Saturday, September 29, 2007

இன்றும் தொடரும் அவதூறு பிரச்சாரம்

குர்ஆன் விடுத்த சவால் பாகம் 2

இந்த சம்பவம் 1425 வருடத்திற்கு முன்பு மட்டும் எடுத்த முடிவல்ல, அன்று வலீதின் தலைமையில் ஒன்றுகூடி எடுக்கப்பட்ட முடிவை இன்றும் அதன் பின் வாரிசுகளாக வரக்கூடிய மேற்குலகிற்கு டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவர் போன்று, தமிழ் உலகிற்கு நேசகுமாரும் அவருடைய பரிவாரங்களும் செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் வெற்றிதான் அடையமுடியவில்லை. அவர்களால் முடியாது, உலகம் அழியும் நாள்வரை முயற்சித்தாலும் அவர்களால் வெற்றியடைய முடியவே முடியாது.




வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை - ஒரு பார்வை டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவரின் கட்டுரையைத் தழுவி தமிழில் நேசகுமார் என்பவன் மொழிபெயர்த்துள்ளான். அதற்கு பதில் இங்கு உள்ளது


அவன் கூறிய அதன் சுருக்கத்தை இங்கே தருகின்றேன்.

ஆழ்மனது பற்றிய கண்டுபிடிப்புக்களே இது போன்ற விஷயங்களை இன்று நாம் புரிந்து கொள்ள வழிவகை செய்கின்றன மனோதத்துவ பாடப்புத்தகங்களை படித்துப்பார்த்தால், இது போன்று எண்ணற்ற சம்பவங்களைக் காணலாம். தன்னையறியாமல் தன்னுள்ளே உருவாக்கிக் கொண்ட மனோபிம்பங்களில் ஆழ்ந்துவிட்ட பலர் தமக்கு நிஜமாகவே குரல்கள் கேட்கின்றன, தீர்க்க தரிசனங்கள் கிட்டுகின்றன என்றும், இவற்றை இதற்கு முன்னர் கேட்டதில்லை என்றும் உரைப்பதை இந்நூல்களில் காணலாம்.

ஆனால், இவற்றை மனோவியல் நிபுணர்கள் ஆழ்ந்து ஆய்ந்தபோது, எப்போதே கேட்ட, பார்த்த சம்பவங்களே இந்த கற்பனைக்குரல்களில், அக-புற தரிசனங்களில் வெளிப்படுகின்றன என்பதை அறிந்தனர். இவற்றை நமது மேல்மனம் மறந்திருக்கலாம், ஆனால் நாமறியா நமது ஆழ்மனம் இவற்றைப் பதிவு செய்து இதுபோன்ற பிரமைகளின்மூலம் மேலே கொணர்கின்றது." ஒரு கனவினைப் போலவே இது போன்ற 'வெளிப்பாட்டுகளின்' போதும், மனமானது தான் முன்னர் கண்டு, கேட்ட சம்பவங்களின் பதிவுகளை நமது உணர்வின் மேல் மட்டங்களுக்கு கொண்டுவந்து காட்டுகிறது. "

ஆகவே, கிறிஸ்துவர்களிடமிருந்தும் யூதர்களிடமிருந்தும் கண்டு
கேட்டறிந்தவற்றையே இதுபோன்ற இறைவெளிப்பாடுகளின் மூலம் முகம்மது கண்டுணர்ந்தார் என்கிற முடிவுக்கு நம்மால் வர இயலுகிறது. ஆகவே, முகம்மது முன்னர் கண்டுணர்ந்தவை,
கேட்டறிந்தவை, ஆழ்மனதின் பிம்பங்கள் ஆகியவை அவரது எண்ணங்களோடும், யூகங்களோடும், தீர்மானங்களோடும், நியாயங்களோடும் ஒன்றிணைந்து, பின்னிப் பினைந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதைக்கப்பட்டு தீர்க்க தரிசனங்களாகவும், இறைச் சத்தியங்களாகவும், உலக உண்மைகளாகவும் 'வஹி' மூலம் அவரே தீர்மானமாக நம்பும்படி வெளிப்பட்டன.

