிதநேயத்தை கொன்றொழிக்கும் மாபாதகச் செயல்களிலிருந்து மனிதனை இஸ்லாம் பாதுகாக்கின்றது.

மேலும், தனிப்பட்ட ஒருவரையோ அல்லது ஒரு நாட்டையோ அவர் பெற்றிருக்கும் செல்வம், ஆட்சி, அல்லது குலத்திற்காக இஸ்லாம் முன்னிலைப்படுத்துவதில்லை. இறைவன் அனைவரையும் சமமான அளவில் தான் படைத்துள்ளான், அவர்களிடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்வதற்கு அவர்கள் கொண்டுள்ள இறைநம்பிக்கையும், நற்செயல்களும் தான் காரணமாக அமைகின்றன. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஓ! மனிதர்களே! உங்கள் இறைவனும் ஒருவன் தான், உங்களது மூதாதையரும் (ஆதம்) ஒருவர் தான். ஒரு அரபியானவன் அரபி அல்லாதவனை விடச் சிறந்தவன் அல்ல, ஒரு அரபி அல்லாதவன் ஒரு அரபியை விடச் சிறந்தவன் அல்ல, ஒரு சிவந்த நிறத்தை உடையவன் கறுப்பு நிறத்தை உடையவனை விடச் சிறந்தவன் அல்ல. ஒரு கறுப்பன் சிவந்த நிறத்தை உடையவனை விடச் சிறந்தவன் அல்ல. மாறாக உங்களில் சிறந்தவர் இறையச்சம் உடையவரே. (நூல்கள் : முஸ்னத் அஹ்மத் ஹதீஸ் எண் : 22978).

புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே..!

Tuesday, October 25, 2005

அன்றைய கேள்விக்கு இன்றைய பதில்...


இஸ்லாமிய மார்க்கம் இந்த பூவுலகிற்கு இறைவன் அருளிய வரப்பிரசாதம். அது சத்தியத்தை விரும்பக்கூடிய எல்லா உள்ளங்களுக்கும் சாந்தியை பகரக்கூடிய சன்மார்க்கம்.

தன் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சில சம்பவங்கள் அதே சமயத்தில் இல்லையென்றாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு எப்போதாவது அவனுடைய மனதில் பெரும் மாற்றத்தை உண்டாக்கக்கூடிய சக்தியாக, திருப்புமுனையாக அது மாறிவிடுகின்றது. ஒருநேரம் இல்லையென்றாலும் ஒருநேரம், அவன் மனத்திரையில் அந்த சம்பவம் ஓடும்பொழுது அதன் ஆழத்தையும் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் உள்மனதில் உணர்ந்தவர்கள் அதிலிருந்து விடுதலை பெற துடிப்பார்கள். குறைந்த பட்சம் அதற்குறிய வழியையாவது தேடுவார்கள். அதை உணராதவர்களுக்கு வேண்டுமானால் அதுஒரு கனவாக நின்றுவிடும்.

மனிதன் சிந்தித்து சுய உணர்வு பெற்று தன்னுடைய வல்லமையையும் தன் மீதுள்ள கடமையையும், இறைவனின் வல்லமையையும் இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையையும் உணர்ந்து இந்த பூமியில் சுயமரியாதை மிக்கவனாக அல்லாஹ் நம் கண்முன்னே இந்த பூமியில் கொட்டி வைத்திருக்கும் அத்தாட்சிகளுக்கு சாட்சி பகரவேண்டும் என்பதற்காகத் தான் அல்லாஹ் மனிதனுக்கு அறிவை கொடுத்தான். ஆனால், அந்த மனிதனோ இறைவனின் பெயராலேயே அதே அறிவைக்கொண்டு தன்னுடன் வாழும் சகமனிதனை இழிவு படுத்துகின்றான் அல்லது இழிவாக கருதுகின்றான்.
நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது என் அறிவை தீண்டாமையிலிருந்தும், மூடநம்பிக்கையிலிருந்தும் சிந்திக்கத்தூண்டிய ஒரு சில சம்பவங்களை அல்லாஹ்விற்காக உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோசமடைகின்றேன்.

சிந்திக்கத் தூண்டிய சம்பவம்
நான் பழனிமலை முருகன் கோவிலுக்கு ஐந்து முறை நடந்தும் இரண்டு முறை பேருந்திலும் ஆக ஏழு முறை சென்றிருக்கின்றேன். நான் கடைசி முறையாக முருகன் கோவிலுக்கு மாலை போட்டு இருக்கும்பொழுது ஒன்பதாம் வகுப்பின் கடைசி பரிட்சை வந்ததால் நடந்து செல்பவர்களோடு என்னால் போக இயலவில்லை அதனால் என்னை பேருந்தில்

வரச்சொன்னார்கள். பிறகு நாங்கள் நடைபயணம் செல்லக்கூடியவர்களை எங்கள் ஊரிலிருந்து ஒவ்வொரு வருடமும் பயணம் அனுப்புவோம். இது வழக்கமாகும்.

எங்கள் ஊரில் உள்ள பெரிய கோவில் ஒன்றில் பயணமனுப்பும் சடங்கு நடந்தது பழனி மலைக்கு செல்லக்கூடிய குரூப்பில் கீழ்ஜாதி மேல்ஜாதி மக்கள் என அனைவரும் இருப்பார்கள். பயணம் செல்லக்கூடிய எல்லா "சாமி"களையும் எங்கள் ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று வழியனுப்புவது வழக்கம். ஒரு சிலரைத் தவிர பாக்கி நின்றவர்கள் அனைவரின் காலிலும் எல்லோரும் விழுந்தனர். ஆசிர்வாதமும் பெற்றனர். ஆனால் நான் அங்கு நின்றவர்கள் அனைவரின் காலிலும் சகட்டுமேனிக்கு விழுந்து கும்பிட்டேன். ஆனால் இந்த சம்பவம் என் குடும்பத்திலும் மற்றும் எங்கள் ஊர் மேல்ஜாதி பிரமுகர்கள் அனைவரின் மனதிலும் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. பிறகு என்னை அழைத்து "நீயோ மேல்ஜாதிகாரன், நீ போய் எப்படி கீழ்ஜாதிகாரனின் காலில் விழுவது இது கேவலம்! நம் ஜாதிக்கே பெருத்த அவமானம்!" என்றெல்லாம் ஏசினார்கள். அவர்கள் அப்படி கோபப்பட்டதற்கும் காரணம் உள்ளது. ஏனென்றால் எங்கள் ஊரைப் பொருத்தவரை தாழ்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்கள் எவ்வளவு தான் உயர் மட்டத்தில் அல்லது பொருளாதார உயர்வில் இருந்தாலும் அவர்களை தாழ்ந்தவர்களாகவும் அடிமைகளாகவுமே கருதுவார்கள்.

"உங்களைப் போலவே அவரும் பழனி முருகனுக்கென்று மாலை அணிந்து கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருந்து உங்களுடனே கால்நடையாக நடந்தும் வருகின்றார்கள். நீங்களும் அவரும் ஒரே இறைவனை வணங்க ஒரே முறையில் ஒரே நாளில் ஒரே இடத்திற்கே ஒரே நோக்கத்தோடு செல்கின்றீர்கள். இருந்தும் ஏன் அவர்களும் நம்போன்ற மனிதர்களே அல்லது நாம் வணங்க போகின்ற அதே இறைவனைத்தானே அவரும் வணங்க வருகின்றார்கள் என்பதை உங்கள் மனம் ஏன் ஏற்க மறுக்கின்றது?" என்று நான் கேட்டேன். என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் அனைவரும் யாத்திரை புறப்பட்டு சென்றுவிட்டனர் பிறகு என் பாட்டி என்னை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றார். அன்று இரவு முழுதும் எனக்கு தூக்கமேயில்லை என் மனதுக்குள் நான் என்ன தவறு செய்தேன் என்ற ஒரே ஒரு கேள்வி பாக்கியாகவே நின்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த இந்த சம்பவத்தை என் ஆசிரியரிடம் கூறினேன் அவர் சிறிது நேரம் மௌணமாக இருந்துவிட்டு நெல் சலிக்கும் சல்லடையை காண்பித்து இதோ பார் தம்பி இந்துமதம் இந்த சல்லடையைப் போன்று பல ஓட்டைகளைக் கொண்டது அதில் ஒரு ஓட்டையைத்தான் நீ இப்பொழுது பார்த்திருக்கின்றாய் இதுபோல் இன்னும் பல ஓட்டைகள் உள்ளது என்று கூறினார்.
அப்பொழுது என் மனம் சமாதானம் அடைந்தது இன்னும் பல கேள்விகளை கேட்பதற்காக....!!
அன்றைய கேள்விக்கு இன்றுய பதில்... 4:1.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்…….!!

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகவே கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தாம் ஏக இறைவனிடத்தில் நிச்சயமாக மிக்க மேலானவர். (அல்குர்ஆன் 49:13)

உங்கள் அனைவரின் மூலக்கூறும் ஒன்றே. ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து தான் உங்கள் மனித இனம் முழுவதும் தோன்றியுள்ளது என்கிறது. இந்த இறைவசனம்

மனித இனம் ஒரே இனமாக இருந்த போதிலும் நீங்கள் பல கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் பிரிந்து இருப்பது ஓர் இயற்கையான விஷயமாகும். மனித இனம் பெருகப்பெருக எண்ணற்ற குடும்பங்கள் தோன்றுவதும் பின் பல பாகங்களுக்கு அவை குடிபெயரும்போது பல கிளைகளும் பல கோத்திரங்களும் உருவாகுவதும் தவிர்க்க முடியாததாகும். மனிதன் பூமியின் பல பகுதிகளில் வசிக்கத் துவங்கிய பின்னர் உடல் அமைப்பு நிறம் மொழி நடைஉடை பாவனைகள் வாழ்க்கை முறைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டேயாக வேண்டியிருந்தது ஒரே பகுதியில் வசிப்போர் ஒருவருக்கொருவர் நெருங்கியவர்களாகவும் வெகுதொலைவில் வசிப்போர் நெருக்க மற்றவர்களாகவும் இருக்க வேண்டிய நிலை வந்தது

ஆனால் இந்த இயல்பான வேற்றுமை நம்மிடம் இருப்பதால் இவ்வேற்றுமையின் அடிப்படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஆண்டான் அடிமை மேலோன் கீழோன் எனும் பாகுபாடுகள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது அறிவீனர்களின் கருத்தாகும்
இறைத்தூதர் அவர்கள் நிகழ்த்திய உரையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இறுதி உரையில் கூறினார்கள்:

