பெண்கள் சிறந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்றெல்லாம் கூக்குறல் எழுப்பும் இந்த நவீன பெண்ணியக்கவாதிகள் யார் இவர்களின் பூர்வீகம் என்ன இவர்களின் நோக்கம் என்ன என்பதை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம் இந்து யூத-கிறிஸ்தவ மதத்தில் பெண்களைப்பற்றியான பார்வை என்ன?
தீமை புரியத்தூண்டுபவள் என்று பைபிளில் ஏவாளைப்பற்றி கூறப்பட்டிருப்பது யூத-கிறிஸ்தவ மதத்திலுள்ள பெண்களுக்கு எதிராக தொடர்ந்து மிகவும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளது. எல்லா பெண்களும் அவர்களின் தாயாரான ஏவாளிடமிடமிருந்து அவளுடைய குற்றத்தையும் கபடத்தனத்தையும் பரம்பரையாகப் பெற்றுள்ளனர் என்று நம்பப்படுகின்றனர். அதனால் அவர்கள் அனைவரும் நம்பத்தகாதவர்களாக ஒழுக்க ரீதியாக தாழ்ந்தவர்களாக தீயவர்களாக கருதப்படுகின்றனர்.
மாதவிடாய் கர்ப்பம் குழந்தைப்பேறு ஆகியவைகள் சபிக்கப்பட்ட பெண்ணினத்தின் என்றென்றும் நிலைத்திருக்கும் குற்றத்தின் தண்டனையாகவே கருதப்படுகின்றது. பைபிளிலுள்ள ஏவாள் அவளின் பெண் வாரிசுகளின் மீது எந்த வகையான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ள நாம் கடந்த காலத்திலுள்ள சில மிகவும் முக்கியமான யூத-கிறிஸ்தவர்களின் எழுத்துக்களை நோட்டமிட வேண்டும். பழைய ஏற்பாட்டிலிருந்து நாம் தொடங்குவோம்.
யூத மதத்தில் பெண்களின் பங்கு
ஞான இலக்கியம் என்று கூறப்படுவதில் காணப்படுவதாவது :
மரணத்தை விட கசப்பானவள் பெண். அவள் சிக்கவைக்கும் வலையாவாள் அவளின் இதயமோ கண்ணியாகும் மேலும் அவளின் கைகள் விலங்குகளாகும். இறைவனை மகிழ்விப்பவனோ அவளை விட்டு தப்புவான் ஆனால் பாவியையோ அவள் தன் வலைக்குள் சிக்கவைத்துவிடுவாள்... நான் தேடி தேடி காணமுடியாமலிருக்கும்போது ஆயிரம் பேரில் ஒரு நீதிமிக்கவனை கண்டுகொண்டேன். ஆனால் பெண்களிலோ அவர்களெல்லாரிலும் கூட ஒரு நீதிமிக்க பெண்ணை கூட காண முடியவில்லை. (நுஊஊடுநுளுஐயுளுவுநுளு 7:26-28)
கத்தோலிக்க பைபிளில் காணப்படும் ஹீப்ரு இலக்கியத்தின் மற்றொரு பாகத்தில் உள்ளதாவது:
பெண்ணின் தீமைக்கருகில் கூட வேறு எந்த தீமையும் வர முடியாது.... பாவம் பெண்ணிலேயே ஆரம்பித்தது. அவளாலேயே நாமெல்லோரும் இறப்பதால் அவளுக்கு நன்றிகள். (நுஊஊடுநுளுஐயுளுவுநுளு 7:26-28)
ஏவாளின் பாவத்தின் காரணமாக பெண்கள் மேல் சுமத்தப்பட்ட ஒன்பது வகையான சாபங்களை யூத அறிஞர்கள் பட்டியலிட்டுள்ளனர் :
பெண்ணிற்கு இறைவன் ஒன்பது சாபங்களையும் மரணத்தையும் விதித்தான்.
1.மாத விடாய் இரத்தத்தின் மூலமான துயரம்
2.பருவமடையும் போது இரத்தம் வருவதனால் ஏற்படும் துயரம்
3. கர்ப்பத்தால் ஏற்படும் துன்பம்
4. குழந்தை பெறும் போது ஏற்படும் துன்பம்
5.குழந்தைகளை வளர்ப்பதில் ஏற்படும் துன்பம்
6. துக்கித்தவள் போல அவள் தலையை மூடியிருத்தல்
7. தன் எஜமானனிற்கு நிலையாக பணி புரியும் அடிமையைப் போல அவள் தன் காதை துளைத்துக் கொள்ளுதல் (அடியாத்தி... இப்பத்தான் புரியுது பெம்பளைக்கி ஏன் காதுகுத்துராங்கன்னு) பார்ப்பணர்கள் இந்தியாவிற்குள் திணித்த கலாச்சாரத்திலும் இஸ்ரேலிய கலாச்சார வரலாற்றுப் பிண்ணனி உள்ளது
8.அவளின் சாட்சி நம்பப்படாதிருத்தில்
9.எல்லாவற்றிற்கும் பிறகு ..... மரணம்.
இப்போதும் கூட மதப்பிடிப்புள்ள யூத ஆண்கள் தங்களுடைய பிரார்த்தனையின் போது 'என்னை பெண்ணாக ஆக்காதிருந்த அகிலத்தின் அரசனான இறைவனே தூயவன்' என்று கூறுகின்றனர். பெண்கள் தங்களின் பிரார்த்தனையின் போது 'என்னை உன் விருப்பத்திற்கேற்ப படைத்த'என்று கூறி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர். பல யூத புத்தகங்களில் காணப்படும் மற்றொரு பிரார்த்தனை என்னவெனில் 'அந்நிய மதத்தவனாக என்னைப் படைக்காத இறைவன் புகழப்படுவாராக் பெண்ணாக என்னைப் படைக்காத இறைவன் புகழப்படுவாராக் என்னை அறிவீனனாக படைக்காத இறைவன் புகழப்படுவாராக.' என்பதாகும்.
கிறிஸ்துவ மதத்தில் பெண்களின் பங்கு
பைபிளினுடைய ஏவாளின் பங்கு யூத மதத்தை விட கிறிஸ்துவ மதத்தில் மிகவும் அதிகம். அவளுடைய பாவம் முழு கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கே மையமானதாகும் ஏனெனில் இவ்வுலகில் இயேசுவின் பணியைப் பற்றிய கிறிஸ்தவ கொள்கைக்கான காரணமே ஏவாள் இறைவனிற்கு கீழ்படியாதது என்பதினாலேயாகும். அவள் பாவம் செய்தாள் மேலும் அவளை பின்பற்றும்படி ஆதமையும் தூண்டினாள்.
அதன் விளைவாக இறைவன் அவர்களிருவரையும் சுவனத்திலிருந்து அவர்களின் காரணமாக சபிக்கப்பட்ட பூமிக்கு வெளியேற்றினான். இறைவனால் மன்னிக்கப்படாத அவர்களின் பாவத்தை அவர்கள் தங்களின் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றனர் அதன் காரணமாக எல்லா மனிதர்களுமே பாவத்தில் பிறக்கின்றனர். மனிதர்களை இந்த ஆதி பாவத்திலிருந்து நீக்கி பரிசுத்தப்படுத்துவதற்காக இறைவன் தேவ குமாரன் எனக் கருதப்படும் இயேசுவை சிலுவையில் பலி கொடுக்க வேண்டியதிருந்தது.
ஆகவே ஏவாள் தன்னுடைய சொந்த பாவத்திற்கும் அவளுடைய கணவனின் பாவத்திற்கும் முழு மனித இனத்தின் ஆதி பாவத்திற்கும் மற்றும் தேவ குமாரனின் மரணத்திற்கும் காரணமாவாள். வேறு வார்த்தைகளில் சொல்வதனால் ஒரு பெண் தன்னிச்சையாக செய்த செயலின் விளைவாக முழு மனித இனத்தையுமே பாவமுள்ளதாக்கி விட்டாள். அவளின் பெண் மக்களில் நிலை என்ன? அவர்கள் அவைளைப் போலவே அவர்களும் பாவிகளாவார்கள் அவர்களை பாவிகளாகவே நடத்தப்படவேண்டும். புனித
பவுலடியாரின் கடும் கண்டனத்தை கேளுங்கள்
ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம் பண்ணவும் புருஷன்மேல் அதிகாரம் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை அவள் அமைதியாயிருக்க வேண்டும். என்னத்தினாலெனில் முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான் பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். (1 திமோத்தி 2:11-14)
புனித தர்த்தலியன் தன்னுடைய 'மிகச் சிறந்த நேசத்திற்குரிய சகோதரிகளிடம்' பேசும் போது அவர்களை பவுலடியாரை விட கடுமையாக சாடுகிறார் :
நீங்கள் ஒவ்வொருவரும் ஏவாள் என்பது உங்களுக்கு தெரியாதா? இறைவனின் தண்டனை உங்களின் பெண் இனத்தின் மீது இந்தக் காலத்திலும் இருந்து வருகிறது. ஆகவே அதற்கான குற்றமும் (இப்பொழுதும்) இருந்தே தீர வேண்டும். நீங்கள் சாத்தான் நுழையக்கூடிய நுழைவாயில்;: தடுக்கப்பட்ட மரத்தை திறந்தவர்கள் நீங்கள்; தெய்வீக கட்டளையை முதன் முதலில் மீறியவர்கள் நீங்கள்; எவரைத் தாக்குவதற்கு சாத்தான் போதுமான வலிமையற்றவனாக இருந்தானோ அவரையே மயக்கிய பெண் நீங்கள்தான்; கடவுளின் சாயலான மனிதனையே நீங்கள் அழித்தீர்கள். நீங்கள் வரம்பு மீறியதாலேயே இறைமகன் கூட சாக நேர்ந்தது.
தன் முன்னோர்கள் விட்டுச் சென்ற (இத்தகைய கருத்து) சொத்திற்கு விசுவாசமானவராக புனித ஆகஸ்டின் விளங்கினார். தன்னுடைய ஒரு நண்பருக்கு அவர் இவ்வாறு எழுதுகிறார்:
'பெண் அவள் மனைவியாயிருந்தால் என்ன தாயாக இருந்தால் என்ன அதில் எந்த வித்தியாசமுமில்லை. பாவத்திற்கு தூண்டக் கூடிய ஏவாளாகவே எந்தப் பெண்ணும் இருக்கிறாள் என நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.... பெண்ணிற்கு பிள்ளை பெறும் வேலை இல்லாவிட்டால் அவளால் ஆணுக்கு வேறு எந்தப் பயனும் இருப்பதாக என்னால் காண முடியவில்லை.