இதனாலேயே, அவரது மனதின் அடியாழத்தில் இருந்த இவை மற்றவர்களுக்கு வெளிப்படாமல் அவருக்கு மட்டுமே வெளிப்பட்டன." …… அதற்கு சில அறிவிலிகளின் ஆதாரமும்
கூட ராடின்ஸன் கூறுகிறார்: சூனியத்தில் முகம்மதுவின் ஆன்மா ஆழ்ந்தெழுந்தபோது ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்கொள்வதையும், அதற்கு தான் அடிபணிவதையும் தனது உத்வேக நிலையிம் முகம்மது உணர்ந்தார். அப்போது அவரின் தனித்துவம் விடைபெற்றுக் கொண்டு அவ்விடத்தில் இந்த அமானுஷ்ய சக்தி இறங்கி ஆக்கிரமித்துக் கொண்டது இத்தருணங்களில் அவருக்கு மேலே விவரித்த அனுபவங்கள் ஏற்பட்டன - அவருக்கு சில தரிசனங்கள் கிட்டின,
குரல்களைக் கேட்டார், இவை வெளிமுகமாகவோ சில சமயங்களில் மனதிற்குள்ளாகவோ அல்லது கற்பனை வெளிகளிலோ அவருக்கு வெளிப்பட்டன.

இது போன்று ஏற்படும் உணர்ச்சிவயப்பட்ட ஆவேச நிலைகளும், புலணுணர்வுகளும் பொதுவாக அனைவராலும் ஒப்புக் கொள்ளப்ப்பட்ட ஹிஸ்டீரியா, ஸ்கிசோப்ரெனியா, கட்டுப்பாடற்ற குழறல்கள் போன்ற மனப்பிறழ்வுகளின் தன்மைகளுடன் ஒத்திருக்கின்றன."


அட அநியாயக்காரனே நீ இப்படித்தான் சொல்வாய், சொன்னாய் என்பதை இன்று நீ எங்களுக்கு சொல்லவேண்டிய தேவையில்லை இதோ பார் உன்னையும், என்னையும் படைத்த அந்த அல்லாஹ்வே 1427 வருடங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டான். இதோ அந்த பொன்வசனங்கள்

25:3. (எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டார்கள் (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள் தங்களுக்கு நன்மை செய்து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள் மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மறிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.

25:4. இன்னும் இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள் என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களுக்கு ஓர் அநியாயத்தையும் பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.

25:5. இன்னும் அவர்கள் கூறுகிறார்கள் இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் ஆகவே அவை அவருக்கு முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.

25:6. (நபியே!) வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான் நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான் என்று கூறுவீராக!

25:7. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?

25:8. அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்) அன்றியும், இந்த அநியாயக்காரர்கள் (முஃமின்களை நோக்கி) சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்றும் கூறுகிறார்கள்.

25:9. (நபியே!) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழிகெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.

அட மனிதனே இவன் இப்படித்தான் செய்வான் என்று 1427 வருடத்திற்கு முன்னாலே சொல்லி இருந்தும், அதையே அப்படியே நீ இன்றும் சொன்னால் உன்னை பைத்தியக்காரன் என்பதா? மடையன் என்பதா?? என்பதை நீயே யோசித்துப்பார். (அதுசரி!! அதுஎப்படி அன்றிலிருந்து இன்றுவரை அடிபிரலாமல் அப்படியே வெட்கமின்றி சொல்கின்றீர்கள். அதுவும் சொன்னதையே சொல்கின்றீர்கள்.)

உலகிற்கு அவனுடைய அறிவுரை (சிரிப்பதற்கு) தனிப்பட்ட சம்பாஷணைகளில், நாகரிகமான முறையில் இஸ்லாத்தின் இந்த அடிப்படை நம்பிக்கை குறித்த நம் சந்தேகங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். என் மதமே எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று யாராவது அவ்வப்போது சொன்னாலும், இதைத் தெளிவாய் எடுத்துச் சொல்லலாம். இஸ்லாமியராய்ப் பிறந்தவர்களுக்குச் சில எல்லைகள் உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தைக் குறித்து விமர்சனம் செய்வது கிட்டத்தட்ட அவர்களால் இயலாத காரியம்.

சில நாடுகளில் இது தெய்வகுற்றமென்று மரணதண்டனையும் காத்திருக்கும். இருந்தாலும், இஸ்லாத்தை விட்டு வந்த சில தைரியசாலிகள்தான் அவர்களின் சகோதர சகோதரிகளுக்குக் கதவைத் திறந்து விட வேண்டும். நம்மைப் போன்ற இஸ்லாமியர் அல்லாதவர் அவர்களின் அடிப்படை பிரச்னைகளை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அதற்குச் செவி கொடுக்கும் இஸ்லாமியர் குறைவாகவே இருப்பார்கள்.