மானிடரே! நிச்சயமாக உங்களை ஒர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து தான் இறைவன் படைத்தான் மனித சமுதாயம் அனைத்தும் ஆதமுடைய சந்ததிகளே! ஆதமோ மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர் எனவே பிறப்பு சொத்து ஆகியவற்றால் எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர். நிறம் இல்லை. ஒர் அரபி அரபி அல்லாத ஒருவனை விட உயர்ந்தவன் அல்லன். அரபி அல்லாத ஒருவன் ஒர் அரபியை விட உயர்ந்தவன் அல்லன்.
ஒரு வெள்ளையன் ஒரு கருப்பனை விட உயர்ந்தவன் அல்ல ஒரு கருப்பன் ஒரு வெள்ளையனை விட உயர்ந்தவன் அல்ல
மனிதர்களுக்குள்ள உயர்வெல்லாம் அவனின் இறை பக்தியைப் பொறுத்தே அமைந்திருக்கிறது''.
மக்காவை வெற்றி கொண்டபோது நபி(ஸல்) ஆற்றிய சொற்பொழிவில் கூறுகிறார்கள்:
உங்களிடமிருந்து அறியாமைக் காலத்தின் குறைகளையும் அதன் வீண் பெருமைகளையும் போக்கிவிட்ட இறைவனைத் துதித்து நன்றி செலுத்துகிறேன்.
மக்களே! எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினராக பிரிகின்றார்கள். ஒருவர் நல்லவர் இறையச்சம் உள்ளவர். அவரே இறைவனின் பார்வையில் கண்ணியம் மிக்கவர். மற்றொருவன் தீயவன் துர்பாக்கியவான். அவன் அல்லாஹ்வின் பார்வையில் இழிவுக்குரியவன். மனிதர் அனைவரும் ஆதமின் மக்களே ஆவர். அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்தான். (நூல்: பைஹகீ திர்மிதி)

திருக்குர்ஆனின் பிரகடனமும் திருத்தூதரின் போதனையும் வெறும் தத்துவங்களாக இருந்துவிட்டு மாய்ந்து போகவில்லை.அன்றைய அரபு சமுதாயத்தில் தலைவிரித்தாடிய குலபேதம் நிறபேதம் வர்க்க பேதம் முதலான பீடைகளை அடியோடு கிள்ளியெறிந்து தீயபண்புகளை விட்டு மிகவும் தூய்மையான பண்பட்ட ஒரே சமுதாயத்தை இம்மண்ணுலகில் உருவாக்கிக் காட்டியது இஸ்லாம்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் சான்றோர்களின் வாக்கை மெய்ப்படுத்தி அதை நடைமுறைப்படுத்தியது இஸ்லாம். ஏகத்துவத்தின் வருகை நாடு தழுவியதொரு புரட்சியாகவும் அதன்பின் உலகப்புரட்சியாகவும் மாறியது

ஏகதெய்வ நம்பிக்கை அந்த நாட்டில் நிலவிய சட்டத்தை மட்டுமோ அல்லது அங்கிருந்த ஒரு சில தலைவர்களை மட்டுமோ மாற்றிடவில்லை தனி மனிதர்களை அது தனித்தனியாகவும் சமுதாயத்தை ஒட்டு மொத்தமாகவும் மாற்றியமைத்தது.
அன்று எனக்கு மூடநம்பிக்கையின் வாசலில் நின்று எழுந்த அந்த கேள்விக்கு இஸ்லாத்தில் என்றோ உள்ள பதிலை அறியக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் இன்று தந்துள்ளான். அல்ஹ்ம்துலில்லாஹி ரப்பில் ஆலமின்...
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே..!
வல்ல ரஹ்மான் நாம் நாடிய காரியங்களை நல்வழியில் நடத்துவானாக..

Wednesday, October 05, 2005

சம்மந்தப்பட்டவர்கள்

வல்ல ரஹ்மான் நாம் நாடிய காரியங்களை நல்வழியில் நடத்துவானாக!

சம்பந்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை என்றால் அந்த தவறு, சமூகத்தில் தவறாகவே அங்கீகரிக்கப்படாது.

இதை எழுத காரணம், வளைகுடா நாட்டில் பணிபுரியும் நான், இஸ்லாத்தை முழுமையாக விளங்கி ஏற்று மூன்று வருடம் கழிந்தபிறகு, திருமணத்தின் காரணமாக ஊருக்குச் சென்ற பொழுது என்னைச் சிறைவைத்துவிட்டு எம் மார்க்கத்திலிருந்து என்னை பழைய மதத்திற்கே திருப்பவும், நீ வரதட்சணை வாங்கியே திருமணம் செய்ய வேண்டும் என எனக்கு உபதேசிக்கவும் என்னுடைய சொந்த சகோதரனைப் போல் பழகிவிட்ட என்னுடைய ஆசிரியர் அவர்கள் அழைத்துவரப்பட்டார்கள்.

தனக்கே உரிய பாணியில் என்னுடன் பேச ஆரம்பித்தபோது, நான் இஸ்லாம் சம்பந்தமான விஷயங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அதற்கு அவர் "நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் அதுபோன்று நடக்கக்கூடிய ஒரே ஒரு ஆளை காட்டு பார்ப்போம்!" என கேட்டார்.

குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் நடக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு மனிதனுடைய நிலையும் இப்படித்தான். பலரால் பல வழிகளில் நிர்பந்திக்கப் பட்டுக்கொண்டே இருக்கும் நிலையில் எப்படி ஒரு மனிதனால் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் வாழ முடியும் என நான் கேட்டேன்.
அதன் பிறகு நடந்த சம்பவத்தை நான் வெளிநாட்டிற்கு வந்த பிறகு அவருக்கு கடிதமாக எழுதினேன். அதன் சில பகுதியை அல்லாஹ்விற்காக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் இதுபோன்று சம்பந்தப்பட்டவர்களுக்கு சிந்தனையை தூண்டும் என்றால் அதற்காக மிகவும் சந்தோஷம் அடைகின்றேன். புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே!
______________________________________________________________


அன்புள்ளம் கொண்ட அண்ணன் அவர்களுக்கு, உங்கள் அன்பை என்றும் மறவாத தம்பி வரையும் வண்ண மடல். இதுவரை நான் கடிதம் எழுதாதற்கு என்னை மன்னிக்கவும். அதற்கான முக்கியமான காரணம் உண்டு. அவை;-
நீங்கள் எனக்கு அண்ணன் மட்டும் அல்ல. என் மரியாதைக்குரிய ஆசானும் கூட எங்கள் ஊரில் உள்ள சிறிய பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருக்கும் போதிலிருந்து நீங்கள் எங்களை சிறுவயதிலேயே சத்தியத்தையும் அசத்தியத்தையும் நன்மை எது, தீமை எது என்பதையும் பிரித்து காண்பித்தவர்.

"ஜாதிகள் இல்லையடி-பாப்பா -
குலம் தாழ்த்தி உயர்த்தி செல்லல் பாவம்!"
என்ற கவி பாரதியாரின் உன்னதமான வார்த்தைக்கு விளக்கம் கற்பித்தவர். சமுதாய பிரச்னைகளை எதிர்த்து சளைக்காமல் போராடவேண்டும் என்று மன உறுதியை எங்கள் ரத்தத்தில் ஊற்றி விட்டவர். நாங்கள் அப்படி உயர்வாக நினைத்திருக்க கூடிய உங்கள் வாயிலிருந்து நான் ஊருக்கு வந்திருந்தபோது ஒரு வார்த்தை சொன்னீர்கள்.

அந்த வார்த்தையை ஆண்டுகள் பல கழிந்தும் இன்னும் என்னால் மறக்க இயலவில்லை. அந்த வார்த்தை பிரச்னைக்குரியது அல்லது சமுதாயத்தில் ஒற்றுமையை கெடுக்கக்கூடியது என்றால் பரவாயில்லை. ஆனால், அது இதுவரை எங்களுக்கு படித்து கொடுத்ததற்கு முற்றிலும் மாற்றமானது அந்த வார்த்தை. நீங்கள் சொன்ன புரட்சிகரமான அந்த வார்த்தை என்னவெனில் "ஊருடன் ஒத்து வாழவேண்டும்" என்பதுதான். இந்த வார்த்தை வேண்டுமானால் ஒரு அரசியல்வாதிக்கு அல்லது ஒரு சந்தர்ப்பவாதிக்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் சமூகத்தின் தூண்களான உங்களுக்கு சிறந்ததல்ல. இறைவனின் மிகப்பெரும் அருளால் உங்கள் மாணவனான எனக்கு சமூகத்தின் வேர்களில் ஊடுருவிக்கிடக்கும் பலம்பெரும் இருதீமைகளுக்கு எதிராக ஆணி அடிக்ககூடிய பாக்கியத்தை எனக்கு அருளினான்.

1) வரதட்சணை : பெண்களின் திருமண வாழ்வை கனவாக, ஜன்னல்களின் கதவுகளோடு கண்ணீரின் துணையோடு ஒதுக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக கைகூலியில்லா திருமணம்.

2) தீண்டாமை : தன் இனத்தில்பட்ட ஒரு சாராரை தாழ்த்தப்பட்டவன் என்ற பெயரில் அவனை அறிந்தோ அறியாமலோ, தன் சகோதரனுடைய மரியாதையையும் தன்மானத்தையும் இழிவு படுத்தும் இழிசெயலில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் என்னை நான் தற்காத்துக்கொண்டது.

இஸ்லாம் தீண்டாமை என்ற அந்த வேர் புழுவை வேரடி மண்ணோடு ஒழிக்கின்றது என்பதை உணர்ந்தேன். அதனால் தான் தந்தை பெரியார் "இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து" என கூறினார் போலும். டாக்டர் அம்பேத்கார் கூட ஒரு லட்சம் தொண்டர்களோடு புத்த மதத்தில் இணைந்ததும் கூட தீண்டாமை என்ற புற்று நோயிலிருந்து தப்புவதற்குத்தான். எனவே "ஊருடன் ஒத்து வாழவேண்டும்" என்பது தீமைகளுக்கு பயந்து வெருண்டோடுவதற்கு சமம். அது எதிர்த்து போராடும் தன்மையை இழக்கச் செய்யும். அது படித்ததற்கும், செயல்பாட்டிற்கும் உறவில்லாமல் செய்துவிடும். அது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கும் சமூக சுமையாகும். நீங்கள் எனக்கு கற்று தந்த அடிப்படையில் கோழைத்தனமாகும். சமூகத்தின் சீர்கேட்டிற்குள் மூழ்கிக்கிடப்பதும் அடிமைத்தனமாகும். ஒரு தீமையை செய்தாலும் அல்லது தீமையை செய்யும் பொழுது அதைக்கண்டு மௌனமாக இருந்தாலும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அந்த தீமையை செய்தவனாகவே இஸ்லாம் கருதுகின்றது. ஒன்று தடுக்கவேண்டும் அல்லது மனதளவாவது வெறுத்து அந்த தீமையிலிருந்து ஒதுங்க வேண்டும்.