இதற்கு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூட புனித தாமல் அக்யுனாஸ் பெண்களை குறைபாடுள்ளவர்களாகவே கருதினார்:
'பெண்ணின் தனிப்பட்ட குணத்தைப் பொறுத்த வரை அவள் தேவடியாளாகவே இருக்கிறாள். ஏனெனில் ஆணுடைய விந்திலுள்ள வீரியமுள்ள சக்தி அவனைப் போன்ற முழுமையான ஆணை உருவாக்குகிறது. ஆனால் அந்த வீரிய சக்தியில் ஏற்ப்பட்ட ஏதோ குறைவினாலோ அல்லது பலவீனத்தாலோ அல்லது சில வெளிப்புற செல்வாக்கின் விளைவினாலோதான் பெண் பிறக்கிறாள்.'
இறுதியாக புகழ் பெற்ற சீர்திருத்தவாதியான மார்டின் லூதரும் பெண்கள் குழந்தை பெறுவதைத்தவிர அவர்களால் வேறு எந்த நன்மையும் இருப்பதாக கருதவில்லை. பெண்கள் எத்தனை அதிகமான குழந்தைகள் பெற முடியுமோ அவ்வளவு குழந்தைகள் பெற வேண்டும். அதனால் அவர்களுக்கு எவ்வளவு பாரதூரமான விளைவு ஏற்பட்டாலும் சரியே.
'அவர்கள் (குழந்தை பெறுவதில்) வெறுப்புற்றாலும் ஏன் அதனால் இறந்து போக நேரிட்டாலும் ஒன்றும் பெரிதல்ல. அவர்கள் அதனால் (சாக நேரிடின்) சாகட்டும். ஏனெனில் அதற்காகத்தான் (குழந்தை பெறுவதற்காகத்தான்) அவர்கள் இருக்கிறார்கள்.'
பாவம் செய்யத் தூண்டிய ஏவாள்தான் இவர்கள் என நினைத்துக் கொண்டும் பெண்கள் மீண்டும் மீண்டும் இழிவுக்குள்ளாக்கப்படுகின்றனர். (ஏவாளைப் பற்றிய) ஆதியாகமத்தின் கதைக்கு நன்றிகள். மொத்தத்தில் யூத-கிறிஸ்தவ மதத்தில் பெண்களைப் பற்றிய கருத்தோட்டம் ஏவாளும் அவளின் பெண் சந்ததிகளும் பாவம் செய்யும் இயல்புள்ளவர்கள் என்ற நம்பிக்கையால் விஷமாக்கப்பட்டுள்ளது.
பெண்களைப் பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என நாம் இப்போது கவனித்தால் பெண்களைப் பற்றிய இஸ்லாத்தின் கருத்தோட்டம் யூத-கிறிஸ்தவ மதத்திலுள்ளதை விட மிகவும் அடிப்படையான வேறுபாட்டைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
நம் இந்து மதத்தில் பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருந்தது என்று சொல்லித் தெரிய வேண்டிய விஷயமல்ல அறிந்த உண்மைகள்தான்.
பெண்கள் பற்றி திருக்குர்ஆனே பேசட்டும்:
ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும் நம்பிக்கையாளர்களாகவும் கீழ்ப்படிபவர்களாகவும் வாய்மையாளர்களாகவும் பொறுமையுடையோராகவும் தானதர்மம் செய்பவர்களாகவும் நோன்பு நோற்பவர்களாகவும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ திண்ணமாக அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். (33:35)
இறை நம்பிக்கை கொண்ட ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள்: தீமையிலிருந்து தடுக்கிறார்கள். மேலும் தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்: ஜகாத்தும் கொடுக்கிறார்கள். மேலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டிருக்கும். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான். (9:71)
அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி கூறினான் : உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் - அவர் ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி - நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே. (3:195)
தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி - இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் - அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும். (40:40)
ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை (இவ்வுலகில்) தூய வாழ்வு வாழச் செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோர்க்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்க ஏற்ப நாம் கூலி வழங்குவோம். (16:97)
பெண்களைப் பற்றிய திருக்குர்ஆனின் கண்ணோட்டம் ஆண்களிலிருந்து மாறுபட்டதல்ல என்பது தெளிவு. அவர்கள் இருவரும் இறைவனின் படைப்புக்களே. அவர்களின் ரப்பை வணங்குவதும் நற்செயல்கள் புரிவதும் தீய செயல்களை தவிர்ப்பதுவுமே பூமியில் அவர்களின் உன்னத இலட்சியமாகும்.
அவர்கள் இதை எந்த அளவிற்கு சரியாக நிறைவேற்றுகிறார்கள் என்பதை வைத்தே மதிப்பிடப்படுவார்கள். பெண் சாத்தானின் நுழைவாயில் என்றோ அல்லது அவள் இயல்பிலேயே ஏமாற்றுக்காரி என்றோ திருக்குர்ஆன் ஒரு போதும் குறிப்பிடவில்லை. மேலும் ஆண் இறைவனின் சாயல் என்று திருக்குர்ஆன் ஒரு போதும் குறிப்பிடவில்லை: ஆண்கள் பெண்கள் அனைவரும் இறைவனின் படைப்புக்களே. அவ்வளவுதான். திருக்குர்ஆனைப் பொறுத்தவரை இவ்வுலகில் பெண்களின் பங்களிப்பு குழந்தை பெறுவதோடு நின்று விடுவதல்ல. மற்ற ஆண்கள் எந்த அளவிற்கு நற்காரியங்கள் செய்ய வேண்டுமோ அது போலவே அவர்களும் செய்ய வேண்டும். நேர்மையான பெண்களே இருந்ததில்லை என்று திருக்குர்ஆன் ஒருபோதும் சொன்னதில்லை.
அதற்கு மாறாக கன்னி மரியாள் பிர்அவுனின் மனைவி போன்றவர்களின் உயர்ந்த முன் மாதிரிகளை எல்லா நம்பிக்கையாளர்களும் பெண்களும் ஆண்களும் பின்பற்ற வேண்டும் என திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது:
பிர்அவ்னுடைய மனைவியை அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். ஒரு போது அவர் இறைஞ்சினார்: 'என் அதிபதியே எனக்காக உன்னிடத்தில் - சுவனத்தில் ஓர் இல்லத்தை அமைத்துத் தருவாயாக! மேலும் பிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக மேலும் கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக
மேலும் இம்ரானின் மகள் மர்யத்தை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக்காட்டுகிறான்: அவர் தம்முடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்தார். பிறகு நாம் நம்மிடமிருந்து ரூஹை அவருள் ஊதினோம். மேலும் அவர் தம்முடைய அதிபதியின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் மெய்ப்படுத்தினார். மேலும் அவர் கீழ்ப்படிந்து வாழ்வோரில் ஒருவராயும் இருந்தார். (66 11-12)
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியாவில் இருக்கக்கூடிய பார்ப்பணர்களின் நம்பிக்கையும் இஸ்ரேல் யூதர்களின் நம்பிக்கையும் ஒன்றுதான் என்பதாகும். (யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா… என்ற பாடல் தான் ஞாபகம் வருது போங்க)
இந்த அளவுக்கு பெண்களை கேவலமாக நினைக்கக்கூடிய கீழ் புத்திகொண்ட இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய சகோதரர்கள் டோண்டு, வஜ்ரா, நேசகுமார் வகையாராக்கள் பெண்களின் கற்பைப்பற்றி பெண்கள் கர்ப்பம் ஆகாமல் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றி அட்வைஸ் செய்ததில் ஒரு ஆச்சரியமும் இல்லை.
அதுதான் பெண்களுக்கு முழு சுதந்திரம் என்ற பெயரில் அவர்கள் எப்படி பெண்களை கேவலமாக நினைக்கின்றார்களோ முழு சுதந்,,,,,,,,,,,,,,,,,,திர அழகி போட்டிகள் என்ற பெயரில் அப்படியே செயல்படுத்தவும் துணிந்துவிட்டனர் பெண்களை பெண்களாக நினைப்பவர்களிடம் பபர்த்தீர்களா நாங்கள் தான் ஜெயித்தோம் என்று மார்தட்டி இருமாப்பு கொள்கின்றனர் பாவம் இதை பெண்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை
பெண்களுக்கே உரிய நீ அழகா? நான் அழகா? என்ற போட்டி மனப்பான்மையைவ(ஜ்)க்கிர புத்திகொண்டவர்கள் மிக அழகாக சூசகம் செய்து கொண்டனர்.
இதில் பெண்கள் பலிகடாக்கள். நாசமாவது சமூகம் & கலாச்சாரம்.
நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டுவர்ரேன் ரெண்டு பேரும் ஊதி ஊதி திம்போம்
பிற மதத்திலிருந்து விலகச்செய்த, எனது ஆன்மீகத் தேடல்களுக்கு விடையளித்த இஸ்லாத்தின் மீதான என் அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள இப்பதிவை தொடங்கியுள்ளேன். - ஸாலிஹ்குலசை
Tuesday, August 08, 2006
Monday, July 24, 2006
புராணங்களை படித்தும் புரியாதது
அல்லாஹ்வின் அருளால் இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக முழுநேர ஊழியர்களாகவும் கால வரையரையுற்ற தொண்டர்களாகவும் பேசி எழுதித்தள்ளிக்கொண்டே இருந்தாலும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை மேலோங்கச்செய்து கொண்டேதான் இருக்கின்றான், அல்ஹம்துலில்லாஹ்.
நிகழும் இந்த காலகட்டத்தில் இஸ்லாத்திற்கு எதிராக புனையப்படும் பொய்க் கணைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இவை அனைத்தும் இப்பொழுது நாம் சிந்தித்துத்தான் எழுதுகின்றோம் பேசுகின்றோம் என்ற நினைப்பில்தான் ஒவ்வொரு சிந்தனையாளன் என்ற பெயரில் உள்ள அறிவு சூனியங்களும் உள்ளனர்.
ஆனால் இஸ்லாமிய சரித்திரத்தின் வழியே சஞ்சரிக்கும் மனிதர்களுக்கு நன்றாகத் தெரியும் இவையனைத்தும் இஸ்லாத்தின் எதிரிகள் காலாகாலமாக சொல்லிக் கொண்டேயிருக்கும் கூப்பாடுகள்தான் என்று.