'இஸ்லாத்தின் அமானுட அடிப்படை'யை நாம் ஒரு பார்வை பார்த்தது போல், அறிவியல் ரீதியான தகவல்களை, குறைந்தபட்சம் அரசாங்கப் பள்ளிகளில், பள்ளிக் குழந்தைகளுக்குப் பொதுப்பாடமாய் வைக்க நாம் முயல வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமியக் குழந்தைகளுக்கு இது ஒரு வகையில் தீர்க்கமாய் யோசிக்க உதவும். ஆனால் அவர்களின் பெற்றோர் இதையெல்லாம் 'நம்பிக்கை அற்றவர்கள்' சொல்வது என்று புறந்தள்ளி விடலாம்.

யோசித்துப் பார்த்தால், ஒரு முஸ்லிமாய்ப் பிறந்து வளர்ந்தவர் ஆழமாய்ச் சிந்தித்து தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள மாயவலையை உடைத்துக் கொண்டு வெளியே வந்து, தன்னைச்
சார்ந்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதே சிறந்தவழி.

அதனால்தான் மனம் திறந்து பேசுவதையே அவர்கள் அபாயமாகக் கருதுகிறார்கள் போலும். இருந்தாலும் எனக்கு ஒரு நம்பிக்கை.

சமீபத்தில் பிரபலமாகி வரும், செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு, இண்டர்நெட் என்ற தடைகளை உடைத்து வரும் ஊடகப் புரட்சி, இவை எங்கோ அரேபியாவின் மூலைமுடுக்கில் இருக்கும் ஒரு கிராமத்தைக் கூட சென்றடையும் வாய்ப்பு இதையெல்லாம் நினைக்கும்போது எனக்கு நம்பிக்கை துளிர்க்கிறது. இஸ்லாமிய மனநிலையில் பரவலாய் ஒரு மாற்றம் வரும். அது இடைக்காலத்திய சிந்தனைகளை விட்டு வெளியே வரும்.

கடவுளுக்கு மகன் உண்டு என்று கருதுவோர் தீயோர் என்பது வஹி மூலம் அல்லாஹ் அறிவித்த ஒன்று. கிறிஸ்துவர்களை துன்புறுத்தும் சவுதி அரசை குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும், சுதந்திரமாக செயல்படக்கூடாது என்பது தாலிபான்களின் தீர்ப்பு அல்ல, வஹி மூலம் அல்லாஹ் மனிதகுலத்துக்கு இட்ட கட்டளை.

நடத்தை தவறியவர்கள் என்று கருதும் பெண்களை கல்லால் அடித்துக் கொள்வது ஈரான் அரசின் கண்டுபிடிப்பு அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் ஒரு சமூகத்தையே தாம் கல்லால் அடித்துக் கொன்றதாக அல்லாஹ் வஹி மூலம் அறிவித்துள்ளார்.

பெஸ்லானில் குழந்தைகளைக் கொன்றதற்காக தீவிரவாதிகளைக் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. குழந்தைகளும் எதிரிகளே என்பது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தவொன்று.

ஜிஹாத் செய்து எதிரிகளை அழிக்கும்போது அவர்களின் பெண்களை கற்பழிக்கலாம் என்பது நபிகள் நாயகமோ, அல்லது 1400 வருடங்களுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சமூகங்களின்
வழக்கமோ அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது. தெளிவாக இப்படிப் பிடித்து அடிமைகளாக்கப் படும் பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதை வஹி மூலம் அல்லாஹ் ஹலாலாக்கியிருக்கின்றார்.