அந்த அடிமைத்தனத்தை தகர்த்து வெளியேற வேண்டும் இல்லையேல் நீங்களும் சரித்திரத்தின் முன் குற்றவாளியாவீர்கள்! சரித்திரத்தின் கேள்விக்கு நீங்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் நீங்கள் பெரியாரின் பாசறையில் பயின்றவர் என்பதால்! பெரியார் தீண்டாமைக்கும் மூடநம்பிக்கைக்கும் சாவு மணியாக திகழ்ந்தார். ஆனால் அதன் பிறகு வந்த இழிபிறவிகள் பெரியாரின் கொள்கைகளை குழிதோண்டி புதைத்து விட்டு திருவள்ளுவரைக் கூட அய்யன் என்று கூற வெட்கப்படவில்லை. அவர்களின் வரிசையில் உங்களை சேர்ப்பதற்கு என் மனம் இடம் தரவில்லை. உங்கள் மாணவனின் தெளிவைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் முடிக்கின்றேன்.

வஸ்ஸலாம்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!

இப்படிக்கு
உங்கள் அன்பு தம்பி
சாலிஹ்

Saturday, September 24, 2005

எது சுதந்திரம்…?


B- 52 Bomber jet - லா சுதந்திரம்?
ஆயிரங்களை கொலை செய்து கொண்டா சுதந்திரம்..?
ஒரு சமூகத்தை நடமாடும் பிணமாக்கியா சுதந்திரம்..?
50 ஆண்டுகளாகக் கேட்டும் அக்ஸாவிற்கு மறுக்கப்படும் - சுதந்திரம்
ஈராக்கிகள் விரும்பும் மனிதனை அழித்து ஈராக்கிகளுக்கு- வலுக்கட்டாய சுதந்திரம்
புரிந்து கொண்டாயா சகோதரனே?

கொள்ளையும் கொள்ளிவைப்பும் ஈராக்கிகளின் சுதந்திரமாம்
இதைத்தான் பிரிட்டனும் பென்டகனும் விரும்பியதாம்
புரிகிறதா.? இந்த குள்ளநரிகள் யாரென்று - ஆம்
சுதந்திரத்தைச் சொல்லி ஈராக்கின் சொத்தைக் கொள்ளையிடும்
கழுகுகளுக்கு கொள்ளையும் கொள்ளிவைப்பும் சுதந்திரம் தான்!

இழி மதிகொண்ட ஈனப்பிறவிகளின்
சுதந்திர தாகம் புரியவில்லையா...!
கொள்ளை போனது ஈராக்கின் சொத்தல்ல
2000-ம் காலம் பழக்கமுள்ள நம் முன்னோர்களின் வரலாறு
நினைவுச் சின்னங்களாய் விட்டுச் சென்ற பாரம்பரிய ஏடு
என்பதை மறந்து விடாதே. . . !


நாளைய சமூகத்திற்கு நேற்றைய வரலாறு தெரியாமல் போவதற்கு
இஸ்லாமிய சரித்திரத்தை பூவுலகிலிருந்து மாய்ப்பதற்கு
மேலாதிக்கத்தை உன் மீது திணிப்பதற்கு
ஆடு நனைகிறதென குள்ளநரிகளின் கூப்பாடு -சகோதரனே
இனியும் விழிக்கவில்லையெனில் நாளைய சரித்திரம்
உன்னை விரல் சுட்டிக் காட்டும் - ஏனெனில்

காஃபிர்கள் இஸ்லாத்தின் ஒளியை தன் வாயால் ஊதி
அணைத்துவிட எண்ணுகின்றனர் இருப்பினும் - அல்லாஹ்
அவ்வொளியை பிரகாசிக்கச் செய்வான். (9:32)


எனவே ...! ... ?


_________________________________________________________
(கடந்த வருடம் ஈராக்-கின் மீது அமெரிக்க படையெடுத்ததை ஒட்டி தோஹாவின் இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் இணையதளத்தில் வெளியான கவிதை.)

Tuesday, September 20, 2005

உண்மை முஸ்லிம்

புகழ் அனைத்தும் வல்ல ரஹ்மான் ஒருவனுக்கே..!!!


ஒரு மனிதன் தன்னை முஸ்லிம் என்று கூறுகின்றான் என்றால் அவன் மறுமையில் சொர்க்கம் வேண்டும் என்று நம்பியிருக்கின்றான் என அர்த்தம். இந்த நம்பிக்கையில்லாத ஒரு மனிதன் நிச்சயமாக முஸ்லிமாக முடியாது.
அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் '' யார் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகின்றாரோ அவர் சொர்க்கம் புகுவார்'' என்று கூறினார்கள். இதையே (முஸ்லிமாக வாழுங்கள் என்பதையே) நபிமார்கள் அனைவரும் தன் வாழ்நாளில் தான் சார்ந்த சமூகத்திற்கு உபதேசித்தார்கள் என்பதையும் குர் ஆன் முழுவதும் காண கிடைக்கின்றது.


3:67.இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை. என்று அல்லாஹ்வே சான்று கூறுகின்றான்.
2:128.எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்


2:132.இதையே இப்ராஹீம் தம் குமாரார்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்;. யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்; என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்


2:133.யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்? எனக் கேட்டதற்கு,உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம் எனக் கூறினர்.


3:102.நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.


10:72.நூஹ் ஆனால், நிங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை ; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன் (என்று கூறினார்.


16:102.(நபியே!)ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரயீல்) இதை இறக்கி வைத்தார் என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.


ஆக நபிமார்கள் அனைவருமே முஸ்லிமாக வாழுங்கள் என்றே கூறினார்கள். இப்படி முஸ்லிமின் கோட்டைக்குள் ஆன்மாவை அர்ப்பணித்துக் கொண்டவரின் அடிப்படை சிந்தனைகள் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அறிவோம்.

சலாம்(பதில்)சொல்வது

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நீங்கள் நம்பிக்கையாளராக ஆகாதவரை சொர்க்கத்தில் பிரவேசிக்க முடியாது. உங்களில் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை நீங்கள் முழுமையான (பூரணமான) நம்பிக்கையாளராக ஆக முடியாது. உங்களுக்கு ஒன்றை நான் ஏவுவதாக இருந்தால், உங்களுக்கிடையில் ஸலாத்தை பரப்பவும், இன்னும் அன்பு செலுத்தும்படியும் தான் நான் கூறுவேன். ஸலாத்தைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவருக்கு முகமன் கூறுங்கள், நீங்கள் ஸலாம் உரைக்கக் கூடிய நபர் அறிந்தவராகவோ அல்லது அறியாதவராகவோ இருப்பினும் சரியே!


ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதாக, அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள் : இஸ்லாத்தில் மிகச் சிறந்த நற்செயல் எது? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு உணவளியுங்கள், இன்னும் உங்களில் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுங்கள் என்று பதிலளித்தார்கள்.


அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : இறைவனுக்கு மிக நெருக்கமானவர் யாரென்றால், உங்களில் முதலில் ஸலாம் கூறுகின்றவரே இறைவனுக்கு மிக நெருக்கமானவர் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஸலாம் என்பது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாக இருக்கின்றது, அதனை இறைவன் இந்தப் பூமியின் மீது இறக்கி வைத்தான். எனவே, அந்த ஸலாத்தை நாம் இந்தப் பூமியில் பரப்ப வேண்டும். ஒருவர் மற்றவருக்கு ஸலாம் உரைக்கும் பொழுது, இறைவனிடத்தில் அவரது தகுதி உயர்த்தப்படுகின்றது. சபையில் உள்ளவர்கள் ஸலாம் உரைப்பவரது ஸலாத்திற்குப் பதிலுரைக்கவில்லை என்று சொன்னால், அங்கிருக்கின்ற மனிதர்களை விட மிகச் சிறந்த படைப்பான (மலக்குமார்கள் - வானவர்கள்) அவரது ஸலாத்திற்குப் பதில் கூறுகின்றார்கள். (முஸ்னது பஸ்ஸார், தப்ரானி)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்ததாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :உங்களில் கஞ்சத்தனமிக்கவர் யாரென்றால், ஸலாத்தைப் பரப்பாமல் கஞ்சத்தனம் செய்கின்றவரே!திருமறைக் குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகின்றான் : (எவராலும்) உங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறப்பட்டால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கொண்டு நீங்கள் முகமன் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கணக்குப் பார்க்கிறவனாக இருக்கின்றான். (4:86)

கை, நாவைப் பேணுதல்
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டார். அவர் மிகவும் கெட்டவர் எனக் கூறிய நபி(ஸல்), அவருக்கு அனுமதியளியுங்கள் என்றனர். அவர் வந்ததும், அவரிடம் மென்மையாகப் பேசினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவரைப் பற்றி ஒரு விதமாகக் கூறிவிட்டு, அவரிடம் மென்மையாகவும் பேசினீர்களே என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆயிஷாவே! ஒருவனது (கை மற்றும் வாயால் ஏற்படும்) தீங்குக்கு அஞ்சி மக்கள் எவனை (விமர்சிக்காது) விட்டு விடுகிறார்களோ அவன்தான் மறுமை நாளில் மனிதர்களின் மிகவும் கெட்டவன் என விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம்
எவரது நாவால், கரத்தால் ஏனைய முஸ்லிம்களுக்குத் தீங்கு ஏற்படவில்லையோ அவர் தான் முஸ்லிம் என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
மக்களிடம் நெருக்கமாகவும் மென்மையாகவும் எளிமையாகவும் நடப்பவருக்கு நரகம் ஹராம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்¥த்(ரலி) நூல்கள்:அஹ்மத்


நல்லவற்றில் எதையும் அற்பமாக நினைத்து விடாதே! உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே என்பதும் நபிமொழி. அறிவிப்பவர். அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்


மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது எது என்றால் நாக்கு என்று சொல்லலாம். ஒருவரிடம் தன்னடக்கம் இருக்க வேண்டுமென்றால் அவனிடம் நாவடக்கம் இருக்க வேண்டும். இந்த நாவை எவ்வாறு பயன்படுத்துகின்றோமோ அதன்படியே முடிவு இருக்கும். இந்த நாக்கில் நல்ல பெயர் கிடைத்து சிறந்த பெயரை வாங்கி மறுமையிலும் சிறப்பிடத்தைப் பெறுகின்றார்கள். சிலர் இந்த நாவால் தான் முறையற்ற வழியில் பேசி, மனிதர்களில் மட்டமான பட்டியலில் இடம் பெறுவது மட்டும் அல்லாமல், மறுமையில் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகின்றார்கள். இப்படிப்பட்ட நாவைப் பற்றி அல்லாஹ் திருமறையிலும் நபி தன் மொழியிலும் இவ்வாறு கூறியுள்ளார்கள். எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான ஞானமில்லையோ அதைச் செய்யத் தொடர வேண்டாம். நிச்சயமாக மறுமையில் செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே அதனதன் செயல் பற்றிக் கேள்வி கேட்கப்படும். (17:36)
முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட பொழுது, எவர்களுடைய நாவினாலும் கரத்தினாலும் ஏனைய முஸ்லிம்கள் பாதுகாப்பைப் பெறுகின்றார்களோ அவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள். (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

தற்பெருமை
பெருமை (கிப்ர்) என்ற தன்மை அல்லாஹ்வுக்கு உரியது. அதை அவனுடைய படைப்பினங்கள் சொந்தப்படுத்திக் கொள்ள முடியாது.ஒரு முஸ்லிமிற்கு (கட்டுப்பட்டவனுக்கு) தற்பெறுமை என்பது அறவே கூடாத விஷயமாகும் தான் என்ற அகங்காரம் இப்லீஸுக்கு வந்ததால், அவன் சிறுமையடைந்தான் நிராகரிப்பாளர்களில் ஒருவனாகவும் ஆகி விட்டான். (அல்குர்ஆன் 2:34)
இது குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
எவனது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளதோ அவன் சுவனம் புக மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதன் தன் ஆடை அழகாக இருப்பதையும் தனது காலணி அழகாக இருப்பதையும் விரும்புவது பெருமையாகுமா? என ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நிச்சயமாக அல்லாஹ் அழகானவன் அவன் அழகையே விரும்புகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.பெருமை என்பது உண்மையை மறைப்பதும், மக்களை கேவலமாகக் கருதுவதும் ஆகும். (நூல் : அஹ்மத் அறிவிப்பாளர் : அம்ரு பின் ஷுஐப் (ரலி) ஹதீஸ் எண் : 6390


சில அமைப்பிலோ ஜமாஅத்திலோ இருப்பவர்கள் தான் சொர்க்கத்திற்கு உறியவர்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் சொன்ன 73 கூட்டத்தில் சொர்க்கம் போகக்கூடிய கூட்டத்தவர்கள் என்றும் அதனால் இருந்தால் இந்த அமைப்பில் இருங்கள் இல்லையேல் எதிர்; அமைப்பில் இருங்கள் என்றெல்லாம் பொய் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றது தனக்கு பின்னால் கொடிப் பிடிக்க உள்ள கூட்டத்தை தனக்கு பின்னாலேயே நிறுத்துவதற்கு எடுத்த அரசியல் தந்திரமாகும். இன்னார் தான் 73வது கூட்டத்தார் என்று எந்தக் கூட்டத்தையும் கூறவே முடியாது. ஏனெனில் 'இறைவா.. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக..' (அல் குர்ஆன் 1:6) என்று இறைவன் பிரார்த்திக்க சொல்கிறான். நாம் நேர்வழியில்தான் இருக்கிறோம் என்று ஒருவனுக்கு உறுதியாகி விட்டால் இந்த பிரார்த்தனை அர்த்தமில்லாமல் போய்விடும். ஏன், அழுத்தமில்லாமல் கூட போய்விடும். இந்த பிரார்த்தனையை செய்யும் காலமெல்லாம் எவரும் நான் நேர்வழியை அடைந்து விட்டேன். 73வது கூட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. சொல்லிக் கொள்ளவும் கூடாது.
ஆனால் துரஷ்டவசமாக பிரிந்து செல்லக்கூடிய ஒவ்வொரு கூட்டமும் இந்த ஹதீஸைத்தான் தன் செயல்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். அல்லாஹ் மனிதனின் சிந்தனையை பற்றி கூறுகையில்
(என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! ..அவர்கள் சொல்லை–(நல்லுபதேசத்தைச்) செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர். (39:17,18)
என்றும்,
நபி (ஸல்) அவர்கள் கூறுகையில் முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும், கல்வியை தேடுவது கட்டாய கடமையாகும் என்றும் உள்ளது. மேலும்
எவர் மார்க்க கல்வியை கற்க செல்கிறார்களோ, அவர் திரும்பும் வரையில் இறைவழியில் செல்பவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அறிவிப்பவர்: அனஸ்(ரலி) - நூல்: திர்மிதி
எவருக்கு இறைவன் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்க அறிவை நல்குகிறான் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம் : அறிவிப்பாளர் மூஆவியா(ரலி) என்று அறிவை வளர்ப்பதற்காக இஸ்லாம் சிந்தனையை தூண்டும் பொழுது,
வேண்டாம் வேண்டாம் வேறு யாருடைய பேச்சையும் கேட்காதே என்று கூக்குறலிட்டு கூச்சலிடுவது ஏனென்று சிந்திப்பவர்களுக்கு புரியாமலில்லை.
இஸ்லாம் மூட நம்பிக்கையை தரைமட்டமாக்கி சிந்தனையை சுதந்திரமாக்கியிருக்கும் போது, சில அறிவு சூனியங்கள் இந்த அமைப்பில் உள்ளவர்கள் வேறு எந்த அமைப்பிற்கும் போகக் கூடாது என சிந்தனையை சூனியமாக்குவதும் நான் மேலே கூறியது போல் தனக்கு பின்னால் கொடிப் பிடிக்க உள்ள கூட்டத்தை தனக்கு பின்னாலேயே நிறுத்துவதற்கு எடுத்த அரசியல் தந்திரமேயல்லாது வேறென்னவாக இருக்க முடியும்?
இத்தகையவர்களை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
39:9: ''அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.
7:179 .நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
நிகழ்காலத்தில் உள்ள தலைசிறந்த மார்க்க அறிஞர்களை எல்லாம் குறை கூறக்கூடிய இவர்கள் தங்களை தாங்களே பரிசுத்தவான்கள் எனக் கூறாதீர்கள் (53:32) என்று அல்லாஹ் எச்சரிப்பதை இவர்கள் சுகமாக மறந்துவிட்டு நாங்கள் தான் சொர்க்கத்திற்கு உரியவர்கள் என்பது பெறுமையடிப்பின் உச்ச கட்டமாகும்.
மனிதன் என்பவன் தவறு செய்யக் கூடியவன் என்ற எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள், (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா?( 2:85 )என்ற வசனத்திற்கு இலக்கானவர்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் பெருமையடிப்பவர்களின் நிலையைப் பற்றி கூறும் போது : (உலகில்) பெருமையடித்தவர்கள் அனைவரும் மறுமை நாளில் (உடலமைப்பால்) சிற்றெறும்புகளைப் போன்று மனிதத் தோற்றங்களில் எழுப்பப்படுவர். அற்பமான அனைத்துப் பொருட்களின் காலடியிலும் அவர்கள் மிதிபடுவர். இறுதியில் பவ்லஸ் அல்லது பூலஸ் என்ற நரகச் சிறையில் நுழைவர். (அதில்) அவர்களை ஆகக் கொடிய நெருப்பு சூழ்ந்து கொள்ளும். நரகவாசிகளிடமிருந்து வழிந்தோடும் வியர்வை, சீழ் மற்றும் இரத்தம் ஆகியவற்றை அவர்கள் புகட்டப்படுவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), முஸ்லிம். என்பதை மட்டும் புத்தியிருந்தால் சிந்திக்கட்டும்.

சக முஸ்லிமை (மனிதனை) கண்ணியபடுத்துதல்
உலக வரலாற்றில் பொன்னேடுகளால் பொறிக்கப்பட்ட அல்hஹ்வின் தூதர் முஹமது (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் பிதாவில்.. ..இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் கண்ணியத்திற்குரியனவாய் விளங்குகின்றதே அது போன்றே உங்கள் இரத்தமும் உங்கள் செல்வமும், மானமும் இறுதித் தீர்ப்புநாள் வரை கண்ணியத்திற்குரியவை. ஒருவருக்கொருவர் அதனை மதித்து கண்ணியப்படுத்த வேண்டும்... இந்த ஒரு விஷயத்தில் இந்த முஸ்லிம் உம்மத்தில் உள்ள மார்க்க அறிஞர்கள் என்ற போர்வைக்குள் இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர். ஒருவருக்கொருவர் மற்றவரின் கண்ணியத்தையும் மரியாதையையும் சரமாரியாக சானியையும், சேற்றையும் அள்ளி மார்க்கம் என்ற பெயரிலும் சமூக சேவை என்ற பெயரிலும் பூசிக்கொள்வதை நிகழ்காலத்தில் நாம் கண்கூடாக காண்கின்றோம். அதனால் தான்; மாற்றுமதத்தவர்களுக்கு எங்களை பார்க்காதீர்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பாருங்கள் என்று கூறுகின்றார்களே என்னவோ தெரியவில்லை.