இந்த எழுத்துத்துறையில் உள்ள சில இஸ்லாமிய சிந்தனையாளர்கள் வரிந்துகட்டிக்கொண்டு இஸ்லாத்தின் எதிரிகளுக்கு என்னதான் பதில் எழுதினாலும் அவர்கள் அதையேதான் சிக்கிப்போன ஒலித்தட்டு போல திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே உள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இஸ்லாத்தின் எதிரிகள் என்னதான் கூப்பாடு போட்டாலும் இந்த சமுதாயத்திற்கு ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது அதுதான் அல்லாஹ் கொடுக்கும் வாக்குறுதி ஆம். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு வாக்குறுதியளிக்கின்றான்.
நிகழும் இந்த காலகட்டத்தில் இஸ்லாத்திற்கு எதிராக புனையப்படும் பொய்க் கணைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இவை அனைத்தும் இப்பொழுது நாம் சிந்தித்துத்தான் எழுதுகின்றோம் பேசுகின்றோம் என்ற நினைப்பில்தான் ஒவ்வொரு சிந்தனையாளன் என்ற பெயரில் உள்ள அறிவு சூனியங்களும் உள்ளனர்.
ஆனால் இஸ்லாமிய சரித்திரத்தின் வழியே சஞ்சரிக்கும் மனிதர்களுக்கு நன்றாகத் தெரியும் இவையனைத்தும் இஸ்லாத்தின் எதிரிகள் காலாகாலமாக சொல்லிக் கொண்டேயிருக்கும் கூப்பாடுகள்தான் என்று.
இந்த எழுத்துத்துறையில் உள்ள சில இஸ்லாமிய சிந்தனையாளர்கள் வரிந்துகட்டிக்கொண்டு இஸ்லாத்தின் எதிரிகளுக்கு என்னதான் பதில் எழுதினாலும் அவர்கள் அதையேதான் சிக்கிப்போன ஒலித்தட்டு போல திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே உள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இஸ்லாத்தின் எதிரிகள் என்னதான் கூப்பாடு போட்டாலும் இந்த சமுதாயத்திற்கு ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது அதுதான் அல்லாஹ் கொடுக்கும் வாக்குறுதி ஆம். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு வாக்குறுதியளிக்கின்றான்.
காஃபிர்கள் இஸ்லாத்தின் ஒளியை தன் வாயால் ஊதி அணைத்துவிட எண்ணுகின்றனர் இருப்பினும், அல்லாஹ் அவ்வொளியை பிரகாசிக்கச் செய்வான். (9:32)
இந்த இறைவசனத்திற்கு சான்றாக இதோ அல்லாஹ்வின் மீண்டும் ஓர் அற்புதத்தைப் பாருங்கள்.
புராணங்களை படித்தும் புரியாதது குர்ஆனைப் படித்து....
அல்லாஹ்வின் கருணையினால் ஆசீர்வதிக்கப்பட்ட முஹம்மது உமர் ராவ் ஆகிய நான் ஒரு இந்தியக் குடிமகன். நான் என்னுடைய 18ஆவது வயதில் இஸ்லாத்தைத் தழுவி இன்றுடன் 6 வருடம் பூர்த்தியாகிவிட்டன. நான் என்னுடைய வாழ்க்கை விபரங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விருப்பப்படுகிறேன்.
முஸ்லிம் அல்லாதவர்களும் இதைப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய ஆசை. என்னுடைய வாழ்க்கைமுறையை இரண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் என்னுடைய தேர்வு மற்றும் முடிவு மிகச் சிறந்தது என்று உற்சாகப்படுத்தினார்கள்.
வாழ்க்கை முறை
நான் நடுத்தர வகுப்பு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய தந்தை இன்ஜினியாராகவும், தாய் ஆசிரியையாகவும் உள்ளனர். என் தாய் மாமன் வீட்டில் தங்கியிருந்துதான் மதச் சம்பந்தமான கல்வியை நான் கற்றேன். என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரின் கல்வியும் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருந்ததால் முஸ்லிம்களைப் பற்றிய ஒரு தவறான எண்ணம் என்னுடன் ஆணி அடித்தது போல் இருந்தது.
சில காலம் RSS-ல் சேர்ந்திருந்ததால் நான் எப்பொழுதுமே முஸ்லிம்களை வெறுக்கின்றவனாகவே இருந்து வந்தேன். பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் போது நான் கேட்டுக் கொண்டிருக்கும் இசையின் சப்தத்தை அதிகப்படுத்தி அந்த பாங்கு சப்தம் என்னுடைய காதில் விழாதபடி செய்வேன். நகரத்தில் இருக்கும் எல்லா கோயில்களுக்கும் தினந்தோறும் சென்று வழிபாடு செய்பவனாக இருந்து வந்தேன், இதற்காக என் வீட்டினர் அனைவரும் என்னை உற்சாகப்படுத்துவார்கள்.
இஸ்லாத்துடன் பரிச்சயம்
ஒரு கோடை விடுமுறையில் ஒரு முஸ்லிமின் வியாபார நிர்வாகத்தில் வேலை செய்யச் சொல்லி என் தாய் என்னை அழைத்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை, ஏனென்றால் குழந்தைப் பருவத்தில் இருந்தே முஸ்லிம்களை நான் வெறுத்து வந்தேன். என்னுடைய நிலையை அறிந்த என் தாய் மேற்கொண்டு என்னை வற்புறுத்தவில்லை.
சில கோடை விடுமுறைகளில் முஸ்லிம் அல்லாத வியாபார நிர்வாகத்தில் நான் வேலை செய்து வந்தேன். ஆதலால் என்னுடைய தாய், தந்தை இருவரும் திருப்தி அடைந்தனர். சில காலம் கழிந்து அந்த பகுதிநேர வேலையை விட்டுவிட்டு என்னுடைய படிப்பில் கவனமானேன்.
மேற்கொண்டு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய தாய் மற்றும் தங்கைகள் ஒரு முஸ்லிம் நிறுவனத்தில் 2 மாதம் தற்காலிகமாக பணியாற்றினார்கள், அந்த 2 மாதத்தில் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் எனது தாய் மற்றும் தங்கைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
நான் வெறுக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக யாராவது பேசினாலே எனக்கு கோபம் வந்துவிடும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வந்த நான் எனது தாய் மற்றும் தங்கைகளின் நிர்பந்தத்தில் சில முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் நிலைக்கு ஆளானேன்.
வேண்டா வெறுப்பாக அந்த கடையில் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு இன்னும் அதிகமானது. ஏனென்றால், அந்தக் கடையில் வேலை செய்யும் முஸ்லிம் அல்லாதவர் பல பேர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள்.
இஸ்லாத்திற்கு ஏன் அனைவரும் இப்படி முக்கியத்துவம் தருகிறார்கள் என்று எண்ணி என்னுடைய இந்து மதம் தான் சிறந்தது, உயர்ந்தது என்று அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, இந்து மதத்தையும், இஸ்லாத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தேன். அத்தருணத்திலிருந்து இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதால் குர்ஆனின் ஆங்கில மொழியாக்கத்தை படிக்க ஆரம்பித்தேன். படித்து அதன் அர்த்தத்தை நல்லபடியாக தெரிந்து யோசிக்க ஆரம்பித்த என்னுடைய மாணவப் பருவ வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது.
அதன் பிறகு நான் என்னென்ன தவறுகள் இதுவரை செய்துக் கொண்டு இருக்கின்றேன் என்பதைப்பற்றி கவலை மற்றும் பயம் வந்தது. என்னுடைய இந்து மதம் முழுவதும் கற்பனை மற்றும் புராணங்களாலும், கட்டுக் கதைகளாலும்தான் நிரம்பி உள்ளது என்று தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து பல கேள்விகளும் சந்தேகங்களும் என்னுள் எழுந்தது. என்னுடைய கடமை என்ன? நான் எப்படி இருக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? ஏன் இந்த உண்மையான கருத்து எங்களில் பல பேருக்கு வந்து சேரவில்லை? இதைப் போல பல கேள்விகளுக்கு உண்மை மற்றும் பதில் தெரிந்து கொள்வதில் என்னுடைய மீதி மாணவப் பருவத்தை செவழிக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய பெற்றோர்களையும் என்னைச் சுற்றி இருப்பவர்களையும் நான் கேட்டேன், கடவுளை நேரில் பார்த்தவர்கள் யாராவது உள்ளார்களா? எந்த அடிப்படையில் படங்களையும், சிலைகளையும் உருவாக்குகிறார்கள்? கடவுளை யாரும் பார்த்ததில்லை என்பதுதான் அவர்கள் அனைவரின் பதிலுமாய் இருந்தது. இறுதியில் நான் சில புராணங்களை படித்ததின் மூலம் உண்மையை உணர முடிந்தது. அதன் பிறகு இந்து கடவுள்களின் கதைகள் என்னை அந்த அளவிற்கு பாதிக்கவில்லை. நான் என் பெற்றோர்களிடம் மீண்டும் கேட்டேன்.
எல்லா இந்து வேதங்களும் சிலை வணக்கங்களை எதிர்க்கின்றன. இருப்பினும் நாம் தொடர்ந்து அதைச் செய்துக் கொண்டிருக்கிறோம். ஏன்?
எந்த அடிப்படையில் சிலை வணக்கம் செய்கிறோம்.
இந்த கேள்வியால் என் பெற்றோர்கள் என் மேல் கோபப்பட்டு நமது முன்னோர்கள் செய்து கொண்டிருந்ததைத்தான் நாம் தொடர்ந்து செய்கிறோம் என்று சொன்னார்கள். இந்த பதிலால் நான் திருப்தியடையவில்லை.
அடுத்து நான் குர்ஆன் படித்தபோது அத்தியாயம் அல்பகராவில் ஒரு வசனம் என்னை மிகவும் பாதித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும், "அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?" (அல்-குர்ஆன் 2:170)
இந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. அதன் பிறகு சிலை வணக்கங்களையும், பூஜைகள் செய்வதையும் சிறிது சிறிதாக நிறுத்தினேன். அல்லாஹ்வுடன் மற்றவர்கள் இணை வைப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை உணர்ந்தேன். ஆரம்ப நாட்களில் மிகவும் ரகசியமாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன்.