மேலும், இதெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விஷயங்கள், அப்போது இதுதான் அனைத்து சமூகங்களிலும்
வழக்கமாயிருந்தது ஆகவே இப்போது அதெல்லாம் தவறு என்று கருதுவோர்களுக்கும் அல்லாஹ் தெளிவாக அப்போதே வஹி மூலம் அறிவித்திருக்கின்றார், இதெல்லாம் மாற்றமுடியாத
கட்டளைகள் - இறுதித்தீர்ப்பு நாள் வரைக்கும் இவற்றை முஃமீன்கள்(நம்பிக்கையுள்ளோர் - முஸ்லிம்கள்) பின்பற்றப்பட வேண்டியவை,

இவற்றை மறுப்பது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப் பட்ட ஒன்று, அப்படி மாறுபாடு செய்வோர் தலையில் கொதிக்கும் தண்ணீர் ஊற்றப்படும், உருக்கும் செம்பை குடிக்க வைக்கப் படுவார்கள், தீயில் வறுத்து எடுக்கப் படுவார்கள் என்று கூறி மக்களை ஒருவகையான பிரம்மையில் மிதக்கச் செய்துவிட்டார்.

அதனால் இவை எல்லாம் மன பாதிப்பின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களாகும் வஹியல்ல என வாதிடுகின்றான் மன நோயாலியான கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவனும், அவனுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய தமிழக வந்தேரிகளின் கைப்பாகையான நேசகுமாரும். தும்பைவிட்டு வாலைப்பிடிக்கின்றான் என்பார்கள் அதுபோல் குர்ஆனின் சவாலை ஏற்க சக்தியற்றவர்கள் நபியை கேலி செய்தும், குர் ஆனை எரித்தும் தம் இயலாமையை ஏற்றுக் கொள்கின்றனர்.

அல்லாஹ்வின் எதிரிகளே இதோ உங்களின் அழுகிப்போன மூலையில் உதிக்கும் சிந்தனைக்கு சாவுமணி அடிக்கின்றது அல் குர்ஆன்.

61:8 அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர் ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.

இதற்கான சான்றுகள் உலக சரித்திரத்தின் வழி எங்கும் மடிந்து கிடக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

3 comments:

Fazil said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சகோதரரே !! தாஙள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் தவறானவை.

""""பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும்.

பெஸ்லானில் குழந்தைகளைக் கொன்றதற்காக தீவிரவாதிகளைக் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. குழந்தைகளும் எதிரிகளே என்பது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தவொன்று.

ஜிஹாத் செய்து எதிரிகளை அழிக்கும்போது அவர்களின் பெண்களை கற்பழிக்கலாம்.

தெளிவாக இப்படிப் பிடித்து அடிமைகளாக்கப் படும் பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதை வஹி மூலம் அல்லாஹ் ஹலாலாக்கியிருக்கின்றார்.""""


சகோதரரே!! தாஙள் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் இஸ்லாத்தில் இல்லாதவை. பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்வதால் விளையும் விபரீதங்கள் பல.

மேலும் குழந்தைகளயும், பெண்களையும், வயோதிகர்களையும் போரின் போது கொல்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் போரின் போது பெண்களை கற்பழிக்கலாம் என்பதெல்லாம் விபச்சாரமன்றி வேறில்லை.

ஆகவே தங்களுடைய இந்த கருத்துக்களை மாற்றியமைக்க வேண்டுகிறேன்.

மேலும் உங்களுடைய இந்த பணி சிறக்க வல்ல இறைவன் உதவி புரிவானாக!!

ஸாலிஹ்குலசை said...

வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்
சகோதரர் ஃபைஸல் அவர்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. சகோதரரே நீங்கள் என்னுடைய கட்டுரையின் கருத்தை அல்லது கட்டுரையை முழுமையாக படிக்கவில்லை என்று நினைக்கின்றேன். அந்த கருத்தை என்னுடைய கருத்தாக நான் சொல்லவில்லை இதோ சகோதரருக்காக மீண்டும் தருகின்றேன் //"அதனால் இவை எல்லாம் மன பாதிப்பின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களாகும் வஹியல்ல என வாதிடுகின்றான் மன நோயாலியான கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவனும், அவனுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய தமிழக வந்தேரிகளின் கைப்பாகையான நேசகுமாரும். //" இது கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை நேசகுமார் என்பவன் தமிழில் இஸ்லாத்தின் அமானுட அடிப்படை என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளான் அதைத்தான்
இன்றும் தொடரும் அவதூறு பிரச்சாரம் என்ற பெயரில் தந்துள்ளேன் மாற்றபடி சகோதரர் ஃபைஸல் குறிப்பிட்டது போல் அது என்னுடைய கருத்து அல்ல. வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் ஒரு கொள்கையின் கீழ் செயல்பட துவா செய்வோமாக!!

இறை அடியான் said...

very nice