முடிவுரை
நாளை கப்ரில் அடக்கம் செய்துவிட்டு கொள்கைவாதி, இயக்கவாதிகள் எல்லாம் திரும்பிய பிறகு, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ..அப்போது அவரிடத்தில் முன்கர் நகீர் என்ற இரண்டு மலக்குகள் வந்து அவரை எழுந்திருக்கச் செய்து அமர வைப்பார்கள். அவர்கள் அந்த அடியாரை நோக்கி பின்வருமாறு கேள்விகள் கேட்பார்கள்.
உனது இறைவன் யார் ?
உனது மார்க்கம் என்ன?
உன்னிடத்தில் (மார்க்கத்தை போதிக்க)அனுப்பப்பட்டவர் யார்?
நீ அதனை எவ்வாறு அறிந்து கொண்டாய்?
நிச்சயமாக இந்த கேள்வி தான் கேட்கப்படுமேயல்லாது எந்த இயக்கத்தில் இருந்தாய், எந்த மத்ஹப்புக்காக பணியாற்றினாய், எந்த இமாமின் அல்லது எந்த மார்க்க அறிஞரின் சொல் கேட்டு அமல் செய்தாய் என்றெல்லாம் கண்டிப்பாக கேட்கப்படாது என்பதை இயக்க பக்தர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
6:161. (நபியே!) நீர் கூறும்; மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்றாஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.
6:162 நீர் கூறும்; மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.
6:163. அவனுக்கு யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லீம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்). 72:14. இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.


அப்படிப்பட்ட அல்லாஹ்வின் நேர்வழி,முஸ்லிமான ஒவ்வொருவருக்கும் கிடைக்க வல்ல ரஹ்மானிடம் இருகரமேந்துவோம்.

Friday, September 16, 2005

உதாசீனம் செய்வோம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும்!

உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு முயற்சியும் அல்லாஹ்வின் பாதையில் ஆகும்பொழுது ஈருலகுக்கும் வெற்றியாக அது அமையும். யார் நல்லவராக இருந்தோ அல்லது கெட்டவராக இருந்தோ யாருக்கும் எந்த பயனும் இல்லை. என்னுடைய கபரின் நிலைபாடு தனி உங்களுடைய கபரின் நிலைபாடும் தனி. அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் கப்ருடைய நிலைபாடும் தனித்தனியே. இந்த பூமியில் நமக்கு யார் ந்ல்லவர் யார் கெட்டவர் என்று எடைபோடுவது இல்லை நம்வேலை. அதை விட்டு பாரம்பரியமிக்க "தாஃவா" எனும் உன்னதமான ஒரு வேலையை அல்லாஹுதாலா நமக்கு வழங்கியிருக்கின்றான்



நான் இந்த பதிவு எழுதக் காரணம், எனக்கு தொடர்ச்சியாக "தமுமுககாரன் நல்லவனா" அல்லது "தவ்ஹீது ஜமாத்காரன் நல்லவனா" என்று அவர்கள் இவர்களைப் பற்றியும், இவர்கள் அவர்களைப் பற்றியும் எழுதும் மின் அஞ்சலை எல்லோருக்கும் அனுப்பியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் வாரியிறைக்கும் சேற்றிற்கு இடையில் நாம் ஏன் மூக்கை பிடித்துக்கொண்டு நிற்கவேண்டும். மேலும் யார் நல்லவர் கெட்டவர் என்று எடைபோடுவதும் நம் வேலையில்லை. அதற்காக நம் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்ய வேண்டிய அவசியமும் நமக்கில்லை. அதனால் இதுபோன்ற தரம் கெட்ட செய்திகளை நேரத்தை வீணாக்கி படிப்பதை விட உதாசீனம் செய்துவிட்டு சுபுஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறிக்கொண்டிருப்பது எவ்வளவோ சிறந்தது. இவர்கள் தமக்கு மட்டுமே உரியது என்று எண்ணிக்கொண்டிருக்கும் இஸ்லாத்தைவிட இஸ்லாம் மிகவும் தூய்மையானது, அப்பழுக்கற்றது!

இறைத்தூதர் முஹம்மது(ஸல்)அவர்கள் கூறினார்கள்:

சொல்வதற்கு மிகவும் எளிமையானது.
அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானது.
நாளை மறுமையின் தராசில் எடை அதிகமுள்ள வார்த்தை ஒன்றை நான் உங்களுக்கு கற்றுத்தரட்டுமா? அவை:

சுபஹானல்லாஹி வபிஹம்திக்க
சுபஹானல்லாஹிலழீம்.
என்பதை ஓதுவதுதான்!

எனவே, இப்படிப்பட்டவர்கள் அனுப்பும் மின் அஞ்சல்களை, எவருக்கும் மேற்கொண்டு அனுப்பாமல் அழித்து உதாசீனம் செய்வதே நம்மில் ஒற்றுமை ஏற்படச்செய்யும் ஒரு செயலாகும்.

இது தொடர்பான சில குர் ஆனின் வரிகள், நம் அனைவரின் சிந்தனைக்கு:


6:25.அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்;

6:26. மேலும் அவர்கள் (பிறரையும்) அதை (கேட்கவிடாது) தடுக்கிறார்கள்; இவர்களும் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்; அவர்கள் தங்களைத் தாங்களே நாசமாக்கிக் கொள்கிறார்கள்; ஆனால் அவர்கள் (இதைப்) புரிந்து கொள்வதில்லை.

6:32. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

6;:52 அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.

6:68 .(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.

6:70 .(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்;, இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

இதுதான் மறுமையின் கூலியை எதிர்பார்க்கக்கூடிய முஸ்லிம்களுக்கு தேவை.

வஸ்ஸலாம்.

Wednesday, September 14, 2005

பொட்டு வைத்தல்!

பிறமதத்தின் கலாச்சாரம்


பொட்டு வைத்தல் என்பது தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்தது எப்படி ?

பார்வதி வரன் தேடி தவம் இருக்கும் பொழுது சிவபெருமான் தோன்றி நான் உன்னுடைய தவத்தை அங்கிகரித்தேன். உன்னுடைய பிராத்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை என்பது இதன் பொருள்) தரவேண்டும் என சிவபெருமான் கேட்கிறார். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவ பெருமானின் நெற்றியில் வைக்கிறார்.


Pottu vaithal



அதனால் தான் இந்துக்கள் திருமணம் ஆனவுடன் பெண்கள் நெற்றியில் திலகம் இடுகின்றனர். கணவன் இறந்தவுடன் அதை அழிக்கவும் செய்கின்றனர். இது அன்னிய கலாச்சாரமாகும். ஆரியர்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது. பிறகு தமிழகத்தில் தலைதூக்கியது.

ஏதாவது ஒரு வீர சாகசம் செய்து திருமணம் முடிப்பதுதான் தமிழர்களின் கலாச்சாரமாகும். எடுத்துக்காட்டாக ஊமைத்துரை காளைமாட்டை அடக்கி வெள்ளையம்மாளை திருமணம் செய்தார் என்பது வீரத்தமிழர்களின் வரலாறு. மேலும் முதல்மரியாதை படம் ஒரு நிகழ்கால வரலாறு.

அதுமட்டுமல்ல திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் ஒட்டர் சமுதாயத்தில் தன் மகளை மணக்க விரும்பும் மணமகனிடம் மண்வெட்டும் கூடை நிறைய மண்ணை நிறைத்து அதை மணமகன் தானாகவே தூக்கி தலையில் வைத்து தூரமாகச் சென்று கொட்டி விட்டு வந்தால்தான் தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் இன்னும் உள்ளது. உண்மையில் இதுதான் உண்மையான தமிழனின் பழக்கமாகும்.

மேலும் இது வரதட்சணையை ஊக்குவிக்கக் கூடிய செயலாகும். ஆண்களில் இதுபோன்ற கையாளாகாத, தன்னம்பிக்கையிழந்த இளைஞர்களையும் பெற்றோர்களையும் உருவாக்கக் கூடியதாகும். இச்செயலால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கேடுகளை தன்மானமுள்ள எந்த இளைஞனாலும் ஏன் எந்த மனிதனாலும் அங்கீகரிக்க முடியாது.

வரதட்சணையை பற்றி இஸ்லாம் பெண்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு தெளிவான பாதையை வகுத்துள்ளது.

அல்லாஹ் தன் திருமறையில் நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் தொகையை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள் என்று கூறுகின்றான். (அல்குர்ஆன் : 4:4)

2) தாலிகட்டுவதும் இதுபோன்ற ஒரு செயல்தான் அது பெண்ணை அடிமை படுத்துகின்றது. இதற்கு புராணத்தில் என்ன கதை கூறப்படுகின்றது என்றால் திருமணமான ஆண் காலில் மிஞ்சி போட வேண்டும். பெண் கழுத்தில் தாலி கட்டவேண்டும். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ஆணுக்குறியது. குனிந்த தலையும் பணிவான பேச்சும் பெண்ணிற்குறியது.

அதனடிப்படையில் ஒரு ஆணின் எதிரே பெண் வருவதை கண்டால் அவன் அவளின் கழுத்தை பார்த்து புரிந்து கொள்வான் இவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று. அதுபோல் அவளும் அவனுடைய காலைப் பார்த்து புரிந்து கொள்வாள் இவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று. (அது போல் திருமணம் ஆகாதவர்கள் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை அவர்கள் தான் கூறவேண்டும்.)

ஆனால் இஸ்லாம் திருகுர்ஆனில் 24:30.(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

24:31.இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;

என்று இருவருக்கும் சேர்த்து பொதுவாக கட்டளையிடுகின்றது.

உங்களின் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையை கட்டுப்படுத்தும் கற்பைக் காக்கும் யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும் அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும். என்று எமது இறைதூதரான முஹமது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம் : புகாரி

இந்த மனக்கட்டுப்பாடு முஸ்லிமான ஆண் பெண் எல்லோருக்கும் பொதுவான கட்டுப்பாடாகும். இதற்கெல்லாம் மேலாக இஸ்லாம் எந்த ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும் எந்த ஒரு சமூகத்தின் பண்பாட்டையும் பின்பற்றி வாழவேண்டும் என்று கூறவேயில்லை. தனக்கென்று ஒரு கலாச்சாரம் தனக்கென்று ஒரு பண்பாட்டை உருவாக்கி வைத்து அதனடிப்படையில் முஸ்லிம்கள் வாழவேண்டும் என்று வழியுறுத்துகின்றது. அவர்கள்தான் உண்மையான முஸ்லிம்கள் என்று இஸ்லாம் சான்றும் கூறுகின்றது. அப்படி பின்பற்றி நடக்காதவர்களை முஸ்லிம்கள் இல்லையென்று எச்சரிக்கையும் செய்கின்றது.

நபி (ஸல்)அவர்கள் "யார் பிற சமூகத்தை பின்பற்றுகின்றார்களோ அவர்கள் என்னை சார்ந்தவர்கள் இல்லை" என கூறினார்கள்.