அல்பகரா அத்தியாயத்தில் அல்லாஹ் மேலும் தெளிவுபடுத்துகின்றான், என்னவென்றால்
இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்;, நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம் எனக் கூறுகிறார்கள்.அல் குர்ஆன் 2 :14
அதைத்தொடர்ந்து ஆல இம்ரான் அத்தியாயத்தில் அல்லாஹ் விளக்குவது என்னவென்றால்
..இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;.. (அல் குர்ஆன் 5 : 3)
இதன் பிறகு நான் மேலும் தெளிவடைந்தேன். என் மனதில் இருந்த எல்லாக் கேள்விகளுக்கும் விடை இந்த குர்ஆனில் மட்டும் தான் கிடைத்தது. அல்லாஹ்வின் கிருபையினால் இஸ்லாத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த மற்றும் அறிந்த சில விபரங்களை நான் என் வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தினேன்.
டிப்ளமோ கடைசி ஆண்டு படிக்கும் காலத்தில் இஸ்லாத்திற்கு கொஞ்ச கொஞ்சமாக நான் மாறிக் கொண்டிருப்பதைப் பார்த்து என் பெற்றோர்கள் என்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர். ஆனால் என் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு என்னுடன் வெளியே வந்துவிட்டாள்.
நானும் எனது சகோதரியும் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு வருடம் எந்த வேலையும் இல்லாமல், எந்தவித வருமானமும் இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளானோம். அந்த நேரத்திலும் இஸ்லாத்தில் உள்ள பற்று எங்களுக்குக் குறையாமல் மிகவும் ஈமானுடன் இருந்ததால் அல்லாஹ் எங்களுடைய எல்லா சிரமங்களையும் இலேசாக்கினான், அல்ஹம்துலில்லாஹ்.
மிகவும் குறைந்த வருமானத்தில் கிடைத்த வேலைக்கு நாங்கள் இருவரும் சென்று கொண்டிருந்தோம். இதற்காக எல்லா சிரமங்களையும் தாங்கிக் கொண்டேன். அல்லாஹ் நல்ல சந்தர்ப்பங்கள் எல்லாம் எங்களுக்கு அதிகமாக ஏற்படுத்திக் கொடுத்தான்.ஐந்து வேளை தொழ முடியாத காரணத்தால் நான் என்னுடைய முந்தைய வேலையிலிருந்து விடுபட்டேன். கொஞ்ச கொஞ்சமாக பல பெரிய தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகளை நான் இழக்கும்படி ஆகிவிட்டது. இதற்காக நான் வருத்தப்பட்டாலும் அல்லாஹ்வின் கருணையினால் தற்போது நல்ல வேலை கிடைத்ததுடன் ஐந்து வேளை நல்லபடியாக தொழுகவும் முடிகிறது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!தொகுப்பு: (ஆங்கிலத்திலிருந்து தமிழில்) : கோவை. பஷீர்
Thursday, June 22, 2006
வேண்டாம் இன்னும் அடிமை(வேஷ)த்தனம்.
மதம் அல்லது மார்க்கம் என்பது மனிதனை மனிதனாக மதிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். சக மனிதனை மிருகமாகவும் காட்டுமிராண்டியாகவும் அல்லது தன்னை விட மட்டமாகவும் கருதுவதை அல்லது அந்த கருதுதலை நியாயப்படுத்தி கடமையாக்குவதை ஒருபோதும் மார்க்கமாகக் கருதமுடியாது.
ஏனெனில் அது மனிதனை நற்சிந்தனைக்கு பதிலாக தீய வழிக்கே இட்டுச் செல்லும் மத நம்பிக்கை இல்லாத எந்த மனிதனும் இந்த உலகில் இல்லை. அப்படி தன் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய அந்த மதத்தை மற்றவர்கள் விமர்சிப்பதும் அதற்கு பதில் இல்லாமல் விமர்சிக்கக்கூடிய விமர்சனத்திற்கு பதில் தராமல் விமர்சிக்கக்கூடியவர்களை கெட்டவர்கள் என்று தூற்றுவதும் எந்த விதத்தில் நியாயம்.
ஒரு கடைக்காரன் தன் பொருள் நல்லபொருள் என்று சொல்லாமல் பக்கத்து கடைக்காரனின் பொருள் மோசமானது என்று சொல்வது எப்படி சரியில்லாத வழிமுறையோ அதுபோலத்தான் இதுவும்.
இதை நன்கு சிந்திக்கக்கூடியவன் என்ன செய்வானோ அதைத்தான் நான் செய்தேன். இந்து மதத்திலிருந்து விரக்தியுற்று பிரிந்தவர்கள்தான் நாத்திகர்கள். அதாவது தமிழகத்தின் பூர்வீக குடிமக்கள். அதாவது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்கள். இயற்கையை கடவுளாக வணங்கக்கூடியவர்கள் (தமிழர்கள்) ஆனால் அவர்களிடம் தற்போது பாக்கியுள்ளது என்ன?
ஏனெனில் அது மனிதனை நற்சிந்தனைக்கு பதிலாக தீய வழிக்கே இட்டுச் செல்லும் மத நம்பிக்கை இல்லாத எந்த மனிதனும் இந்த உலகில் இல்லை. அப்படி தன் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய அந்த மதத்தை மற்றவர்கள் விமர்சிப்பதும் அதற்கு பதில் இல்லாமல் விமர்சிக்கக்கூடிய விமர்சனத்திற்கு பதில் தராமல் விமர்சிக்கக்கூடியவர்களை கெட்டவர்கள் என்று தூற்றுவதும் எந்த விதத்தில் நியாயம்.
ஒரு கடைக்காரன் தன் பொருள் நல்லபொருள் என்று சொல்லாமல் பக்கத்து கடைக்காரனின் பொருள் மோசமானது என்று சொல்வது எப்படி சரியில்லாத வழிமுறையோ அதுபோலத்தான் இதுவும்.
இதை நன்கு சிந்திக்கக்கூடியவன் என்ன செய்வானோ அதைத்தான் நான் செய்தேன். இந்து மதத்திலிருந்து விரக்தியுற்று பிரிந்தவர்கள்தான் நாத்திகர்கள். அதாவது தமிழகத்தின் பூர்வீக குடிமக்கள். அதாவது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்கள். இயற்கையை கடவுளாக வணங்கக்கூடியவர்கள் (தமிழர்கள்) ஆனால் அவர்களிடம் தற்போது பாக்கியுள்ளது என்ன?
தமிழர்திருநாள் பொங்கல் மட்டுமே பாக்கியுள்ளது. அதாவது போகிப்பண்டிகை, பொங்கல்திருநாள், மாட்டுப்பொங்கல் இந்த மூன்று திருநாள்களை தவிர அந்த தமிழர்களை கடந்து செல்லக்கூடிய வருடத்தின் 362 நாட்களும் யாரோ (வந்தேறிகள்) நம்மீது புகுத்தியது; திணித்ததாகும். இதை ஒத்துக்கொள்ளாத எந்த தமிழ்மனம் உண்டு?
தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு. அந்த இனமும் அதற்கான குணமும் இப்பொழுது எங்கே? வரதட்சணை கொடுத்து திருமணம், மகளின் பூப்புனித நீராட்டுவிழா, விநாயகர் ஊர்வலம், இறந்தவர்களுக்கு திவசம், நல்ல நாள் பார்ப்பது இதுபோல் இன்னும் பலபல ……. இவையெல்லாம் தமிழகத்துக்குள் புகுந்தது எப்படி? எப்பொழுது? உண்மை நிலை என்னவெனில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, படிக்காத மேதை காமராஜர் ஆகியோருக்கு பிறகு ஒரு தமிழன் கூட தமிழகத்தில் பிறக்கவில்லை என்பதுதான் உண்மை. தந்தை பெரியாருக்கு பிறகு அந்த பாசறையில் வந்த தலைவர்கள் எங்களுக்கு நாற்காலி கிடைத்தால் போதுமென்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இந்த சமூகத்திற்குள் அவர்களால் பிடித்து நிற்க வழி தெரியவில்லை. அல்லது வழி நடத்த தகுதியற்றவர்களாக மாறிவிட்டனர்.
தமிழுக்கென்ற மரியாதையை தமிழன் கொடுக்கவில்லை. அதனால் வந்தேறிகள் தமிழகத்தில் புகுந்து கொண்டு தமிழர்களுக்காகப் போராடுகின்றோம் என்ற போர்வையில் தங்களின் சித்தாந்தத்தை உள்ளே வாழைப்பழத்தில் விஷ ஊசியை ஏற்றுவதைப் போல் ஏற்றி நாசமாக்கி விட்டனர். விளைவு? அந்த இனத்தையும் குணத்தையும் யாராவது எங்காவது கண்டால் தயவு செய்து தமிழ்மணத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் என்ற நிலையாகி விட்டது.
அதன் விளைவில் ஒன்றைத்தான் இன்று தமிழர் சமூகம் வரதட்சணை என்ற பெயரில் அனுபவிக்கிறது. இதனைக் கொடுக்க முடியாமல் எம் சகோதர கன்னிப்பெண்கள் ஜன்னலோர தேய்நிலவாக கண்ணீரில் குளிக்கின்றனர். ஆச்சாரம் என்ற பெயரில் யாரோ அவிழ்த்துவிட்ட அனாச்சார கட்டுக்கதைகளால் சம்பாதிக்கக்கூடிய குறைந்த தொகையில் கணிசமான ஒரு பகுதியை கோவிலில் அர்ச்சனைக்காக அவாள்களிடம் எதிர்பார்ப்பின் கண்ணீரோடு தாரைவார்க்கின்றான் தமிழன். தமிழன் புரிந்து கொள்ளவேண்டும் இந்த ஒட்டுண்ணிகளின் வயிறு வளர்க்கும் தந்திரங்களை. தமிழா உன்னை நீ புரிந்துகொள்.
வேண்டாம் இன்னும் அடிமை(வேஷ)த்தனம்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..!!
அதற்காக,
இதோ இருகரம் நீட்டி உங்களை அன்புடன் வரவேற்கின்றது இஸ்லாம்.
தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு. அந்த இனமும் அதற்கான குணமும் இப்பொழுது எங்கே? வரதட்சணை கொடுத்து திருமணம், மகளின் பூப்புனித நீராட்டுவிழா, விநாயகர் ஊர்வலம், இறந்தவர்களுக்கு திவசம், நல்ல நாள் பார்ப்பது இதுபோல் இன்னும் பலபல ……. இவையெல்லாம் தமிழகத்துக்குள் புகுந்தது எப்படி? எப்பொழுது? உண்மை நிலை என்னவெனில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, படிக்காத மேதை காமராஜர் ஆகியோருக்கு பிறகு ஒரு தமிழன் கூட தமிழகத்தில் பிறக்கவில்லை என்பதுதான் உண்மை. தந்தை பெரியாருக்கு பிறகு அந்த பாசறையில் வந்த தலைவர்கள் எங்களுக்கு நாற்காலி கிடைத்தால் போதுமென்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இந்த சமூகத்திற்குள் அவர்களால் பிடித்து நிற்க வழி தெரியவில்லை. அல்லது வழி நடத்த தகுதியற்றவர்களாக மாறிவிட்டனர்.