இஸ்லாத்தில் மனித வாழ்க்கைக்கு அவசியமான தேவையான சட்டங்கள் இல்லையென்றால் பிற மதத்துடைய சட்டங்கள் தேவைப்படும். ஆனால் மனித சமுதாயத்திற்கு தேவையான முழுமையான சட்டங்கள் பூரணமாக இறைதூதரின் மேற்பார்வையிலேயே லட்சக்கணக்கான தோழர்களுக்கு மத்தியில் அரஃபா மைதானத்தில் நான் கொண்டு வந்த இறைச் செய்தியை முழுமையாக பூர்த்தியாக்கிவிட்டேனா என்று கேட்டு, அந்த தோழர்கள் ஆம் என்று செல்ல அல்லாஹ்வே நீ சாட்சி, அல்லாஹ்வே நீ சாட்சி, அல்லாஹ்வே நீ சாட்சியென சாட்சி கூறி சரித்திரமாக்கப் பட்டவையாகும். இதை அல்லாஹ்வும் அங்கீகரித்த வரலாறு உலக வரலாற்றிலேயே இஸ்லாத்திற்கு மட்டுமே உள்ள தனி சிறப்புகளில் ஒரு அங்கமாகும்.

இதை அல்லாஹ் இவ்வாறு அங்கீகரிக்கின்றான்.

5:3 இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;

ஆக, எல்லாம் பூர்த்தியாக்கப்பட்ட மார்க்கத்தில் வேறு மதத்தின் கொள்கைகளை ஏற்று நடப்பது பவமட்டுமல்ல, இஸ்லாத்திலிருந்து தூரமாக்கக் கூடிய பாரதூரமான செயலாகும். (அல்லாஹ் காப்பாற்றுவானாக.)

அதுபோலவே இந்துவை ஒரு முஸ்லிம் பெண் திருமணம் செய்து கொள்வதும் வாழ்க்கையில் ஒருபோதும் ஒத்துவராத காரியமாகும் ஏனென்றால் இரண்டும் மதமும் இரு துருவங்களாகும். இரண்டும் இரண்டு தன்டவாளங்களைப் போன்றதாகும். அது என்றுமே ஒன்று சேராதது. காரணம் இஸ்லாம் மதம் உயிர் உள்ளவரை ஒரே இறைவனை வணங்கவேண்டும் என ஓரிறை கொள்கையை போதிக்கக் கூடியது ஆனால் இந்து மதம் அப்படியல்ல.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது ஏட்டளவில் மட்டும்தான். தெருவுக்கொரு தெய்வம் என்பது மாறி வீட்டுக்கொரு தெய்வமாகி விட்ட நிலையில் புதிய தம்பதிகளான இவர்கள் ஏதாவது ஒரு மதத்தை தேர்ந்து எடுக்க வேண்டிய நிலைக்கு நிர்பந்தமாக தள்ளப்படுகின்றனர். இல்லையென்றால் குழந்தைகளின் எதிர் காலம் பாதிக்கப்படும். அந்த குழந்தையை எந்த மதத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும், பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும் போன்ற சட்டப் பிரச்சனைகளையும் சிந்திக்க வேண்டியுள்ளன. மோகம் முப்பது நாட்கள் ஆசை அறுபது நாட்கள் என்பார்கள் ஆக தொன்நூறு நாட்கள் முடிந்த பிறகு சிந்திக்க வேண்டியதை இஸ்லாம் முன் கூட்டியே சிந்திக்க தூண்டுகின்றது.

Monday, September 12, 2005

ஒற்றுமைக்கு வழி!



கேள்வி : சத்திய இஸ்லாமை பரப்ப முன்வருபவர்களும் கூட சைத்தானின் 'கர்வ'க்கண்ணியில் சிக்கிக்கொள்வதேன்? நாங்களே சத்தியப்பாதையில் இருக்கிறோம் என்றே ஒவ்வொரு பிரிவும் உரிமைக் கொண்டாடினால் எங்களைப் போன்ற பாமரர்கள் எப்படி விளங்குவது? என் கருத்து ஆர்ப்பாட்டம் - ஆரவாரமின்றி (எந்த லேபிளும் ஒட்டிக்கொள்ளாமல்) - இயன்றவரை - குர்ஆன்-ஹதீஸ் படி நடப்பவர்களே - அந்த சரியான 73 ஆம் கூட்டத்தார்கள். உங்களின் உள்ளார்ந்த பதில்? (நான் இப்படி கேட்கக் காரணம்: அமைப்பிலுள்ளவர்கள் தம் தம் அமைப்புகளின் பெயருக்காக போராடும் அளவுக்குக்கூட - இஸ்லாத்திற்காக களம் காண்பதில்லையே..? பெயர் பெறுவதற்காகவே பெரும்பாலும் செயல்பாடுகள்?)


பொதுவாக அமைப்புகளோ, இயக்கங்களோ ஆரம்பிக்கப்படும் போது 'நிர்வாகத்திற்காக ஒரு லேபிள் தேவைப்படுகிறது. மற்றப்படி எந்த பிரிவினைக்காகவும் நாங்கள் தனிப் பெயரிடுவதில்லை' என்று தான் கூறி ஆரம்பிக்கிறார்கள். அமைப்போ, இயக்கமோ கொஞ்சம் வளர்ச்சி அடைந்த பிறகு நிர்வாகத்திற்காக என்று அவர்கள் சொன்ன லேபிளே அவர்களை தனித்து அடையாளம் காட்டி விடுகிறது. பிற்காலத்தில் அதுவே சமூகத்தை பிரித்து வைக்கவும் காரணமாகி விடுகிறது. ஒவ்வொரு இயக்கத்துடைய, அமைப்புடைய அறிஞர்கள் இதை உணர்ந்தாலும் என்னவோ தெரியவில்லை மீண்டும் அதிலேயே நிலைத்து நிற்க ஆசைப்படுகிறார்கள்.

இயக்க வாதிகள் தங்கள் இயக்கத்தில் நின்றுதான் இஸ்லாத்தை பார்க்கிறார்களே தவிர இஸ்லாத்தில் நின்று இயக்கத்தைப் பார்ப்பதில்லை. இதன் விளைவு தங்கள் இயக்கமல்லாத பிற இயக்கங்கள் செய்யும் இஸ்லாமிய பணியை இவர்களால் அங்கீகரிக்க முடியாமல் போய் விடுகிறது. ஏதோ சில காரியங்களில் ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தை அனுசரித்துப் போகிறதே தவிர ஒருங்கிணையும் முழுமையான மன நிலை அவர்களிடம் இல்லை என்பது உண்மைதான்.

1992 பாபர் மஸ்ஜித் தகர்;ந்த பிறகு தொடர்ந்து முஸ்லிம்கள் கடும் துன்பத்திற்கும் பிறரது அடக்கு முறைக்கும் ஆளாகி உயிரிழந்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக நடந்து முடிந்துள்ளது உயிரை உறைய வைக்கும் குஜராத் கலவரம். ஒவ்வொரு முறை முஸ்லிம்கள் கருவறுக்கப்படும் போதும் இதே அறிஞர்கள் 'முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லாததுதான் இந்த கொடுமைகளுக்குக் காரணம். ஓரணியில் எல்லோரும் ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயம். நாம் ஒற்றுமையாக இருந்தால் எந்த சக்தியாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது' என்றெல்லாம் குரல் உயர்த்தி பேசியுள்ளார்கள். இப்படி பேசிய எவரும் தங்கள் இயக்கத்திலிருந்து இறங்கி இன்னொரு இயக்கத்தை அங்கீகரித்ததை பார்க்கவே முடியவில்லை.

ஆனால் புதிய இயக்கங்கள் துவங்கப்படுவதை மட்டும் பார்க்க முடிகிறது.

ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்காமல் ஒருங்கிணைவது காலத்தின் கட்டாயம் என்பதை நமக்கு நாமே முதலில் சொல்லிக் கொள்ளத் துவங்க வேண்டும். அப்போது தான் கொஞ்சக் காலத்திற்கு பிறகாவது இயக்க சிந்தனை மாறி ஓரணி என்ற லட்சியம் உயிரோட்டம் பெற துவங்கும்.

அடுத்து எங்களைப் போன்ற பாமரர்கள் என்ன செய்வது?.. என்று கேட்டு உங்களை நீங்களே பாமரராக அறிவித்துக் கொள்கிறீர்கள். ஒரு முஃமின் தன்னை தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது என்பது நபிமொழி (முஸ்லிம்) "பாமர மக்கள்" என்று ஒரு இனத்தை இறைவன் படைக்கவில்லை. இறைவனின் வழியில் முயற்சிக்காமல் போனால்தான் மனிதன் பாமரனாகிறான். அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன் என்று ஒரு முஸ்லிம் சொல்லிக் கொள்ள வெட்கப்பட் வேண்டும்.

இறைவனுடைய இஸ்லாமிய மார்க்கத்தை கற்பது இதர எல்லா கல்வியையும் கற்பதைவிட மிக சுலபமானதாகும். ஏனெனில் இறைவன்,
'அவன் இந்த மார்க்கத்தில் உங்களுக்கு எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை' என்கிறான். (அல் குர்ஆன் 22:78) சிரமமில்லை என்று கூறிவிட்ட பிறகு அதை சிரமமாக்கிக் கொள்வது யாருடைய தவறு..? இஸ்லாத்தை கற்க தனி கல்விமுறை எதுவுமில்லை. கற்க வேண்டும் என்ற ஆர்வமும் அதற்கான விடாமுயற்சியும் இருந்து இயங்கினால் மிக இலகுவாக மார்க்கத்தை கற்கலாம்.

எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கிறார்களோ நிச்சயமாக நாம் அவர்களை நம்முடைய நேரான வழியில் செலுத்துவோம். (அல் குர்ஆன் 29:69) இறைவனின் இந்த வசனம் நீங்களும் அறிஞராகலாம் என்று தூண்டவில்லையா..!

அடுத்து இன்னார்தான் 73வது கூட்டத்தார் என்று எந்தக் கூட்டத்தையும் கூறவே முடியாது. ஏனெனில் 'இறைவா.. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக..' என்று இறைவன் பிரார்த்திக்க சொல்கிறான். (அல் குர்ஆன் 1:6 நாம் நேர்வழியில்தான் இருக்கிறோம் என்று ஒருவனுக்கு உறுதியாகி விட்டால் இந்த பிரார்த்தனை அழுத்தமில்லாமல் போய்விடும். ஏன், அர்த்தமில்லாமல் கூட போய்விடும். இந்த பிரார்த்தனையை செய்யும் காலமெல்லாம் எவரும் நான் நேர்வழியை அடைந்து விட்டேன். 73வது கூட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. சொல்லிக் கொள்ளவே கூடாது.

குர்ஆனையும் குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் பின்பற்றிக் கொண்டு செல்லும் அதே வேளையில் நேர்வழிக்கான பிரார்த்தனையை இறைவனிடம் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். 73வது கூட்டம் எதுவென்று மறுமையில்தான் தெரியும்.


பிரிவினை பற்றி இஸ்லாம் கற்றுத் தரும் பாடம்.

இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவெனில் பிரிவு என்பது இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்று. இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிவுகளின்றி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதுதான் இஸ்லாம் கற்றுத் தரும் பாடம்.

'நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்: நீ;ங்கள் பிரிந்தும் விடாதீர்கள்' என்று அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல இம்ரானின் 103 வது வசனம் கூறுகிறது.

மேற்கண்ட குர்ஆனின் வசனத்தில் சொல்லப்படும் அல்லாஹ்வின் கயிறு எது தெரியுமா?. அருள்மறை குர்ஆன்தான். அருள்மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பற்றிப் பிடிக்க வேண்டும். இந்த வசனத்தில் இரண்டு கருத்துக்கள் தொணிக்கின்றன. அருள் மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் பற்றிப்பிடிப்பதுடன் - இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிந்துத் போகக் கூடாது என்கிற இரண்டு கருத்துக்களை மேற்படி வசனம் வலியுறுத்துகிறது.

'அல்லாஹ்வுக்கு கீழ் படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.' என்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஸாவின் 59வது வசனம் கூறுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாமியர்கள் பெறும் தெளிவு என்னவெனில் - அருள்மறை குர்ஆனையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் பின்பற்ற வேண்டும் என்பதேயாகும்.

இஸ்லாமிய மார்க்கம் பிரிவினைகள் உண்டாக்குவதை தடை செய்துள்ளது:

'நிச்சயமாக எவர்கள் தங்களளுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன்(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.' என அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் - ன் 159வது வசனம் கூறுகிறது. மேற்படி இறை வசனத்திலிருந்து நமக்கு தெரிவிக்கப்படும் செயதி என்னவெனில் எவர் இஸ்லாமிய மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து பல வகுப்பினராக பிரிந்து விட்டனரோ - அவர்களைவிட்டு உண்மையான இஸ்லாமியர்கள் விலகிவிட வேண்டும் என்பதுதான்.

ஆனால், ஒரு இஸ்லாமியனைப் பார்த்து, 'நீ யார்?. என்று கேள்வி எழுப்பப்பட்டால் அவரிடமிருந்து வரக்கூடிய பொதுவான பதில் 'நான் ஒரு ஸுன்னி' என்பதாகவோ அல்லது 'நான் ஒரு ஷியா' என்பதாகவோத்தான் இருக்கிறது. இன்னும் சிலர் தங்களை, 'ஷாஃபிஈ' என்றும், 'ஹனஃபி' என்றும் 'ஹம்பலி' என்றும் 'மாலிக்கி' என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'நான் ஒரு தேவ்பந்தி' என்றும் 'நான் ஒரு பெரல்வி' என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு உண்மையான இஸ்லாமியராக இருந்தார்கள்:

மேற்கண்டவாறு தங்களை அழைத்துக் கொள்ளும் இஸ்லாமியர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த பிரிவைச் சார்ந்தவர்கள் - அதாவது அவர்கள் 'ஷாஃபியா' அல்லது 'ஹனஃபியா' அல்லது 'ஹம்பலியா' அல்லது 'மாலிக்கியா?' என்று கேட்டுப் பாருங்கள். இல்லை. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு முன்புள்ள அல்லாஹ்வின் தூதர்களைப் போன்று ஒரு உண்மையான முஸ்லிம் என்பது மட்டுமே அவர்களது பதிலாக இருக்கும்.

அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்து ஆல - இம்ரானின் 54வது வசனம் நபி ஈஸா (அலை) அவர்கள் ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல - இம்ரானின் 67வது வசனம் நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் ஓர் யூதரோ அல்லது கிறிஸ்துவரோ அல்ல. அவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

உங்களை நீ;ங்கள் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டுங்கள் என அருள்மறை குர்ஆன் வலியுறுத்துகிறது:

எவராவது இஸ்லாமியர்களை நீங்கள் யார் என்று கேட்டால் - இஸ்லாமியர்கள் தாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர் என்று சொல்ல வேண்டுமேத் தவிர தாங்கள் ஓர் ஷாஃபிஈ என்றோ அல்லது தாங்கள் ஓர் ஹனஃபி என்றோ தவ்ஹீது ஜமாஅத் என்றோ ஜாக் என்றோ நஜாத் என்றோ சொல்லக் கூடாது.
அருள்மறை குர்ஆனின் நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம் ஸுரத்து ஹாமீம் ஸஜ்தாவின் 33வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.

'எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்து, 'நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?.(இருக்கின்றா

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் - நான் ஒரு முஸ்லிம் - என்று சொல்லுங்கள் என்பதாகும்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ( ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தபால் மூலமாக இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள். அவ்வாறு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் 64 வது வசனத்தின் கடைசி வரிகளாக அமைந்திருக்கும் 'நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்கிற வசனத்தை குறிப்பிட்டு தபால்களை அனுப்பி வைப்பார்கள்.

இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களுக்கு கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும்.

மரியாதைக்குரிய மார்க்க அறிஞர்களான இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்), இமாம் அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்) ஆகியோர் உட்பட இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் நாம் கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும். இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்து இஸ்லாத்திற்கு தந்த பல நல்ல செய்திகளுக்காக அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்கூலியை வழங்கட்டும். இஸ்லாமியர்கள் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ அல்லது இமாம் ஹனஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ - வெளியிடப்பட்ட கருத்துக்கள் குர்ஆன் - ஹதீஸுக்கு மாற்றமில்லாத பட்சத்தில் - எடுத்து செயல் படுத்துவதை எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் 'நீ யார்?' என்று இஸ்லாமியரை நோக்கி கேட்கப்படும் கேள்விக்கு 'நான் ஒரு முஸ்லிம்' என்பதுதான் பதிலாக இருக்க வேண்டும்.


நன்றி: இதுதான்இஸ்லாம்.காம்

Sunday, September 04, 2005

மதத்தின் காவலர்கள் பதில் சொல்லட்டும்!

புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே..!

உலகில் எந்த ஒரு மதமாக இருந்தாலும், கொள்கையாக இருந்தாலும், தத்துவங்களாக அல்லது இயக்கங்களாக இருந்தாலும் அதற்கென்று ஒரு வழிகாட்டுதல் உண்டு. அதற்கென்று ஒரு சட்ட ஒழுக்க நெறிமுறைகள் உள்ளது. அதனடிப்படையில் தான் அவைகள் இயங்கும் அந்த அடிப்படையில் தான் அதன் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் அமையும் அதனை பயன்படுத்தியே அதே இயக்கத்தை அல்லது ஏதோ ஒன்றை சேர்ந்த யாராவது தவறு செய்தால் தண்டிக்கவும் செய்வார்கள். இது உலக நியதியாகும். இப்படிப்பட்ட உலக நியதிக்கும் மனிதாபிமானத்திற்கும் யாராவது கட்டுப்படவில்லையெனில் அல்லது பங்கம் ஏற்படுத்துவார்கள் எனில் அவர்களை ஜாஹலியாக்கள் (அறியாமை காலத்து மக்கள்) அல்லது அறிவீனர்கள் என்று இஸ்லாம் வர்ணிக்கின்றது.

இங்கு நாம் விளக்க விரும்புகின்ற விஷயம், முஸ்லிம்கள் நடத்தக்கூடிய இஸ்லாமிய வார இதழ் அல்லது மாத இதழ்களில் அவ்வப்பொழுது யாராவது ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் பெயர்தாங்கி முஸ்லிம் அல்லது இஸ்லாமிய வரம்பை தாண்டியவர் என்று பிரசுரிக்கப்படுவதுண்டு. இதை அனேகம் பேர் படித்திருக்கக் கூடும்.

ஏனென்றால் அந்த அளவிற்கு அந்த மக்களுக்கு மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் மற்றவர்களின் கஷ்டத்தை தன் கஷ்டமாக உணரக்கூடிய தன்மையையும் இஸ்லாம் அடிப்படையிலேயே ஊட்டியுள்ளது. மனிதனை மனிதனாக வாழ அவனையும் மனிதனாக மதிக்க உலகிற்கு கற்றுக்கொடுத்த மதம் இஸ்லாம். "கருப்பச்சியின் மகனே!" என்று ஒருவர் மற்ற ஒரு நபரைக் கூப்பிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் இஸ்லாத்திற்கு மட்டுமே உரியதாகும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடைசி ஹஜ்ஜின் பொழுது நவின்றார்கள்:
'அறிந்து கொள்ளுங்கள் அஞ்ஞானக் கால வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன.

'ஓர் அரபிக்கு, அரபியல்லாதவரை விடவோ, ஓர் அரபியல்லாதவருக்கு ஓர் அரபியை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை, நீங்கள் அனைவரும் ஆதமின் வழித் தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்'

'முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள்'

'உங்கள் அடிமைகள் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். (அதாவது உங்கள் அடிமைகளுக்குரிய உரிமைகளைப் பேணிக்காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருங்கள்). நீங்கள் உண்பதையே அவர்களுக்கு ஊட்டுங்கள், நீங்கள் அணிவதையே அவர்களுக்கும் அணிவியுங்கள்.'

'அறியாமைக் காலத்தின் இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இனி பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தாரின் ரபூஆ பின் ஹர்ஸ் உடைய மகனுக்கான ரத்தப் பழியை ரத்து செய்கின்றேன். செல்லாதென அறிவிக்கின்றேன்'.

'அறியாமைக்கால வட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. (இனி எவரும் எவரிடமும் வட்டி தரும்படி கோர உரிமை இல்லை) அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தாரின் வட்டியை அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபிற்கு உரிய வட்டியை செல்லாதது ஆக்குகின்றேன்.'

'பெண்கள் விஷயத்தில் இறைவனை அஞ்சுங்கள். பெண்கள் மீது உங்களுக்கும் உங்கள் மீது பெண்களுக்கும் உரிமையுள்ளது.'