தமிழுக்கென்ற மரியாதையை தமிழன் கொடுக்கவில்லை. அதனால் வந்தேறிகள் தமிழகத்தில் புகுந்து கொண்டு தமிழர்களுக்காகப் போராடுகின்றோம் என்ற போர்வையில் தங்களின் சித்தாந்தத்தை உள்ளே வாழைப்பழத்தில் விஷ ஊசியை ஏற்றுவதைப் போல் ஏற்றி நாசமாக்கி விட்டனர். விளைவு? அந்த இனத்தையும் குணத்தையும் யாராவது எங்காவது கண்டால் தயவு செய்து தமிழ்மணத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் என்ற நிலையாகி விட்டது.
அதன் விளைவில் ஒன்றைத்தான் இன்று தமிழர் சமூகம் வரதட்சணை என்ற பெயரில் அனுபவிக்கிறது. இதனைக் கொடுக்க முடியாமல் எம் சகோதர கன்னிப்பெண்கள் ஜன்னலோர தேய்நிலவாக கண்ணீரில் குளிக்கின்றனர். ஆச்சாரம் என்ற பெயரில் யாரோ அவிழ்த்துவிட்ட அனாச்சார கட்டுக்கதைகளால் சம்பாதிக்கக்கூடிய குறைந்த தொகையில் கணிசமான ஒரு பகுதியை கோவிலில் அர்ச்சனைக்காக அவாள்களிடம் எதிர்பார்ப்பின் கண்ணீரோடு தாரைவார்க்கின்றான் தமிழன். தமிழன் புரிந்து கொள்ளவேண்டும் இந்த ஒட்டுண்ணிகளின் வயிறு வளர்க்கும் தந்திரங்களை. தமிழா உன்னை நீ புரிந்துகொள்.
வேண்டாம் இன்னும் அடிமை(வேஷ)த்தனம்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..!!
அதற்காக,
இதோ இருகரம் நீட்டி உங்களை அன்புடன் வரவேற்கின்றது இஸ்லாம்.
Tuesday, April 25, 2006
ஜாதிகள் உள்ளதடி பாப்பா'
நான் போன பதிவில் வைத்ததைப் போன்றே மேலுமொரு பதிவாகும். ஜாதிவெறி என்ற நச்சு, நிச்சயமாக அடிமனதிலிருந்து களையப்படவேண்டிய ஒன்றாகும்
சமீபத்தில் எனது வகுப்பாசிரியர் அவர்களை நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது வீட்டில் சந்திக்கச் சென்றிருந்தேன். வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன் . அழைப்பு மணியின் ஒலி கேட்டு கதவைத் திறந்தார் ஆசிரியர். என்னைக் கண்டதும் வரவேற்று நலம் விசாரித்தவாறே வீட்டின் வெளித் திண்ணையில் அமர்ந்து பேசினார். நானும் ஒருமணி நேரம் வாசலில் மரியாதையாக நின்றுகொண்டே பேசினேன்.
அப்போது ஆசிரியரின் துணைவியார் ஒரு கண்ணாடி டம்ளரில் காப்பியைக் கொண்டுவந்து "தம்பி எடுத்துக்கோ" என்று திண்ணையில் வைத்துவிட்டு போய் விட்டார். நானும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் காப்பியை குடித்து முடித்து டம்ளரை த் திண்ணையில் வைத்துவிட்டு, ஆசிரியரிடம் விடைபெற்று த் திரும்பும்பொழுது ஆசிரியரின் துணைவியார் ஆசிரியரை அழைத்து, "என்னங்க அந்த கண்ணாடி டம்ளரெ அந்த குப்பைத் தொட்டியிலே போட்டுடுங்கோ … ஆமாம் … அந்த பையன் கீழ்ஜாதிக்காரன் தானே?" என்றார் .
அதற்கு ஆசிரியரும், "நானும் அதையே தான் நினைத்தேன் … கொஞ்சம் பொறு ஒரு குச்சியிலே எடுத்துட்டு போயி போட்டுட்டு வர்றேன்" என்றார் ஆசிரியர்.
அதைக் கேட்ட எனக்கு நெஞ்சு திக்கென்றது. ச் … .சே என் குருவா இப்படி? வகுப்பில் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொல்லிக் கொடுத்துவிட்டு மனதில் ஜாதிகள் உள்ளதடி என நினைக்கின்றார் என்று எனக்குள்ளேயே நொந்து வெளியேறினேன்.
-வஸந்த் பூபதி,வெள்ளாங்கோவில்.பிப்ரவரி, 27, 2000 (27/02/2000) (தினமலர்)
இந்தச் சிந்தனை மாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் அவருடைய மனதிலிருந்து பிறப்பால் நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் நீக்கப்படவேண்டும் . ஒருவனிடமிருக்கும் 'நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன்' என்ற எண்ணம், அவனுடைய அடிமனதிலிருந்து முற்றாக அகற்றப் படாதவரை அவனுடைய மனதை ஆட்சி செய்பவன் அவனல்லன்; ஜாதி வெறி பிடித்த அரக்கன்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஜாதி வெறியைச் சட்டம் போட்டோ இரும்புக் கரம் கொண்டோ நிச்சயமாக ஒடுக்க முடியாது என்பதற்கு மீண்டும் ஓர் எடுத்துக்காட்டுதான் வஸந்த் பூபதியின் வேதனையில் வெந்த வரிகள் :
நான் உயர்ந்தவன்' என்ற இறுமாப்பு , மனிதனின் உள்ளத்தில் பதிந்து விடக் கூடாது என்பதில் இஸ்லாம் மிகக் கண்ணும் கருத்துமாய் இருக்கிறது.
லுக்மான் என்ற நல்லடியார் தன்னுடைய மகனுக்கு நல்லுபதேசம் செய்வதைப்போல் ஒரு சம்பவம் குர்ஆனில் காணக் கிடைக்கிறது::
31:18 ''( பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்."
தன்னுடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் விடுக்கும் எச்சரிக்கை :
17:37 "மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது".
'நான் பெருமைக்குரியவன்' என்ற அகங்காரத் திமிரை விட்டொழிப்பதை இஸ்லாம் அடிப்படைக் கல்வியாகியுள்ளது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.
"கிட்டவராதேடா அபிஷ்டு" என்று திமிர்தனமாக விரட்டக்கூடிய ஜாதி வெறி பிடித்தவர்களும் நிறவெறி கொண்டலையும் வெள்ளையரும் வெட்கித் தலைகுனியும் படியான வேதவரிகளைப் பாரீர்
15:26 "(காய்ந்திருப்பின் சுண்டினால்) ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் (முதல்) மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்"
36:77 மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் (சிந்தித்துப்) பார்க்க வேண்டாமா? ...".
76:2 (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
19:67 "முன்னர் ஏதொன்றுமாக இல்லாதிருந்தவனை நிச்சயமாக நாமே படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?"
22:5 மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால் , (அறிந்து கொள்ளுங்கள்) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்து, பின்னர் இந்திரியத்திலிருந்து, பின்பு கருவிலிருந்து, பின்பு அரைகுறை தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு விளக்குவதற்காகவே (படிப்படியான மாறுதல்களை விவரிக்கிறோம்): மேலும் , நாம் நாடியதை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறையில் தங்கச் செய்கிறோம். பின்பு உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், உங்களில் (குறுகிய காலத்தில் உயிர் ) கைப்பற்றப் படுபவர்களும் (நீடித்து வாழ்ந்து) அறிவு பெற்றப் பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்..."
உலக மனிதர்கள் அனைவருமே ஒரே அடிப்படையில் தான் பிறந்தோம் என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
உண்மை இவ்வாறிருக்க ,
"உன்னைப் போலவே பிறந்த சக மனிதனை, ' பிறப்பால் அவன் தாழ்ந்தவன்; நான் உயர்ந்தவன்' என்று ஏன் பிரித்துப் பார்கிறாய்?" என்பதுதான் ஏற்றத் தாழ்வு கற்பிப்போரை - வெள்ளாங்கோவில் வஸந்த் பூபதியின் ஆசிரியர் உட்பட - நோக்கி வீசப் படும் இறைவனின் கேள்வியாக இருக்க முடியும்
இந்த கேள்வியும் அதற்கான பதிலும் மனிதர்களின் மனதைத் தட்டுமானால்................
அதுவே நான் இந்த மார்க்கத்தை எற்றுக் கொண்டதன் லட்சியம்
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே...!!!
சமீபத்தில் எனது வகுப்பாசிரியர் அவர்களை நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது வீட்டில் சந்திக்கச் சென்றிருந்தேன். வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன் . அழைப்பு மணியின் ஒலி கேட்டு கதவைத் திறந்தார் ஆசிரியர். என்னைக் கண்டதும் வரவேற்று நலம் விசாரித்தவாறே வீட்டின் வெளித் திண்ணையில் அமர்ந்து பேசினார். நானும் ஒருமணி நேரம் வாசலில் மரியாதையாக நின்றுகொண்டே பேசினேன்.
அப்போது ஆசிரியரின் துணைவியார் ஒரு கண்ணாடி டம்ளரில் காப்பியைக் கொண்டுவந்து "தம்பி எடுத்துக்கோ" என்று திண்ணையில் வைத்துவிட்டு போய் விட்டார். நானும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் காப்பியை குடித்து முடித்து டம்ளரை த் திண்ணையில் வைத்துவிட்டு, ஆசிரியரிடம் விடைபெற்று த் திரும்பும்பொழுது ஆசிரியரின் துணைவியார் ஆசிரியரை அழைத்து, "என்னங்க அந்த கண்ணாடி டம்ளரெ அந்த குப்பைத் தொட்டியிலே போட்டுடுங்கோ … ஆமாம் … அந்த பையன் கீழ்ஜாதிக்காரன் தானே?" என்றார் .
அதற்கு ஆசிரியரும், "நானும் அதையே தான் நினைத்தேன் … கொஞ்சம் பொறு ஒரு குச்சியிலே எடுத்துட்டு போயி போட்டுட்டு வர்றேன்" என்றார் ஆசிரியர்.
அதைக் கேட்ட எனக்கு நெஞ்சு திக்கென்றது. ச் … .சே என் குருவா இப்படி? வகுப்பில் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொல்லிக் கொடுத்துவிட்டு மனதில் ஜாதிகள் உள்ளதடி என நினைக்கின்றார் என்று எனக்குள்ளேயே நொந்து வெளியேறினேன்.
-வஸந்த் பூபதி,வெள்ளாங்கோவில்.பிப்ரவரி, 27, 2000 (27/02/2000) (தினமலர்)
இந்தச் சிந்தனை மாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் அவருடைய மனதிலிருந்து பிறப்பால் நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் நீக்கப்படவேண்டும் . ஒருவனிடமிருக்கும் 'நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன்' என்ற எண்ணம், அவனுடைய அடிமனதிலிருந்து முற்றாக அகற்றப் படாதவரை அவனுடைய மனதை ஆட்சி செய்பவன் அவனல்லன்; ஜாதி வெறி பிடித்த அரக்கன்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஜாதி வெறியைச் சட்டம் போட்டோ இரும்புக் கரம் கொண்டோ நிச்சயமாக ஒடுக்க முடியாது என்பதற்கு மீண்டும் ஓர் எடுத்துக்காட்டுதான் வஸந்த் பூபதியின் வேதனையில் வெந்த வரிகள் :
நான் உயர்ந்தவன்' என்ற இறுமாப்பு , மனிதனின் உள்ளத்தில் பதிந்து விடக் கூடாது என்பதில் இஸ்லாம் மிகக் கண்ணும் கருத்துமாய் இருக்கிறது.
லுக்மான் என்ற நல்லடியார் தன்னுடைய மகனுக்கு நல்லுபதேசம் செய்வதைப்போல் ஒரு சம்பவம் குர்ஆனில் காணக் கிடைக்கிறது::
31:18 ''( பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்."
தன்னுடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் விடுக்கும் எச்சரிக்கை :
17:37 "மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது".
'நான் பெருமைக்குரியவன்' என்ற அகங்காரத் திமிரை விட்டொழிப்பதை இஸ்லாம் அடிப்படைக் கல்வியாகியுள்ளது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.
"கிட்டவராதேடா அபிஷ்டு" என்று திமிர்தனமாக விரட்டக்கூடிய ஜாதி வெறி பிடித்தவர்களும் நிறவெறி கொண்டலையும் வெள்ளையரும் வெட்கித் தலைகுனியும் படியான வேதவரிகளைப் பாரீர்
15:26 "(காய்ந்திருப்பின் சுண்டினால்) ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் (முதல்) மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்"
36:77 மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் (சிந்தித்துப்) பார்க்க வேண்டாமா? ...".
76:2 (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
19:67 "முன்னர் ஏதொன்றுமாக இல்லாதிருந்தவனை நிச்சயமாக நாமே படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?"
22:5 மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால் , (அறிந்து கொள்ளுங்கள்) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்து, பின்னர் இந்திரியத்திலிருந்து, பின்பு கருவிலிருந்து, பின்பு அரைகுறை தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு விளக்குவதற்காகவே (படிப்படியான மாறுதல்களை விவரிக்கிறோம்): மேலும் , நாம் நாடியதை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறையில் தங்கச் செய்கிறோம். பின்பு உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், உங்களில் (குறுகிய காலத்தில் உயிர் ) கைப்பற்றப் படுபவர்களும் (நீடித்து வாழ்ந்து) அறிவு பெற்றப் பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்..."
உலக மனிதர்கள் அனைவருமே ஒரே அடிப்படையில் தான் பிறந்தோம் என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
உண்மை இவ்வாறிருக்க ,
"உன்னைப் போலவே பிறந்த சக மனிதனை, ' பிறப்பால் அவன் தாழ்ந்தவன்; நான் உயர்ந்தவன்' என்று ஏன் பிரித்துப் பார்கிறாய்?" என்பதுதான் ஏற்றத் தாழ்வு கற்பிப்போரை - வெள்ளாங்கோவில் வஸந்த் பூபதியின் ஆசிரியர் உட்பட - நோக்கி வீசப் படும் இறைவனின் கேள்வியாக இருக்க முடியும்
இந்த கேள்வியும் அதற்கான பதிலும் மனிதர்களின் மனதைத் தட்டுமானால்................
அதுவே நான் இந்த மார்க்கத்தை எற்றுக் கொண்டதன் லட்சியம்
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே...!!!
Monday, April 10, 2006
அன்பிற்கும் உண்டோ...
நமக்கு ஒருவர் மீது ஏற்படக் கூடிய அன்பு என்பது, நம்முடன் அவர் பழகும் முறையை வைத்துத் தோன்றுவதாகும். அவருடைய கொள்கையையும் நடத்தையையும் கண்டு, நண்பர் என்றால் இவரைப் போலல்லவா இருக்க வேண்டும் என்று நாமே தீர்மானிக்க வேண்டிய விஷயமாகும் நட்பு.
இந்தக் காலத்தில் நல்ல பொருள் வளம் இருந்தால் மட்டுமே நண்பன் என்பது எழுதாத சட்டமாகவே மாறிவிட்டது. "உற்ற நண்பனை ஓட்டலில் பில் கொடுக்கும்போது கண்டு கொள்ளலாம்" என்று எப்பொழுதோ படித்த ஞாபகம் உள்ளது.
நல்ல நண்பன் முகம் பார்க்கும் கண்ணாடிக்குச் சமம் என்பார்கள். " ஒரு மனிதனை நல்லவனாகவோ அல்லது தீயவனாகவோ மாற்றுவது அவனது நண்பர்களும் சூழ்நிலையும்" என்பார்கள் இது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது. நல்ல நண்பனைப் பெற்றவன் நிச்சயமாக வழிகெடுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது மட்டும் உண்மை.
நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்: " மனிதன், தன் உற்ற நண்பனின் வழி எதுவோ அதன் படி நடக்கிறான்" நூல் : திர்மிதி, அபூதாவூத்
நண்பன் என்பவன் எந்த நேரத்திலும் துணையாக நிற்பவன். சந்தோஷம் வரும்பொழுது கும்மாளம் அடிப்பவனும் கஷ்டம் வந்துவிட்டால் விட்டு ஓடிவிடுபவனும் நிச்சயமாக நண்பனல்லன்; அவன் சந்தர்ப்பவாதி. சந்தர்ப்பவாதி என்பதை விட ஒட்டுண்ணி என்பதே பொருத்தமான பெயர் என நினைக்கின்றேன்.
இஸ்லாம் எனக்குக் கிடைத்த பாக்கியமாக நான் கருதுவதற்குக் காரணமான சில சம்பவங்களையும் இங்கே குறிப்பிடுகின்றேன். ஒரு மனிதன் தன் தாய் மதத்தை விட்டு வேறொரு மதத்தைத் தேர்ந்தெடுக்கின்றான் என்றால் அதைச் சிறிய விஷயமாக யாரும் எடைபோடக்கூடாது. ஏனெனில் அவன் இதுவரை பழகிவந்த பழக்கவழக்கங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், கலாச்சாரம் ஏன் அன்றாடம் இன்றியமையாத் தேவைகளைக் கூட மாற்றிக் கொள்வதற்கு அவன் தன்னைத் தயார் செய்து கொள்கின்றான். ஏனெனில் அவன் புதிதாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட வழி, அவனை அவ்வாறு மாற்றி அமைக்கிறது.
இதில் இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்: ஒரு சமுதாயத்திலிருந்து இன்னொரு சமுதாயத்திற்கு ஒரு மனிதன் மாற்றுகின்றான் என்றால் அந்த வரவை இன்முகத்தோடு வரவேற்கக்கூடிய சமுதாயமாக அல்லது அவனையும் அவனுடைய முடிவையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மக்களாக அவர்கள் இருக்கவேண்டும். இஸ்லாத்தின் வெற்றியும் இதுவே என்றே நான் நினைக்கின்றேன்.
இஸ்லாம் மறுமை நம்பிக்கையை மையமாக வைத்து மாந்தர்கள் தமது வாழ்வை அமைத்துக்கொள்ளச் சொல்கின்றது. மறுமை நம்பிக்கை என்பது 'நாளை மரணத்திற்கு பிறகு மீண்டும் நான் எழுப்பப்படுவேன்; பூவுலகில் என்னுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டிருந்தேன் என்பதைப் பற்றி விசாரிக்கப்படுவேன்' என்பதாகும். இந்த நம்பிக்கை ஒரு மனிதனுடைய மனதில் ஆழமாக இல்லையெனில் அவன் தன்னை முஸ்லிமென்று சொல்லிக் கொள்வதில் எந்த பலனுமில்லை என்கின்றது இஸ்லாம்.
'நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அது உனக்கு நல்லது நீ அதை புறக்கணித்து வாழ்ந்தால் அது உனக்குத்தான் கேடு' என்ற கருத்தில் இஸ்லாம் உறுதியாக உள்ளது. உலகாதாயத்தை எதிர்பார்த்துத் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு இஸ்லாம் சொல்லவுமில்லை. அதை ஏற்றுக்கொண்டவர்கள் யாரும் அப்படி எதிர்பார்ப்பதுமில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதும் இவ்வடிப்படையில் அமைதல் நலம் பயக்கும் .
நபித்தோழர் குபைப் இப்னு அதிஃ(ரலி ) அவர்களைக் கைதியாகச் சிறை பிடித்து, அவரைச் சிலுவையில் அறைந்து, அம்புகளாலும் கத்தியாலும் வெட்டிச் சித்ரவதை செய்து அவரைக் கொல்லத் தீர்மானித்த பின்னர், " உன்னுடைய இந்த இடத்தில் உனது தோழர் முஹம்மதை வைத்து விட்டு , அதற்குப் பதிலாக நீ விடுதலை அடைந்து உனது குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருக்க விரும்புகின்றாயா"? என்று அபுசுப்யான் கேட்டார்.
அதற்கு "இறைவன் மீது சத்தியமாக! எங்களது ஆருயிர்த் தோழர் முஹம்மது (ஸல்) அவர்களை இந்த இடத்தில் விட்டு விட்டு நான் என்னுடைய குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருப்பதா? அவரது காலில் ஒரு சிறு முள் குத்தக்கூட நான் அனுமதிக்க மாட்டேன்" என்று குபைப் இப்னு அதிஃ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த பதிலால் கொதிப்பேறிய அபுசுப்யான், தன் கையில் இருந்த ஆயுதத்தை வானத்தை நோக்கித் தூக்கி எறிந்தவராக, "முஹம்மதை, முஹம்மதின் தோழர்கள் நேசிப்பது போன்றதொரு நேசத்தை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை", என்று கூவினார் .