'இந்த நாளும் இந்த மாதமும் இந்த இடமும் கண்ணியத்திற்குரியனவாய் விளங்குவது போன்றே உங்கள் இரத்தமும் உங்கள் செல்வமும் இறுதித் தீர்ப்புநாள் வரை கண்ணியத்திற்குரியவை. ஒருவருக்கொருவர் அதனை மதித்து கண்ணியப்படுத்த வேண்டும்'


இவை சாதாரண வார்தைகளில்லை! உலகத்தின் தலைவிதியையே மாற்றியமைத்த வார்த்தையாகும். இஸ்லாமிய சரித்திரத்தில் பொன்னேடுகளில் பொறித்த வைரவரிகள். அந்த வரிகளை பின்பற்றி நடக்க விரும்புகின்றவர்கள் தான் முஸ்லிம்கள்.

இந்த அளவிற்கு மனித சமூகத்திற்கு எது நன்மை பயக்கும் எது கேடு விளைவிக்கும் என்பதை தெளிவு படுத்தியதால்தான் அந்த எல்லைக் கோட்டை தாண்டியவர்களை பெயர்தாங்கி முஸ்லிம்கள் என்று தைரியமாக சொல்லமுடிகின்றது.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்...

( 6:108). அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.

(5:32) அநியாயமாக ஒரு மனிதரை கொலை செய்தவன் மனித சமுதாயத்தையே கொலை செய்தவன் போலாவான்.

(2:191 ) ஃபித்னா(குழப்பம்) செய்வது கொலை செய்வதைவிட கொடூரமானது.

இந்த அளவிற்கு மென்மையையும், மனிதநேயத்தை மதிக்கும் தன்மையையும், இவ்வுலக வாழ்க்கையின் லட்சியத்தையும், பூமியில் அவன் வாழவேண்டிய முறையையும் இஸ்லாம் முறையாக கற்று கொடுக்கின்றது. இதை பின்பற்றுபவர்கள் தான் முஸ்லிம்கள். அதை மீறுபவர்களை பெயர்தாங்கி முஸ்லிம்கள் என்கிறது இஸ்லாம்.

இந்த கண்ணியம் உலகிலேயே இஸ்லாத்தில் மட்டுமே காணமுடியும். அதைப்போல் இந்து மதத்தையும் இந்திய பாரம்பரியத்தையும் கட்டிக்காக்க புறப்பட்டு உள்ளவர்கள், அவர்களில் வரம்பு மீறுபவர்களை பெயர்தாங்கி இந்துக்கள் என்று சொல்லவாவது தைரியம் உள்ளதா?

உள்ளவர்கள்-இல்லாதவர்களையும், மெஜாரட்டி-மைனாரட்டியையும் அரவணைத்து செல்வதும் மனிதர்களின் உரிமையை மதிப்பதும் அவர்களின் மான மரியாதைக்கு பங்கமில்லாமல் நடப்பதும்தான் உலகநீதி. அதனால் தான் ஆங்கிலேயர்கள் இருநூறு ஆண்டுகாலம் முழுதாகஆட்சி செய்யமுடியாத இந்தியாவில் முஸ்லிம்கள் எட்டுநூறு ஆண்டுகள் ஆட்சி செய்யமுடிந்தது. அதனால் தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டம் போல முஸ்லிம்களுக்கு எதிராக நடத்த பாரத மக்கள் முன்வரவில்லை இதை சிந்தித்தால் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று கொக்கரிக்கின்றவர்களின் பொய் முகம் தெரியவரும்.

பிறரின் உயிரையும் உடமையையும் சூறையாடித்தான் தான் சார்ந்த மதத்தை காப்பாற்ற வேண்டும் அல்லது பரப்ப வேண்டும் என்று எந்த மதமும் கூறவில்லை. மாறாக தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்று தான் இந்து மதம் கூட சொல்கின்றது.

ஆனால் தர்மத்தின் கண்களை கட்டி இந்தியாவின் 85 கோடி மக்களின் உரிமையை பறித்து மும்பையிலும், குஜராத்திலும், கோவையிலும் லட்சக்கணக்கான அப்பாவிகளின் உயிரையும் உடைமையையும் மண்ணில் போட்டு புதைத்த மனித இன துரோகிகளையும் அவர்களை சார்ந்தவர்களையும் நோக்கி கேட்கின்றோம். இதுதான் உங்கள் மதம் போதிக்கும் தர்மமா? இப்படித்தான் இந்துமதம் நீதியையும் நேர்மையையும் போதிக்கின்றதா? மதத்தின் காவலர்கள் பதில் சொல்லட்டும். அல்லது இந்து மதத்தின் காவலர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் இப்படிப்பட்ட மனித இனத் துரோகிகளை பெயர்தாங்கி இந்துக்கள் என்று சுட்டிக்காட்டவாவது தைரியம் உள்ளதா?

முஸ்லிம்களை இனம் காண அவர்களை சீர்படுத்த அவர்களிடம் நேர்வழி காட்டும் வேதநூல் உள்ளது. இந்துக்களை இனம் காண அவர்களின் வாழ்க்கை முறையை சீர்படுத்த உங்களின் வேதநூலை மக்களுக்கு போதியுங்கள். கற்றுக் கொடுங்கள் (இங்கே நாம் இந்துக்கள் என்று கூறுவது இந்து மதத்தின் காவலர்கள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்பவர்களை)

அதை மக்களுக்கு கற்றுத்தர மாட்டார்கள் ஆனால் இதோ நாம் இஸ்லாமிய மார்க்கத்தை மட்டுமல்ல. இந்து மதத்தைப் பற்றியும் கற்றுத் தருகின்றோம்.
மனுஸ்மிர்தி - மனுதர்மம் - அதாவது ஹிந்து மதத்தின் வேதநூல் பிராமணர்களைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.

அ). பிராமணன் தர்மத்தை நிறைவு செய்வதற்காகப் பிறந்தவன். இந்த உலகில் என்னென்னவெல்லாம் இருக்கின்றனவோ இவை அனைத்தும் ஒரு பிராமணனுக்குச் சொந்தம். அவன் பிறப்பால் அடைந்த உயர்வால் அவன் அத்தனைக்கும் சொந்தக்காரனாகின்றான். இந்த உலகில் இருப்பவை அனைத்தும் பிராமணனின தயவால் ஜீவித்துக் கொண்டிருக்கின்றன.

ஆ). அறிவற்றவனோ அறிவாளியோ எந்த நிலையிலும் ஓர் பிராமணன் உயர்ந்தவனே! மூன்று உலகங்களும் அவற்றிலிருக்கும் கடவுள்களும் பிராமணனால் இருந்து கொண்டிருக்கின்றன.

பிராமணர்களைப் பற்றித் தீதாகப் பேசிய சூத்திரனின் நாக்கை அறுத்திட வேண்டும். முதல் மூன்று உயர்ஜாதியனரோடும் தன்னை சமமாக எண்ணும் அளவுக்கு எந்தக் கீழ் ஜாதிக்காரனும் நெஞ்சுரம் கொண்டால் அவனை சவுக்கால் அடிக்க வேண்டும். (அப்பஸ்தம்பா தர்மல் சூத்திரம் : 111-10-26)

வேதம் ஓதுவதை காதால் கேட்டுவிட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவன் காதுகளில் ஊற்றிடவேண்டும். அவன் வேதத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுத்துத் துண்டாக்கிட வேண்டும். வேத நாதங்களை அவன் உள்ளத்தில் தேக்கி வைத்தால் அவனது உடலைக் கண்ட துண்டங்களாகத் துண்டாடிட வேண்டும். (மனுவின் விதி 167-272)

பிராமண தர்மத்தை சூத்திரன் ஒருவன் கற்றுக் கொள்ளவோ கற்றுக் கொடுக்கவோ துணிவானேயானால் அரசன் நன்றாக சூடான எண்ணையை அவனுடைய காதுகளிலும்இ வாயிலும் ஊற்றிட வேண்டும். மனுவின்விதி இன்னும் சொல்கின்றது.

பிராமணன் என்னதான் குரூரமான குற்றத்தைச் செய்தாலும் அவனைத் தண்டிக்க இயலாது.

டாக்டர் அம்பேத்கார் அவர்கள் பிராமணர்களின் கொள்கைகள் பற்றி இப்படிக் கூறுகின்றார்கள்:

1. பல்வேறு வகுப்பாருக்கும் இடையே தராதரம் அது நிரந்தரம்.
2. சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் நிராயுதபாணிகளாக ஆக்கிவிடுவது.
3. சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவர்களுக்கும் கல்வியை முற்றாக மறுத்துவிடுவது.
4. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் அதிகாரங்களை முற்றாகத் தடை செய்துவிடுவது. அல்லது மறுத்துவிடுவது.
5. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் சொத்து உரிமையை மறுத்துவிடுவது.
6. பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுத்துவிடுவது. அவர்களை நசுக்கப்பட்டவர்களாகவே வைத்துக் கொண்டிருப்பது.


ஆக ஏற்றத்தாழ்வுகள் பிராமணர்களின் அதிகார பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைக் கோட்பாடு மனுஸ்மிர்தி 204 அபபி J.A. Duboils (டுபாயில்ஸ்) என்பவர் Hindu Manners Customs and Cermonies என்ற நூலில் (Oxford Third Edition 1906, Page 139) ஹிந்து மந்திரம் ஒன்றை இப்படி மொழிபெயர்த்துள்ளார்.
இந்த பிரபஞ்சம் கடவுள்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றது.
கடவுள்கள் மந்திரங்களின் சக்தியின் கீழ் இருக்கின்றார்கள்.
மந்திரங்கள் பிராமணர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றன.
எனவே பிராமணர்கள் நமது கடவுள்கள் அல்லது கடவுள்களை கைகளில் வைத்துக் கொண்டிருக்பவர்கள் (என்று கூறி ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அந்த கூட்டத்தை நாம் இனம் காண வேண்டும்)

இதுதான் இந்துமதம் போதிக்கும் நாகரீகமாகும். இதை அவர்கள் போதிப்பதற்கு மனமில்லை. அதனால்தான் முஸ்லிம்கள் தீவிரவாதிகள், மதமற்ற தடை சட்டம், பசுவதை தடைசட்டம், இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானின் ஏஜண்டுகள் என்றெல்லாம் கூறி இள ரத்தத்தில் சூடேற்றி குளிர்காய நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு நாங்கள் இன்னும் மடையர்கள் இல்லை என்பதை மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் மடத்தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

- குலசை ஸாலிஹ்