இதுதான் நேசத்தையும் நேசத்தை நேசிப்பவர்களின் உள்மனதையும் ஒருங்கிணைப்பதற்கு இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் அறிவுரையாகும்.
இங்கு நான் என் மனதை பாதித்த ஒரு நட்பை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஜாதி என்ற அந்த வெறி, மமதை ஒரு மனிதனை எப்படியெல்லாம் சிந்திக்கத் தூண்டுகின்றது. "ஜாதி என்பது மனிதனோடு ஒட்டிப்பிறந்தது அதை பூமியில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் நாம் எந்தக்குலத்தில் பிறக்கவேண்டுமென தீர்மானித்துக்கொண்டே பிறக்கின்றது" என நம்புகின்றான் இந்த படித்த மடையன்.
முதலில் நட்பைப்பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை பார்ப்போம்.
தனது சகோதரர்களையும் நண்பர்களையும் சுயநலமற்று நேசித்து, எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு கொள்வது உண்மை முஸ்லிமின் தனித்தன்மையான பண்புகளில் ஒன்றாகும். இஸ்லாம் உண்மையான சகோதரத்துவ அமைப்பாகும். இது அல்லாஹ், அவனது தூதரால் மனித உறவில் ஏற்படுத்திய சங்கிலிப் பிணைப்பாகும். மனித வரலாற்றில் சகோதரத்துவத்தைப் பேணுவதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது.
ஒருவரது இனம், மொழி, நிறம் போன்ற பேதமைகளுக்கு அப்பாற்பட்டு 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று சான்று பகர்தலின் மூலம் இஸ்லாம் மனிதர்களைச் சகோதரத்துவத்தால் பிணைக்கிறது.
விசுவாசிகள் (யாவரும்) நிச்சயமாகச் சகோதரர்களே! (அல்குர்ஆன் 49:10)
இறை நம்பிக்கை கொண்ட சகோதரத்துவம் இதயங்களை இணைப்பதில் மிக உறுதியானதாகும். அது ஆன்மாவையும் அறிவையும் இணைக்கிறது. இந்தச் சகோதரத்துவம் உன்னதமான ஏற்பாடாகும். இதற்கு இஸ்லாம் 'அல்லாஹ்வுக்காக நேசித்தல்' என்று பெயரிடுகிறது. இதில்தான் உண்மை முஸ்லிம் ஈமானின் இன்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துள்ளதோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். அவை:
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் அவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவர்களாக இருப்பது,
2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,
3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதுபோல் இறைநிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பதுமாகும். '' (ஸஹீஹுல் புகாரி , ஸஹீஹ்முஸ்லிம்)
அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களின் அந்தஸ்து
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நேசித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் தயார் செய்து வைத்திருக்கும் அருட்கொடைகள் மற்றும் மறுமை நாளில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் உன்னத அந்தஸ்து பற்றியும் விவரித்துக் கூறும் அநேக நபிமொழிகள் உள்ளன.
இது விஷயத்தில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் நிழல் தரும் ஏழு நபர்களைப் பற்றிநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
1. நீதமான அரசன்
2. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபட்ட வாலிபர்
3. இதயத்தால் இறையில்லத்துடன் இணைந்திருக்கும் மனிதர்
4. அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இரு மனிதர்கள், அல்லாஹ்வுக்காகவே இணைந்தனர்; பின் அல்லாஹ்வுக்காகவே பிரிந்தனர்.
5. ஒரு மனிதர், அவரை அழகும் வனப்புமுடைய பெண் அழைத்தாள் அவர் ''நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் '' என்று கூறி (மறுத்து) விட்டார்.
6. வலது கரம் செய்த தர்மத்தை இடது கரம் அறியாத வகையில் தர்மம் செய்தவர்
7. தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து, கண்ணீர் வடிக்கும் மனிதர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அல்லாஹ்வின் நிழல் மட்டுமே உள்ள மறுமை நாளில் அந்த நிழலுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களுக்கும் இடமுண்டு என்பதிலிருந்து அவர்களுக்கு எவ்வளவு பெரிய கௌரவம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வுக்காகவே நேசிப்பவர்களை சிறப்பித்துக் கூறும் முகமாக மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ் கூறுவான்: ''என்னுடைய மகத்துவத்துக்காக தங்களிடையே நேசித்துக் கொண்டவர்கள் எங்கே ? என்னுடைய நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இன்றைய நாளில் என்னுடைய நிழலில் அவர்களுக்கு இடமளிக்கிறேன். '' (ஸஹீஹ் முஸ்லிம்)
ஒரு முஸ்லிம், தன் நண்பனை இந்த அடிப்படையில்தான் உருவாக்கவேண்டும். அதை விட்டு உலக ஆதாயத்துக்காக நண்பர்களைத் தேடினால் அந்நட்பு நிலைக்காதது மட்டுமின்றி அந்த நட்பு நண்பன் என்ற உறவுக்கு செய்யும் துரோகமாக இஸ்லாம் கருதுகின்றது. நான் சொன்ன இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டு கீழே உள்ள இந்த சம்பவத்தை உங்களின் அடிமனதில் நிறுத்தி அசைபோட்டுப் பாருங்கள். இஸ்லாத்தின் வெற்றி உங்களுக்கும் புரியும்.
பொதுவாக தினமலர் வாங்கினால் "இது உங்கள் இடம்" மற்றும் அந்துமணியின் "பார்த்தது-கேட்டது-படித்தது" ஆகிய இரண்டு தான் நான் மிகவும் விரும்பி படிக்கும் பகுதிகளாகும். எனக்கு கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன் 02/11/97 ல் பிரசுரமான தினமலர் கிடைத்தது. இது உங்கள் இடத்தில் பதிவாகியிருந்த இந்த சம்பவத்தை படித்து வெறுப்பதா? வேதனைப்படுவதா? என அறியாமல் திகைத்துவிட்டேன். அதை அப்படியே கீழே தருகின்றேன்.
நண்பர்களாக பழகுவதில் கூடவா ஜாதிவெறி!!
எனதருமை வாசகர்களே! நான் தாழ்ந்த ஜாதிக்கார(னாக சித்தரிக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவ) னல்லன். இருப்பினும் அந்த ஜாதீய சிந்தனைக்கு எதிரானவன் என்பதை இதுவரை என்னுடைய எழுத்துக்களிலிருந்து புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன். நானும் என்னுடைய சந்ததியும் இதுபோன்ற கொடுமையிலிருந்து காலாகாலத்திற்கும் விடுதலை அடைய வேண்டுமென்றால் நான் எடுத்த முடிவு சரியானது தான் என என்னால் ஆணித்தரமாகக் கூற இயலும்.
இந்தக் காலத்தில் நல்ல பொருள் வளம் இருந்தால் மட்டுமே நண்பன் என்பது எழுதாத சட்டமாகவே மாறிவிட்டது. "உற்ற நண்பனை ஓட்டலில் பில் கொடுக்கும்போது கண்டு கொள்ளலாம்" என்று எப்பொழுதோ படித்த ஞாபகம் உள்ளது.
நல்ல நண்பன் முகம் பார்க்கும் கண்ணாடிக்குச் சமம் என்பார்கள். " ஒரு மனிதனை நல்லவனாகவோ அல்லது தீயவனாகவோ மாற்றுவது அவனது நண்பர்களும் சூழ்நிலையும்" என்பார்கள் இது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது. நல்ல நண்பனைப் பெற்றவன் நிச்சயமாக வழிகெடுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது மட்டும் உண்மை.நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்: " மனிதன், தன் உற்ற நண்பனின் வழி எதுவோ அதன் படி நடக்கிறான்" நூல் : திர்மிதி, அபூதாவூத்
நண்பன் என்பவன் எந்த நேரத்திலும் துணையாக நிற்பவன். சந்தோஷம் வரும்பொழுது கும்மாளம் அடிப்பவனும் கஷ்டம் வந்துவிட்டால் விட்டு ஓடிவிடுபவனும் நிச்சயமாக நண்பனல்லன்; அவன் சந்தர்ப்பவாதி. சந்தர்ப்பவாதி என்பதை விட ஒட்டுண்ணி என்பதே பொருத்தமான பெயர் என நினைக்கின்றேன்.
இஸ்லாம் எனக்குக் கிடைத்த பாக்கியமாக நான் கருதுவதற்குக் காரணமான சில சம்பவங்களையும் இங்கே குறிப்பிடுகின்றேன். ஒரு மனிதன் தன் தாய் மதத்தை விட்டு வேறொரு மதத்தைத் தேர்ந்தெடுக்கின்றான் என்றால் அதைச் சிறிய விஷயமாக யாரும் எடைபோடக்கூடாது. ஏனெனில் அவன் இதுவரை பழகிவந்த பழக்கவழக்கங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், கலாச்சாரம் ஏன் அன்றாடம் இன்றியமையாத் தேவைகளைக் கூட மாற்றிக் கொள்வதற்கு அவன் தன்னைத் தயார் செய்து கொள்கின்றான். ஏனெனில் அவன் புதிதாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட வழி, அவனை அவ்வாறு மாற்றி அமைக்கிறது.
இதில் இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்: ஒரு சமுதாயத்திலிருந்து இன்னொரு சமுதாயத்திற்கு ஒரு மனிதன் மாற்றுகின்றான் என்றால் அந்த வரவை இன்முகத்தோடு வரவேற்கக்கூடிய சமுதாயமாக அல்லது அவனையும் அவனுடைய முடிவையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மக்களாக அவர்கள் இருக்கவேண்டும். இஸ்லாத்தின் வெற்றியும் இதுவே என்றே நான் நினைக்கின்றேன்.
இஸ்லாம் மறுமை நம்பிக்கையை மையமாக வைத்து மாந்தர்கள் தமது வாழ்வை அமைத்துக்கொள்ளச் சொல்கின்றது. மறுமை நம்பிக்கை என்பது 'நாளை மரணத்திற்கு பிறகு மீண்டும் நான் எழுப்பப்படுவேன்; பூவுலகில் என்னுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டிருந்தேன் என்பதைப் பற்றி விசாரிக்கப்படுவேன்' என்பதாகும். இந்த நம்பிக்கை ஒரு மனிதனுடைய மனதில் ஆழமாக இல்லையெனில் அவன் தன்னை முஸ்லிமென்று சொல்லிக் கொள்வதில் எந்த பலனுமில்லை என்கின்றது இஸ்லாம்.
'நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அது உனக்கு நல்லது நீ அதை புறக்கணித்து வாழ்ந்தால் அது உனக்குத்தான் கேடு' என்ற கருத்தில் இஸ்லாம் உறுதியாக உள்ளது. உலகாதாயத்தை எதிர்பார்த்துத் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு இஸ்லாம் சொல்லவுமில்லை. அதை ஏற்றுக்கொண்டவர்கள் யாரும் அப்படி எதிர்பார்ப்பதுமில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதும் இவ்வடிப்படையில் அமைதல் நலம் பயக்கும் .
நபித்தோழர் குபைப் இப்னு அதிஃ(ரலி ) அவர்களைக் கைதியாகச் சிறை பிடித்து, அவரைச் சிலுவையில் அறைந்து, அம்புகளாலும் கத்தியாலும் வெட்டிச் சித்ரவதை செய்து அவரைக் கொல்லத் தீர்மானித்த பின்னர், " உன்னுடைய இந்த இடத்தில் உனது தோழர் முஹம்மதை வைத்து விட்டு , அதற்குப் பதிலாக நீ விடுதலை அடைந்து உனது குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருக்க விரும்புகின்றாயா"? என்று அபுசுப்யான் கேட்டார்.
அதற்கு "இறைவன் மீது சத்தியமாக! எங்களது ஆருயிர்த் தோழர் முஹம்மது (ஸல்) அவர்களை இந்த இடத்தில் விட்டு விட்டு நான் என்னுடைய குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருப்பதா? அவரது காலில் ஒரு சிறு முள் குத்தக்கூட நான் அனுமதிக்க மாட்டேன்" என்று குபைப் இப்னு அதிஃ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த பதிலால் கொதிப்பேறிய அபுசுப்யான், தன் கையில் இருந்த ஆயுதத்தை வானத்தை நோக்கித் தூக்கி எறிந்தவராக, "முஹம்மதை, முஹம்மதின் தோழர்கள் நேசிப்பது போன்றதொரு நேசத்தை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை", என்று கூவினார் .
இதுதான் நேசத்தையும் நேசத்தை நேசிப்பவர்களின் உள்மனதையும் ஒருங்கிணைப்பதற்கு இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் அறிவுரையாகும்.
இங்கு நான் என் மனதை பாதித்த ஒரு நட்பை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஜாதி என்ற அந்த வெறி, மமதை ஒரு மனிதனை எப்படியெல்லாம் சிந்திக்கத் தூண்டுகின்றது. "ஜாதி என்பது மனிதனோடு ஒட்டிப்பிறந்தது அதை பூமியில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் நாம் எந்தக்குலத்தில் பிறக்கவேண்டுமென தீர்மானித்துக்கொண்டே பிறக்கின்றது" என நம்புகின்றான் இந்த படித்த மடையன்.
முதலில் நட்பைப்பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை பார்ப்போம்.
தனது சகோதரர்களையும் நண்பர்களையும் சுயநலமற்று நேசித்து, எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு கொள்வது உண்மை முஸ்லிமின் தனித்தன்மையான பண்புகளில் ஒன்றாகும். இஸ்லாம் உண்மையான சகோதரத்துவ அமைப்பாகும். இது அல்லாஹ், அவனது தூதரால் மனித உறவில் ஏற்படுத்திய சங்கிலிப் பிணைப்பாகும். மனித வரலாற்றில் சகோதரத்துவத்தைப் பேணுவதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது.
ஒருவரது இனம், மொழி, நிறம் போன்ற பேதமைகளுக்கு அப்பாற்பட்டு 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று சான்று பகர்தலின் மூலம் இஸ்லாம் மனிதர்களைச் சகோதரத்துவத்தால் பிணைக்கிறது.
விசுவாசிகள் (யாவரும்) நிச்சயமாகச் சகோதரர்களே! (அல்குர்ஆன் 49:10)
இறை நம்பிக்கை கொண்ட சகோதரத்துவம் இதயங்களை இணைப்பதில் மிக உறுதியானதாகும். அது ஆன்மாவையும் அறிவையும் இணைக்கிறது. இந்தச் சகோதரத்துவம் உன்னதமான ஏற்பாடாகும். இதற்கு இஸ்லாம் 'அல்லாஹ்வுக்காக நேசித்தல்' என்று பெயரிடுகிறது. இதில்தான் உண்மை முஸ்லிம் ஈமானின் இன்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துள்ளதோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். அவை:
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் அவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவர்களாக இருப்பது,
2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,
3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதுபோல் இறைநிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பதுமாகும். '' (ஸஹீஹுல் புகாரி , ஸஹீஹ்முஸ்லிம்)
அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களின் அந்தஸ்து
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நேசித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் தயார் செய்து வைத்திருக்கும் அருட்கொடைகள் மற்றும் மறுமை நாளில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் உன்னத அந்தஸ்து பற்றியும் விவரித்துக் கூறும் அநேக நபிமொழிகள் உள்ளன.
இது விஷயத்தில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் நிழல் தரும் ஏழு நபர்களைப் பற்றிநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
1. நீதமான அரசன்
2. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபட்ட வாலிபர்
3. இதயத்தால் இறையில்லத்துடன் இணைந்திருக்கும் மனிதர்
4. அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இரு மனிதர்கள், அல்லாஹ்வுக்காகவே இணைந்தனர்; பின் அல்லாஹ்வுக்காகவே பிரிந்தனர்.
5. ஒரு மனிதர், அவரை அழகும் வனப்புமுடைய பெண் அழைத்தாள் அவர் ''நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் '' என்று கூறி (மறுத்து) விட்டார்.
6. வலது கரம் செய்த தர்மத்தை இடது கரம் அறியாத வகையில் தர்மம் செய்தவர்
7. தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து, கண்ணீர் வடிக்கும் மனிதர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அல்லாஹ்வின் நிழல் மட்டுமே உள்ள மறுமை நாளில் அந்த நிழலுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களுக்கும் இடமுண்டு என்பதிலிருந்து அவர்களுக்கு எவ்வளவு பெரிய கௌரவம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வுக்காகவே நேசிப்பவர்களை சிறப்பித்துக் கூறும் முகமாக மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ் கூறுவான்: ''என்னுடைய மகத்துவத்துக்காக தங்களிடையே நேசித்துக் கொண்டவர்கள் எங்கே ? என்னுடைய நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இன்றைய நாளில் என்னுடைய நிழலில் அவர்களுக்கு இடமளிக்கிறேன். '' (ஸஹீஹ் முஸ்லிம்)
ஒரு முஸ்லிம், தன் நண்பனை இந்த அடிப்படையில்தான் உருவாக்கவேண்டும். அதை விட்டு உலக ஆதாயத்துக்காக நண்பர்களைத் தேடினால் அந்நட்பு நிலைக்காதது மட்டுமின்றி அந்த நட்பு நண்பன் என்ற உறவுக்கு செய்யும் துரோகமாக இஸ்லாம் கருதுகின்றது. நான் சொன்ன இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டு கீழே உள்ள இந்த சம்பவத்தை உங்களின் அடிமனதில் நிறுத்தி அசைபோட்டுப் பாருங்கள். இஸ்லாத்தின் வெற்றி உங்களுக்கும் புரியும்.
பொதுவாக தினமலர் வாங்கினால் "இது உங்கள் இடம்" மற்றும் அந்துமணியின் "பார்த்தது-கேட்டது-படித்தது" ஆகிய இரண்டு தான் நான் மிகவும் விரும்பி படிக்கும் பகுதிகளாகும். எனக்கு கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன் 02/11/97 ல் பிரசுரமான தினமலர் கிடைத்தது. இது உங்கள் இடத்தில் பதிவாகியிருந்த இந்த சம்பவத்தை படித்து வெறுப்பதா? வேதனைப்படுவதா? என அறியாமல் திகைத்துவிட்டேன். அதை அப்படியே கீழே தருகின்றேன்.
எனக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் ஏராளமான பேனா நண்பர்கள் உண்டு. அவர்களில் ஒரு
நண்பர் என்னைப் பார்க்க எங்கள் ஊருக்கு வருவதாக கடிதம் எழுதியிருந்தார். நானும்
அவர் வருவதாகக் கூறியிருந்த நாளில் வெளியில் எங்கும் செல்லாமல் வழி மேல் விழி
வைத்துப் பார்த்திருந்தேன். நேரம் போனதுதான் மிச்சம் அவர் வரவே இல்லை.என் நண்பர்
அவர் குறிப்பிட்டிருந்த நாளில் வந்திருக்கின்றார். என் வீட்டிற்கு வழி கேட்கும்
போது என்னுடைய ஜாதி பற்றியும் அறிந்திருக்கிறார்.
நான் ஒரு தாழ்த்தப்பட்ட
இனத்தை சேர்ந்தவன் என்பதை அறிந்ததும் அப்படியே திரும்பி சென்று விட்டிருக்கிறார்.
இந்த விஷயம் எனக்குபிறகுதான் தெரிந்தது. உண்மையான நட்புக்கு கூடவா ஜாதி வேறுபாடு
பார்ப்பது என்று நொந்து கொண்டேன். இப்போதெல்லாம் பேனா நண்பர்களிடம் முன்கூட்டியே
என்னுடைய ஜாதி பற்றியும் எழுதி விடுகிறேன். பல நண்பர்கள் இதை கண்டிக்கின்றனர்.
எனினும் கசப்பான அந்தப் பழைய அனுபவத்தை இன்னும் மறக்கமுடியவில்லை.
வே.கார்த்திகேயன் களையகாவிளை. தினமலர் 02/11/97 (இது உங்கள் இடம்)
பகுதி.
நண்பர்களாக பழகுவதில் கூடவா ஜாதிவெறி!!
எனதருமை வாசகர்களே! நான் தாழ்ந்த ஜாதிக்கார(னாக சித்தரிக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவ) னல்லன். இருப்பினும் அந்த ஜாதீய சிந்தனைக்கு எதிரானவன் என்பதை இதுவரை என்னுடைய எழுத்துக்களிலிருந்து புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன். நானும் என்னுடைய சந்ததியும் இதுபோன்ற கொடுமையிலிருந்து காலாகாலத்திற்கும் விடுதலை அடைய வேண்டுமென்றால் நான் எடுத்த முடிவு சரியானது தான் என என்னால் ஆணித்தரமாகக் கூற இயலும்.
Subscribe to:
Posts (Atom)
